இரண்டு பூனைகள்

ஒரு கருப்புப் பூனை
நாற்காலி மீது அமர்ந்து கொண்டு
என்னைப் பார்த்து
மியாவ் என்றது..

இன்னொரு பூனை கருப்பும் வெள்ளையும்
கலந்த நிறத்தில்
நாற்காலி கீழே அமர்ந்திருந்தது.
என்னைப் பார்த்து மியாவ் மியாவ் என்று
இரண்டு முறை கத்தியது

நான் பேசாமல் வந்து விட்டேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன