நவீன விருட்சத்தில் பிரசுரமான மொழிபெயர்ப்பு கவிதைகள்

 

அழகியசிங்கர்  

ஜ்யோத்ஸனாமிலன் கவிதைகள்

1) மழைக்குப் பின் .. 

இந்த கணம்தான் 

உருவானதுபோல் எல்லாம் 


நான் பார்க்கப் பார்க்க

 முளைத்தன மரங்கள் 


படர்ந்து சென்றது வானம் 

எதிலும், எங்கும் 


காற்றில் பழுத்தன பறவைகள் 

மனிதர்களும் 

இப்போது தான் தோன்றியது போல் 

எங்கெல்லாமோ … எப்படியெல்லாமோ 


மண்ணில்தான் எத்தனை இதமும் பதமும் 

விதைத்துவிடு  

மனதில் தோன்றியதை 

ஆகாயத்தைக் கூட 


சிருஷ்டித்துக் கொள் 

விரும்பியவற்றை 

மரம், பறவை, வீடு 

ஏன் மனிதனையும் கூடத்தான்

ஹிந்தி மூலம் : ஜ்யோத்ஸ்னாமிலன்


தமிழில் : திலீப்குமார்


(நவீன விருட்சம் இதழ் :7 ஜனவரி – மார்ச்சு 1990)

துளிகள் 151 – விருட்சம சூம் கவிதை வாசிக்கும் கூட்டத்தில் வாசித்த கவிதை

அழகியசிங்கர்

நேற்று நடந்த சூம் கூட்டத்தில் நானும் ஒரு கவிதை வாசித்தேன். உண்மையில் வாசிக்க நினைத்தது சீப்பு என்ற கவிதையை. ஆனால் வேறு இருவர் தலையைப் பற்றி கவிதைகள் வாசித்ததால் அழகி என்ற கவிதையை வாசித்தேன். என் தொகுப்பில் இது 152வது கவிதை. 2003ஆம் ஆண்டில் இக் கவிதையை எழுதினேன். ‘அழகியசிங்கர கவிதைகள்’ என்ற தொகுப்பில் நான் 1975முதல் 2018ஆம் ஆண்டு வரை தொகுத்து கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளேன்.முகநூல் நண்பர்களுக்கு இந்தக் கவிதையை வாசிக்க அளிக்கிறேன்.

152. அழகி

அடுக்குமாடி

கட்டிடத்திலிருந்து

வெளியில் வந்த

அழகி அவள்

ஒயிலாய்

படி இறங்க

எதிர் அடுக்குமாடி

இளைஞன்

அவளையே

பார்த்து வாய்பிளந்தான்

அழகி

அவனைப் பார்த்து

கையசைத்தாள்

திகைத்த இளைஞன்

உற்சாகத்துடன்

காற்றில் ஈந்தான் முத்தங்களை

அழகி

நாணுவதுபோல்

தலைகுனிந்து

சிரித்தபடி சென்றாள்

ஒவ்வொரு நாளும்

இளைஞன் காத்திருக்க

அழகியோ

காணவில்லை

இலைகளை உதிர்த்தவண்ணம்

மரமொன்று

எள்ளி நகையாடியது

Comments


21வது சூம் மூலமாகக் விருட்சம் கவிதை வாசிக்கும் கூட்டம்..

 


அழகியசிங்கர்

16.10.2020 – வெள்ளிக்கிழமை – 6.30 மணிக்கு –  நாளை  சூன் மூலமாக 21வது கவிதை வாசித்தல் கூட்டம் நடைபெற உள்ளது.  வழக்கம்போல்  எல்லோரும் கலந்துகொண்டு கவிதை வாசிக்க வேண்டும்.    20 வரிகளுக்கு மிகைப்படாமல் கவிதை வாசிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.


கூட்டம் ஆரம்பிக்கும் முன் கால சுப்ரமணியம் பிரமிள் கவிதைகள் குறித்து உரை நிகழ்த்துவார். 


வழக்கம்போல் கவிதை வாசிப்பவர்கள் சிலவற்றைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.


ஆத்திகம், நாத்திகம் கவிதைகள், அரசியல்வாதிகளைப் போற்றியும் தூற்றியும் கவிதைகள், ஆபாசமாக எழுதப்படும் கவிதைகள், கொரானோ தொற்றைக் குறித்து கவிதைகள் வாசிப்பதைத் தவிர்க்கவும்.


கூட்டம் பற்றிய அறிவிப்பு:


Topic: விருட்சம் கவிதை வாசிக்கும் கூட்டம்..
Time: Oct 16, 2020 06:30 PM India
Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/89231243457?pwd=MXkxekFpU1poS2JFaE1yVEtvSjUrUT09
Meeting ID: 892 3124 3457Passcode: 829310

‘பெண் கவிஞர்கள் நேற்று, இன்று , நாளை

  • அழகியசிங்கர்


நேற்று ஜூமில் விருட்சம் கவிதை வாசிப்புக் கூட்டத்தில் முபீன் ‘பெண் கவிஞர்கள் நேற்று, இன்று , நாளை’ என்ற தலைப்பில் உரையாடினார். அந்த இங்கு உங்கள் முன் ஒளி பரப்புகிறேன் சிறப்பான அந்த உரை

அசோகமித்திரனின் பிறந்த தினக் கூட்டத்தில் கி.அ. சச்சிதானந்தம்

அழகியசிங்கர் 

சமீபத்தில் மறைந்த கி.அ சச்சிதானந்தம் அசோகமித்திரனின் 82 வது பிறந்த நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கூட்டத்தை நெறி செய்தார்.  அக் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை மட்டும் இங்கு அவர் நினைவாக அளிக்கிறேன்.

‘மண் பயனுற வேண்டும்’

அழகியசிங்கர்

‘மண் பயனுற வேண்டும்’ என்ற தலைப்பின் 25.09.2020 அன்று
திருமதி பத்மா மோகன் அவர்களின் உரையின் ஒளிப்பதிவை இங்கு அளிக்கிறேன்.

காந்தியைப் பற்றி 5 கவிதைகள்

   

    அழகியசிங்கர்

     1. காந்தி பிறந்தநாள் இன்று
    காந்தியைப் போற்றுவோம்
    காந்தியைப் போற்றுவோம்
    அவர் கொள்கைகளை ஆதரிப்போம்
    அவர் நாமம் வாழ்க
    அவர் நாமம் வாழ்க

    2. வாசலில் வந்து நின்றார்
    அவரைப் பார்த்து யார் என்று கேட்டேன்
    காந்தி  என்றார்
    நான் அழகியசிங்கர் என்றேன்
    அதன் பின் அவர் பேசினார் அவர் மொழியில்
    நானும் பேசினேன் என் மொழியில்
    ஆனால் இருவருக்கும் என்ன
    பேசினோமென்று  புரியவில்லை
    ஒரே தேசத்திலிருந்தாலும்..

    3. காந்தியைப் பற்றி
    பாரதியார் எழுதினார்
    வெ ராமலிங்கப் பிள்ளை எழுதினார்
    மாடர்ன் பொயட் ஞானக்கூத்தன் எழுதினார்
    இன்னும் இன்னும் பலரும் எழுதினார்கள்
    கவிஅரங்த்தில் கவிதைகள் வாசித்தார்கள்
    இதோ –
    நானும் எழுதி விட்டேன்.

    4. நேற்று என் கனவில்
    காந்தி வந்தார்
    பரவசத்துடன் உட்காரச் சொன்னேன்
    கோபமாக முறைத்துப் பார்த்தார்
    ஏன் ஏன் என்றேன்
    எல்லோரும் கவிதைகள் எழுதி என்னைச்
    சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள்
    எவ்வளவு முறை சாவது?

    5. தெருவில் ஒரு மனிதன் படுத்திருந்தான்
    உடலெல்லாம் புழுதி
    கண்கள் இடுங்கி இருந்தன
    காந்தி அவனைப்
    பரிதாபத்துடன் பார்த்தார்
    பின் தட்டி எழுப்பினார்
    “என்ன?” என்று கேட்டான்
    “நான் காந்தி,” என்றார்
    “போய்யா..” என்றான் குடிகாரன்

                                               (01.10.2020)

    (அக்டோபர் 2ம்தேதி விருட்சம் கவிதை வாசிப்பு கூட்டத்தில் வாசித்த கவிதை)

எஸ்.பி.பி என்ற பாடகர்


    அழகியசிங்கர்

    1. இன்றைய தினத்தைத்
    துக்க தினமாக அனுசரிக்கப்பட்டு
    நம் மதிப்பிற்குரிய
    பாடகர் எஸ்.பி.பி பூலோக
    வாழ்வைத் துறந்து விட்டார்
    அவர் ஒரு இசை மேதை
    அவர் ஒரு சகாப்தம்
    யாரோ ஒருவர்தான் அப்படித்
    தோன்றுவார்கள்
    கடந்த சில தினங்களாக
    அவரைப் பற்றி செய்தி
    குடும்பத்தில் எல்லோரிடமும்
    நுழைந்து நுழைந்து
    வந்து கொண்டிருந்தது.

    2. இன்று மதியம்தான் தெரிந்தது
    தூங்கி விழித்தபோது
    எஸ்.பி.பியின் மறைவு
    வாட்ஸ்அப்பில் செய்தியாகப் பரவியிருந்தது
    நண்பர் ஒருவர் தெரிவித்திருந்தார்
    அவருக்கு எஸ்.பி.பி என்றால்
    உயர் மூச்சு
    நிச்சயம் கண்ணீர் சிந்தியிருப்பார்
    என் நினைவில்
    எஸ்.பி.பி வந்து வந்து போய்க்
    கொண்டிருந்தார்
    அவர் பூத உடல்
    அவர் இல்லத்தை அடைந்தபோது
    மழை பெய்ததாம்
    ஆம்
    அவருக்காக வானமும் துக்கத்தைத்
    தெரிவித்து கண்ணீர் சிந்தியதா?
                                                       (25.09.2020)
(நேற்று விருட்சம் கவிதை வாசிக்கும் கூட்டத்தில் படித்த கவிதை)



18.09.2020 அன்று சூம் மூலமாக 17வது கவிதை வாசிக்கும் கூட்டம்.

அன்று கவிதைகள் வாசித்தவர்கள் :

1. கவிஞர் புவனா முத்துக்குமார் 2. கவிஞர் எல்.ரகோத்தமன்
3. கவிஞர் நந்தாகுமாரன் 4. கவிஞர் ப.சகதேவன்

https://www.youtube.com/watch?v=1OTJ3nL-5GA&t=4s

இது வரை……

அழகியசிங்கர்

    இதுவரை 75 கவிஞர்கள் விருட்சம் கவிதை வாசிப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு சூம் மூலம் கவிதை வாசித்து விட்டார்கள். இன்று நடைபெற உள்ள 17வது கூட்டத்தில் கலந்து கொள்பவர்களை (நான்கு பேர்கள்) வரவேற்கிறேன்.

    அரசியல், மத, ஆபாச கலப்பில்லாமல் கவியரங்கக் கூட்டங்களை நடத்தியதே பெரிய விஷயம் என்று தோன்றுகிறது.

    கவிதைகளில் பல வகை உண்டு.  மரபு, ஹைக்கூ, தன் முனைப்புக் கவிதைகள், புதுக் கவிதைகள் என்றெல்லாம்.  ஆனால் புதுக்கவிதை வாசிப்பவர்கள்தான் முன்னணியில் நிற்கிறார்கள்.

    ஆக மொத்தத்தில் பலவிதமான கவிதைகளைக் காது கொடுத்துக் கேட்க முடிந்தது. கவிதை வாசிக்கும் நண்பர்களைப் பிடித்திழுப்பது சற்று சங்கடமாக இருக்கிறது.  பலருக்கு சூமில் எப்படி கவிதை வாசிப்பது என்று தெரியவில்லை.  சிலருக்குக் கலந்து கொள்வதில் விருப்பமில்லை.  அதையும் வெளிப்படையாகச் சொல்லத்  தயங்குகிறார்கள்.  

    இனிமேல் இந்தக் கவிதை வாசிப்பு கூட்டத்தை வேறு விதமாக மாற்றி அமைக்கலாமென்று நினைக்கிறேன்.  கூட்டம் தொடங்குவதற்கு முன் கவிதை குறித்து உரை நிகழ்த்துபவரை ஏற்பாடு செய்யலாமென்று நினைக்கிறேன்.  பின் யார் வேண்டுமானாலும் கலந்து கொண்டு கவிதை வாசிக்கலாமென்று தோன்றுகிறது.

    இந்தக் கூட்டம் ஆரம்பம் முதல் இதுவரை சிறப்பாக நடைபெற வேண்டுமென்று அக்கறை கொண்டவர்கள் இருவர்.  சுந்தர்ராஜன், கிருபானந்தன். அவர்களுக்கு நன்றி.  அதேபோல் வ.வேசு. அபாரமாக எல்லோருடைய கவிதைகளையும் உள்வாங்கிக்கொண்டு யார் மனதையும் புண்படுத்தாமல் மதிப்பீடு செய்வது. இது லேசான விஷயமாகத் தோன்றவில்லை.  அவருக்கும் நன்றி.