இரண்டு கவிதைகள்

அழகியசிங்கர்

1)

நான் சொல்வேன்
வாய்த் திறந்து
ஜெம்பு என்று
அவர் ஏன் என்று
கேட்க மாட்டார்

இன்னொரு முறை
கூப்பிடுவேன்
ஜெம்பு ஜெம்பு என்று
அவர் உம் என்று சொல்லமாட்டார்

எனக்குத் தெரிந்தது
அவருக்குப் பிடிக்கவில்லை

பின் நான்
நகர்ந்து அவரிடம் போய்
பிடபூள்யு என்பேன்

பின்
இருவரும் கிளம்புவோம்
சலிப்புடன்……..

2.

ஒருவர் ரிட்டையர்டு
ஆகிறாரென்றால்
என்ன நினைக்க முடியும்?
அவர் இனிமேல்
வரப் போவதில்லை

காலையில் சீக்கிரமாய்
வந்திருந்து
அலுவலகக் கதவைத் திறக்கப் போவதில்லை

அவர் பார்த்த அலுவலக இருக்கையில்
கொஞ்ச நாட்களுக்குத்
தெரியும் அவர் கையெழுத்து

மற்றவர்களெல்லாரும்
வழக்கம்போல் வந்து கொண்டிருப்பார்கள்

நான் பிப்பரவரி 2014ல்
வரும் என் ரிட்டையர்மெண்டை
நினைத்து
காலத்தைத் தள்ளுவேன்

“” இல் ஒரு கருத்து உள்ளது

திண்டுக்கல் தனபாலன் உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன