மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 65

குழந்தைகள்

 

பொன். தனசேகரன்

 

காகிதங்களில் கிறுக்கட்டும்

குழந்தைகள் விருப்பம்போல;

திட்டாதீர்கள்.

சுதந்திரமாக

வார்த்தைகளைக் கொட்டட்டும்;

தடுக்காதீர்கள்.

விரும்பாததைக் கேட்டு

முரண்டு செய்யலாம்:

அடிக்காதீர்கள்.

உங்கள் பழக்கங்களை

மிரட்டித் திணிக்காதீர்கள்.

விளையாட்டுப் பொருள்களைக்

கொடுத்து

கவனத்தைத் திசை திருப்பாதீர்கள்.

நடைவண்டி இல்லாமலே

நடை பழகும்

குழந்தைகள்


நன்றி : காற்றிலும் மழையிலும் கைவிளக்கு – கவிதைகள் – பொன்.தனசேகரன் – பக்கம் : 80 – வெளியான ஆண்டு : 2005- விலை : ரூ.50. – வெளியீடு : கலைஞன் பதிப்பகம், தி நகர், சென்னை 17.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன