பதினான்காம் நாளின் வாசிப்பனுபவம் (15.09.2019)

அழகியசிங்கர்

டொரினா என்ற தலைப்பில் உள்ள கதை.  வசந்தா அக்கா தற்கொலை செய்து விட்டாள் என்ற செய்தியில் ஆரம்பிக்கிறது கதை.  வசந்தா அக்காவைப் பற்றி நினைவுகளில் ஆரம்பித்து முடிவும் அதேபோல் முடிகிறது.  இந்தக் கதையே வசந்தா அக்காவின் தற்கொலைதான்.  வேற வழியே இல்லை.  கதிரேசன் அண்ணனுடன் நடக்க வேண்டிய கல்யாணம் தவறிப்போய்விடுகிறது.  அதைப் பற்றியே நினைத்து நினைத்து வசந்தா அக்கா தற்கொலை செய்து கொண்டு விடுகிறாள்.  
திறமையாக எழுதப்பட்ட உளவியல் கதை.  வசந்தா அக்கா என்ற கதாபாத்திரத்தில் ஏற்றப்பட்டுள்ள சோகம் படிப்பவரைத் திகைக்க வைக்கிறது.  ஆனால் இந்தத் தற்கொலை முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
யயகிரகணம் என்ற கதையைப் படிக்கும்போது, இவர் கதைகளில் பொதுவான அம்சமாக நிறைவேறாத ஆசை அடிநாதமாக ஒலிக்கத் தொடங்குவதுபோல் தோன்றுகிறது.  பெண் பார்த்துவிட்டுப் போகிறான்.  அந்தப் பெண்ணிற்கும் இவனுக்கும் வயது வித்தியாசம் அதிகம்.  ஒருவாரம் கழித்துச் சொல்வதாகக் கூறிய பெண் வீட்டார்.  பதில் சொல்லவில்லை.  என்ன என்று கேட்டுவிடலாமென்று இவன் போகிறான். ஒரு காரணத்தைச் சொல்லி பெண் இப்போது தயாராய் இல்லை என்று பெண்ணின் அப்பா சொல்கிறார்.  பெண் சம்பந்தமாய் அவன் இளமைக்காலத்து நினைவுகள் உடனே.  சுஜாதா என்ற பெண் வருகிறாள். அவளைக் காதலிக்கிறான்.  
ஒரு இடத்தில் இப்படி எழுதியிருக்கிறார்.  'அப்போது இரண்டு கறுப்பு வெள்ளைப் பட்டாம்பூச்சி அவள் கண்களிலும், பல வண்ண வண்ணப் பட்டாம்பூச்சிகள் என் வயிற்றிலும் பறந்தன.'
இந்த இடத்தில் இதைப் படிக்கும்போது கதையின் போக்கு புரிந்து விடுகிறது. 
அவள் கண்களில் காதலை உணர்ந்த ஒருநாளில் அவளிடம் காதல் கடிதத்தை நீட்டுகிறான்.  பெரிய அதிர்ச்சியைக் காட்டாமல் நிலக்கடலைப் பொட்டலத்தைப் பிரித்து வாசிக்கும் ஒரு சாவதானத்துடன் அக் கடிதத்தை வாசிக்கிறாள்.  பின் அவன் கண்களைப் பார்த்து, 'உன் கண்கள் ரொம்ப அழகு,' என்று சொல்கிறாள். 
விலைமகளைத் தேடிப் போகிறான்.  அவன் நினைக்கிறதை நடத்த முடியவில்லை.  üüகோபப்படும்போது கூட உன் கண்ணு அழகய்யா,ýý என்கிறாள்.  கோபத்துடன் அவளைப் பார்த்து, üபோடி தேவடியா.ý என்கிறான்.
இந்தக் கதையில் யயகிரகணம் என்றால் என்னவென்று புரியவில்லை. 
லிண்டா தாமஸ் என்ற கதையில் ஒரு நிறுவனத்தில் 17 ஆண்டுகளாகப் பணிபுரியும் லிண்டா தாமஸ் என்ற பெண் பணியாளரைப் பற்றிய கதை.  அலுவல் விஷயமாகப் பேசும்போது வேற எதுவும் பேசாத ரொம்ப கறார் பேர்வழியாக இருப்பவர், சித்துவுடன் பேசும்போது கொஞ்சம் இலகுவாக மாறிவிடுகிறா. 17 ஆண்டுகளாக அனுபவமுள்ளவர் வேலையைவிட்டு விலகி விடுகிறார். அவரே விலகவில்லை நிறுவனம் அவரை நீக்கி விடுகிறது.  அதற்குக் காரணம் சித்துதான்.  ஐடி நிறுவனங்களில் உள்ள குழப்பத்தைத் திறமையாக எழுதி உள்ளார்.  
ஒரு காதல், மூன்று கடிதங்கள் என்ற கதை விவாகரத்தைப் பற்றிப் பேசுகிறது.  மனைவியுடன் வாழ விரும்பாத கணவன், ஜாக் என்ற ஆண் நண்பனுடன் அமெரிக்காவில் வாழ விரும்புகிறான்.  இந்தக் கதையின் போக்கு பின் குறிப்பு மூலம்தான் தெரிகிறது. 
வழிப்போக்கன் என்ற கதையில் இரண்டு பேர்களுக்காக வீடு வாடகைக்குத் தேடித் தர முன்பின் தெரியாத ஒருவன் உதவுகிறான்.  மூன்று பேர்களும் வேற வேற மொழி பேசுகிறவர்கள்.  கடைசியில் வீடு கண்டுபிடித்துக் கொடுத்து விடுகிறான்.  அதற்காக உதவி செய்ய வருபவன் எந்தவித பண உதவியையும் வாங்காமல் போய் விடுகிறான். அவன் பெயர் கூட அவர்களுக்குத் தெரியவில்லை.
மொத்தத்தில் கார்த்திக் பாலசுப்ரமணியன் திறமையாகக் கதை எழுதுபவராகத் தெரிய வருகிறார். 

 

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 50

    தலைப்பு  :   காவேரியிலிருந்து கங்கை வரை - மோட்டார்
        சைக்கிள் பயண அனுபவங்கள்

சிறப்புரை :   பிரபு மயிலாடுதுறை

இடம் :      ஸ்ரீராம் குரூப் அலுவலகம்
         மூகாம்பிகை வளாகம்
         சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே
         ஆறாவது தளம்
          மயிலாப்பூர்
         சென்னை 600 004

தேதி        21.09.2019  (சனிக்கிழமை)    

நேரம்       மாலை 6.00 மணிக்கு

பேசுவோர் குறிப்பு  : எழுத்தாளர்

அன்புடன்
அழகியசிங்கர்
9444113205


பதின்மூன்றாம் நாளின் வாசிப்பனுபவம் (14.09.2019) 019

அழகியசிங்கர்

இந்த முறை சிறுகதைத் தொகுப்பு. கார்த்திக் பாலசுப்ரமணியன் என்ற இளைஞரின் சிறுகதைத் தொகுப்பு.  தொகுப்பின் பெயர்  டொரினா.
சி சு செல்லப்பா ராமையாவின் சிறுகதை பாணி என்ற புத்தகம் எழுதி உள்ளார்.  அப் புத்தகத்தில் ராமையாவின் சிறுகதைகளைக் குறிப்பிட்டு (முன் கதைச் சுருக்கம் மாதிரி) கதைகளைப் பற்றியும் எதாவது சொல்லியிருப்பார்.
ஒவ்வொரு கதையையும் படித்துவிட்டு புத்தகத்திலேயே கதையின் முடிவில் குறிப்புகள் எழுதி உள்ளேன். 
போன ஆண்டு மார்ச்சு மாதம் இத் தொகுப்பில் உள்ள எல்லாக் கதைகளையும் படித்துவிட்டேன்.  ஒரு வருடத்தில் எல்லாம் மறந்து விட்டது.  திரும்பவும் படித்தபின்தான் ஒவ்வொன்றாக ஞாபகம் வருகிறது. 
முடிந்தவரை சிசு செல்லப்பா பாணியில் எழுத முடிகிறதா என்று பார்க்கிறேன்.
இரு கோப்பைகள் என்ற முதல் கதை.  வயதானவர்கள் பற்றிய கதை.  இப்படியெல்லாம் சம்பவம் எதிர்பாராமல் நடக்கும். நடக்கிறது. மார்க்கும், சோஃபியாவும் வயதான கணவன் மனைவி.  இருவரும் பக்கத்தில் உள்ள குடியிருப்பில் இருக்கிறார்கள்.  நடைப்பயிற்சி செய்து விட்டு வீட்டிற்குத் திரும்பி விடுகிறார்கள்.  சோஃபியா கொஞ்சம் களைப்பாக இருக்கிறதென்று படுத்துக்கொள்கிறார்.  திரும்பவும் எழுந்து கொள்ளவில்லை.  
நான் எழுதிய குறிப்பு : கதையின் முடிவு எப்படி இருக்குமோ என்ற அச்சத்தை இக் கதை தவிர்த்து விடுகிறது. முதியவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சோக சம்பவங்களை அப்பட்டமாகச் சொல்லாமல் சொல்கிறார்.  கதையின் முடிவு இயல்பாக உள்ளது. ஆனால் இன்னொரு கோப்பை ஏன்?

2. முடிச்சுகள்.. குடும்பத்தின் மூன்று தலைமுறைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்ய கிளம்புகிறான்.  அவன் ஒரு வேலையில் சேர்வதற்கு முன் இப்படிப்பட்ட ஆராய்ச்சியைத் துவங்குகிறான்.  அப்படி ஒரு ஆராய்ச்சியை மேற்கொள்ளும்படி பேராசிரியர் ஜோஷி ஆணையிடுகிறார். அப்பாவை வழித் தாத்தாவைப் பற்றி விபரம் சேகரிக்கப் போகிறான்.  அப்பாவின் அப்பா - தாத்தா -  ஒரு காரணமும் சொல்லாமல் வீட்டை விட்டுப் போய்விடுகிறார்.  அவரைப் பற்றிப் பல தகவல்களைச் சேகரிக்கிறான்.  இறுதியில் சோழிச் சித்தரைப் பார்க்கிறான்..
கதை முடிவில்தான் புதிர் அவிழ்கிறது.  சோழிச் சித்தராக அவர் தாத்தா மாறிவிட்டாரோ என்று தோன்றுகிறது.  படிப்பவர்கள் முடிவை யோசிக்க முடியாத கதை.

3. பார்வை - பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் பெண்ணிற்கு நானூறு கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தன் பெண்ணைப் பற்றி கவலை ஏற்படுகிறது.  அம்மா பார்த்துக் கொள்கிறாள். இருந்தாலும் குழந்தைக்கு சுரம். உடனே போய்ப் பார்க்க முடியாத அவஸ்தை.  வேலை கெடுபிடி. இப்படி ஆரம்பிக்கிறது கதை. உதவி இயக்குநராக இருக்கும் தன் கணவனின் கனவை எப்படியாவது பூர்த்தி செய்ய வேண்டுமென்று நினைக்கிறாள்.   கொஞ்சம் சீக்கிரமாக வீட்டிற்குப் போக வேண்டுமென்று பேருந்தில் வருகிறாள்.  500 ரூபாய் நோட்டிற்கு சில்லரைத் தர முடியவில்லை நடத்தினரால்.  ஏதோதோ பேசுகிறான்.  அதைக் கேட்கப் பிடிக்காமல் வேற வழியில்லாமல் துக்கத்தைத் தாங்க முடியாமல்  பஸ்ஸில் எல்லோர் முன்னும் அழுகிறாள்.  அழுகை ஒரு வடிகால் என்பதுபோல் எழுதியிருக்கிறார்.  எடுத்துக்கொண்டு போன விதம் நன்றாக உள்ளது. 
.இத் தொகுப்பில் உள்ள இன்னும் சில கதைகளைப் பற்றி நாளை எழுதுகிறேன்.   


ஓர் அறிவிப்பு

அழகியசிங்கர்

விருட்சம் வெளியீடாக நீல பத்மநாபனின் சாயங்கால மேகங்கள் என்ற கவிதைத் தொகுதி வந்துள்ளது. 
விருட்சம் வெளியீடாக வெளிவந்துள்ள நான்காவது கவிதைத் தொகுதி இது. 22 கவிதைகள் அடங்கிய தொகுப்பு.  விலை : ரூ.50 மட்டும்.  இரா முருகன் வாசக உரை எழுதியிருக்கிறார்.   நீல பத்மநாபன் தொடர்ந்து நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைள் என்று எழுதிக்கொண்டு வருபவர்.  சிந்தை முட்கள் என்ற தொகுப்பிற்குப் பிறகு வெளிவந்துள்ள கவிதைத் தொகுப்பு   சாயங்கால மேகங்கள்.  
நம்பிக்கை என்ற கவிதையில் சில வரிகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
புத்தக விழாக்களுக்குச் சென்றால்
வாங்க வருபவர்களை விட
விற்க வருபவர்களே அதிகம்
கதை கவிதை அரங்குகளுக்குச் சென்றால் 
கேட்க வருபவர்களைவிட
கதை கவிதை வாசிப்பவர்களே அதிகம்....

என்றெல்லாம் எழுதியிருக்கிறார்.


புத்தகம் வாங்க விரும்புவர்கள். 9444113205 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளுங்கள்.

பன்னிரண்டாம் நாளின் வாசிப்பனுபவம் (13.09.2019) Friday



அழகியசிங்கர்

கடந்த பத்து நாட்களாகப் படிக்கத் தொடங்குகிறேன்.   அதனால் என்னை அறியாமலேயே தினம் தினம் படிக்க வேண்டுமென்ற எண்ணம் தானாகவே எழுகிறது.  என்னன்ன புத்தகங்கள் படித்துக்கொண்டு வருகிறோம் என்று பார்க்கிறேன்.  எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.   முன்பெல்லாம் நான் வைத்துக்கொண்டிருக்கும் புத்தகங்களைப் பெரும்பாலும் படிப்பதில்லை.  பார்த்துக்கொண்டிருப்பேன்.  எப்பவாவது புரட்டிப் பார்ப்பேன்.  பயணத்தின் போது தீவிரமாகப் படிக்கப் புத்தகங்களை எடுத்துக்கொண்டு போவேன்.   கடந்த பத்து நாட்களாக நான் படிக்கத் தொடங்கிய பிறகு எனக்குதத் தானாகவே எதாவது படிக்க வேண்டுமென்று தோன்றுகிறது.

சும்மா இருக்கும்போதுகூட பத்திரகையில் உள்ள கட்டுரைகளைப் படிக்கத் தோன்றுகிறது. வேண்டுமென்று தோன்றுகிறது.  பொதுவாக பத்திரிகைகளைப் புரட்டிப் பார்ப்பேன்.  

சனிக்கிழமை தமிழ் ஹிந்துவும், ஞாயிற்றுக்கிழமை தமிழ் ஹிந்து, தினமலர், தினமணி, திங்கட் கிழமை தினமணி. முன்பு என்றால் புரட்டிப் பார்ப்பதோடு சரி, இப்போது நடுப்பக்த்தில் படிக்கத் தொடங்குகிறேன்.     9ஆம் தேதி செப்டம்பர் மாதம் தினமணி எடுத்துப் படித்தேன். மக்களாட்சி மேன்மை அடைய க பழனித்துரை எழுதிய கட்டுரையை வாசித்தேன்.  பின்னடைவல்ல, பாடம் என்ற தலையங்கக் கட்டுரையை வாசித்தேன். பா ஜ க மீண்டும் தனித்துப் போட்டி என்ற ஜெ ராகவன் கட்டுரையை வாசித்தேன். இது என்னுள் நடந்த மாற்றமென்று கருதுகிறேன்.

பன்னிரண்டாம் நாளின் வாசிப்பு அனுபவத்தை 14ஆம் தேதி தான் வாசிக்க முடிந்தது.  இவர்கள் என்ற நகுலனின் புத்தகம். 142 பக்கங்கள் கொண்ட க்ரவுன் சைஸ் புத்தகம்.  நேரத்தையெல்லாம் பார்க்கவில்லை.  படித்துக்கொண்டிருந்தேன்.  முதல் 1 மணி நேரத்தில் 40 பக்கங்கள் படித்தேன்.  பிறகு மூடி வைத்துவிட்டேன்.  12 மணிக்கு சாப்பிட்டபிறகு நன்றாகத் தூங்கிவிட்டேன்.  3 மணிக்கு எழுந்து ஒரு இடத்திற்குப் போனேன்.  திரும்பி வரும்úôது 6.30 மணி ஆகிவிட்டது.  திரும்பவும் நகுலனின் இவர்கள் எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.

எப்படியாவது முடிக்க வேண்டுமென்று எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.  கொஞ்சம் கொஞ்சம் தூக்கம் வந்தது.  உண்மையில் தூங்கி வழிந்துகொண்டு படித்தேன்.  புத்தகத்தைப் படித்து முடித்தபின் சரியாக பத்து மணி ஆகிவிட்டது.  இனிமேல் படுத்துத் தூங்கத்தான் வேண்டுமென்று படுத்துக்கொண்டு விட்டேன்.

வாசிப்போம் வாசிப்போம் பகுதியில் இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுத வில்லை.  சரி இனிமேல் புத்தகத்தைப் பற்றி எதாவது சொல்ல முடிகிறதா என்று பார்க்கிறேன்.

இந்த நாவல் முழுவதும் எழுத்தாளர்களைப் பற்றியும், எழுத்தைப் பற்றியும் பேசுகிறார் நவீனன் என்ற பெயரில்.  ஒருவரை ஒருவர் சந்திக்கிற பேசுகிற நிகழ்ச்சிகளாகத் தொகுத்திருக்கிறார்.  நாவலின் பின்னால் அப்பாவைப் பற்றியும் அம்மாவைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.

ராமநாதன் என்ற பெயரில் க.நாசுவை ஒரு பாத்திரமாக மாற்றிக்கொண்டு எழுதுகிறார்.  இந்த நாவலில் கேசவ மாதவன் என்ற பெயரில் எந்த எழுத்தாளர் ஒளிந்துகொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.    நகுலன் இப்படித்தான் எல்லோர் பற்றியும் சொல்லிக்கொண்டு போகிறார்.  

இன்னொரு கதாபாத்திரம் நல்லசிவம் பிள்ளை.  இது மௌனியாக இருக்குமென்று நினைக்கிறேன்.  இப்படி தான் சந்தித்த எழுத்தாளர்களை கதாபாத்திரங்களாக மாற்றி விடுகிறார்.  

‘ராமநாதனைப் பார்த்தபின் பரிசுத்த ஆவியாக இருந்த நான் நிழலாக மாறினேன் என்றால் நல்லசிவன் பிள்ளையைப் பார்த்த பின் நிழலாக இருந்தவன் பேயாக மாறினேன் என்று சொல்ல வேண்டும்,’  என்று எழுதியிருக்கிறார்.

நகுலனின் புத்தகங்களை ஒரு முறை இல்லாமல் பலமுறை படித்துக்கொண்டிருக்க வேண்டும்.  அலுப்பாகவே இருக்காது.  இவர் புத்தகத்தை யாரும் அவ்வளவு எளிதாகப் புரிந்து கொண்டு விட மாட்டார்கள்.

க நா சு வைப்பற்றி அவர் சொல்கிற விஷயங்கள் வேடிக்கையாகக் கூட இருக்கும்.  

இப்படி எழுதுகிறார் : ‘சில சமயங்களில் எனக்குத் தோன்றாமல் இருந்ததில்லை.  இவர் ஆண்-பெண் வேறுபாடையே ஒப்புக் கொள்கிறரோ என்று, அவருக்கு நோட்புக் எழுதும் பழக்கம் உண்டு.  தினம் எதாவது எழுதிக்கொண்டிக்க வேண்டும் என்பார்.’

இவர் நாவலில் அங்கங்கே பளிச் பளிச்சென்று வரிகள்.  ü நான் யார் என்றுகூட அனுமானிக்க முடியவில்லை.

நான், ராமநாதன், நல்லசிவன் பிள்ளை இவர்களைச் சந்தித்துப் பிரிகையில் üநேற்றிருந்த மனிதன் நான் இன்றில்லை,ýஎன்ற உணர்வோடு திரும்பினேன் என்று எழுதுகிறார்.

பளிச்சென்ற வரிகள் பக்கம் பக்கமாகத் தொடர்கிறது.  

‘அந்தப் பெரிய கோவிலில் என்னை முதலில் கவர்ந்தது கட்டற்ற ஒரு வெட்டவெளிதான்.

ராமநாதன் என்ன சொன்னார்?  அனுபவத்தைத் தேடிக்கொண்டு நீ எங்கும் போக வேண்டாம்.  அது உன் முன் இரைந்து கிடக்கிறது,

பெக்கட்டைப் படிக்கிறபோது எழுதுவதற்கு ஒன்றுமில்லை.  ஆனாலும் எழுது, எழுது என்று ஏன் இந்த நச்சரிப்பு.  அவனும் எழுதவில்லையா? பக்கம் பக்கமாக, ‘ஒன்றும் இல்லாததை பற்றி.

மரம் நிற்கிறது என்ற தலைப்பைப் பிடித்துக்கொண்டு அப்பாவைப் பற்றி பலவற்றைச் சொல்கிறார்.

இங்கே முக்கியமாக ஒரு விஷயத்தைச் சொல்கிறார: தன்னைப்போல்தான் அம்மாவும் என்று அவன் நினைத்துக்கொண்டான்.  அவனுக்குத் தோன்றியது – “சுயம் – நசித்துக்கொள்வதின்” மூலம் தான் தன் சுயத் தன்மையைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமென்று நினைத்துக்கொண்டதாகத் தோன்றியது.  இதற்குச் சூழ்நிலையென்பது ஒரு காரணமாக இருக்கலாம்.  இதே அடிப்படையில் தான் எழுத்தாளன் என்ற அடிப்படையில் அவனுக்கு இந்தச் ‘சுயம் – நசித்துக்’ கொள்வது என்பது ஒரு மகத்துவமான தத்துவமாகப் பட்டது.  

நகுலன் உண்மையிலே எழுத்தாளர்களுக்கெல்லாம் எழுத்தாளர்.  

எட்டாம் நாளின் வாசிப்பனுபவம் (09.09.2019)

10.09.2019

அழகியசிங்கர்

நான் ஒரு மொழிபெயர்ப்பு நாவல் படித்துக்கொண்டிருக்கிறேன்.  அதை அவ்வளவு சுலபமாக ஒரே நாளில் படித்துவிட முடியாது.  கொஞ்சம் கொஞ்சமாக அதைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.   இந்தப் பகுதியில் தினமும் எதாவது எழுத வேண்டுமென்றுதான் என் நோக்கம்.  கூடவே மிகக் குறைவான பக்கங்களைக் கொண்ட புத்தகத்தையும் படித்து எழுத விரும்புகிறேன்.
பெரிய புத்தகம் முடியும்போது அதைப் பற்றி எழுதுவேன்.  நான் எட்டாவது நாளான இன்று எழுதுவது.  சாகித்ய அகாடமி விருதுபெற்ற பி கேசவதேவ் எழுதிய இரண்டு குறுநாவல்கள்.
இனிய உதயம் என்ற புத்தகம் ஜøலை 2011ல் வாங்கியது.  எங்கே வாங்கியிருப்பேன் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.   பேப்பர் கடையில்தான் வாங்கியிருப்பேன்.  வாங்கியபின் படிக்காமல் தூக்கிப் போட்டிருப்பேன்.  எனக்கு ஒரு புத்தகம் வாங்கியவுடன் உடனே அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றாது.  அப்படி வைத்துக்கொண்டிருக்கும் புத்தகம் என் கண்ணிலிருந்து மறைந்தும் விடும்.  திரும்பவும் நான் அந்தப் புத்தகத்தைப் பார்க்கும்போது ஒரு புதிய புத்தகத்தைப் பார்ப்பதுபோல் பார்ப்பேன்.
இனிய உதயம் என்ற இப் புத்தகமும் அப்படித்தான்.  சுரா அவர்கள் மொழி பெயர்த்த பி கேசவதேவ்வின் இரண்டு கதைகள். ஒன்று தீனாம்மா இரண்டாவது கதை பேருந்து பயணம்.
இனிய உதயம் என்ற பத்திரிகை மாதப் பத்திரிகை.  தொடர்ந்து பிற இலக்கியங்களைத் தமிழாக்கம் செய்கிற முயற்சியை மேற்கொண்டு வருகிறது.  
நான் வாங்கிய இதழ் பத்தாவது ஆண்டாக வெளிவருகிறது.  2011 ஆம் ஆண்டில் வாங்கிய இதழ் அது.  அப்போதே பத்தாண்டாக வருகிறது. நக்கீரன் வெளியீடு.   இப்போது இந்த இதழ் வெளிவருகிறதா என்பது தெரியவில்லை. தொடர்ந்து ஒரு இதழ் வெளிவருவதும் நின்று போவதும் நமக்குத் தெரிவதில்லை.  ஏன்னென்றால் ஒவ்வொரு மாதமும் தேடிக் கண்டுபிடித்து வாங்கும் வழக்கமில்லை.
இனிய உதயத்திற்காக மொழிபெயர்ப்பு செய்திருக்கும் சுரா அவர்கள், 96வது நூல் என்று இதைக் குறிப்பிட்டு உள்ளார். 
முதலில் தீனாம்மா என்ற கதையை எடுத்துக்கொள்வோம்.  தீனாம்மா அழகற்ற ஒரு பெண்.  அவளை அவள் தங்கை சாரம்மா பார்க்கிற போதெல்லாம் கிண்டல் செய்கிறாள்.
கொக்கைப் போன்ற கழுத்து ஒட்டிய
மூக்கு பாதி மூடிய கண்கள்
யானையில் உதடுகளைப் போன்ற அதரங்கள்
மான்மணி இவள் அல்லவா தீனாம்மா?

என்று பாடுகிறாள். தீனாம்மா மாணவியாக இருந்தபோது அவளைப் பற்றி ஒரு மாணவன் தமாஷாக எழுதிய கவிதை இது.
ஆனால் தீனாம்மா ரசனை மிக்கவள். அவள் சுற்றிலும் உள்ள இடங்களை ரசிப்பாள். தீனாம்மாவிற்கு எங்கும் எப்போதும் தனியாகப் போவதற்கு தடையெதும் இல்லை. ஏன்என்றால் அவள் அழகற்ற தன்மை யாரும் அவளைப் பின் தொடர மாட்டார்கள் என்ற எண்ணம் அவள் பெற்றோர்களுக்கு இருந்தது. ஆனால் அவள் எங்கும் தனியாகப் போவதில்லை. ஞாயிற்றுக்கிழமை மட்டும் தேவாலயத்திற்குப் போவாள். அவள் தனிமையில் போகும்போது எல்லோராலும் அவள் வெறுக்கப்படுகிறாள். யாரும் அவளைப் பார்த்தால் கிண்டல் செய்கிறார்கள். அதனால் அவள் தனியாகப் போவதில்லை.
மனிதர்களின் தோற்றத்திலும் செயலிலும் அழகு மிளிர வேண்டுமென்று அவள் விரும்புவாள். அழகு முழுமையாக நிறைத்திருக்கும் கலைத்தன்மை கொண்ட ஒரு உலகத்தை அவள் கற்பனை செய்வாள். அவளுடைய அறை அழகான ஓவியங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இப்படி எல்லாராலும் இழிவாக நினைக்கப்படுகிற தீனாம்மா, தன் ரசனைக்கேற்ப தனக்கென ஒருவாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறாள். தீனாம்மாவுக்கு சித்தப்பா பெண்ணான அன்னக்குட்டியும், பக்கத்து வீட்டுப் பெண் தங்கம்மாவும் நண்பர்கள்.
அவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. தீனம்மாவுக்கு திருமணம் வயது கடந்தும் என்ன முயற்சி செய்தும் திருமணமாகவில்லை.
தீனாம்மாவால் அவள் தங்கை சாரம்மாவிற்கு திருமணம் ஆவதற்குத் தடைப்படுகிறது. உண்மையில் அவள் தங்கையை பெண் கேட்டு வருகிறார்கள். ஆனால் தீனாம்மாள்தான் ஒரு தடை.
üபுனித மரியத்தைப்போல என் மகளான நீ என்றும் புனிதமானவளாக இருக்க வேண்டும். கன்னிகளின் மடம்தான் என் குழந்தையான உனக்கு ஏற்ற இடம்,ý என்கிறார் அப்பா சோகத்துடன்.
கன்னிகள் மடத்தில் அல்ல. அதற்கு வெளியே இருக்கும் விசாலமான அழகான உலகத்தில் நான் எப்போதும் கன்னியாக இருப்பேன் என்கிறாள் தீனாம்மா அப்பாவிடம்.
கர்த்தரின் படைப்பான பரந்து கிடக்கும் இந்த உலகத்தில் நான் அழகை ஆராதிக்கக் கூடியவளாக, வாழக்கையை நேசிப்பவளாக, நித்யகன்னியாக வாழ்வேன் என்கிறாள் தீனாம்மா.
இதைக் கேட்டவுடன் சாராம்மாவின் திருமணம் முடிவு செய்யப்பட்டுவிட்டது என்கிறார் அவர் அப்பா.
ஓரளவு பணம் வசதி கொண்டவனுடன் அவள் தங்கை சாரம்மாவின் திருமணம் நடந்து விடுகிறது.
தீனாம்மாவின் திருமணத்தையும் அவள் அப்பா முடித்துவிடுகிறார். 3000 ரூபாய் பணம் கொடுத்து. உண்மையில் தீனாம்மாவிற்கு இதில் விருப்பமில்லை. அவளைத் திருமணம் செய்து கொண்டவன் ஒரு ஓவியம். அவள் கணவன் தாமஸ் அவளை அலட்சியப்படுத்துகிறான். அவளை நேராகக் கூட பார்ப்பதில்லை. திருமணத்திற்குப் பிறகு அவன் வீட்டிற்கே வருவதில்லை. பல பெண்களின் சவகாசம் அவனுக்கு.
இந்தக் கதையின் திருப்பு முனையாக, தாமஸ் அவளை பொய்கையில் தன்னை மறந்து இருக்கும் தீனாம்மாவை ஒரு முறை நேருக்குநேர் சந்திக்கிறான். அவனை அறியாமலயே ஒரு புன்னகையைத் தவழ விடுகிறான். அதைக் கண்ட தீனாம்மா திகைத்துவிடுகிறாள்.
யாரும் உள்ளே விடாத அவன் வீட்டிற்குள் இருக்கும் ஸ்டுடியோவில் கதவை மூடிக்கொண்டு விடுகிறான். நாள் கணக்கில் வெளியே வரவில்லை. ஒருநாள் கதவைத் திறந்துகொண்டு வருகிறான். தீனாம்மா உடனே அவனுடைய ஸ்டூடியோவிற்குப் போய் பார்க்கிறாள். முழுமை அடையாத ஒரு ஓவியம். அது அவள்தான். அவள் அவனைப் பார்க்கிறாள். அந்த ஓவியத்தை தூரிகையை எடுத்து அங்கும் இங்கும் தீட்டி அந்த ஓவியத்தை முடித்து விடுகிறான். அந்த ஓவியத்தைப் பார்த்து, üஅந்தப் பெண்ணின் அழகான இதயத்தை நான் பார்க்கிறேன்,ý என்கிறான். அன்று முதன்முறையாக தன் கணவன் மாரிபில் தலையை சாய்த்தாள் என்று கதையை முடிக்கிறார் பி கேசவதேவ். விறுவிறுவென்று படித்து முடித்து விடுகிற கதை.
இன்னொரு கதையான பேருந்து பயணம் என்ற கதை. பத்மநாபன் கொல்லம் முன்சீப் நீதிமன்றத்தில் தலைமை க்ளார்க்காகக பணியாற்றுகிறார். மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைத்ததால் மனைவியின் வற்புறுத்தலால் மாமியார் வீட்டில் குடும்பத்துடன் தங்கி விடுகிறார்.
முந்தைய நாள் சாயங்காலம் கொல்லத்திற்கு திரும்பிப் போக வேண்டும் என்று நினைக்கிறார். மாமியாரின் வற்புறுத்தலுக்காக காலையில் கிளம்புகிறார். பஸ் கிடைக்காமல் இதனால் ஏற்படும் மனக்கிளற்சியை வெளிப்படுத்துகிறார் பத்மநாபன் மூலமாக.
இந்த இரண்டு கதைகளும் ஓரளவு சுலபமாகப் படிக்கக் கூடிய கதைகளாக எழுதியிருக்கிறார் கேசவதேவ். இரண்டாவது கதையில் ஒரு சம்பவத்தை வைத்துக்கொண்டு கதையைப் பின்னியிருக்கிறார். உண்மையில் பிற மொழி இலக்கியங்களை தமிழாக்கிக்கொண்டு வருகிறது இனிய உதயம். இப்பபோதும் தொடர்ந்து வருகிறதா என்று தெரியவில்லை.

ஏழாம் நாளின் வாசிப்பனுபவம் (08.09.2019)

09.09.2019

அழகியசிங்கர்

நான் கடந்த சில தினங்களாகப் புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன்.  முழுதாக ஒரு நாவலோ அதிகப் பக்கங்கள் உள்ள புத்தகமோ என்னால் குறிப்பிட்ட நேரத்திற்குள் படிக்க முடிவதில்லை.  நானே எனக்குள் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு படிப்பதால் பல புத்தகங்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது.  
தேவதச்சனின் மர்ம நபர் என்ற புத்தகத்தை இவ்வளவுநாளும் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன்.  நேற்று எடுத்துப் படித்துவிட்டேன். முழுவதும் இல்லாவிட்டாலும் ஓரளவாவது.  
அதேபோல் புதுமைப்பித்தன் கதைகள் சிலவற்றைப் படித்தேன்.  அதில் ஒருநாள் கழிந்தது இன்னும் ஒரு முறை படிக்க வேண்டும்.  அதேபோல் தேவதச்சனின் மர்ம நபர் என்ற கவிதையைப் படிக்க வேண்டும். 
நான் இன்னொரு புத்தகத்தை எடுத்துப்படிக்கும்போது ஏற்கனவே படித்த புத்தகங்களையும் ஞாபகம் வைத்துக் கொள்ளுகிறேன்.  
இப்படி திட்டம்போட்டு படித்தால்தான் உண்டு.  மேலும் ஒரு எழுத்தாளன் இன்னொரு எழுத்தாளனின் புத்தகத்தைப் படிக்கும்போது அவனே ஒரு வாசகனாக மாறி விடுகிறான்.  கநாசு ஒருபக்கம் புத்தகங்களைப் படித்துக்கொண்டும் இன்னொரு பக்கம் எழுதிக்கொண்டும் இருப்பார்.  புதுமைப்பித்தன் பற்றியும் மௌனியைப் பற்றியும் கநாசுதான் எழுதியிருப்பார்.  ஆனால் அவர்கள் இருவரும் கநாசுவைப் பற்றி எழுதவில்லை.
நான் எடுத்துக்கொண்டு படித்த புத்தகங்கள் இரண்டு.  அதைப்பற்றி இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.  ஒரு புத்தகம் பறந்து திரியும் ஆடு என்ற சிறார் நாவல்.  எழுதியவர் எஸ் ராமகிருஷ்ணன்.  ராமகிருஷ்ணனைப் பற்றியும் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்.  அவர் மற்ற படைப்பாளிகளின் புத்தகங்கள் பற்றியும் அவருடைய வாசகர்களுக்குச் சொல்லி புத்தகங்களை வாங்க வைத்திருக்கிறார்.
சிறார்களுக்கு நாவல் எழுதுவது அவ்வளவு சுலபமில்லை.  அவர்களுக்கு அறிவுரை கூறுவதுபோல கதை சொல்லவேண்டும்.  கதையும் படிக்கச் சுவாரசியமாக இருக்க வேண்டும்.
யக்கர் என்ற வயதானவர் பற்றி இந் நாவல்.  நாற்பது ஆடுகள் வைத்துக்கொண்டு மேய்த்துக் கொண்டிருப்பவர்.  அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.  ஆடுகளும் அவரும்தான்.  யக்கர் ஆடுகளை மேய்க்கும் இடம் பூமியில் இல்லை.  வானவெளியில்.  ஒவ்வொரு ஆட்டிற்கும் அவர் பெயர் வைத்திருக்கிறார்.  அந்தப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால் ஆடுகள் திரும்பிப் பார்க்கும்.
இந்த நாவலை ஒரே மூச்சில் படித்து விடலாம்.  40 ஆடுகளில் ஒரு ஆடு குருட்டு ஆடு.  குட்டி ஆடு.  எப்போதும் மேய்ந்து விட்டு பூமிக்குத் திரும்பி வரும்போது, டுவிங் என்ற குட்டி ஆடு மாத்திரம் திரும்பவில்லை.  காணாமல் போய் விடுகிறது.  
லிமா என்ற ஆட்டின் குட்டிதான் டுவிங்.  அது காணாமல் போய்விடுவதை யக்கரிடம் சொல்கிறது.  அன்று இருட்டானதால் வானவெளிக்குச் செல்ல முடியாது.  அடுத்த நாள்தான் போக முடியும்
டுவிங்கின் பயணம்தான் இந் நாவல்.  மேகம், வண்ணத்துப்பூச்சி, பாறை, சூரியகாந்திப் பூ என்று ஒவ்வொருவரைச் சந்திக்கிறது.  அப்படி சந்தித்துப் பேசும்போது யக்கர் சொன்னார் என்று சந்திக்கின்றவர்களிடம் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறது.   இறுதியில் யக்கர் ஆட்டுக்குட்டியைக் கண்டு பிடித்துவிடுகிறது.  
அனுபவம் தானே ஒருவரை வளரவைக்கிறது.  நீ இனிமேலும் நீ ஆட்டுக்குட்டி இல்லை. வளர்ந்த ஆடு என்கிறான் யக்கர்.  சிறார் நாவல்தான் இது.  ஆனால் ஒவ்வொரு முறையும் அலுக்காமல் வாசிக்க முடியும் என்று தோன்றுகிறது. இந்த சிறார் நாவலைப் பொறுத்தவரை இராமகிருஷ்ணனின் கற்பனை வளம் அபாரமாக இருக்கிறது.  
நான் படித்த இன்னொரு புத்தகம் துக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியுமா என்ற ஜே கிருஷ்ணமூர்த்தியின் புத்தகம்.  நான் ஒரு கிருஷ்ணமூர்த்தி பைத்தியம்.  என் லைப்பரரியில் டஜன் கணக்கில் கிருஷ்ணமூர்த்தி புத்தகங்கள் இருக்கின்றன.  கீரீன்வேஸ் ரேடிற்கு செல்லும்போது வஸந்த விஹாரில் நுழைந்து கிருஷ்ணமூர்த்தி புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்து விடுவேன்.  தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இப் புத்தகம் ரூ.10தான். 
துக்கத்தை நான் ஏன் ஏற்றுக்கொள்ளúவ்டும்? என்று கேட்கிறார் கிருஷ்ணமூர்த்தி.  இது மனதின் இன்னொரு விதமான மேலோட்டமான செயல்பாடே என்கிறார.  இறுதியில் இப்படிக் குறிப்பிடுகிறார் நான் துக்கத்தைப் புரிந்து கொள்ளவிரும்புகிறேன் அது எதைக் குறிக்கிறது என்று காண விரும்புகிறேன்.  அதன் அழகை, அருவருப்பை அதன் அளவுகடந்த ஆற்றலை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.   அதை மாற்ற முடியாது என்கிறார்.  அதைப் புரிந்துகொள்ளவதன் மூலம்தான் முற்றாக அதிலிருந்து விலக முடியும். முற்றாக விடும்படும்போதுதான் பேரறிவு உருவாகும்.   

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2- 123

அழகியசிங்கர்

நடுமதியத்தில்

தூரன் குணா

நடுமதியத்தில் புகைவண்டி நிலையத்தின் நடைபாதைக்கூரையின் கீழ் முன் நாற்காலியில் கருநிற முதுகு பாதி தெரிய உயரக்கொண்டை இட்டிருந்தவளின் அடர்வண்ண பூச்சணிந்த நீளநகங்கள் பின் நீண்டுதண்டுவடக் குழிவில் ஒட்டியிருந்த என் கண்களைப் பிடுங்கி தண்டவாளங்களுக்கிடையில் எறிந்தன
வெயிலில் நெளியும் தண்டவாளங்கள் அதிரத்தொடங்கிய முதல் நொடியில்கீழொன்றும் மேலொன்றுமாய் பிணைந்து பறந்த வண்ணத்துப்பூச்சிகளை கண்ட காட்சியை கடைசி முறையாய் நினைவிலிருந்து மீட்டிவிட்டு அணையத்துவங்கின கண்கள். 

நன்றி : கடல் நினைவு – தூரன் குணா – வெளியீடு : தக்கை – 15 திரு.வி.க சாலை, அம்மாப்பேட்டை, சேலம் 3 – முதல் பதிப்பு : ஜøலை 2012 – விலை : ரூ.35 – பக்கங்கள் : 80

  

ஆறாம் நாளின் வாசிப்பனுபவம்..(07.09.2019)


அழகியசிங்கர்

வழக்கம்போல ஆறாம் நாள் அன்று என்ன படிக்கலாமென்று யோசித்துக்கொண்டிருந்தேன்.  என் முன்னால் ஏகப்பட்ட புத்தகங்கள். என்ன படிக்கப் போகிறாய் என்ன படிக்கப்போகிறாய் என்று ஒவ்வொரு புத்தகமும் என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தது.  என்னைப் பொறுத்தவரை ஒரு புத்தகம் படித்தால் அதைப் பற்றி கொஞ்சமாவது எழுத வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

முந்தாநாள் படித்த ஒருநாள் கழிந்தது என்ற புதுமைப்பித்தன் கதையை இன்னும் ஒருமுறை படிக்க வேண்டுமென்று தோன்றியது.  ஆனால் நேரமில்லை.  அடுத்த புத்தகத்திற்குப் போக வேண்டும்.  என்னால் ஒரு மணி நேரத்திற்கு மிகக் குறைவான பக்கங்கள்தான் படிக்க முடிகிறது.  அதாவது 40லிருந்து 50 பக்கங்கள் வரைதான் படிக்க முடிகிறது.  100 பக்க நாவல் படிப்பதாக இருந்தால் இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிடுகிறது.  ஆங்கிலப் புத்தகமென்றால் இன்னும் மோசம்.  

நாவல் என்னால் உடனே படித்து எழுத முடியாது.  ஒரு நாவல் 100 பக்கங்கள் இருந்தால் குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் ஆகும். நான் ஒரு நாளைக்குப் புத்தகமே படித்துக்கொண்டிருந்தால் வீட்டிலிருப்பவர்கள் உதைக்க ஆரம்பித்துவிடுவார்கள்.  நான் நிதானித்துதான் புத்தகம் படிக்க வேண்டும்.  வீட்டில் உள்ளவர்களின் கட்டளையை மீறாமல் படிக்க வேண்டும்.  படித்துக் கொண்டிருக்கும்போது, வீட்டில் உள்ளவர்கள் காப்பிப் பொடி இல்லை வாங்கிக்கொண்டு வர வேண்டும் என்று சொன்னால் அதை முதலில் முடித்துவிட்டுத்தான் திரும்பவும் படிக்க வேண்டும்.
அதனால் நான் நாவல் படிப்பதை விட ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு கட்டுரைத் தொகுப்பு படிக்கலாம். நாவல் என்றால் முழுதாகப் படிக்க வேண்டும்.  அதைப் பற்றி எழுத வேண்டுமென்றால் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். சிறுகதைத் தொகுப்போ கட்டுரைத் தொகுப்போ என்றால் படித்தவரை எதாவது எழுதிப் பார்க்கலாம்.  இன்னும் படிக்கப் படிக்க இன்னும் எழுதலாம்.  ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் படித்து முடித்து விடலாம்.

இந்த முறை நான் படிக்க எடுத்துக்கொண்டது ஒரு கவிதைத் தொகுப்பு.  என் கண் முன்னால் படிக்க வேண்டும் படிக்க வேண்டும் என்று வைத்துக்கொண்டிருந்து எப்போது ஆரம்பிக்கப் போகிறேன் என்று விழித்துக்கொண்டிருந்தேன்.  இந்த ஒரு மணி நேரம் தினமும் படிக்கிற ஸ்கீம் சரியாக இருந்தது.  மர்ம நபர் என்ற தேவதச்சன் கவிதைகளைப் படிக்க ஆரம்பித்தேன்.

இந்தப் புத்தகத்தை அற்புதமான முறையில் உயிர்மை தயாரித்து இருக்கிறது.  350 கவிதைகள் அடங்கிய தொகுப்பு.  தேவதச்சன் அவர் கவிதைகளைக் குறித்து ஒன்றும் எழுதவில்லை.  ஒவ்வொரு கவிதையும் எந்த ஆண்டு எழுதப்பட்டது என்ற குறிப்பு கூட இல்லை.  
ஒவ்வொரு கவிதையையும் படிக்கும்போது இந்தப் புத்தகம் முடிந்து விடக் கூடாது என்று தோன்றியது.  இப்படியொரு மயக்கம் எனக்கு எந்தக் கவிதைத் தொகுப்பு படிக்கும்போதும் உண்டாகவில்லை.  நான் 52 கவிதைகள் மட்டும்தான் படித்துள்ளேன்.  அதாவது கிட்டத்தட்ட 72 பக்கங்கள்.  

நேற்று நாமக்கல் கவிஞர் கவிதையை எடுக்கும்போது ரொம்பவும் முயற்சி செய்து அவர் கவிதை என் மனதிற்குப் பிடித்த கவிதைகள் தொகுப்பில் இடம் பெற வேண்டுமென்று சேர்த்தேன்.  அவருடைய எல்லாக் கவிதைகளும் கருத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருந்தன.  பாரதி, காந்தி, காமராஜ், நேரு, தமிழ் என்ற தலைப்புகளில் கவிதைகள் எழுதியிருக்கிறார்.  

ஆனால் தேவதச்சன் கவிதையை எடுத்துக்கொண்டால் என்ன இப்படி எழுதியிருக்கிறார் என்ற வியப்பே ஏற்பட்டது.  ஒவ்வொருவரும் இந்தப் புத்தகத்தை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.  யார் கவிதை எழுத முயற்சி செய்தாலும் ஒரு முறை தேவதச்சன் கவிதையை வாசிக்க வேண்டும்  ஒவ்வொரு கவிதையிலும் அளவுக்கு அதிகமான வரிகள் இல்லை.  கவிதையை எந்த இடத்தில் முடிக்க வேண்டுமென்ற இடத்தில் முடித்திருக்கிறார்.
இவர் கவிதைகளை மனதிலிருந்து எழுதுகிறார் என்று நினைக்கிறேன்.   நான் 52கவிதைகளைப் படித்தாலும் திரும்பவும் ஒரு முறை முதலிலிருந்து படிக்க வேண்டுமென்று தோன்றுகிறது.
நான் படித்தவரை 52 கவிதைகளிலிருந்து எந்தக் கவிதை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொண்டு பேசலாம்.  ஆனால் சிரிப்பு என்ற ஒரு கவிதையை மட்டும் இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

               சிரிப்பு

        கண்ணாடி டம்ளர்
        கீழே விழுந்து 
        உடைந்தது
        üüகண்ணாடி கண்ணாடிýý என்று 
        கத்தவில்லை அது
        üüடம்ளர் டம்ளர்ýý என்று 
        குரல் உயர்த்தவில்லை
        சிறு இடத்தில் சந்தி
        ஓடிய பழுப்பு நிறத் தேநீர்
        üüதேநீர் தேநீர்ýý என்று 
        அரற்றவில்லை
        கிளங்
        என்று 
        கேட்கிறது
        அசரீரிச் சிர்பொன்று, பிறகு
        இரண்டாவது முறை அது
        கேட்கவில்லை

இந்த ஒரு கவிதையிலேயே எல்லாமும் அடங்கி இருக்கிறது. கச்சிதமாக எழுதுகிறார், புரியும்படியாக எழுதுகிறார்.  வாசிப்பவனை வித்தியாசமாக யோஜனை பண்ண வைக்கிறார்.  இதுதான் தேவதச்சன்.

ஐந்தாம் நாளின் வாசிப்பனுபவம்..(06.09.2019)

07.09.2019

அழகியசிங்கர்

வாசிப்போம் வாசிப்போம் என்ற பகுதியில் சேர்ந்தபோது நான் இதுவரை ஐந்து புத்தகங்களுக்கு மேல் படித்துவிட்டேன்.  இன்னும் கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்கப் படிக்க படித்துக்கொண்டிருக்கும் பழக்கம் ஏற்பட்டு விடும்.  இதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாகத் தினமும் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
1 மணி நேரம் படிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்க வேண்டும்.  அப்படி ஆரம்பித்தால் பல புத்தகங்களைப் படிக்கலாம். சிலருக்கு நேரம் இருக்காது.  அது மாதிரி சமயங்களில் நேரம் கிடைக்கும்போது பிட்டு பிட்டாகப் படிக்கலாம்.
பிறகு படித்துவிட்டு எதாவது எழுதலாம்.  எழுதத் தோன்றவில்லை என்றால் படித்துவிட்டேன் என்று குறிப்பிடலாம்.  எழுதுவோர்க்கு எந்தவிதமான தடையும் இல்லை.  ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு மோசமாக எழுதலாம்.  அல்லது அந்தப் புத்தகத்தைப் புகழ்ந்து எழுதலாம்.  ஒரு புத்தகத்தில் பாதி படித்திருந்தால் எதுவரை படித்துள்ளீர்களோ அதுவரை எழுதலாம்.  எல்லாம் உங்கள் விருப்பம்.
வழக்கம்போல் நேற்று படித்ததை இன்று எழுதும் பழக்கத்தை நான் வைத்துக்கொண்டிருக்கிறேன்.  நேற்று நான் படித்தது.  மூன்று சிறுகதைகள்.  அதில் ஒரு நீண்ட கதை.  எல்லாமே புதுமைப்பித்தன எழுதியது.
ஏன் திடீரென்று புதுமைப்பித்தனை எடுத்துக்கொண்டு படித்தேன் என்பதற்கு வருகிறேன்.  வெளி ரங்கராஜன் அவர்களின்  புத்தகத்தில் புதுமைப்பித்தன் கதைகள் நீக்கம் என்ற ஒரு அத்தியாயம் இருக்கிறது.  அதில் பல்கலைக் கழகப் பாடத் திட்டத்திலிருந்து துன்பக்கேணி, பொன்னகரம் என்ற இரண்டு கதைகளை நீக்கி விட்டு ஒருநாள் கழிந்தது என்ற கதை அதற்குப் பதிலாக சேர்த்துக்ளாளர்கள் என்று ரங்கராஜன் குறிப்பிட்டிருந்தார்.
ஏன் அதுமாதிரி செய்தார்கள் என்று எனக்குத் தோன்றிக்கொண்டிருந்தது.  இதற்கு விடை அக் கதைகளைப் படிப்பதுதான்.  அக் கதைகளைப் படிக்கும்போது அவர்கள் செய்தது நியாயமாகப் பட்டது. 
நாம் வாசிக்கும்போது ஆழமான மனப்பதிவை ஏற்படுத்திக் கொண்டு விடுவோம்.  மேலே குறிப்பிடப்பட்ட கதைகள் மாணவர்கள் படிப்பதை பல்கலைக் கழகம் விரும்பவில்லை.  பொன்னகரமாகட்டும் துன்பக்கேணி ஆகட்டும் கதைகளின் தன்மை அப்படி.  மாணவர்களின் மனதை டிஸ்டர்ப் செய்கிற தன்மை அக் கதைகளில் இருக்கிறது.  இப்படி டிஸ்டர்ப் செய்கிற விஷயம் முக்கியமானதாகத் தோன்றுகிறது. உண்மையில் ஒருவர் கேட்கலாம் நம் அன்றாட வாழ்க்கையில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்து பலரை டிஸ்டர்ப் பண்ணாதா என்று. 
உண்மைதான் அறிமுகப்படுத்தும்போது இம்மாதிரியான கதைகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது சரியில்லை என்று பல்கலைக் கழகம் நினைத்திருக்கலாம். 
பொன்னகரம் என்ற கதையை எடுத்துக்கொள்ளுவோம்.  என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே .  இதுதான் ஐயா, பொன்னகரம்.  என்று முடியும்.  எப்படி இதுமாதரியான கதையை பல்கலைக் கழகம் ஏற்றுக்கொள்ளும். 
இரண்டாவது நீண்ட கதை துன்பக்கேணி.  சேரி மக்களைப் பற்றிய கதை.   தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றிய கதை.  அவர்களுக்கு ஏற்படும் பாலியல் பலாத்காரம். இதெல்லாம் சமூகத்தில் நடப்பதில்லையா என்று கேட்கலாம்.  நடக்காமில்லை.  இதைவிட மோசமாகக் கூட நடக்கிறது.  படிக்கிற மாணவ சமுதாயத்திற்கு இதெல்லாம் போக வேண்டுமா?  
அதற்குப் பதில் ஒருநாள் கழிந்தது என்ற கதை அட்டகாசமான கதை.  சர்வசாதாரணமாக நகைச்சுவை உணர்வுடன் கூடிவந்த கதை.  புதுமைப்பித்தன் காலத்தில் வறுமை ஒரு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.  இந்த மூன்று கதைகளிலும் வெவ்வேறு ரூபங்களில் வெளிப்படுகின்றன.  பொதுவாக எல்லாக் கதைகளிலும் புதுமைப்பித்தனின் நையாண்டித் தனம் தெரியாமல் இல்லை.  சமூகத்தின் மீது கோபம் வெளிப்படுத்தும்போது கூட நக்கலாக வெளிப்படுத்துவதாகத் தோன்றுகிறது.
சில உதாரணம் :
....வாசவன் பட்டி என்றால் திருநெல்வேலி ஜில்லா வாசிகளுக்குக் கூடத் தெரியாது.  ஜில்லாப் படத்தைத் துருவித் துருவிப் பார்த்தாலும் அந்தப் பெயர் காணப்படாது.. (துன்பக் கேணி)
.....சில சில சமயம் முதிர்ந்த விபசாரியின் பேச்சுகளுடன் களங்கமற்ற அவள் உள்ளமும் வெளிப்பட்டது..(துன்பக்கேணி)
.....சென்னையில் ஒட்டுக் குடித்தனம் என்பது ஒரு ரசமான விஷயம்.  வீட்டுச் சொந்தக்காரன், குடியிருக்க வருகிறவர்கள் எல்லாரும் üதிருக்கழுக்குன்றத்துக் கழுகுý என்று நினைத்துக்கொள்ளுவானோ என்னமோ....(ஒரு நாள் கழிந்தது)
இன்னும் புதுமைப்பித்தன் கதையைத் தொடர்ந்து வாசிக்க வேண்டும்.
இதுவரை இந்தக் குழுவில் சேராதவர் இப்போது கூட இந்த வாசிக்க வாசிக்கக் குழுவில் சேர்ந்து ஒவ்வொரு நாளும் படிக்கும் புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிடலாம்.