மொழிப்பெயர்ப்புக் கவிதை

சமீபத்தில் மறைந்த இரு பெண் எழுத்தாளர்களான கிருத்திகாவிற்கும், சுகந்தி சுப்பிரமணியனுக்கும் நவீன விருட்சம் தன் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

அவர்கள் இருவர் நினைவாக ஜோர்ஜ் லூயி போர்ஹேயின் தற்கொலை என்ற கவிதையை இங்கு சமர்ப்பிக்கிறேன். இதை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு அளித்தவர் அஷ்டாவக்ரன். அவரும் இப்போது உயிரோடில்லை.

தற்கொலை

தனித்த ஒரு நட்சத்திரத்தைகூட விட்டுவைப்பதாயில்லை இரவில்
இந்தஇரவையும் விட்டு வைப்பதாயில்லை.
நான் மடிந்து விடுவேன், என்னுடன்
சகிக்க முடியாத இந்த அண்டத்தின் சுமையும்.
பிரமிடுகளையும், பெரும் பதக்கங்களையும்,
கண்டங்களையும், வதனங்களையும் நான் துடைத்துவிடுவேன்
நான் உண்டாக்குவேன் புழுதியை,வரலாற்றிலிருந்து, புழுதியிலிருந்து.
இப்பொழுது நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அந்திமகால அஸ்தமனத்தை
நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன் இக்கடைசிப் பறவையை
நான் தருகிறேன் சூன்யத்தை இங்கு ஒருவருமே இல்லாதபோது

(நவீன விருட்சம் 1989 / 3வது இதழ்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன