சூம் மூலமாக 32வது கவிதை வாசிக்கும் நிகழ்ச்சி

அழகியசிங்கர்

01.01.2020(வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு சூம் மூலமாக 32வது கவிதை வாசிப்புக் கூட்டத்திற்கு எல்லோரையும் அழைக்கிறேன். கவிதைகள் வாசித்துச் சிறப்புச் செய்யும்படி.  புத்தாண்டு தினத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
எது மாதிரியான வகைகளிலும் கவிதைகள் வாசிக்கலாம். 

2 முதல் 3 நிமிடங்களுக்குள் கவிதை வாசிக்கலாம்.  இக் கூட்டத்தில் சிறப்புப் பேச்சாளர் யாருமில்லை. ஒவ்வொரு வாரமும் கடவுள் வாழ்த்து குறிப்பிடுவதுபோல் விருட்சம் இதழில் வெளிவந்த கவிதை வாசிக்கப்படும்.  ஒரே ஒரு கவிதை வாசித்தபிறகு கவி அரங்கம் தொடங்கும். 


புத்தாண்டு தினத்தை ஒட்டி புத்தாண்டை வரவேற்று கவிதைகள் வாசிக்கலாம்

கவிதை மீது ஆர்வமுள்ளவர்களும் கலந்து கொள்ளும் கூட்டம் இது.  யார் வேண்டுமானாலும் எந்தக் கவிதையும் வாசிக்கலாம்.  உங்கள் கவிதை மட்டுமல்ல.  மொழிபெயர்ப்பு கவிதைகளும் வாசிக்கலாம்.  ஆனால் ஏற்கனவே வாசித்த கவிதைகளைத் திரும்பவும் வாசிக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன் கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் கூட்டம் முடியும் வரை இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மனம் திறந்து வரவேற்கிறேன்.  உற்சாகத்துடன் கவிதையை வாசிக்க வாருங்கள்.
        Meeting ID: : 841 2521 3276
              Passcode:   273555

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன