நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …32

அழகியசிங்கர்

நண்பர் அரவிந்த் சுவாமிநாதன் சென்ற நூற்றாண்டின் சிறுகதைகள் என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தைத்  தொகுத்திருந்தார். அப் புத்தகத்தைக் குறித்து புத்தகக் காட்சியில் அவர் பேசியதை ஒளிபரப்பு செய்கிறேன். இது குறித்து டாக்டர் பாஸ்கரனும் பேசியிருக்கிறார். 

 

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …31

அழகியசிங்கர்

நேற்று புத்தகக் காட்சி முடிந்து வீட்டிற்குக் கிளம்பும்போது மணி 12 ஆகிவிட்டது.  பைக் வைத்திருந்த இடத்திற்குப் போகும் போது ஒரே இருட்டு.  நாய்கள் குலைத்துக் கொண்டிருந்தன.  நாயைக் கண்டால் எனக்குச் சற்று பயம்.  எங்கே கடித்து விடுமோ என்ற பயம்தான்.  அதனால் வண்டியை அப்படியே வைத்துவிட்டு ஆட்டோவில் போய்விடலாமென்று நினைத்தேன்.  ஆனால் சிலர் பின்னால் வண்டிகளை எடுக்க வந்து கொண்டிருந்தார்கள்.  அவர்களைப் பார்த்து,üநாய்,ý என்றேன்.  üஅதெல்லாம் ஒன்றும் பண்ணாது வாருங்கள்,ý என்றார்கள்.  
üநான் வண்டியை எடுக்கும்வரை நீங்கள் இருக்கணும்,ý என்றேன்.  அவர்கள் சரி என்றார்கள்.  இருட்டில் அவர்கள் முகங்கள் கூடத் தெரியவில்லை.  என் முகம் கூட அவர்களுக்குத் தெரிந்திருக்காது.  குரல்தான் எங்களை இணைத்தது.
எனக்குத்தெரியும் புத்தகக் காட்சியின் கடைசி நாள் டென்ஷனாக இருக்கும்.  வீட்டிற்கு சீக்கிரம்போக முடியாது என்று.  கொஞ்சம் பணம், செக் புக் என்று எல்லாம் எடுத்துக்கொண்டு போனேன்.  என் ஜோல்னாப் பையை மாட்டிக்கொண்டே திரிந்தேன்.
பெண் வீட்டிலிருந்து வந்ததால் சாப்பிடத் தயிர் சாதம் வைத்திருந்தேன்.  இரவு ஏழு மணிக்குச் சாப்பிட்டேன்.  என் கடையில் புத்தகம் விற்கக் கொடுத்த எல்லாப் பதிப்பாளர்களுக்கும் பணத்தைக் கொடுத்துவிட வேண்டுமென்ற துடிப்புடன் இருந்தேன்.  அதனால்தான் இரவு 12 ஆகிவிட்டது.
 ஒவ்வொரு முறை புத்தகக் காட்சி முடிந்தவுடன் ஒரு பெரிய கடலைத் தாண்டி வருவதுபோல் உணர்வேன்.  ஒவ்வொரு முறை புத்தகக் காட்சியின்போது எதாவது சம்பவம் நடக்காமல் இருக்காது.  இந்த முறை காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து ஒருவருக்கு வாங்கிக்கொண்ட வந்த புத்தகம் காணாமல் போய்விட்டது. 
இன்னொரு உண்மையைக் கண்டுகொண்டேன்.  கூட்டமாக இருக்கும்போது மற்ற ஸ்டால்களுக்குச் சென்று புத்தகங்கள் வாங்கக் கூடாது என்று.  அந்தத் தவற்றைச் செய்ததால் அவதிப்பட்டேன்..
ஸ்டாலில் எப்போதும் கூட்டம் வராது.  அப்படி கூட்டம் வராதத் தருணத்தில் நாம் சும்மா உட்கார்ந்திருக்கக் கூடாது.  மற்ற பதிப்பாளர்களின் முக்கியப் புத்தகங்களை எடுத்து வாசித்துக்கொண்டிருக்க வேண்டும்.  
ஸ்டாலில் இருக்கும்போது பெரும்பாலும் தண்ணீர் குடிப்பதை தவிர்த்து விட்டேன்.  காப்பி இரண்டு முறையாவது சாப்பிடுவேன்.  முழு நாளில் மதியம் அளிக்கும் சாப்பாட்டை ஜாக்கிரதையாகத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவேன்.  
என் கூட இருந்த நண்பர் (அவர் பெயரைக் குறிப்பிட வேண்டாமென்று சொன்னதால் சொல்லவில்லை) இன்னும் உறுதியானவர். 
இந்த முறை மாலை நேரங்களை நன்றாகப் பயன்படுத்தினேன்.   நண்பர்களைக் கூப்பிட்டு கூட்டங்கள் நடத்தினேன்.  விருட்சம் வெளியீடாக வந்த எல்லாப் புத்தகங்களைப் பற்றியும் பேச வைத்தேன்.  அதே நானே சோனி டிஜிட்டல் காமெராவில் பதிவு செய்து முகநூலில் பதிவு செய்தேன்.  அது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.
எல்லாப் புத்தகக் காட்சிகளும் எனக்குப் பாடம் கற்றுக்கொடுக்கும்.  இந்தப் புத்தகக் காட்சியும் எனக்குப் பாடம் கற்றுக்கொடுக்காமலில்லை.  புத்கதக் காட்சி முன் நான் ஒரு மாணவன். 

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …28

அழகியசிங்கர்

பறந்து போன பக்கங்கள் என்ற தலைப்பில் கோமல் சுவாமிநாதன் அவர்கள் சுபமங்களாவில் தன் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் கட்டுரையாக எழுதினார்.  அது இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது.  குவிகம் வெளியீடு.  விருட்சம் அரங்கில் இந்திரன் அவர்கள் கோமலைப் பற்றி பேசிய ஒளிப்பதிவை இங்கு வெளியிடுகிறேன்.

https://youtu.be/rMKL05CdPfM

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …28

அழகியசிங்கர்

பறந்து போன பக்கங்கள் என்ற தலைப்பில் கோமல் சுவாமிநாதன் அவர்கள் சுபமங்களாவில் தன் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் கட்டுரையாக எழுதினார்.  அது இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது.  குவிகம் வெளியீடு.  விருட்சம் அரங்கில் இந்திரன் அவர்கள் கோமலைப் பற்றி பேசிய ஒளிப்பதிவை இங்கு வெளியிடுகிறேன்.

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …26

அழகியசிங்கர் 


வளவ துரையனின் கவிதைத் தொகுதியின் பெயர் அப்பாவின் நாற்காலி.  இந்தக் கவிதைத் தொகுதியைப் பற்றி ஆர் கே ராமனாதன் இன்று உரை நிகழ்த்தினார்.  அதை இங்கு ஒளி பரப்புகிறேன்.

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …26

அழகியசிங்கர்

நான் இங்குக் குறிப்பிடும் புத்தகங்கள் விரும்பிப் படிக்க வேண்டுமென்று நினைக்கிற புத்தகங்கள். அப் புத்தகங்களை இப்போது படிக்காவிட்டாலும் கூட அவற்றைக் குறித்து எதாவது சொல்ல இயலுமா என்று பார்க்க முயற்சிக்கிறேன்.
இப் புத்தகங்களெல்லாம் 403ஆம் அரங்கில் விற்பனைக்கு உள்ளது. பெரும்பாலும் இப் புத்தகங்களின் ஒரு பிரதியை வாங்கிவிடுவேன். 
ஏற்கனவே கோணல் பக்கங்கள் என்ற தலைப்பில் சாரு நிவேதிதாவின் இரண்டு பாகங்களை வாங்கி வைத்திருக்கிறேன். இது மூன்றாவது பாகம். கிழக்கு பதிப்பகத்திலிருந்து வந்திருக்கிறது. சாருநிவேதிதாவின் எழுத்துக்களில் ஒரு வெளிப்படைத் தன்மை என்னை பிரமிக்க வைக்கிறது.

இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு முன் புத்தகத்தின் அட்டையில் உள்ள வாசகங்களை இங்கு அளிக்க விரும்புகிறேன்.

– நீங்கள் சினிமா நடிகனை – நடிகையைப் பிரபலம் என்றும் ஒரு எழுத்தாளனைச் சாமான்யன் என்றும் மதிப்பீடு செய்கிறீர்கள்.

– தமிழ்நாட்டுக்கு என்று ஒரு தனிச் சிறப்பு உள்ளது. அஃதாவது இங்கேதான் சிட்னி ஷெல்டன் மாதிரி எழுதுகிற ஒருவர் தன்னை இலக்கிய உலகம் இலக்கியவாதியாக அங்கீகரிக்கவில்லையே என்று அங்கலாய்ப்பதைப் பார்க்க முடியும்.

– வெளிநாட்டில் உள்ள தமிழ்ச் சங்கங்களால் தமிழுக்கு இதுவரை சிறு துரும்புகூடப் பயன் இருந்ததில்லை.

– நம்மூர் எழுத்தாளர்களுக்கு ஹீஸ்டரி மட்டுமே தெரியும். சபால்டர்ன் ஹிஸ்டரி தெரியாது. எனவே சமூகம் என்ன சொல்கிறதோஅதையே அட்சரம் பிசகாமல் திருப்பிச் சொல்வார்கள்.

மனம் திறந்து துணிச்சலாக எழுதப்பட்ட புத்தகம் இது. எந்த எழுத்தாளரும் தமிழில் இது மாதிரி எழுதத் துணிய மாட்டார்கள். வாசிக்க வேண்டிய வித்தியாசமான புத்தகம். விலை : ரூ.225. கோணல் பக்கங்கள் 1, 2 கூட விற்பனைக்கு உள்ளது. கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

மதுரம் என்ற தலைப்பில் வண்ணதாசனின் சிறுகதைகளின் தொகுப்பு வந்துள்ளது. 11 கதைகள் அடங்கிய 132 பக்கங்கள் கொண்ட புத்தகம் இது. 
üவாழ்க்கை என்பது எனக்கு மனிதர்கள்தான். எனக்கு இடது, வலது, முன், பின் என்றிருந்து தஙகள் தங்கள் தோழமையாலும், சூழலாலும், விரோதத்தாலும் எனக்கு இன்று நான் அறிந்திருக்கிற கொஞ்சத்தைக் கற்றுக் கொடுத்தவர்கள் அவர்களே. என் கடைசி நிமிடம் வரை கற்றுக் கொள்கிற, விட்டுக் கொடுக்கிற எளிய திறந்த மனத்தை காப்பாற்றிச் செல்ல முடியுமெனில் அதுவே நானடைய விரும்பும் சம்பத்தாக இருக்கும்ý என்கிறார் வண்ணதாசன். வண்ணதாசன் கவிதைகளும் எழுதுபவர். கதைகளில் கவிதையின் சாயல் தெரியாது. அதேபோல் கவிதைகளில் கதையின் சாயல் தெரியாது.

இந்தப் புத்தகம் விலை ரூ.130தான். ஒருவர் கட்டாயம் வாஙகி வாசிக்க வேண்டிய புத்தகம்.

மூன்றாவதாக நான் சொல்ல விரும்புவது.

இரா முருகனின் 1975 என்ற நாவல். 392 பக்கங்கள் கொண்ட இந் நாவலின் விலை ரூ.450. (இந்த விலை சற்று அதிகமாக எனக்குப் படுகிறது).
இரா முருகன் தொடர்ந்து நாவல்கள் எழுதி வருபவர். அவருடைய அரசூர் வம்சம் நாவலிலிருந்து அவருடைய நாவல்கள் எல்லாவற்றையும் வாசிக்க நினைக்கிறேன்.

இந்த நாவலைக் குறித்து பின் அட்டையில் வெளிப்படுத்தியிருக்கும் விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.

‘இந்தப் புதினம் எமர்ஜென்சி என்ற நெருக்கடி நிலைக் காலத்தின் வரலாறு அல்ல. எமர்ஜென்சியின்போது நிகழ்கிற சம்பவங்களின், புனைவு பொதிந்த தொகுதி. வாழ்க்கையை ஓரளவு பிரதிபலித்து அதில் வண்ணம் கலக்க ஒரு முயற்சி. இந்தச் சிதறுண்ட கதை கூறுதல். ஒரு தளத்தில், இவை பார்வைப் பதிவுகளின் சங்கிலிப் பின்னலும் கூட.. என்கிறார் இரா முருகன்.

விறு விறுப்பான நடையில் எழுதிக்கொண்டே போகிறார் இரா முருகன்.

இரா முருகன் இதுவரை 32 புத்தகங்கள் எழுதி உள்ளார். அதில் ப்ராஜெகட் மேனேஜ்மென்ட் என்பது ஒரு புத்தகம்.

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …20

அழகியசிங்கர்

இன்றைய புத்தகக் காட்சியில் என் நண்பர் எஸ்.வி வேணுகோபாலன் கௌரி கிருபானந்தன் தெலுங்கிலிருந்து மொழிப் பெயர்த்த தெலுங்குக் கதைகளின் ஒன்றாவது பகுதியைப் பற்றி பேசுகிறார்.

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …19



அழகியசிங்கர்

எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  ஒவ்வொரு பதிப்பாளரும் கொண்டுவரும் புத்தகங்களைப் பார்க்கும்போது.   இந்தப் புத்தகங்களை விற்கிறேனோ இல்லையோ நானே புத்தகங்களை வாங்கி விடுவேன் என்று தோன்றுகிறது.  

முதலில் என் கடையில் என்னன்ன புத்தகங்களை விற்க முயற்சி செய்கிறேன் என்பதை ஓரளவாவது சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன்.  ஏனென்றால் புத்தகங்களைப் பற்றி சொல்லிவிட்டு உடனே நான் ஸ்டால் எண் 403க்கு ஓட வேண்டும். 

திரும்பவும் வீடு திரும்பும்போது அதிக நேரம் ஆகிவிடும்.  ஒருவிதத்தில் என் ஸ்டாலில் விற்க வைத்திருக்கிற புத்தகங்களை நானே வாங்கிக்கொள்ள வாய்ப்பு உள்ளது.  அதனால்தான் யாவரும் பதிப்பகம் புதிதாகக் கொண்டு வந்த புத்தகங்கள் எல்லாவற்றையும் வாங்கி வைத்திருக்கிறேன்.  ஒன்று விற்க முயற்சி செய்வேன்.  அல்லது நானே வாங்குவேன்.  இந்த முறை புத்தகக் காட்சியில் நான் வாங்கிச் சேமித்துக்கொண்டிருக்கும் புத்தகங்களைப் பற்றி பிறகு சொல்கிறேன். 

இப்போது பா ராகவனின் யதி என்ற பிரம்மாண்டமான நாவலைப் பற்றி எதாவது சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன். 926 பக்கங்கள் கொண்ட யதி என்ற நாவலை நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.  பா ராகவன் எத்தனை நாட்கள் எழுதினார் என்பது இருக்கட்டும்.  ஒரு வாசகன் எத்தனை நாட்கள் எடுத்துக்கொள்வான் இதைப் படிக்க.

புத்தகக் காட்சியில் இரா முருகனுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவருடைய அரசூர் வம்சத்திலிருந்து தொடர்ந்து அவர் எழுதிய நாவல்களில் 200க்கும் மேற்பட்ட கதாப்பாத்திரங்களை உருவாக்கி இருப்பதாகக் கூறி உள்ளார்.  கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தது.

ஒரு வாசகன் எத்தனைக் கதாப்பாத்திரங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்வான் என்றும் தோன்றியது.   ஆனால் யதியைப் பற்றி சி ஜே ஆனந்தகுமார் ஒரு இடத்தில் இப்படி கூறுகிறார். எப்படி குறைவான பாத்திரப்படைப்பை வைத்துக்கொண்டு இப்படி ஒரு பிரம்மாண்டமான நாவலைக் கட்டி எழுப்பினார் என்று. 

அப்பாவின் புத்தகச் சேமிப்பில் கண்டு பிடித்த ஜாபால உபநிடதம்தான் எழுதத் தூண்டியதாக பா ராகவன் வெளிப்படுத்தி உள்ளார்.  இந் நாவலை ஒருவர் கட்டாயம் வாசிக்க வேண்டும்.  இந் நாவலின் அதிகப்பக்கங்கள் என்னை மிரட்டத்தான் செய்கிறது.   ஆனால் அதிகப் பக்கங்கள் உள்ள ஒரு நாவலை மிரளாமல் வாசிப்பது எப்படி என்ற பயிற்சியை ஒரு வாசகன் தெரிந்துகொள்வது அவசியம் என்று தோன்றுகிறது.  

நாவலின் அட்டையில் இப்படி எழுதப்பட்டிருக்கிறது.

‘üஇந்த நாவல், துறவிகளின் வாழ்க்கையை அதன் யதார்த்தத் தன்மையோடும் அதீத புனைவோடும் ஒருங்கே நம் கண்முன் கொண்டு வருகிறது.  நம்மோடு உடன் பயணித்து, ஆனால் கண்ணில் படாமல் இருக்கும் ஒரு வாழ்க்கையைப் படிக்கும்போது நமக்குள் எழும் உணர்வுகள் அலாதியானவை.  இந்தியக் கலாச்சாரத்தின் நுனி முதல் அடிவரை ஆழங்கால் பாய்ச்சிய ஒருவரால் மட்டுமே இத்தனை விரிவான ஒரு பிரதியை யோசிக்காவது முடியும். இது பா ராகவனுக்குக் கூடி இருக்கிறது.ý 

புத்தகக் காட்சியில் இப் புத்தகத்தை விற்பதற்காக வைத்துக்கொண்டிருக்கிறேன் என்பதில் பெருமை படுகிறேன். 

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …18


அழகியசிங்கர்

இந்தப் புத்தகச் சந்தையில் செம்மையாக மாட்டிக்கொண்டவர் வேணு வேட்டராயன் அவர்கள்.  அவர் அழகியசிங்கர் கவிதைகள் என்ற புத்தகத்தைக் குறித்தும், க நா சுவின் விமர்சனக் கலை என்ற புத்தகத்தைப் பற்றியும் பேசினார்.  இதோ அவருடைய ஒளிப்பதிவு, விடுமுறை தினமாக இருந்ததால் ஒரே சத்தம்.  அதனால் ஸ்டால் உள்ளேயே வேணு வேட்டராயணன் பேசியதைப் படம் பிடித்தேன். 

https://youtu.be/JdOWgM5X4Bs

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …17

அழகியசிங்கர்

ஒரு புத்தகக் காட்சியின் போதுதான் இதுமாதிரி செய்தேன். இரண்டு பக்கங்களிலும் கயிறுகளைத் தொங்கவிட்டு துணி காயப்போடுவதுபோல் சிறுபத்திரிகைகளைத் தொங்க விட்டேன்.   அப்போது என் கடையில் சிறுபத்திரிகைகளை அதிகமாக விற்பதற்குத் தருவார்கள்.  ஆனால் இப்போதோ சிறுபத்திரிகைகளே இல்லையோ என்று சொல்லும்படி இருக்கிறது.
இந்த முறை என் ஸ்டாலில் விற்பதற்கு வந்த இரண்டு சிறுபத்திரிகைகளைப் பற்றி சிறிய குறிப்பாவது கொடுக்க முயற்சி செய்கிறேன்.  
ஒரு புத்தகம் üசிற்றேடு.ý  இதன் ஆசிரியர் தமிழவன்.  ஜனவரி மார்ச்சு மாத இதழ் விற்பனைக்கு வந்துள்ளது.   இப் பத்திரிகையை சாதாரணமாகக் கையில் வைத்துக்கொண்டு படித்து விட முடியாது.  கொஞ்சம் முயற்சி செய்தால் முழுவதும் படிக்க முடியும்.  அப்படியே படித்தாலும் நாம் படித்ததில் என்ன புரிந்துகொண்டு விட முடியும் என்று தோன்றும்.
உதாரணமாக இதில் உள்ள கட்டுரைகளை வரிசைப்படுத்தி கூற விரும்புகிறேன்.
1. தொல்காப்பிய இலக்கியக் கோட்பாடுகள் 2. காந்தியும், மார்க்ஸ÷ம், அயன்மையுறாத வாழ்வும், 3. நடுப்பத்திரிகை மனோபாவமும் சிறுபத்திரிகை மனோபாவமும் 4. ஒலித் தததுவம், நாக்கு, சிறுகதை 5. திணை விரிவாக்கம். 
இப்படியெல்லாம் பல தலைப்புகளில் இப் பத்திரிகை விரிந்து செல்கிறது.  பத்திரிகையின் விலை ரூ.100.72 பக்கங்கள் கொண்ட இப் பத்திரிகையை விருட்சம் அரங்கில் ஒருவர் வாங்கி வாசிப்பது அவசியம்.

ஸ்டால் எண் 403க்கிற்கு வரவும்.