ஆவலுடன் காத்திருக்கிறேன்

இன்று மாலை 4வது சென்னை புத்தகத் திருவிழாவில் என் கதைப் புத்தகமான அழகியசிங்கர் சிறுகதைகள் முழுத் தொகுப்பு பற்றி முனைவர் ஜெ கங்காதரன் என்பவர் நூல் திறனாய்வு செய்கிறார்.
64 சிறுகதைகளும், 7 குறுநாவல்களும், ஒரு நாடகமும், சில சின்னஞ்சிறு கதைகளும் எழுதி உள்ளேன். 664 பக்கங்கள் கொண்ட முழுத் தொகுதியை என் கதைகளை எல்லோரும் வாசிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் ரூ.300க்குக் கொடுக்கிறேன்.
ஆரம்ப காலத்திலிருந்து நான் எழுதிய கதைகளின் தொகுப்பு இது. இன்னும் கூட கதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். உதாரணமாக 4வது சென்னை புத்தகத் திருவிழாவை முன் வைத்து நல்லவன் கெட்டவன் என்று கதை எழுத உள்ளேன்.
என் கதைகளின் முக்கிய அம்சமாக நான் கருதுவது அதிகப் பக்கங்கங்கள் போகாமல் பார்த்துக் கொள்வது. படிப்பவர்கள் ஒரு சில நிமிடங்களில் என் கதையைப் படித்து முடித்து விடலாம்.
என்னுடைய 7 குறுநால்கள் இத் தொகுதியில் வெளிவந்துள்ள. இக் குறுநாவல்கள் தி ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு கணையாழியில் வெளிவந்தவை. இப்போதெல்லாம் அவ்வளவு பக்கங்கள் கொண்ட குறுநாவல் எழுத எனக்குப் பொறுமை இல்லை.
கணையாழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட என் குறுநாவல்களை அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதிதான் தேர்ந்தெடுத்தார்கள். அதில் விபத்து என்ற என் குறுநாவலைப் பற்றி சொல்ல விரும்புகிறேன்.
அந்தக் குறுநாவல் எழுதும்போது நான் உஸ்மான் ú8ôடில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அப்போது நடந்த விபத்து மாதிரியான ஒரு விபத்தைப் பற்றிதான் அந்தக் குறுநாவல்.
குறுநாவலில் வங்கியில் பணிபுரிகிறவனைப் பற்றி வரும். இக் கதையை வங்கியில் உள்ள யாராவது படிக்க நேர்ந்து ஒரு மொட்டைக் கடுதாசி எழுதி என் வேலைக்கே உளை வைத்துவிடுவார்களோ என்று
தேவையில்லாமல் அஞ்சினேன். உடனே அசோகமித்திரன் வீட்டிற்கு ஓடினேன். அன்று அவருக்கு சுரம். என்னைப் பார்த்தவுடன் என்ன என்று கேட்டார். விபத்து என்ற குறுநாவல் நான்தான் எழுதினேன் என்றேன். நீங்கள் தானா அது. நன்றாக எழுதி இருக்கிறீர்கள் என்று அந்தக் குறுநாவலை அப்படியே ஒப்பித்தார். எனக்கு ஆச்சரியம். அதில் வங்கியில் பணிபுரிகிறவன் என்று எழுதியிருக்கிறேன். வங்கி என்பதற்குப் பதில் எல்ஐசி என்று எழுதி விடலாமா என்று கேட்டேன். அதல்லாம் வேண்டாம். அப்படியே இருக்கட்டும் என்றார்.
அப்புறம்தான் தெரிந்தது. என் வங்கியில் இருப்பவர்களில் பலருக்கு கணையாழி என்ற பத்திரிகை தெரியாது என்றும், பணிபுரிபவர்கள் பலரும் படிக்காத விரும்பி என்றும். இதை நினைத்தால் இப்போது சிரிப்பு வருகிறது. மேலும் என் வீட்டில் உள்ளவர்களே என் கதைகளை முழுவதும் படித்ததில்லை. அதனால்தான் பயந்துகொண்டு நானே முழுத் தொகுதியைக் கொண்டு வந்துவிட்டேன். இனி நான் எழுதும் எல்லக் கதைகளையும் இத் தொகுப்பில் சேர்த்துக்கொண்டு வருவேன்.
இப்படித்தான் பல திறமையான எழுத்தாளர்களின் படைப்புகள் தொகுக்கப்படாமல் போய்விட்டன. இது ஒரு சோகம். இந்த அனுபவம் எனக்கு ந பிச்சமூர்த்தி கதைகளைத் தொகுக்கும்போது தெரிந்தது. அவர் வீட்டில் உள்ளவர்களே அவர் கதைகளின் முழுத் தொகுதிகளை வைத்திருக்கவில்லை. நாங்கள்தான் தடுமாறி கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. இந்தச் சங்கடம் பி எஸ் ராமையாவின் கதைகளுக்கும் ஏற்பட்டு விட்டது. அவர் எத்தனைக் கதைகள் எழுதி உள்ளார் என்ற விபரம் சி சு செல்லப்பா எழுதிய ராமையாவின் சிறுகதை பாணி புத்தகத்தில் மட்டும் தெரியும். பல கதைகள் நஹி.
இன்று என் புத்தகத்திற்கான நூல் திறனாய்வு நடைபெற உள்ளது. முனைவர் ஜெ கங்காதரன் பேச உள்ளார். என்ன பேசப் போகிறார் என்பதை அறிய நான் -.

ஒரு மேதையின் ஆளுமை

புதிய நம்பிக்கை என்ற பத்திரிகையைப் பற்றி தெரியுமா? தெரிவதற்கு வாய்ப்பில்லை.

புதிய நம்பிக்கையின் ஆசிரியர் பொன் விஜயன். அவர் புதிய நம்பிக்கை என்ற பத்திரிகையுடன் ஒரு புத்தகம் கொண்டு வந்தார். அந்தப் புத்தகத்தின் பெயர் ‘ஒரு மேதையின் ஆளுமை.’

சத்யஜித்ராயைப் பற்றி கதைகள், கட்டுரைகள், பின் அபுர் சன்ஸôர் என்ற திரைக்கதையின் தமிழாக்கம் என்றெல்லாம் ராயல் அளவில் கொண்டு வந்தார்.

பொன் விஜயன் தன் வீட்டில் ஒரு பகுதியில் லெட்டர் பிரஸ் வைத்திருந்தார். அதுவும் வாடகை வீடு. அங்கயே புத்தகம் தயாராகும். அந்த பிரஸ்ஸில் பணிபுரிபவர்கள் பொன் விஜயனைவிட பண வசதிப் படைத்தவர்கள். பொன் விஜயன் வாரம் ஒரு முறை சனிக்கிழமை அவர்களுக்குக் கூலி கொடுப்பதற்குத் தடுமாறுவார். அவர் மனைவியின் நகைகள், அல்லது வெள்ளிப் பாத்திரங்களை அடகு வைப்பார்.

அவரே அச்சுக் கோர்த்த ஃபாரங்களை சைக்கிளில் கட்டி எடுத்துக்கொண்டு போய் அச்சடிப்பார். கடுமையான உழைப்பாளி. அவரிடம் என் விருட்சம் இதழ்களையும் அச்சடிக்கக் கொடுத்திருக்கிறேன். ஒரு முறை சைக்கிளில் பாரங்களை எடுத்துக் கொண்டு போகும்போது தவறி கீழே சைக்கிளைப் போட்டுவிட்டார். எல்லா ஃபாரங்களும் கீழே விழுந்து டைப்ஸ் உதிர்ந்துவிட்டன். அதை என்னிடம் அவர் சொன்னபோது கேட்பதற்கு வருத்தமாக இருந்தது.

பொன் விஜயன் ஒரு நாவலாசிரியர், கவிஞர். பிடிவாதமாக சில கருத்துக்களை வைத்தக்கொண்டு மாற்றிக்கொள்ள மாட்டார். அவர் கொண்டு வந்த புத்தகம்தான் ஒரு மேதையின் ஆளுமை.

சமீபத்தில் நான் எதையோ தேடிக்கொண்டிருக்கும்போது இந்தப் புத்தகம் கிடைத்தது. அதில் நான் மொழி பெயர்த்த அபுர சன்சார் என்கிற சத்யஜித்ராயின் திரைக் கதையைக் கண்டு பிடித்தேன். எனக்கு எல்லாம் மறந்தே விட்டது. அதை அப்படியே புத்தகமாகக் கொண்டு வந்துள்ளேன். 80 பக்கங்களுக்குக் கொண்டு வந்துள்ளேன்.

சாமான்ய மனிதர்களில் வாழ்க்கை நிகழ்வுகளைப் பின்னணியாகக் கொண்டு சினிமா படங்கள் எடுத்தவர் சத்யஜித்ராய். (ரா வா ரேவா தெரியவில்லை). மரணம் அடிக்கடி அவர் படத்தில் குறுக்கிடும். பிரிவு தாங்க முடியாமல் இருக்கும்.

அபுர் சன்ஸôர் திரைக் கதையிலும் மரணம் குறுக்கிடுகிறது. அந்த மரணத்தால் ஏற்படும் விளைவுகளையும் நெகிழ்வுடன் கொண்டு வந்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தை விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்திருக்கிறேன். 80 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.50 தான்.

உங்களுக்குப் பிடித்திருந்தால் வாங்கிக்கொள்ளவும்

என்னுடைய கதைகள் எல்லாம் சேர்த்து 664 பக்கங்கள் கொண்ட புத்தகமாக அழகியசிங்கர் சிறுகதைகள் முழுத்தொகுப்பு ஒன்று கொண்டு வந்துள்ளேன்.
இப் புத்தகம் வெளிவந்தபிறகு இதன் விலையை பாதியாகக் குறைத்து ரூ.300க்குக் கொடுத்தேன்.
பொதுவாக நான் வங்கிக் பணியில் சேர்வதற்கு முன்பிலிருந்து வங்கிப் பணியை முடித்து ஓய்வுப்பெற்றபின்பும் நான் எழுதிய கதைகளை (64 கதைகள், 7 குறுநாவல்கள், ஒரு நாடகம், சில சின்னஞ்சிறு கதைகள்) தொகுத்துள்ளேன்.
ராயப்பேட்டாவில் நடைபெறும் புத்தகத் திருவிழாவிலும் இப் புத்தகத்தின் விலை ரூ.300தான். முன்பு பணம் கட்டிய இருவருக்கு நான் புத்தகம் அனுப்ப வேண்டும். ஆனால் அவர்களுடைய தொலைப்பேசி எண் என்னிடம் இல்லை. எப்படித் தொடர்பு கொள்வது என்பது தெரியவில்லை.
புக்கிஸ் என்ற பெயரில் ஒரு பரங்கிமலையில் அற்புதமான புத்தகக் கடை வைத்திருக்கிறார். அவருடைய தொலைப்பேசி எண் வேண்டும்.
அரங்கு எண் 11 வருபவர்கள் என் கதைப் புத்தகத்திலிருந்து என் கதைப் புத்தகத்தை எடுத்து ஒரு கதையைப் படிக்கவும். உங்களுக்குப் பிடித்திருந்தால் வாங்கிக்கொள்ளவும். வேண்டாம் என்று தோன்றினால் என்னைப் பார்த்து முடிந்தால் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டுப் போய்விடவும்.
ஒருவர் மாத்திரம் திரும்பத் திரும்ப அவர் கதைகளைப் படித்துக்கொண்டிருப்ôர். அவர் வேற யாருமில்லை நான்தான். நான் பலவிதமாக கதைகள் எழுதியிருக்கிறேன். கதையே இல்லை என்பதுபோல் கதை எழுதியிருக்கிறேன்.
என் கதைகளைப் பற்றி ரைட்டர்ஸ் கேப்பில் சாருநிவேதிதா 50 நிமிடங்களுக்கு மேல் பேசி உள்ளார். அது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாக நான் நினைக்கிறேன். இன்னும் பல நண்பர்களும் பேசினார்கள். பழுப்பு நிறப்பக்கங்கள் என்ற பெயரில் சாருநிவேதிதா பல தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி எழுதி உள்ளார். ஒவ்வொருவரும் வாங்கிப் படிக்கவும்.

விருட்சத்தில் வெளிவந்த வாஜ்பேயி ஒரு கவிதை

ஆரம்பத்தில் விருட்சம் இதழில் மொழிப்பெயர்ப்பு கவிதைகள் அதிகமாக வரும். பலர் பல மொழிகளிலிருந்து மொழிப்பெயர்த்து விருட்சத்திற்கு அளித்துள்ளார்கள்.
ü முன்னாள் பிரதம மந்திரி வாஜ்பேயி கவிதைகளை சௌரி அவர்கள் ஹிந்தியிலிருந்து நேரிடையாக மொழிபெயர்த்து அனுப்பியிருந்தார். அதுவரை அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் கவிதைகள் எழுதுவார்கள் என்பதை நான் நம்பாமல் இருந்தேன்.

வாஜ்பேயி கவிதையைப் படித்ததும் அசந்து விட்டேன் அக் கவிதையை நான் திரும்பவும் இங்கு அளிக்க விரும்புகிறேன்.

‘உயரத்தில்” என்ற வாஜ் பேயி இந்தக் கவிதை அக்டோபர்-டிசம்பர் 1991ஆம் ஆண்டு பிரசுரமாகியிருந்தது. அதை இங்கு அளிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

உயரத்தில்

தமிழில் – செளரி

மகோன்னத இமயமலை முகட்டில்
மரம் செடி கொடிகள் வேரூன்றுவதில்லை
சவச் செல்லாபோல் சரிந்து பரவிய
சாவைப்போல் குளிர்ந்தடங்கிய
பனிப்படலம் மட்டும்
படிந்து பரவிக்கிடக்கும்;
அந்த உன்னத உயரம்
நீரைப் பனிக்கட்டியாக்கும்
நிமிர்ந்து நோக்குபவர் உள்ளம் குறுகும்
பயபக்தியுடன் பணிவு கொள்ள
உரிமையுடன் உத்தரவிடும்.

மலையேறிகளை வரவேற்கும்
தன் மீது கொடிக்கம்பம் நாட்டலாம்,
ஒரு குருவிகூட கூடுகட்டாது
களைத்துச் சோர்ந்த யாத்திரிகன்
களைப்பாற. கண்ணயற அங்கு இடமில்லை;

உண்மை இதுதான்
உயர்ந்திருப்பது போதாது.
தனியாக விலகி எழும்பி
சூனியத்தில் நிமிர்ந்துயர்ந்து
தம்மவர்களையும் தவிர்த்து
ஒதுங்கி உன்னதமாய் நிற்பதில்
மன்னும் மாமலைக்குப் பெருமையில்லை
பலவீனம், வலுக்கட்டாயம்,
பிரிந்து விலகிப் போனதும் இங்குதான்;

உயர்ந்து வளர்ந்து
காலடியில் புல் பூண்டு படாமல்
கல்லும் முள்ளும் தைக்காமல்
சிறுமலரும் முகிழ்த்து மலராமல்
இள-முது வேனில்களும் இலையுதிர் பருவமும்
காணாமல் தனித்து நிற்பானேன்?

உயர் உயர் ஒருவன்
தனியனாகிறான்
சுமைகளைத் தானே சுமக்கிறான்
போலிப் புன்னகை புலர்த்தி
மனத்துள் புலம்பி அழுகிறான்;

உயரத்துடன் பரப்பும் விரிவும்
கூடிக்குலாவ வேண்டும்
மனிதன் தனித்து, தவித்து
‘மரக்கொம்பாய் வாழவேண்டாம்
பிறருடன் கூடி வாழ்ந்து
பிறரோடு இணைந்து செயல் பட்டு
பலரையும் உடனழைத்துச் சென்று
உள்ளத்தால் உயர்ந்து
உணர்வில் பரந்து
உயரத்தில் நிமிர்ந்து வாழட்டும்.

[ அடல் பிஹாரி வாஜ்பேயி சிறந்த கவிஞர், பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர். ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியவர். ‘ராஷ்டிரா தர்ம’ என்றும் மாத இதழுக்கு ஆசிரியராக இருந்தவர். தலைசிறந்த பேச்சாளர். இதுவரை இரு கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள் ளன).

கூட்டத்திற்கு வந்திருந்தவர்களுக்கு நன்றி…

நேற்று பெய்த மழையில் காலையில் கூட்டம் நடக்குமா என்ற சந்தேனம் என்னிடம் ஒட்டிக்கொண்டிருந்தது. 10.30 மணிக்குக் கிளம்பும்போது மழை விட்டிருந்தது. எல்லோரும 11 மணிக்குக் கூடினோம். கலந்துகொண்டவர்கள் பலரும் உற்சாகமாக இருந்தார்கள்.
உப்புக்கணக்கு என்ற நாவலைப் பற்றி பலரும் பேசினோம். சிறப்பாக புனையப்பட்ட வரலாற்று நாவல். கூட்டத்தில் நடந்த விவாதத்தை உற்று நோக்கினால் நாம் காந்தியைப் பற்றி மோசமாக எதாவது சொல்லிவிடுவோமா என்று தோன்றியது.
கூட்டம் இனிதே நடந்து முடிந்தது. கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி.

சாதாரண மனிதர்கள் நடத்தும் சாதாரண கூட்டம்

சாதாரண மனிதன் என்ற தலைப்பில் எழுத்தாளர் நரசய்யா மணிக்கொடி எழுத்தாளர் சிட்டியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருந்தார். உண்மையில் சிட்டி சாதாரண மனிதர் அல்ல.
நாளை நடைபெறும் விருட்சம் கூட்டம் குவிகம் இல்லத்தில் நடைபெறுகிறது. ஒரு புத்தக வெளியீட்டுக் கூட்டம். முக்கியமாக சுதந்திர தினத்தன்று நடைபெறுகிறது. அப் புத்தகத்தின் பெயர் உப்புக்கணக்கு. இது ஒரு நாவல். இதை எழுதியவர் வித்யா சுப்ரமணியன். விருட்சம் வெளியீடாக இந் நாவல் வெளிவந்துள்ளது. 342 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.300. ஆனால் நாளை வாங்குபவர்களுக்கு இப் புத்தகம் ரூ.200க்குக் கிடைக்கும்.
எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் நேரிடையாகவே கையெழுத்துப் போட்டு இப் புத்தகத்தைத் தர உள்ளார். கூட்டத்திற்கு வந்திருந்து சிறப்பு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இது சாதாரண மனிதர்கள் நடத்தும் கூட்டம். எல்லோரும் வர வேண்டும்.
கூட்டம் நடக்குமிடம் : கூட்டம் நடக்குமிடம் : Kuvigam Illam Flat 6, 3rd Floor, A Wing, Silver Park Apartments, 24 Thanikachalam Road, T Nagar, Chennai Near by Hindi Prachara Sabha
TOMORROW AT 11 AM.

திருவல்லிக்கேணி பிளாட்பாரத்தில் வாங்கிய புத்தகங்கள்

நான் ஒவ்வொரு முறை திருவல்லிக்கேணி செல்லும்போது அங்கே உள்ள பிளாட்பார கடைகளுக்குச் செல்லாமல் இருக்க மாட்டேன். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக நான் திருவல்லிக்கேணி பிளாட்பார கடைகளுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.

முன்பு அடிக்கடி போவேன். இப்போதெல்லாம் அந்தப் பக்கம் போக நேர்ந்தால் மட்டும் போகிறேன். இங்கே உள்ள பெரும்பாலான பிளாட்பார கடைகளில் கல்லூரி புத்தகங்கள்தான் இருக்கும்.

ஆனால் ஒருசில கடைகளில் தமிழ் புத்தகங்களும் ஆங்கிலப் புத்தகங்களும் கிடைக்கும். குறிப்பாக ஒரு கடையில் பாதி பகுதி ஆங்கிலப் புத்தகங்களும் மற்றொரு பாதிப்பகுதி தமிழ்ப் புத்தகங்களும் கிடைக்கும். சில புத்தகக் கடைகளில் புத்தகங்களின் விலையை புதுப் புத்தகம் வாங்கும் விலைக்கு விற்பார்கள்.

நான் செல்லும் இரண்டு கடைகளில் தமிழ் புத்தகங்கள் ரூ.5க்கும் ஆங்கிலப் புத்தகங்கள் ரூ.10க்கும் முன்பு கிடைத்துக்கொண்டிருந்தது. இப்போது ஆங்கிலப் புத்தகம் ரூ.20க்கும் தமிழ் புத்தகம் ரூ.10க்கும் விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இங்கே கொட்டிக்கிடக்கும் புத்தகங்களைப் பார்க்கும்போது நமக்கே மலைப்பாக இருக்கும். இத்தனைப் பேர்கள் எழுதுகிறார்களா என்று இருக்கும்.

நான் இந்த முறை ஐந்து புத்தகங்கள் வாங்கினேன். மொத்தம் ரூ.120க்கு. 3 ஆங்கிலப் புத்தகங்கள், 2 தமிழ்ப் புத்தகங்கள்.

முக்கியமாக ஏ கே செட்டியார் பதிப்பாசிரியராக இருந்த குமரி மலர் என்ற பத்திரிகையை வாங்கினேன். இது அபூர்வமான பத்திரிகை. நான் சிறுபத்திரிகைகளைச் சேகரிப்பவன், அதில் இந்தப் பத்திரிகையை முக்கியமாகக் கருதுகிறேன். ஆனால் இந்தப் பத்திரிகையில் எந்த ஆண்டில் வெளிவந்தது என்று குறிப்பிடப்படவில்லை. புத்தகக் குவியலில் பார்த்தவுடன் கையில் எடுத்து ைத்துக்கொண்டேன். இந்தப் பத்திரிகை நிச்சயமாகக் கிடைக்காது. ஆனால் எந்த ஆண்டில் எந்த மாதத்தில் வந்த பத்திரிகை என்ற விபரம் ஏன் இல்லை என்பது புரியவில்லை. ரொம்ப அபூர்வமான பத்திரிகை. என்னிடம் சில கசடதபற என்ற பத்திரிகையின் இதழ்கள் உண்டு. ஆனால் அப் பத்திரிகையை நடத்திய கசடதபற ஆசிரியருக்கே அந்த இதழின் பிரதி ஒன்று கூட கிடையாது. அவர் இதைச் சிரித்துக்கொண்டே என்னிடம் கூறியிருக்கிறார்.

இரண்டாவது இன்னொரு தமிழ்ப் புத்தகம். ‘நேற்றிருந்தோம்’ என்ற கிருத்திகாவின் புத்தகம். வாசகர் வட்டத்தின் இந்தப் புத்தகமும் கிடைக்காத புத்தகம். வாசகர் வட்டம் என்ற இலக்கிய அமைப்பு எப்படியெல்லாம் புத்தகங்களை அச்சடித்திருக்கிறார்கள் என்பதை ஒருவர் பார்த்து வியக்க வேண்டும். இந்த வியாபாரிகள் என்ன செய்வார்கள் என்றால், விலை என்று எழுதியிருக்கும் பக்கத்தைக் கிழித்து விடுவார்கள். 1975ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம்.

நான் வாங்கிய 3 ஆங்கிலப் புத்தகங்களில் ஒரு புத்தகம் பிரஞ்ச் நாவலை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பில் வந்த புத்தகம். அந்தப் புத்தகத்தின் பெயர் யாஸ்மினா கத்ராவின் அட்டாக். அதேபோல் இத்தாலி மொழியிலிருந்து மொழிப் பெயர்க்கப்பட்ட இன்னொரு புத்தகம் பெயர் THE TIME OF INDIFFERENCE என்ற புத்தகம். இதை எழுதியவர் எனக்குப் பிடித்த எழுத்தாளரான ஆல்பெர்டோ மெரோவியா. மூன்றாவது புத்தகம் சிட்னி ஷெல்டனின் எ ஸ்டேரன்ஜர் இன் தி மிர்ரர்.

இன்னும் தேடினால் பல புத்தகங்களைக் கண்டு பிடிக்கலாம். நான் பலமுறை சென்று பல புத்தகங்களை இப்படி சேகரித்திருக்கிறேன்.

என்ற புத்தகம். இதை எழுதியவர் எனக்குப் பிடித்த எழுத்தாளரான ஆல்பெர்டோ மெரோவியா. மூன்றாவது புத்தகம் சிட்னி ஷெல்டனின் எ ஸ்டேரன்ஜர் இன் தி மிர்ரர்.

இன்னும் தேடினால் பல புத்தகங்களைக் கண்டு பிடிக்கலாம். நான் பலமுறை சென்று பல புத்தகங்களை இப்படி சேகரித்திருக்கிறேன்.

தமிழ் சினிமாவை விட தமிழ்ச் சிறுகதை சிறந்தது

நேற்று இரவு நானும் என் நெருங்கிய உறவினரும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 ஐப் பார்த்தோம். என் நெருங்கிய உறவினர் என்னை விட இளைஞர். அவருக்கு கமல், ரஜினி, அஜித் போன்ற நடிகர்களிடம் அலாதியான அபிமானம் உண்டு.
நான் தியேட்டரில் போய் சினிமாப் பார்ப்பதைப் பெரிய விஷயமாக நினைத்துக்கொண்டேன். கடந்த சில ஆண்டுகளாக நான் தியேட்டரில் சினிமா பார்ப்பதில்லை. வெறுப்பு என்பதை விட என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் நான் இருப்பதாக நான் தோன்றும்.
எனக்கும் கமலுக்கும் ஒரே வயது. என் உறவினர் இதைச் சுட்டிக்காட்டும்போது, உண்மை என்று ஆமோதித்தேன். ஆனால் கமலின் உருவம் திரையில் வேறு விதமாகத் தோன்றியது.
இந்தப் படம் ஆரம்பத்திலிருந்து எனக்குச் சற்றும் புரியவில்லை. அவர்கள் பேசும் வசனங்கள் செயற்கையாக இருப்பதாகப் பட்டது. ஒரு தமிழ் படத்தை முதன் முறையாகப் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தது இதுவாகத்தான் இருந்தது. இத்தனைக்கும் நான் விஸ்வரூபம் 1 ஐப் பார்த்துவிட்டுத்தான் இதைப் பார்த்தேன்.
எப்படி இந்தப் படம் சற்றும் புரியாமல் ஆனால் வன்முறையின் லட்சணமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி யோசித்தேன். கதாபாத்திரங்களுக்குள் ஏதோ குறை இருப்பதுபோல் பட்டது. ஏதோ ஒன்ற முடியாதத் தன்மை சுழன்று கொண்டிருப்பதுபோல் பட்டது.
இரவு தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு பார்த்தது வேற கடுப்பாக இருந்தது.
இந்தச் சமயத்தில்தான் எனக்குத் தோன்றியது. இதுமாதிரி தமிழ் சினிமாக்களை தியேட்டரில் பார்ப்பதை விட ஒரு தமிழ் சிறுகதையைப் படித்தால் என்ன என்று.
இரண்டுக்கும் உள்ள வேற்றுமையை இங்கே பட்டியல் இட விரும்புகிறேன்.

தமிழ்ச் சிறுகதை : எந்தக் கதையை வேண்டுமானாலும் படிக்கலாம். குறிப்பிட்ட நேரம் என்பது கிடையாது. பாதி படித்துவிட்டு திரும்பவும் இன்னொரு பாதியை மெதுவாகப் படிக்கலாம்.

தமிழ் சினிமா : தியேட்டரில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பார்க்க வேண்டும். பாதியில் போக முடியாது. முழுவதும் பார்த்தே தீர வேண்டும.

தமிழ்ச் சிறுகதை: எந்தக் கதையை வேண்டுமானாலும் படிக்கலாம். தரம் மோசமாக இருக்காது. படிக்கிறோம் என்ற உணர்வுதான் இருக்கும். ஆனால் வேற வழியில்லாமல் படிக்கிறோமே என்ற எண்ணம் தோன்றாது.

தமிழ் சினிமா : எப்படி எடுத்திருக்கிறானோ அப்படித்தான் தமிழ்ப்படம். நெருக்கமாக அருகில் பலர் புடைசுழ படம் பார்க்க வேண்டும. பெரும்பாலும் தமிழ் சினிமாக்கள் சிறப்பாக இருப்பதில்லை. வேற வழியில்லாமல் இருக்க வேண்டும்.

தமிழ்ச் சிறுகதை : சினிமாவைப் போல் நம்மைப் பாடாய் படுத்தாது. படிக்கிறவர் கற்பனையில் கதை நகர்ந்து கொண்டிருக்கும்.

தமிழ் சினிமா : எல்லாம் செயற்கையான வசனங்கள். செயற்கையான ஜோடனைகள்.

தமிழ்ச் சிறுகதை : கதை நம்முள் நடக்கிறது. நமக்குப் பிடிக்கவில்லை என்றால் கதை உடனே நகர்ந்து விடும்.

தமிழ் சினிமா : தியேட்டரில் பார்த்தால் வெட்டி செலவு.

தமிழ்ச் சிறுகதை : ஒரு செலவும் இல்லை. நூல் நிலையத்திற்குப் போனால் ஏகப்பட்ட சிறுகதைகளைப் படிக்கலாம். அல்லது விருட்சம் போன்ற பத்திரிகையை வாங்கினால் ரூ.20தான் ஆகும்.

தமிழ் சினிமா : சினிமா பார்ப்பதால் நம்மால் கற்பனை செய்ய முடியாது.

தமிழ்ச் சிறுகதை : படிப்பவரின் கற்பனை வளத்தைத் தூண்டும்.

தமிழ் சினிமா : மொத்தத்தில் வீண்.

தமிழ்ச் சிறுகதை : வீணல்ல. எப்போது வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் படித்து ரசிக்கலாம். அல்லது மூடி வைத்துவிடலாம்.

திருக்குறள் சிந்தனை 27

திருக்குறளை ஒவ்வொன்றாக எடுத்துப் படிக்க வேண்டுமென்ற என் எண்ணம் என்னை அறியாமலேயே தவடுபொடியாகிவிட்டது. கவனம் வேறு எங்கோ போக ஆரம்பத்துவிட்டது.

ஆனாலும் திருக்குறள் ஞாபகம் வந்து விடுகிறது. இதோ ஒரு குறள்.

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு

இந்த இடத்தில் வகைதெரிவான் என்ற வார்த்தை சிறப்பாக இருப்பதாகப் படுகிறது. சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து உணர்ச்சிகளையும் புரிந்துகொண்டு, அறிந்து அவற்றை வெல்லத் தெரிந்தவனாக இருக்கவேண்டும். அப்படிப்பட்டவர்களைத்தான் அறிவுடையோர் போற்றுவார்கள்.

இதில் ஓசை என்ற ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள் இதைப் பூரணமாக உணருபவர்கள் பக்கத்தில் வண்டி வருவதைக் கூட சத்தத்தால் உணர்ந்து அது வருகிற பாதையியிருந்து விலகிப் போவார்கள்.

இந்த ஓசையைப் பற்றி நான் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன் : கவிதையின் பெயர், üஒலிபெருக்கியின் அவலம்.ý ஒருமுறை பிள்ளையார் சதூர்த்தி அன்று, ஏகப்பட்ட சத்தம். ஒலிபெருக்கியின் அலறல். ஒரு நிமிடம் கூட வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
அது குறித்துதான் ஒரு கவிதை எழுதி உள்ளேன்.

நேற்றுப் பண்டிகை தினம்
காலையில் தெருவில்
ஒலிபெருக்கியின் அவலம்
அறைக் கதவைச் சாத்தினேன்
சன்னல்களை மூடினேன்
இடுக்குகளில் நுழைந்தது
ஒலிபெருக்கியின் அவலம்
யாருடனும் பேசப் பிடிக்கவில்லை
குழந்தைகள் கட்டுக்கடங்காமல்
மனைவி ஏதோ காரியத்தில்
மதியம் ஒலிபெருக்கியின் அவலம்
சற்று ஓய
சிறகடித்துப் பறந்தது
மாலையில் வெளியே சுற்ற ஆரம்பித்தோம்
கோயில்களில் வண்ண ஒளி விளக்குகள்
திரும்பவும் ஒலிபெருக்கியின் அவலம்
எல்லோருக்கும் ஏதோ நடந்துகொண்டிருக்கிறது
ஒவ்வொரு கோயிலிலும் கூட்டம்
எங்கும் தலை
காலெல்லாம் தேங்காய்ச் சில்லு
அவர்கள் கோயிலுக்குள்
காத்திருந்தேன்
ஒலிபெருக்கியின் அவலத்துடன்
வீடு திரும்புகையில்
சோர்வின் தீவிரம்
இன்று காலை
வேறுவிதமாய்ப் பொழுது.

அன்று இந்த ஒலிபெருக்கியின் அலறலைக் கேட்டு எங்கு ஓடுவது என்று புரியாமல் இருந்தேன். திருவள்ளுவர் அதை அடக்கி ஆள சொல்கிறார். நாம் எத்தனைபேர்கள் நம்மைச் சுற்றிலும் உள்ள ஓசைகளை உணர்கிறோம். இந்த ஓசையை வைத்து நாம் அதிகமாக எழுதலாம். அப்படியென்றால் திருவள்ளுர் சொல்கிற சுவை, ஒளி, ஊறு, நாற்றம் பற்றி இன்னும் அதிகமாக யோசிகலாம்.

இதோ முப்பது…….

வழக்கம்போல சீத்தாலட்சுமி அபார்ட்மெண்டிலிருந்து கிளம்பினேன். பிளஷர் வண்டியில். அப்போது ஒரு குரல் கேட்டது. ‘இதோ முப்பது’ என்று. ‘இதோ முப்பதா’ என்னவென்ற புரியவில்லையே என்று நினைத்துக் கொண்டேன். கோவிந்தன் ரோடைத் தாண்டிக் கொஞ்ச தூரம் போனேன். திரும்பவும் குரல் : இதோ முப்பது. ஏய் சும்மாயிரு என்று என்னைக் கடிந்து கொண்டேன். ஆனால் இதோ முப்பது என்ற வார்த்தை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது.

என் நண்பருடன் தினமும் ஒரு பூங்காவில் வாக் செய்வேன். அவரைப் போய்ப் பார்த்தேன். அவரும் என்னுடன் வாக் செய்ய கிளம்பினார். ‘இதோ முப்பது’ என்று குரல் கேட்டது. நண்பரிடம் கேட்டேன், ‘உங்களுக்கு எதாவது குரல் கேட்டதா?’ என்று.

‘இல்லையே?’ என்று சொன்னார்.

நானும் நண்பரும் தினமும் வாக் செய்வதை ஒரு கடமையாக வைத்துக்கொண்டிருக்கிறோம். ஒருவருக்கொருவர் உரசிக் கொள்ளும் இடமும் கூட. நான் எதாவது சொல்வேன். அவர் எதாவது சொல்வார் இரண்டு பேரும் சண்டைப் போடுவோம்.
கொஞ்சதூரம் வாக் பண்ணிக்கொண்டு இருக்கும்போது, அவரும் சொன்னார். ‘ஆமாம். இதோ முப்பது என்று குரல் கேட்கிறது,’ என்று.

‘என்னது முப்பது என்று தெரியவில்லை.

காலையிலிருந்து இந்தக் குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது,’

‘புரியவில்லை. உங்கள் வயதை எதற்காவது குறிப்பிடப்படுகிறதா?’

‘இல்லை. எனக்கு 64வயது. அப்படியென்றால் முப்பது என்று ஏன் சொல்ல வேண்டும்?’

வாக்கிங்கை முடித்துவிட்டு நாங்கள் இருவரும் சரவணபவன் ஓட்டலுக்குச் சென்றோம். ஒரு காப்பி வாங்கிக் குடித்தோம். ஆனால் இதோ முப்பது கேட்காமல் இல்லை.

“ஏன் இப்படி ஒரு குரல் கேட்கிறது என்று எனக்கும் புரியவில்லை,” என்றார்.

நான் தீவிரமாக யோசித்தேன்.

“இப்போது புரிந்துவிட்டது,” என்று உற்சாகமாகக் கத்தினேன்.

“ஏன் கத்துகிறீர்கள்? சாதாரணமாக சொல்லக் கூடாதா?” என்றார் நண்பர்.

“உண்மைதான் சாதாரணமாகச் சொல்லலாம்,”

“சரி என்ன கண்டுபிடித்தீர்கள்?”

“அதுதான் விருட்சம். இந்த ஜøலை மாதம்தான் நான் விருட்சம் கொண்டு வந்து முப்பது வருடம் முடிகிறது,”

“விருட்சம் வந்து முப்பது வருடம் ஆகிவிட்டதா?”

“ஆமாம்.”

“பெரிய முயற்சி,”

“எனக்கே தெரியவில்லை. நான் கொண்டு வந்த பத்திரிகைக்கு முப்பது வருடம் முடிந்துவிட்டது.
முதல் இதழ் 1988ல் வந்தது…”

“என்ன செய்யப் போகிறீர்கள்?”

“ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யலாமென்று நினைக்கிறேன்,”

“எங்கே?”

“ரைட்டர்ஸ் கேப்பில்.”

“எப்போது?”

“106வது இதழ் வந்த பிறகு.”

போஸ்டல் காலனியில் விருட்சம் லைப்ரரியில் அமர்ந்திருந்தபோது விருட்சம் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். அட்டைப் பெட்டிகள் நிறையா விருட்சம் இதழ்களை அடுக்கி வைத்திருக்கிறேன். இப்படி ஏகப்பட்ட அட்டைப் பெட்டிகள். ஒவ்வொரு முறையும் விருட்சம் அடிக்கும்போது இதழ்கள் மீந்து போய்விடும்.
ஒருமுறை சி சு செல்லப்பா அவர்களின் புதல்வனைச் சந்தித்தேன் பழைய இதழ்கள் எழுத்து கிடைக்குமா என்று அவரைக் கேட்டேன். எதுவுமில்லை என்றார். ஏன் என்ன ஆயிற்று என்று கேட்டேன். நிறையா இதழ்கள் மீந்து போய் கிடந்தன. என்ன செய்வதென்று தெரியவில்லை. பேப்பர் கடையில் போட்டுவிட்டேன் என்றார் அவர். சி சு செல்லப்பா இருக்கும்போதே அது மாதிரி செய்ததாக அவர் சொன்னார்.

அவர் சொன்னதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். இதோ என் முன்னாலும் பல அட்டைப் பெட்டிகள் நிறையா விருட்சம் பழைய இதழ்கள். ஒவ்ùôவன்றாக எடுத்துப் பார்க்கும்போதெல்லாம் எப்படி இப்படியெல்லாம் கொண்டு வந்தோம் என்ற வியப்புதான் கூடிக்கொண்டே போகிறது.
என் கையில் 92வது இதழ் கிடைத்தது. அதில் ஒரு கவிதை செ சுஜாதா என்பவர் எழுதியது

நதி இலை எறும்பு

உன் வார்த்தைகளின் தடம் பற்றி
நான் நடந்துகொண்டிருக்கிறேன்

நீ ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறாய்

அன்பை
காதலை
நம்பிக்கையை
துரோகத்தை
கோபத்தை
வன்மத்தை
வெறுமையை
நிறைவை

கொழுத்த உன் கன்னத்தில்
திரண்டிருக்கும் அம் மச்சம்
என் கண்களில் விழுந்து உறுத்துவதை
அறியாமலேயே

இதோ அட்டைப் பெட்டிகள் நிறையா பழைய இதழ்களை வைத்துக்கொண்டு காத்துக்கொண்டிருக்கிறேன். அட்டைப் பெட்டியில் இருக்கும் பழைய இதழ் என்னைப் பரவசப்படுத்தத் தவறவில்லை. கட்டாயம் எதிர்கால வாசகர்கள் வருவார்கள். என்னிடமிருந்து விருட்சம் பழைய இதழ்களைக் கேட்டு வாங்காமல் இருக்க மாட்டார்கள். அட்டைப் பெட்டிகளும் காலி ஆகி விடும்.