நாம் மனிதரைப் புரிந்து


ஆனந்தி வைத்யநாதன்

நாம் மனிதரைப் புரிந்து
கொள்ளா விட்டாலும்

நம்மை மனிதர் புரிந்து
கொள்ளா விட்டாலும்

நாம் சூழ்நிலைகளைப் புரிந்து
கொள்ளா விட்டாலும்

சூழ்நிலை நம்மை ஏற்றுக்
கொள்ளா விட்டாலும்

நாம் உண்மையை உணர்ந்து
கொள்ளா விட்டாலும்

உண்மை நமக்குள் இறங்கி
தெளிந்து கொள்ளா விட்டாலும்

நாம் பிறர் அன்பைப் புரிந்து
கொள்ளா விட்டாலும்

பிறர் அன்பு நம்மை இழுத்துக்
கொள்ளா விட்டாலும்

தானாய் வந்த வம்பை நாம்
அறிந்து கொள்ளா விட்டாலும்

நாமாய் தேடி வம்பு புரிய
மனம் கொள்ளா விட்டாலும்

விழுந்து,விழுந்து செய்த செயல்கள்
ஏற்றுக் கொள்ளா விட்டாலும்

செய்த செயல்கள் பின் நன்மை தருமென
தெரிந்து கொள்ளா விட்டாலும்…

“நாம் மனிதரைப் புரிந்து” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன