கசடதபற ஜனவரி 1971 – 4வது இதழ்

மூன்று ஜப்பானியக் கவிதைகள்

நடவு நடும் பெண்கள்
பாடும் பாட்டுகளிலே மட்டும்தான்
சேறு பட்டிருக்கவில்லை

                           – கொனிஷ் ரெய்லான்

முடியாது –
மனித உள்ளத்தை
யாரும் சரிவரப்
புரிந்து கொள்ள முடியாது.
ஆனால்
நான் பிறந்த ஊரில்
மலர்கள்
முன் போலவே
மலர்ந்து
மணம் வீசுகின்றன.

                          – ஸராயுகி

யாரோ கிழவன்
     – நான் அறியாத அந்நியன் –
என்னைத் தடுக்கிறான்
நான் கண்ணாடியில்
       பார்த்துக் கொள்ளும்போது

                          – ஹீடோமாரோ

                            தமிழில் :  க.நா.சு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன