வளசரவாக்கம்

 
அழகியசிங்கர்

 காலையில் பொழுது விடிந்ததும்
 தூங்கியும் தூங்காமலும்
 எழுந்து கொஞ்சம் உட்கார்ந்தபிறகு
 ஞாபகம் வருகிறது
 வளசரவாக்கம் என்று

 8.30மணி அளவில்
 ஓடி ஆடிப் போக முடியாத வயதில்
 ஏதோ தொத்தல் வண்டியில்
 ஏறி
 எதிர்படும் கூட்டத்தைப்பற்றி
 கவலைப்படாமல்
 முகத்தில் புன்னகை மாறாமல்

 இதோ
 வளசரவாக்கம்

 வந்து நுழைந்தவுடன்
 என் சீட்டில் போய் அமர்ந்து கொள்வேன்
 ஏதோ கனவுலகில் இருப்பதுபோல்
 தோற்றம்
 பலவிதமான மனிதர்களைப்
 பார்த்து பார்த்து
 அவர்கள் ஏதோ சொல்ல
 நானும் கேட்பேன்
 பின் நான் ஏதோ சொல்ல
 அவர்களும் கேட்பார்கள்
 வளசரவாக்கம் வளசரவாக்கம்

 சக ஊழியர்கள் அவர்கள்
 இருக்கைகளில் போய் அமர்ந்து
 எதிர்படும் நீண்ட கூட்டத்தை
 சமாளிப்பார்கள்
 வளசரவாக்கத்தில்தான்
 இருக்கிறோமா
 என்பது தெரியாமல்
 வாகன நெரிசல்
 பிரதான சாலை வழியாக
 போய் வந்தவண்ணம் இருக்கும்..

 நான் வெளியே வரும்போது
 இருட்டாகிவிடும்..
 வீடு போய் சேர்வதற்குள்
 போதும் போதுமென்றாகிவிடும்

 இப்படித்தான் கிலி உண்டாக்குகிறது
 வளசரவாக்கம்..
                                                          09.04.2013
 
 

“வளசரவாக்கம்” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன