அங்கிருந்த காட்சிப்பிழை


செ.சுஜாதா,
வலிய உன் கரங்கள்
மேகத்தை உருட்டி இறுக்குகின்றன
மற்றுமொரு
இரவை
அடிவயிற்றில் எத்தி முடுக்குகிறாய்
அழுந்தும் உன் ஆள்காட்டி விரலில்
கசியத்தொடங்குகின்றன
நட்சத்திரங்கள்
கங்காரு நடையின் தோற்றமுடைய
உனது
இப்பயணத்தில்
சிதைகின்றன
பறவையின் வழித்தடங்கள்
மருண்டு தேயும் பிறைநிலவை
நீ நிமிர்ந்து காண எத்தனிக்காதே
எறும்புகள் ஊரும்
விறைத்த காட்டு மானின்
விழிகளை அங்கே நீ காணக்கூடும்
***

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன