மயானத்திலிருந்து

பா. சிவபாதசுந்தரம்

கழற்றி எறிந்த மாலையின்

பூக்களை மேயும் ஆடுகள்

அரிசிதனை கலைத்து

காசை பொறுக்கும் சிறுவர்கள்

காலையில் போன

கதிரவன் வருகின்றான்

மாலை மரியாதையுடன்

மந்திரியும் வர

நாலு நாள் கழித்து

கருமாதி முடிவாச்சு

நான் செத்து இன்றோடு

நாட்கள் பத்தாச்சு

“மயானத்திலிருந்து” இல் ஒரு கருத்து உள்ளது

வெங்கட் நாகராஜ் உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன