சொடுக்கிய பொத்தானின் கணத்தில்
முகத்திலாடும் வண்ணத்துடிப்புகளுடன்
விருப்பப்பாடலினை இசைக்கிறது மின்குயிலி
கண்கள் மூடியதொரு மங்கியவெளியில்
சட்டெனப் பூக்கும் பெருவிருட்சம்
நளினக் கிளைகள் சுழற்றி ஓங்கியாடுகிறது
நாதங்கள் விளையும் ஆதிப்பிளவினின்று பெருகுமிசை
பிரவாகமெடுத்தோடுகிறது உள்வெளியெங்கிலும்
நெகிழ்ந்தோடிக் கரைகின்ற ஆன்மாவினை
கைகோதிப் பார்க்கிறேன்
காற்றினில் மெலிதாய் விரவுகிற
சிறுகுழந்தையின் சிரிப்பினை ஒத்திருக்கிறது
கரையொதுங்கித் தளும்பிக் கிடப்பது
தெய்வீகமெனப்படுவதான ஒன்று
திடமென ஏதுமில்லாப் பரவெளியிது
புறஞ்சூழ்ந்திருக்கும் யாவருக்கும்
நான் தூங்கிப்போய்விட்டாலும் பரவாயில்லாமல்
வேய்சரீரத்தை தொந்தரவிக்காது ஆடிக்கிடத்தலும்
Author: virutcham
கோபங்களின் நிமித்தம்
வழமை போலவே
உனது அளவிடமுடியாக் கோபங்களையும்
எல்லாப்பழிகளையும் என்னிலேற்று
வழியிறங்கிப்போகிறேன்
ஒவ்வொரு துணிக்கையிலும்
அன்பைக் கொண்டு
எனக்காய்ச் செய்ததான சுவர்களுக்குள்
உன் சகாப்பிசாசுகளை ஏவுகிறாய்
மிகுந்த அச்சம் கொண்ட பார்வையினை
மீண்டும் மீண்டும் உன்னிலெறிகையில்
அலட்சியத்தின் சலனமற்ற மொழி
உன் முகத்தில் உறைகிறது
நாற்திசைகளிலும் ஊசலாடும்
நூலாம்படைகளினிடையில்
சிதறும் மனதின் சூனியங்களுக்குள்
நிரம்பி வழிகிறது
நிராகரிப்பின் பெருவலி
நான் அகல்கிறேன்
உனது இப்பெருங்கோட்டையை விட்டும்
நீயுன் வழித்துணைகளை
மூலைக்கொன்றாய்க் குடியமர்த்திப்
பாடச் சொல்லி ரசி
இறுதியாக வழமை போலவே
உனது அளவிடமுடியாக் கோபங்களையும்
எல்லாப்பழிகளையும் என்னிலேற்று
வழியிறங்கிப்போகிறேன்
வாழ்க்கை
அது மீண்டும் அழகாயிற்று
பூட்டிய வீட்டினுள் அலையும் தனிமை
மெல்ல மெல்ல
உருவம் பெற்று அறை அறையாய்
அலைய தொடங்குகிறது
வீட்டின் தனிமை

விட்டெறிந்த காலுறையின்
நெடி சுவாசித்து
கழிவறையின் மூத்திர
நாற்றம் நுகர்ந்து
நாள்முழுதும் வலம் வந்த அது
பின்னிரவில் திரும்பும்
என் கரம்பற்றி
அமர்த்தி சொல்ல ஆரம்பிக்கிறது
மதியம் ஜன்னல்கண்ணாடிக் கொத்தி
அதனுடன் பேசிச் சென்ற
சிட்டுக்குருவி ஒன்றின் கதையை!
அஞ்சலி : கிருத்திகாவும், சுகந்தியும்…………
பிப்ர. 11ஆம் தேதி சுகந்தியும் (வயது 41), 13ம் தேதி கிருத்திகாவும் (வயது 93) மறைந்து விட்டனர். அவர்களுக்கு ‘அஞ்சலி’க்கு ஏற்பாடு செய்தனர், மாலதி மைத்ரியும், சுகிர்தராணி போன்ற சிலர் ‘அணங்கு’ அமைப்பின் மூலம் அஞ்சலிக்கான கூட்டம் சந்திரலேகா (நடனக் கலைஞர்) இல்லத்தில் பிப்ரவரி 28ம் தேதி மாலை நடைப்பெற்றது.
இருவரின் உருவப்படங்களும் (கோட்டோ வியங்களாக) அஞ்சலியன்ற திறக்கப்பட்டன. கிருத்திகாவின் உருவத்தை மணிவண்ணனும், சுகந்தியின் உருவத்தை யோகநாதனும் உருவாக்கி இருந்தனர். சுகந்தியின் சில கவிதைகள் பிரசன்னா ராமசாமியால் நாடக வடிவாக்கப்பட்டன. அசோகமித்திரன், மங்கை, சிட்டியின் மகன் வேணுகோபால், இளம்பிறை, ஏ எஸ் பன்னீர்செல்வம் மற்றம் சிலரும் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
மாலதி மைத்ரி தனது ஆரம்ப உரையில் கிருத்திகாவின் எழுத்துக்களை வாசித்ததில்லை. சுகந்தியின் எழுத்துக்களையும் இப்போதுதான் வாசிக்க நேர்ந்தது. அதற்காக தான் மிக மனவருத்தம் அடைவதாகவும், பெண்களின் எழுத்துக்களையாவது பெண்கள் தவற விடாமல் படித்து அதன் தொடர்ச்சிப் பற்றி மனதில் கொள்ள வேண்டும் என்றார். சித்தர் மரபு சுகந்தி என்றார்.
சுகந்தியின் கவிதைகளில் சில நாடகமாக ஆக்கியிருந்த பிரசன்னா அதில் மூன்று நிலை பெண்களைக் குறியீடாகக் கொடுத்திருந்தார். நைட்டி அணிந்தது, சுடிதார் அணிந்தவர், புடவை அணிந்தவர் என. அது கல்வி மற்றும் பொருளாதாரம் சுயஉணர்வு போன்றவற்றை கூறியது. ஒற்றை ஒற்றையாய், ஒரே தளத்தில் ஒரே இருப்பில் இருக்கும் பலரும் தனித்தனியாகவே உலா வருகின்றனர்.
கலவரம் பெண்களைப் பலி கொள்கிறது. ஏதென்று அறியாமலே ஆண்களால் வதைக்கு ஆளாக்கப் படுகின்றனர் பலர். பாதுகாப்புக்கான வீடும், பாதுகாப்புத் தராமல் குழந்தைகளையும், முதியவர்களையும், பெண்களையும் அழிக்கிறது. தப்பிக்க எங்கு செல்ல? வீடும் மரணத்தை தன்னுள் நிரப்பி சுவாசத் திணறலுக்கு உள்ளாக்குகிறது (நகரமெங்கும் கலவரம் – கவிதை).
முகங்களுடன் முகம் என்ற கவிதையும், தனிமுகங்கள் சிலமானதைக் கண்டுகொண்ட பெண்கள், அதைத் தேடி அலையும் நிலையும், எப்படியேனும் கண்டடையும் தீர்மானத்துடன் உலவி அலையும் நிலையும் பதிவாக்கி இருந்தனர். அந்த மூன்று பெண்களும் இறுதியில் அலையும் பெண்கள், தனித்தனியல்ல ஒற்றைப்பெண் என கலந்து வருகின்றனர்.
நாடகம் முழுவதும் பெண்கள் அலைந்து கொண்டே இருந்தனர், தேடலுக்கானதாய். சுகந்தியின் தொலைந்த நிலையும், பெண்களின் அலைந்த நிலையும் பதிவானது.
அசோகமித்திரனின் சுகந்தியைக் குறித்தப் பேச்சு நெகிழ்ந்தும், உணர்வு நிறைந்தும் இருந்தது. மனப்பிறழ்வுக்கு ஆளான சகோதரியுடன் வசித்ததால் சுகந்தியின் மனப்பிறழ்வு குறித்து தீர்மானத்துடன் அவரால் உரையாற்ற முடிந்தது. சுகந்தியின் தெறிவு நிலையிலும், பிறழ்வு நிலையிலும் கண்டவர் அசோகமித்திரன் சொந்த அனுபவம் கலந்த பதிவாகத் தந்தார்.
‘இந்நோய்க்கு மருந்து கிடையாது. பூரண குணமும் கிடையாது. நோயாளியைத் தூங்க வைக்க வலுக்கட்டாயமாக – மாத்திரைகளைக் கொடுப்பதுதன் வழி. ஆனால் உறக்கம் கலைந்ததும் நோயாளி திரும்பவும் பழைய நிலையை அடைந்து விடுவார். உறக்கத்திற்கான மருந்துகள் உடலில் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் வெளியில் தெரியவந்தாலும், மற்றவர்கள் அறிந்திருந்தாலும் கூட வேறு வழியற்றுத்தான் போகிறது,’ என்றார்.
இளம்பிளை தான் சுகந்தியை அரை மணி நேரம் மட்டும் சந்தித்த நிகழ்வுபற்றி குறிப்பிட்டுப் பேசினார். ஏதும் பதிலுரைக்காத வந்து பார்த்ததாகவும் மகிழ்வோது ஏற்றுக்கொள்ளாத சுகந்தியைத்தான் அவர் சந்தித்ததாகக் கூறினார். ஒற்றை வரியில் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலும், சற்றே அவரின் அலுப்பான சந்திப்பாகவே அது இருந்தது என்றும் குறிப்பிட்டார்.
அசோகமித்திரன், கிருத்திகா பற்றிக் குறிப்பிடும்போது அவரின் கணவர் ICS அதிகாரி. நேருவின் கீழ் இருக்கும் முதன்மை அதிகாரிகளில் ஒருவராக இருந்தார் என்றும் அது கிருத்திகாவின் அரசியல் பற்றிய நாவலுக்கு அடித்தளமாயிற்று என்றும் குறிப்பிட்டார். கிருத்திகாவின் நாவல் வாசவேஸ்வரம் வந்த சமயத்திலேயே தி ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலும் வெளிவந்தது. எனவே வாசவேஸ்வரம் பேசப்படாமல் போயிற்று. அம்மா வந்தாள் அதிகம் பேசிக்கொண்டே இருக்கப்பட்டது.
ஏ எஸ் பன்னீர்செல்வம் கிருத்திகாவின் வாசவேஸ்வரம் நாவலை இரண்டாம் பதிப்பு கொணர்ந்தவர். சிட்டியின் மகன் வேணுகோபால் கிருத்திகா பற்றிய இலக்கியமில்லாத சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். ‘வாசவேஸ்வரம்’ கையெழுத்துப் பிரதியாக முதன் முதலில் சிட்டியிடம்தான் அளிக்கப்பட்டது. ஆனால் சிட்டி அதை உடனே படிக்கும் எண்ணம் கொண்டிருக்கவில்லை. ஒரு பெண்ணின் எழுத்து, நாவலில் (அதிலும்) பெரிதாக என்ன இருந்துவிடப் போகிறது என்ற இன்றைய மாறாத மனோபாவமே அன்றும் அவர் கொண்டிருந்திருக்கிறார். சில நாட்கள் கழித்துப் படித்துப்பார்க்க மீள முடியாத ஆச்சரியத்துடன் பாராட்டையும் இருக்கிறார். அது முதல் என்றென்றும் கிருத்திகாவின் எழுத்துகளைப் பிறரிடம் எடுத்துரைப்பதும், அவரை உற்சாகிப்பதுமாக தொடர்ந்து செயலாற்றி இருக்கிறார் சிட்டி என்பதையும் அவர் மகன் வேணுகோபால் கூறினார்.
பன்னீர் செல்வம், இந்திரா பார்த்தசாரதி போன்ற பலரும் கிருத்திகா தனக்கென ஏற்படுத்திக்கொண்ட தனி வெளியைப் பற்றி எடுத்துரைத்து, பெண்கள் தனக்கான வெளியில், அந்தரத்தைக் காத்துக்கொண்டால் மன அழுத்தத்திலிருந்தும், மனச்சிக்களிலிருந்தும் விடுபட இயலும் என்றார். அந்தக் காலத்திலே டென்னிஸ் உடையுடன் பயறிசியை மேற்கொண்டவர் கிருத்திகா. கணவர், மகள், என் எல்லோரிடமிருந்தும் விடுபட்ட தனக்கென்ற ஒரு உள்வட்டம் ஏற்படுத்திக்கொண்டு அதைக் கடைசிவரையிலும் தக்க வைத்துக் கொண்டவர்.
ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் படைப்புகளைக் கொடுத்தாலும் ஆங்கிலத்தில் இருந்த சுதந்திரம், தமிழில் கிட்டவேயில்லை என்ற எண்ணத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தவர் கிருத்திகா. தமிழின் இலக்கிய அரசியல் என்றென்றும் நிலையானது போலிருக்கிறது. கிருத்திகாவின் கல்வி, வளர் சூழல், கணவரின் பணி, பொருளாதாரம், தன் விழிப்பு போன்ற எல்லாவற்றுடனும் தான் அவரின் உள்வட்டம் சாத்தியமாயிருக்கக்கூடும். தன்னை எதிலிருந்தும் விடுவித்துக்கொண்டு இயங்கக்கூடிய சூழல் கொண்ட கிருத்திகாவின் உள்வட்டம் சாதாரணப் பெண்களும் சாத்தியமாக்கிக் கொள்ள வேண்டும். வேண்டியது என்றாலும் கூட வீட்டின் ஒரு அறை கூட பெண்ணுக்கென தனியாக அமைக்கப்படாமல், சமையலறையின் சுவர்களுக்குள் தன் இடம் பொருத்திக் கொள்ளும் பல பெண்களுக்கு பெண் எழுத்தாளர்களுக்கு அது சாத்தியமற்றது. தனியாக குடும்பம், குழந்தை என்று வாழ்க்கை முழுவதும் போராடும் சற்றே தனித்து நிற்கும் பெண்களுக்கும், தனக்கென ஒரு சிறு வெளியயுமின்றி வாழும் அவர்களுக்கும் இவை ஏதும் சாத்யமற்றது.
தனக்கென உள்வட்டத்துடன் வாழ்ந்த கிருத்திகாவும், தனக்கென வட்டம் வாழ்வும் என்ன என்றே அறிந்திராத சுகந்தியும் படைப்பு என்ற பொது வட்டத்தினுள் அஞ்சலி.
இந்தச் சாலையும்
Cheer leaders
பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……16
பூனை மழலைகல்யாண்ஜிசமீப வார நாட்களில்அலுவலகத்தில் பூனைச் சத்தம்அதிகமாகக் கேட்கிறது.உணவு இடைவேளையில் முன்புஒரே ஒரு பூனைதான்மீன் முள்ளுக்கும்மிச்ச மாமிசத்துக்கும்சாப்பாட்டு மேஜையைச்சுற்றிவரும்.சேவை / வாடிக்கைக்கு மத்தியில்இருபுறமும் இருந்துசிந்துகிற வணிகமொழிக்கிடையில்பூனைக்குட்டிகளின் குரல் இப்படிக்கேட்பது புத்துணர்வு தருவதுதான்என்னைப் போன்ற ஒருவனுக்கு.எனினும் -அந்த ஒற்றைப் பூனையைப்போலஇந்த மூன்றோ நான்கோசாப்பாட்டு மேஜையடியில்பசித்துக் கெஞ்சுகிற காட்சியின் கற்பனைபதற்றம் கொள்ள வைக்கிறதுஒவ்வொரு பூனை மழலைஒலிக்கும் போதும்.
இரண்டு கவிதைகள்
1. முகம்
விபத்தில் அடிபட்டவனைத் தூக்கிச் செல்லும்அவசர ஊர்தி கடந்துபோனதுவெட்டப்பட்ட வாழைமரமெனத் தொங்கியஉடல்முழுதும் ரத்தக்கோலம்அவன் உயிர்பிழைத்துவிட வேண்டுமெனமனமுருக வேண்டிக்கொண்டேன்என் பயணம் முழுதும்நிழலென மிதந்துகொண்டிருந்ததுஅவன் சிதைந்த முகம்அவன் காதலி அவன் அலுவலகம்அவனை நம்பியிருக்கும் தம்பிதங்கைகள்எல்லாரைப் பற்றியும் நினைவு வந்ததுஅவன் உயிர்மிகமுக்கியமானது என்று சொல்லிக்கொண்டேன்ஆறுதலாக ஒரு சொல் மிதக்கஅஞ்சவைத்து மிதந்தது மற்றொரு சொல்பத்தாண்டுகளுக்கு முன்பாகவிபத்தில் அடிபட்டு இறந்துபோனநண்பனின் முகம் நினைவில் படர்ந்ததுஅரள விதையை அரைத்துக் குடித்துதற்கொலை செய்துகொண்ட பள்ளித் தோழியின் முகமும் அசைந்தெழந்ததுஅகால மரணமடைந்தவர்கள் ஒவ்வொருவராக ஆழ்மனத்திலிருந்து எழுந்து வந்தார்கள்துயரம் படர்ந்த முகங்களுடன்என்னைச் சுற்றி சூழ்ந்து கொண்டார்கள்எல்லாரும் ஒரே நேரத்தில் பேசினார்கள்எல்லாரும் ஒரே நேரத்தில் கேள்வி கேட்டார்கள்எல்லாரும் ஒரே நேரத்தில் கண்ணீர்விட்டு அழுதார்கள்ஐயோ போதுமே என்று காதுகளை மூடி நிமிர்ந்தபோதுஉதடுகள் அசையாமல் உற்றுப் பார்த்தவிபத்தில் சிதைந்த முகம்கண்டு உறைந்தேன்
2. வாசலில் விழுந்த பறவை
தற்செயலாகவாசலில் விழுந்த ஒரு பறவைகாலூன்றி நிற்க முற்சித்ததுதடுமாறித் தடுமாறி விழுகிறதுஇடைவிடாமல் சிறகுகளை அடித்துக்கொள்கிறதுஐயோ எனத் தாவிஅள்ளியெடுத்து நீவித்தந்த விரல்உதறிநழுவி நழுவி விழுகிறது
அதன் வேதனையோ காணப் பொறுக்கவில்லைநொண்டி நொண்டிநடந்து செல்வதிலும்பறப்பதிலும்தான் அதன் கவனம் குவிந்திருக்கிறதுஎப்படிப் பெறுவதோ அதன் நம்பிக்கையைவிடையறியா வலியில் துவள்கிறது மனம்
சில கணங்களுக்கு முன் பார்த்தேன்பாடி முடித்த ஆனந்தத்தில்தாழ்வான மரக்கிளையில்துள்ளித்துள்ளி நடந்துகொண்டிருந்ததுஅதன் சிறகின் மஞ்சள் அழகால்மாலைப்பொழுதே வசீகரமானதுஅதன் சின்னச்சின்ன நடைஅழகான ஒரு சித்திரம்
எங்கிருந்தோ பறந்துவந்த கூழாங்கல்எதிர்பாராமல் அதை வீழ்த்திவிட்டதுஎவ்வளவோ தடுமாற்றம்எவ்வளவோ வேதனைஎப்படியோ எழுந்து பறந்தோடிவிட்டது
புத்தக விமர்சனம் – 3
அழியா கைக்கிளை
ம.தவசி அவர்களின் கதைகளைப் படிக்கும்போது ஏற்கனவே கொண்டிருக்கிற தீர்மானங்கள் உறுதிப்படுகின்றன. ஒரு படைப்பைப் பொறுத்தவரை அது வெறும் அறிவுரையோ படைப்பாளியின் மேதமையை வெளிப்படுத்துகிற கருத்துக்களாகவோ இருக்காது என்பது அறிந்த விசயம். வியப்பு, ஏக்கம், நப்பாசை என்று இப்படியான விதங்களால் சாதாரண மனிதன் பெற்றதை போலவே படைப்பாளியிடமிருந்தும் அவை வெளிப்படும். சாதாரண மனிதனுக்கு பயம் என்பது எப்படி வெளிப்பட்டது? வெளிப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டு விட்ட பின்னர், அதை எவ்வாறு எழுத்தில் கொண்டு வர வேண்டும்? சரி, எழுத்தில் கொண்டு வருவது இருக்கட்டும் – முதலில் பேச்சில் எவ்வாறு வெளிப்படுகிறது? ஒரு புதிய முறையில் சொல்கிற விதம்….ஒரு படைப்பு இரண்டிற்கும் அதிக வேறுபாடு இல்லை.
கிட்டத்தட்ட எழுத்து வடிவில் நமக்குக் கிடைக்கப்பெற்றது இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுதான். இது இலக்கியவாதிகள் சொல்வதல்ல – ஆய்வாளர்கள். காற்றிலிருந்து மூக்கால் இழுக்கப்பட்டு வெளியானது – ஆதியிலே இருந்தது வார்த்தை – இப்படிச் சொல்லப்பட்டது எல்லாமும் இந்தக் கணக்குத்தான். கல் தோன்றி மண் தோன்றா காலத்து மொழி இலக்கியமும் அப்படித்தான். விவசாய நாகரீகம் தோன்றி பல நூற்றாண்டுகள் கழித்து வெளிப்படுத்தப்பட்டவை வேற எப்படி இருக்க முடியும்? அவற்றில் பயம் எப்படி சொல்லப்பட்டுள்ளது? எவ்வாறு உருவப்படுத்தப்பட்டிருக்கும்?
மிகவும் அற்புதமானவை இந்த விசயங்கள். அன்று தோன்றிய எண்ணம் – அதாவது இந்த பயம் – அறிவீனம் என்று யாராலும் சொல்லப்படவில்லை. எல்லா நாட்டிலும் எல்லா மொழியிலும் அது ஏற்றுக்கொள்ளப்பட்ட விசயம். பயம் என்பதை பேய் என்ற முதலில் காட்டிவிட்டு அதற்கு அலங்காரம் செய்ய ஆரம்பித்த போது காட்டேரி, மோகினி என்பதெல்லாம் தோன்றிவிட்டது. அதை எப்படி தடுக்க முடியும்? இது தோன்றிய ஒன்று – சிந்தித்த விளைவால் கிடைத்தது அல்ல (பேய்களில் பிரம்மரராட்சஸ் என்பருது வேதம் படித்து காலமான வைதிகன் என்பது வேறு விசயம். பேய் உலகிலும் மனு தர்மம் உண்டு போலும்.)
தவசியின் கதைகளில் இது இயல்பாக செயல்பட்டிருக்கிறது. பழங்குடி மக்களிடையே இம்மாதிரி உணர்வை இயற்கையாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். வேறு எந்த வகையிலும் இம்மாதிரி படைப்புகள் வகைப்படுத்த முடியாதவை. சிவப்பிந்தியரிடையே இதற்கு சமமான கதை அம்சங்கள், ஆப்பிரிக்க நாட்டின் எழுத்தே இல்லாது பேச்சு மட்டும் உள்ள மொழிகளிலும் உண்டு.
‘மனித சரித்திரத்தில் மனிதன் தன்னை மிருகம், புயல், மழை, பூகம்பம், ஆழிப்பேரலை இவற்றிலிருந்து தன்னை காத்துக்கொள்ள போரிட்டதை விட, சகோதார மனிதரிடமிருந்து காத்துக்கொள்ள போரிட்டதுதான் அதிகம்,’ என்று ஒரு தடவை நண்பர் சா. கந்தசாமி எழுதியிருந்தார்.
மிருகம் – பல்வேறு இயற்கை எதிர்ப்புகள் ஆகியவற்றை விட சக மனிதனுக்குத்தான் அதிகம் பயப்பட்டு இருக்கிறான் என்பது உண்மை. இந்த சக மனிதன் சம்பந்தப்பட்டதுதான் பேயும். இது உலகம் முழுவதிலும் – சங்க காலம், மத்திய காலம், ஷேக்ஸ்பியர் என்றெல்லாம் பாகுபாடு இல்லாது விரவி நிற்கிறது. அம்மாதிரிப்பட்ட ஒரு நிலை, அவனை அறியாமல் உருவாகி இருக்கலாம். இங்கே இந்த மண்ணில் அத அளவிற்கு அதிகமாகவே இருக்கிறது என்று சொல்லவ வேண்டும். இதன் முக்கிய காரணம் வ0வசாய நாகரீகம் உலகில் முதலில் ஏற்பட்ட பரதேசங்கிளல் இ.ந்த இடம் முதன்மையானது. ஆய்வாளர்கள் தந்த விசயம் இதுவும்.
நாய், பூனை, புலி போன்றவை பேயை கண்டு பயப்பட்டு ஓடவது பற்றி சொல்ல முடியாது. ஒருவேளை மனிதனை பார்த்து பயப்பட்டிருக்க முடியும். குரங்குகள் விசயம் வேறு. அவை சிறிதளவில் மனிதகுணம் கொண்டருக்கலாம்.
நாகரீகம் என்றால் இருக்கிற ஒன்ற நாசமடைந்து விட கூடும். விவசாயம் தோன்றினால் பஞ்சமும் தோன்றும். அந்த நாகாக கால கட்டடத்திற்கு முன்புள்ள பஞ்சம் எல்லாராலும் அனுபவிக்கப்பட்ட ஒன்றாக இருந்திருக்கும். நிலவுடைமை சம்பந்தப்பட்ட விசயம்.
கிராமத்ரதில் பஞ்சம் என்றால் நல்லதாங்காள் கதை தோன்றும். மாராப்பு இல்லாத கிழவிக்கு அதைவிட சிறந்த குறியீட கிடையாது. கிணறு – அது இன்னொன்று. கிழவிக்கு குமரியின் கதைகள்தான் முக்கியம். சவ்வுமுட்டாய் கலரில் தாவணி உடுத்திய முத்துமாயை ‘என்னைப் பெத்தவளே’ என்று விளித்து கதை கேட்கிறாள். பச்சை குழந்தையை கூட ‘என்னப் பெத்த ராசா’ என்றழைத்து கொஞ்சுவது இந்த இடத்திற்கே உரிய அழகு. தான்பெற்ற குழந்தையை ‘என்னப் பொத்தாரே’ என்றழைப்பது ஒருவேளை தனக்கு தாய் என்ற பட்டத்தைப் பெற்று தந்தவளே என்பதாக இருக்கும். குழந்தையை இப்படி அழைப்பது வேறு எங்காவது – மேல் நாடுகளில் – ஐரோப்பிய இலக்கியங்களில் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆய்வாளர்கள் சொல்ல வேண்டும்.
குமரிகள் பட்ட அவலம் சொல்லத் தரமன்று. மானங்காக்க அவர்கள் உயிர் தர வேண்டும். கிணற்றில் விழுவதுபோல தஞ்சையில் குறிப்பிட்ட காலத்தில் பெற்றோரால் உயிருடன் புதைக்கப்பட்ட விசயம் நீல பத்மநாபனின் தலைமுறைகள் நாவலில் வருகிறது. எங்காவது நடந்து கொண்டு இருக்கிற விசயம்தான்.
இம்மாதிரி கொடுமைகளை சித்தரிப்பது – மிகவும் சாதாரணமாக சொல்வதுபோல் இந்த பெரிய விசயத்தை கையாண்டு இருப்பது முன்பு சோமசர்மா, கறைபட்ட இலை, பூரணி போன்ற லா.ச.ரா கதைகள், சமீபத்தில் கவிஞரி சமயவேல் எழுதிய கதைகள் ஆகியவை இங்கே ஏறிப்பிடலாம்.
மாவட்ட தமிழ்தான் தமிழை இன்னும் உயிரோடு இருக்க செய்து வருகிறது – மானங்காத்து வருகிறது. அதன் மூலம் அழகு, கொடுமை இரண்டுமே தரப்படுகிறது.
கொடுமைகளை கிராமத்து கிழவி மென்று விழுங்கிக் கொண்டிருக்கிறாள். அவை தோற்றம் பெறுவது அவள் மூலம்தான். இலக்கியவாதி அல்ல அந்த கிழவி. ஆனால் அவளிடமிருந்துதான் படைப்பாக – கவிதையாக அது கிளம்புகிறது.
ம.தவசியின் கவிதைகளைப் படித்தபோது இவர்அ கதைகள் எழுதினால் எப்படி இருக்கும் என்ற நினைத்தேன். இரண்டு கதை தொகுதிகளையும் படித்தபோது முதலில் வந்த கதை தொகுதியான ‘பனை விருட்சி’ மேலான கற்பனை வளம் கொண்டுள்ளது என்று சொல்ல வேண்டும். அதிலும் கதையின் ஊடே கவிதைகளையும் சேர்த்திருப்பது ஒரு புதிய முயற்சி. அந்த கவிதைகளையும் சேர்த்தால் அல்லாமல கதை முற்றுபெறாது என்று அவர் நினைத்திருந்தால் அது சரியான எண்ணம்தான். கதையில் கவிதை வரலாமா என்று யாராவது கேட்டால் கதை தோன்றியபோது – கவிதை தோன்றிய போது – கடவுள் தோன்றிய போது, அவையெல்லாம் எப்படி இருந்தன என்று பதிலுக்குக் கேட்கலாம்.
மேலே குறிப்பிட்ட கதை ‘அழியா கைக்கிளை’ என்ற தலைப்பில் ‘பனை விருட்சி’ கதை தொகுதியில் வந்துள்ளது. அழியா கைக்கிளை என்று பெயர் சூட்டிய காரணம் தெரியவில்லை. கைக்கிளைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? ஆனால் பெயரில் என்ன இருக்கிறது – கதையில் தானே எல்லாம். தவசி அவர்கள் இப்படிப்பட்ட நடையை கொண்டிருக்கும் கதைகளை தொடர்வது அவசியம்.
(பனை விருட்சி – ம தவசி – சிறுகதைகள் – வெளியீடு : அனன்யா, 8/37 பி ஏ ஒய் நகர், குழந்தை இயேசு கோவில் அருகில்,புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர் 613 005)
புத்தக விமர்சனம் 2
ஆஸ்பத்திரி – நாவல் – ஆசிரியர் : சுதேசமித்திரன் – உயிர்மை பதிப்பகம் – சென்னை 18 – பக்கம் – 136 – விலை ரூ.௮0
சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட ஆசிரியர் சுதேசமித்திரன் என்ற புனைபெயரில் எழுதி வருகிறார். நாற்பது வயதிற்குள் கவிதை, சிறுகதை, நாவல் எழுதியுள்ளார். சுதேசமித்திரன் என்ற பெயர் பழைய செய்தித்தாளையும், எழுத்தாளர் அசோகமித்திரனையும் நினைவுப் படுத்தினால் ஆசிரியர் பொறுப்பல்ல.
பக்கம் 59 – இங்கே ஒரு இடைச்செருகல் அவசியமாகிறது. இந்த நாவல் ஏழைகளையோ, அரசாங்க ஆஸ்பத்திரிகளையோ அவலங்களையோ பற்றிப் பேசுவதில்லை என்று எப்போதாவது ஏதாவதொரு மூலையிலிரூந்து சர்ச்சை கிளம்பக்கூடும்.
இந்தக் காலத்தில் மட்டுமல்ல. எந்தக் காலத்திலும் ஏழைகள் எந்த நாவல்களையும் வாசிப்பதேயில்லை. ஏனென்றால் அவர்களிடம் அவற்றை வாங்குவதற்கு பணம் இல்லை. இந்தக் காலத்தில் மட்டுமல்ல எந்தக் காலத்திலும் பணக்காரர்களும் இந்த மாதிரி எந்தக் காலத்திலும் பணக்காரர்களும் இந்த மாதிரியான நாவல்களை வாசிப்பதே இல்லை. ஏனென்றால் அதற்கு அவர்களிடம் நேரமில்லை. இதே ரீதியில் இரண்டு பக்கங்கள் வாசகனை முன்னுறுத்தி பிரவசனம் செய்கிறார் ஆசிரியர். இந்த உத்தி மிகப் பிழைய உத்தி. TRISHTRAM SHANDY எழுதிய Lawrence Sterne, பிரெஞ்சு நாவலாசிரியர் Demise Dierot இவர்கள் எல்லாம் இருநூறு ஆண்டுகள் முன்னமே கடைப்பிடித்த உத்தி.
பக்கம் 126. அன்றைக்கு ஐசியூவுக்கு முன்னால் பெரிய வாத்திமக்கூட்டமாக இருந்தது. இருபதாம் நூற்றாண்டு துவக்கத்தில் ஸீ வை குருஸ்வாமி சர்மா எழுதிய பிரேம கலாவதீயம் என்ற நாவலில்தான் ஸ்மார்த்தர்களின் உட்பிரிவுகள் கேலி செய்யப்பட்டிருக்கும். பிறகு வந்த லா.ச.ரா, தி.ஜா போன்ற பிராமண எழுத்தாளர்களின் பாஷை மட்டும் பிராமண மொழியாக இருக்குமே தவிர வாத்திம வடம் பிரிவுகள் பேசப்படவில்லை.
கதையில் வருகிற சிவன் விஷ்ணு போன்ற பெயர்கள் நகுலனின் கேசவ மாதவனை நினைவூட்டுகின்றன. ஆஸ்பத்திரி பிணி, மூப்பு, சாவு உள்ளடக்கியது என்ற போதும் அங்கும் காமக்கிளர்ச்சி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்கிறார் ஆசிரியர் (பக்கம் 57).
சுந்தர ராமசாமியைப் போல மொழியை செதுக்கி, திருகி, சாதூர்யமாக சமத்காரமாக கதையை நடத்திச் செய்கிறார் ஆசிரியர்.
அத்தியாயம் 16-ல் இடம் பெறும் கண்ணபிரான் ஒரு விசித்திரமான குணாதிசயம். பெரிய தொழிலதிபர். சபரிமலை போகிறார். மலையிலிருந்து கீழிறங்கியதும் ஆடு மாடு கோழி மீன் மதுவகைகளும் சாப்பிடுகிறார். இந்த அத்தியாயத்தின் தலைப்பு பணக்காரர்கள் சபரிமலைக்குப் போகும் பாங்கினை விளக்குக.
நாஞ்சில் நாடனால் பரிந்துரைக்கப்பட்ட இந்த நாவல் தமிழ் வாசகர்கள் படிக்க வேண்டியது.