கரடி


பொம்மைகளை வெறுக்கும்
பெண்ணொருத்தி பாண்டிபஜாரில்,
தன் தோழிக்குப் பரிசளிக்க
பெரிய கரடி பொம்மை வாங்கினாள்.
அதன் தலையைப் பிடித்துத்
தூக்கிக் கொண்டு நடந்தவள்
வாகாக இல்லாததால்
வேறு வழியின்றி
அதைக் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டாள்.
ரங்கநாதன் தெருவைக் கடக்கையில்
கரடி அவள் தோள் மேல் சாய்ந்து கொண்டது.
மின்வண்டியில்
பக்கத்தில் இடமிருந்தும்
தன் மேலேயே வைத்துக்கொண்டாள்.
குளிர்காற்று வீசியபோது
கரடி அவளைக் கட்டிக்கொண்டது.
“டேய் விடுடா என்னை”
என்று அதட்டினாள்.

 முகுந்த் நாகராஜன்.

“கரடி” இல் ஒரு கருத்து உள்ளது

செய்தாலி உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன