துளி : 166


ரஜினி பயந்துவிட்டார்


அழகியசிங்கர்


நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் நடிகர்களில் ரஜினிகாந்த் ஒருவர்.
அவர் முன்பே அரசியலுக்கு வந்திக்க வேண்டியவர். ஏன் தயங்கினார் என்பது தெரியவில்லை?
நடிகர் விஜயகாந்த் துணிச்சல் அவருக்கு இல்லை.உடம்பு சரியில்லை என்ற காரணத்தைக் கூறி அவர் அரசியலை விட்டு விலகிவிட்டார்.
ஆனால் தமிழகத்தில் அவர் அரசியல் பிரவேசத்தால் ஒரு பெரிய மாற்றம் கிடைத்திருக்க வேண்டியதை அவர் வேண்டாமென்று உதறி விட்டார்.
உண்மையில் இரண்டு கழக ஆட்சிகளிலிருந்து மக்கள் விடுபட வேண்டுமென்று எல்லோரும் நினைக்கிறார்கள். அந்த மாற்றத்தை யார் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளலாமென்று தோன்றுகிறது.
அதற்கு வழியில்லாமல் போய்விட்டது.ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் நேரிடையாக மக்களைச் சந்தித்திருக்க வேண்டாம். தொற்றுப் பயத்தால் அதைக்கூட மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.
எலக்டிரானிக் வழியாக அவர் கூட்டம் நடத்தியிருக்கலாம். மக்களை நேரிடையாக சந்தித்திருக்க வேண்டாம். அவர் என்ன சொல்ல வருகிறாரோ அதை மற்றவர்கள் மூலம் சொல்லியிருக்கலாம்.
ஏன் இப்படி அவசரப்பட்டு ஒரு முடிவை வெளிப்படுத்தினார் என்று தெரியவில்லை.அவர் கூப்பிட்ட குரலுக்கு உதவி செய்ய ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். ஏன் அவர் அரசியலில் இறங்கி அந்த முயற்சியை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும்) செய்திருக்கக் கூடாது என்று எனக்குத் தோன்றியது.
இப்போது திரும்பவும் இந்த ஆட்சி இரு கழகங்களுக்கிடையே தான் போகப் போகிறது.என்னைப் பொறுத்தவரை இந்த ஆட்சி ஒரு முறையாவது கழக கட்சிகள் தவிர்த்து வேற யாராக இருந்தாலும் ஆட்சிக்கு வரவேண்டுமென்று தோன்றுகிறது.
இப்போதோ எந்தக் கட்சியும் இந்தக் கழகங்களை எதிர்த்துப் போராடும் நிலையில் இல்லை.
கழகங்கள் ஆட்சியைத் தவிர மூன்றாவது அணியாக மற்ற எல்லா உதிரிக் கட்சிகளும் ஒன்றாகத் திரண்டு ஒரு அணியாக இருக்க முயற்சி செய்தால் நல்லது.அரசியலில் கொள்கை என்பது எதுவும் கிடையாது. உண்மையில் மக்களுக்கு எதாவது உதவி செய்யவேண்டுமென்ற ஒரு கொள்கைதான் இருக்க வேண்டும். மற்ற எல்லாக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து இந்த முயற்சி செய்ய வேண்டும்.
(அரசியல் அனுபவம் இல்லாத நான் எழுதிய முதல் கட்டுரை இது. எதாவது பிழை தென்பட்டால் மன்னிக்கவும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன