மனதுக்குப் பிடித்த கவிதைகள் 11

அழகியசிங்கர் 

கிணற்றிரவு

    ஜி எஸ் தயாளன்




நடுகச்சாமத்தில்
அம்மாவை இறுக அணைத்தபடி
சஹானா அயர்ந்து உறங்குகிறாள்

சன்னலைத் திறந்ததும்
அறையின் இறுக்கம் தளர்கிறது
இனி அவள் தனித்தே தூங்குவாள் போலிருக்கிறது

அறைக்கு வெளியே
மரக்கிளைகளில் எந்த அசைவுமில்லை
வானம் இயல்பாய் இருந்தது
தூரத்துச் சுவரில்
வாகன ஒளி தோன்றுவதும்
மறைவதுமாக இருக்கிறது
எங்கும் நிலவின் மௌனம்

சலனமற்ற ஒரு கிணறு
வேறு வழியின்றி
விண்ணையே பார்த்துக்கொண்டிருக்கிறது

நன்றி : வேளிமலைப் பாணன் – கவிதைகள் – ஜி எஸ் தயாளன் – விலை ரூ.90 – பக் : 95 – முதல் பதிப்பு : டிசம்பர் 2014 காலச்சுவடு பதிப்பகம், 669 கே பி சாலை, நாகர்கோவில் – போன் : 04652 – 278525

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன