கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 19

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 19வது  கதை வாசிப்புக்  கூட்டம்.  வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் 1. கு.ப.ராஜகோபாலன் 2.கே.பாரதி.


வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள்   சுருக்கமாகக் கூறி கதையைப் பற்றி உரையாடுகிறார்கள்.


இக் கூட்டம் 18.09.2021 அன்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. 
எல்லோரும் அவசியம் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.  

ஒரு கதை ஒரு கருத்து – கே.பாரதி, ஏ.எஸ். ராகவன் – II

அழகியசிங்கர்

சமீபத்தில் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற 50 சிறந்த சிறுகதைகள் என்ற (1970-2019) என்ற சிறுகதைத் தொகுப்பைப் படித்தேன்.

அதில் 1970ல் சிறந்த கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை கலைமகள் பத்திரிகையில் ஆகஸ்ட் 1970ல் வந்திருக்கிறது.கதையின் பெயர் ‘பின்னணி.’ எழுதியவர் ஏ.எஸ்.ராகவன்.

அதெல்லாம் நடந்து ஆண்டுகள் பலவாகி, அதெல்லாம் நடந்ததா என்பதே மறந்து போய், நினைவில் புல்கூட முளைத்து விட்டது என்று கதை ஆரம்பமாகிறது.

கவுண்டர் பாதைத் தடுமாறி வந்து விடுகிறார். மங்கிய நிலவொளி அவரைப் பார்த்து நகைத்தாற் போலிருந்தது. ஒரு குப்பலாய் இட்டேரி வளைவில் வந்து மோதிய காற்று காதில் கிசு கிசுத்தாற் போலி ருந்தது.‘எஞ்சாமி, எனக்கு மூளை பிசகிப் போச்சா? இந்தப் பாளாப்போன காட்டு வளியிலே கால் வெப்பனா இல்லாட்டி? என்று நொந்து கொள்கிறார் கவுண்டர். நடந்து வருகையில் கவுண்டர் நின்றே விட்டார். ஏஞ்சாமி அதே இடத்துக்கே வந்துட்டேனே. என்று பீதியுடன் தனக்குள் முணுமுணுத்துக்கொள்கிறார்.

காட்டு முள்வேலிக்குக் கீழ்ப்புறம் ஓர் உருவம் அமர்ந்து அவரை உற்றுப் பார்ப்பது தெரிந்தது.ஏன் பயப்படுகிறார் கவுண்டர்? ராக்காயி புருசனை நினைத்துத் தான் பயப்படுகிறார்.

அது ராக்காயி புருஷனின் ஆவியா என்று அவருக்குப் பயம் ஏற்படுகிறது. காலம் எவ்வளவு ஆனால் என்ன? எல்லாம் நேற்று நடந்தாற்போலத் துல்லியமாய்ப் புரண்டு வருகின்றன கண்முன்.

அவர் இதே இட்டேரியில் ராக்காயி புருசனை கொன்று தீர்த்தது ஊராருக்கு இலை மறைவுக் காய் மறைவாகத் தெரிந்து இப்போது மறந்து போனதாக இருந்தாலும், அவரளவில அது மறக்கவொண்ணாப் பாவந்தானே?உள்ளம் உருக ராக்காயி புருஷனை நினைத்து வேண்டுகிறார்.

பணத்துக்கு ஆசைப்பட்டு அவனைக்கொன்ற குற்றத்தை அவர் நினைவுப் படுத்திக்கொள்கிறார்.பொம்மக் கவுண்டன் காட்டு நாய் இரைக்க இரைக்க ஓடிவந்து அவர் பயத்தை நீக்குகிறது.நாய் என்ன செய்தது தெரியுமா?

அந்த ராக்காயி புருசனை அலக்காகத் தூக்கிக்கொண்டு வேஙூக்கால் ஓரமாகவே நடந்து விட்டது.கவுண்டர் முதலில் ஏதும் புரியாமல் வாயைப் பிளந்தார். அப்புறம்தான் விளங்கிற்று. காட்டு முள்வேலிக்குக் கீழே இருந்தவன் ராக்காயி புருசனே அல்ல. ஒரு கிழிந்த பழைய கந்தல் வேட்டி. இந்த நிலவொளியில் அந்த இருட்டில் அப்படி ஒரு பிரமைத் தோற்றம் தந்து அவரைப் பாடாய்ப் படுத்திவிட்டது.

கவுண்டர் பல ஆண்டுகளுக்கு முன்னால் ராக்காயி புருஷனைக் கொலை செய்துவிட்டு, அதை இந்த நேரத்தில் நினைத்துப் பயப்படுகிறார். இன்னொரு இடத்தில் இப்படி நினைக்கிறார்.பணம் யாருக்குச் சொந்தம்? அதை ஆளத் தெரிஞ்சவனுக்கு. இல்லையா?

ராக்காயி புருசனுக்கு என்ன தெரியும்? என்ற எண்ணமும் அவருக்குள் ஏற்படுகிறது.

அவர் சொத்து சேர்த்தது இது மாதிரி தீய வழியில்.ஒரு இடத்தில் ஒரு வரியைக் குறிப்பிடுகிறார் கதாசிரியர்;. தெய்வத்தை ஏமாற்றுவதில் கூட அவர் சாமர்த்தியசாலிதான் என்று.அவருடைய பெண் ராசாத்திக்கு அடுத்த வாரம் கல்யாணம்.

வெள்ளியணையில் இருக்கிற அவருடைய மைத்துனன் மகனுக்குக் கொடுக்கிறதாக முடிவாகியிருக்கிறது.அவர் வீட்டைப் பற்றி விவரிக்கும்போது எல்லாம் அவருடைய பெருமையின் சின்னங்கள் என்கிறார் கதாசிரியர்.

இவற்றுக்குப் பின்னாலே எங்கோ ஒரு சிறுமை ஒளிந்து கொண்டிருந்தால் அவருக்கு என்ன? அதை யார் எண்ணி மறுகுவார்? என்கிறார் கதாசிரியர்.வீட்டுக் கதவைத் திறந்து வீட்டிற்குள் போகிறார். மைத்துனன் வந்தான் வேகமாக, வெள்ளியணை மைத்துனன். சம்பந்தியாகப் போகிறவன்.

பதட்டத்துடன் அவர் மைத்துனன் காளி,’ராஜாத்தியை ரெண்டு நாளாக் காணோம், மாமா’ என்கிறான் கவுண்டரிடம்.ராக்காயி மவன் பொன்னுவையும் காணோம். ரெண்டு பேருமா ஊரை விட்டு போயிட்டாங்கன்னு தெரியுது. திரும்பவும் ராக்காயி புருசன் அவர் முன்னே வந்து விட்டான்.‘ராக்காயி புருசா..

உன் சொத்தை நான் கொள்ளையடிச்சேன்னு இத்தினி நாள் காத்திருந்து இப்ப என் சொத்தைக் கொள்ளையடிச்சிடிட்டியா’ என்று பெருங்குரலில் கத்தியவர் அப்படியே நிலைகுலைந்து விழுந்தார்.அப்புறம் அவர் கண் விழிக்கவே இல்லை என்று முடிக்கிறார் கதாசிரியர்.

இக் கதை நேர்க்கோட்டுக் கதை இல்லை. . உண்மையில் இக் கதையில் அவர் மனசாட்சிதான் அவரைக் கொலை செய்து விட்டது.இது முறையற்ற கதை. உருவமே தெரியாத ராக்காயி புருசன் முக்கிய கதாபாத்திரமாக வருகிறான். செய்த கொடுஞ்செயல் கவுண்டரைத் துரத்திக்கொண்டு வருகிறது. கவுண்டரின் மனசாட்சியே அவரைக் கொன்று விடுகிறது. ‘பின்னணி’ என்ற இக் கதை தலைமகளில் 1970ல் வந்துள்ளது.

5You, ஸ்ரீரங்கம் சௌரிராஜன் and 3 others1 CommentLikeCommentShare

1 Comment

ஒரு கதை ஒரு கருத்து – கே.பாரதி, ஏ.எஸ். ராகவன் – I

அழகியசிங்கர்

இந்த முறை இரண்டு கதைகளைப் பற்றிக் கூற உள்ளேன். ஒன்று ‘கே.பாரதி‘யின் ‘பக்கத்து வீட்டில் ஒரு சந்திப்பு’ என்ற கதையை எடுத்துக்கொண்டுள்ளேன். இரண்டாவது கதை பின்னணி என்ற ஏ.எஸ். ராகவன் கதை.

நான் இப்போது லீனியர் நான் லீனியர் என்று இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்துகிறேன். இதை முறையான கதை முறையற்ற கதை என்று பிரிவுகளில் கொண்டு வரலாமென்று நினைக்கிறேன்.

பாரதி கதை லீனியர் கதை. கோமதியம்மாளிடமிருந்து கதை ஆரம்பமாகிறது. லீனியர் கதையில் ஒரு ஆரம்பம், ஒரு தொடுப்பு, ஒரு முடிவு என்று இருக்கும்.

முன்பின் தெரியாத ஒரு விருத்நாளிக்காக நிறையத் திட்டமிட வேண்டியிருக்கிறது. கோமதி அம்மாள் தன் பெண்ணையும் பேரனையும் பார்க்க வந்திருக்கிறாள்.பக்கத்துவீட்டில்தான் அவளுடைய பெண் புவனாவின் குடும்பம் இருக்கிறது. யாருக்கும் அவள் வந்ததைத் தெரியக்கூடாது ரொம்ப ஜாக்கிரதையான திட்டமிடுதல் இது.

ஏன்?‘

ஒற்றை மனிதரின் கண்பார்வைக்கு, எப்படியெல்லாம் பயப்பட வேண்டியிருக்கிறது. அதுவும் ஏதோ தப்பு காரியம் செய்வதுபோல்’. யார் அந்த ஒற்றை மனிதன். புவனாவின் கணவன்.

பக்கத்து வீடாக இருந்தாலும் கதைசொல்லிக்கு அதிகப் பழக்கமில்லை. வீடு, வங்கி வேலை, சிவா, ஸ்கைப்பில் வரும் கணவர் என்று அத்தனையும் சமாளித்துக் கொண்டிருப்பவள் கதைசொல்லி.

நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டு வாசலில் வந்து நின்ற இளைஞனை அடையாளம் தெரியாமல் விழித்தாள் கதைசொல்லி.அப்போதுதான் தெரிந்தது. கோமதியம்மாளûப் பற்றி. பெண் புவனாவையும், பேரனையும் அவள் கணவனுக்குத் தெரியாமல் வந்திருக்கிறாள் என்று.

அதற்கு அடைக்கலமாக கதைசொல்லியின் வீடு. கோமதியம்மாள் புவனாவைப் பார்த்து மூன்று வருடம் மேல் ஆகிறது. துணிப்பையைத் துழாவி ஒரு கட்டு அப்பளத்தையும், சிறிய சம்புடத்தையும் எடுத்தாள் கோமதியம்மாள். கோமதியம்மாள் கொடுத்ததை மேல் எடுத்து வைத்தாள் திரட்டுப்பால். இரட்டை அப்பளாம். இவற்றை பூவனாக்கு கொடுக்க முடியாது.

அவள் கணவன் கண்டுபிடித்து விடுவான் என்ற பயம் கோமதி அம்மாளுக்கு.கோமதி அம்மாள் சொல்கிறாள். ‘மூணு வருஷத்துக்கு முன்னாலே குரோம்பேட்டையில் ஒரு வீட்ல குடியிருந்தா. அங்கேயும் அக்கம்பக்கத்து ஒத்தாசையில் போய் பார்த்தேன். பொறுக்காதே அவனுக்கு. உடனே வீட்டை மாத்திட்டான்.

அந்தப் பிள்ளை ரமேஷ் இதுவரைக்கும் ஒன்பது ஸ்கூல் மாறியிருக்கான்னா பார்த்துக்கோயன்.’புவனாவையும் ரமேஷையும் பாட்டி கோமதியம்மாளைச் சந்திக்க ஏற்பாடு செய்து விட்டு, கதைசொல்லி மூன்று மணிக்கு வருவதாக சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாள்.அவர்களைச் சந்திக்க வைத்ததில் கதைசொல்லிக்கு ஒரு திருப்தி.

மூன்று மணிக்குத் திரும்பி வரும்போது கோமதியம்மாள் மட்டும் சுருண்டு படுத்துக்கொண்டிருந்தாள். எல்லாத் திட்டமும் பாழாகி விட்டது. அவள் கணவன் ஆபிஸ் போகாமல் திரும்பி வந்ததால் இந்தப் பிரச்சினை.சரியாக பதினைந்து நாட்களில் பின் வீட்டு ஜன்னல் வெறிச்சிட்டது என்று முடிக்கிறார் கதாசரியை. இதுதான் கதை. ஒரு நிகழ்ச்சி நடக்குமென்று ஏற்பாடு செய்த பின்னே நடக்காமல் போய்விட்டது.

என்னதான் இருந்தாலும் இப்பாடியெல்லாமா ஒரு மனுஷன் இருப்பான் என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. அமுதசுரபியில் 2014ல் வெளிவந்த கதை.

இது ஒரு முறையான கதை. இதன் முடிவை எப்படி வேண்டுமானாலும் மாற்றி இருக்கலாம்.புவனாவும், பேரனையும் பார்த்துவிட்டு கோமதி அம்மாள் நிம்மதியாகப் போனதாகக் கூட முடித்திருக்கலாம். முறையான கதையில் முடிவை எப்படி வேண்டுமானாலும் கொண்டு போகலாம்.

(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் 12 செப்டம்பர் 2021 வெளி வந்தது) (இன்னும் வரும்…)

3You, Bhaskaran Jayaraman and Paal Nilavan

ஆர்.சூடாமணியின் நினைவுதினம் இன்று

அழகியசிங்கர்

எழுத்தாளர் ஆர்.சூடாமணியின் நினைவுதினம் இன்று.

2010 செப்டம்பர் 13 அன்று மறைந்தார். அவருடைய நினைவுதினத்தை முன்னிட்டு அவரைக்குறித்து காணொளியை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

 

செப்டம்பர் 11ஆம் தேதி 2021ல் 68வது விருட்சம் நேசிப்புக் கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது

அழகியசிங்கர்


இக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எல்லோரும் பாரதியார் கவிதைகளை வாசித்ததோடு பாடவும் செய்தார்கள். இனிமையாக இக்கூட்டம் நடந்து முடிந்தது. இதன் காணொளியை இங்கே அளிக்கிறேன். எல்லோரும் கேட்டு ரசியுங்கள்

தொலைந்துபோன பாரதியார்

அழகியசிங்கர்

நண்பரொருவர் பேச்சைக் கேட்டு எழுதிப்பார்த்தேன் பாரதியாரை துடிக்கும் மீசையுடன் என் முன்னால் நின்றார் பாரதியார் எங்கே ஒளிந்திருக்கிறீர் என் வரிகளில் என்று அவரைக் கேட்டேன் சிரித்தபடி மறைந்து விட்டார்


போனில் படித்தபோது நண்பர் தலை ஆட்டி நன்றி நன்று என்றார் கொண்டு வருவார் துடிப்புடன் பாரதியார் பற்றி எழுதிய பலர் கவிதைகளையெல்லாம் சேர்த்தென்றால் திட்டத்திலிருந்து விலகி விட்டார்

அப்போது எழுதிய அந்தக் கவிதையை எங்கே வைத்தேன் ஃபைல்களைப் புரட்டி பார்த்தாலும் கிட்டவில்லை பாரதி என் பாரதி நீண்ட நோட்டில் எழுதிப் பார்க்கும் கவிதைகள் பலவற்றை சேர்த்து வைக்கும் பழக்கமெனக்குண்டு இருந்தாலும் பாரதியாரைப் பற்றி நானெழுதிய கவிதையை காணவில்லை ஏனோ.. எங்கே ஒளிந்துகொண்டார்? தெரியவில்லை வாவென்றால் வருவாரா? தெரியவில்லை


அவர் வரிகளிலிருந்து கயிறு பிடித்து இறங்கியிருக்கிறோம் வழிதெரியாமல் திகைத்த எங்களுக்கு வரம்கொடுத்து வரி தந்த மேதையாவர்

அவரை வைத்துப் படம் எடுக்கிறார் பலர் பாட்டுப்பாடப் பிய்த்துக் கொண்டனர் அவர் பாடல்களை நானோ கவிதை எழுத முயற்சிக்கிறேன்
(பாரதியார் நினைவு நாள் : செப்டம்பர் 11)

68வது விருட்சம் நேசிப்புக் கூட்டம் நடத்தும் பாரதி பாடல்களை நினைவு கூர்வோம்


அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 68வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி  மாலை 6.30மணிக்கு (11.09.2021) சிறப்பாக  நடைபெற உள்ளது.   கலந்துகொள்பவர்கள் எல்லோரும் பாரதி பாடல்களைப் பாடவும், வாசிக்கவும் அழைக்கிறேன்.
Topic: 68வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி Zoom MeetingTime: Sep 11, 2021 06:30 PM IndiaJoin Zoom Meetinghttps://us02web.zoom.us/j/82016227694…Meeting ID: 820 1622 7694Passcode: 363688

கவிதையும் ரசனையும் – 21


அழகியசிங்கர்

தமிழில் புதிய கவிதையை வகைமையைச் சமீபத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன். அந்தக் கவிதை வகைமையின் பெயர் என்பா.

இது வெண்பாவிலிருந்து உருவான கவிதை வகைமை. என்பாவிற்கு முக்கிய இலக்கிய விதிகளை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். முதலில் 4 வரிகளில் வெண்பாவைப் போல் கவிதை இயற்றப் பட வேண்டும். ஒவ்வொரு வரியிலும் நான்கு சொற்கள் வெண்பாவைப் போல. கடைசி வரி நாலாவது வரி மூன்று சொற்கள். இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது ஒவ்வொரு வரியும் சுதந்திரமானது.

ஒன்றை ஒன்று தொடர்பில்லாதது. வரியில் வெண்பா மாதிர் எதுகை மோனை என்று எதுவும் இருக்கக் கூடாது. இந்தக் கவிதையை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது.

ஆனால் இக் கவிதை உருவாக்கத்திலுள்ள சுதந்திரம் உற்சாகமாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். இதில் முக்கியமாகக் கவிதை எழுதுபவர்கள் வெகு சுலபமாகக் கவிதை எழுதி விடுவார்கள். அத்துடன் இல்லாமல் கவிதையை எழுதத் தெரியாதவர்கள் கூட இங்குக் கவிதை எழுதி விட முடியும். இதோ நான் சில உதாரணங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.
நான் எழுதிய கவிதைகள் :

1) வந்தனா வேறு வழியில்லாமல் காதலித்தாள்

வானத்தில் சில பறவைகள் ஏனோ

தூக்கத்தில் கனவு கண்டேன் நான்

என்னவென்று சொல்வது இப்போது

2) வானத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தேன்

தெருவில் மனிதர்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள்

மஞ்சள் நிறப்பூக்கள் கண் சிமிட்டின

எல்லோரும் நலமுடன் வாழ்க”””

3) கடைக்குஅவசரமாய் போனான் கோபால்”

பஸ் ஸ்டாப்பில் நின்றாள் சீதா

பாயசம் அமைதியாய்ச் சாப்பிட்டான் கண்ணன்

நிற்காமல் ஓடுகிறது ரயில்.

இதைத் தொடர்ந்து என்பாவை இன்னும் சிலரும் எழுதத் துவங்கி உள்ளார்கள். என் கவிதையைப் படித்துவிட்டு, வசந்ததீபன் எழுதிய என்பா கவிதையை இங்குத் தருகிறேன்.


என்பு போர்த்திய தோல் உடம்பு

பிச்சைக்காரன் கலயம் ஏந்தி செல்கிறான்

கண்ணீர் மழையில் அவள் நனைந்தாள்

நதி போகிறது நிதானமாக

– வசந்ததீபன்

கவிஞர் கு.மா.பா திருநாவுக்கரசு எழுதிய என்பா கவிதை


கண்ணைக் கட்டி காட்டில் விட்டார்

பொய்யைச் சொல்லி பிழைக்க முடியுமா

நடனம் ஆட மோகினி வந்தாள்

முகிலில் மறைந்த நிலா.

– கவிஞர் கு.மா.பா திருநாவுக்கரசு


மதுவந்தி என்பவர் எழுதிய என்பா கவிதை


வளரும் பாதை நடக்க நடக்க

உன்னுள் அமிழ்ந்து, என்னை இறை

செவி ததும்பிக் கசியும் இசை

பிம்பம் விழும் ஓசை

  • மதுவந்தி


சிறகு ரவி என்பவர் எழுதிய என்பா கவிதை


நெய் தீபம் ஏந்தி வந்தாள்

சுடர் மிகு அறிவால் அற்பாயுசு

ஆனையின் அம்பாரியில் அம்பானி பாகன்

சிதிலே உறவு வலை –

சிறகு ரவி

உமா பாலு என்பவர் எழுதிய என்பா கவிதை


நெருப்பு விழிகள் பாதம் நோக்க

செருப்பு அதுவாய் பற்றி எரிய

வேகுமுன் கால்கள் விருட்டென விலக

காலம் சகலத்துக்கும் சாட்சி

– உமா பாலு


பூ.சுப்ரமணியன் எழுதிய என்பா கவிதை


அவன் அதிகாலை எழுந்து சென்றான்

அவள் வேலைக்கு அவசரமாகச் சென்றாள்

பிள்ளைகள் பள்ளிக்கு நடந்து சென்றார்கள்

அந்த வீடு அமைதியானது

– பூ.சுப்ரமணியன்


செ.புனித ஜோதி எழுதிய என்பா கவிதை


மேகம் முத்தமிடச் சத்தம்போடும் மழை

கண்களுக்குள் ஒளிந்து கொள்ளும் மின்னல்

ஒற்றைக் கவிவரிகளுக்குள் சிரிக்கும் வானவில்

சன்னலில் எட்டிப்பார்க்கும் நிலா

– செ.புனித ஜோதி

வே.கல்யாணகுமார் என்பவர் எழுதிய என்பா கவிதை.


இமைகள் கண்கள் இனிதாகக் காக்கிறது

தாய்தன் மகளுக்கு மடிதந்து தாலாட்டுகிறாள்

தவறாமலே இரவுபகல் சுற்றிவரும் பூமிப்பந்து

நிற்காமல் ஓடலாம் வா

– வே.கல்யாணகுமார்


என்பாவைப் புரிந்து கொண்டு ஆறிமுகப் படுத்திய இரண்டு மூன்று நாட்களுக்குள் பலர் கவிதைகள் எழுத ஆரம்பித்து விட்டார்கள். தற்செயலாக நான் கண்டுபிடித்தது ஒரு வெற்றியான முயற்சி என்று தோன்றுகிறது.

வெற்று அர்த்தத்தில் கோஷம்போடும் வெண்பாவின் காலம் இனி இல்லை என்று தோன்றுகிறது. என்பா என்ற வகைமை முற்றிலும் சுதந்திரமான முயற்சி என்று தோன்றுகிறது. இதை வாசகர்களும், தமிழ் அறிஞர்களும் ஏற்பார்கள் என்று நினைக்கிறேன். இந்த என்பா அமைப்பு வகைமையைத் தற்செயலாகக் கண்டுபிடித்ததை நினைத்து சந்தோஷம் அடைகிறேன்.


(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் 5 செப்டம்பர் 2021 பிரசுரமானது)

67வது விருட்சம் நேசிப்புக் கூட்டம்

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 67வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி  மாலை 6.30மணிக்கு (04.09.2021) சிறப்பாக  நடந்து முடிந்தது.  இக் கூட்டத்தில் என்பா என்ற புதிய பா வகையை அறிமுகப் படுத்தி உள்ளேன்.   சிறப்பாக நடந்து முடிந்த இக் கூட்டத்தின் காணொளியை இங்கு அளிக்கிறேன்.  

67வது விருட்சம் நேசிப்புக் கூட்டம்

02.09.2021

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 67வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி மாலை 6.30மணிக்கு (04.09.2021- Saturday ) சிறப்பாக நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் என்பா என்ற புதிய பா வகையை அறிமுகப் படுத்துகிறேன். 10 பேர்கள் கலந்துகொண்டு என்பா என்ற கவிதை வகைமையில் கவிதைகள் வாசிக்க உள்ளார்கள். இதைத் தவிர எப்போதும் போல் கவிதைகளை வாசிக்கவும் அழைக்கிறேன். எல்லோரையும் கவிதை வாசிக்க அழைக்கிறேன் அன்புடன்,Topic: சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 67வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

Time: Sep 4, 2021 06:30 PM IndiaJoin Zoom Meetinghttps://us02web.zoom.us/j/82255951538…

Meeting ID: 822 5595 1538

Passcode: 865413

2You and Gs Dhayalan