செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்

நினைவு தினம்
அன்றைக்கென்று
அலுவல் நிமித்தம்
அடுத்த நாடொன்றுக்கு
ஆகாயப் பயணம்.
அலை அலையாய்
அம்மாவின் நினைவுகளோடு.
அசைவ உணவை
அண்டாமல் இருந்ததொன்றே
அயலக வாழ்வில்
அடியேனால் முடிந்தது
அம்மாவின் இந்த முதலாம்
ஆண்டு நினைவு நாளில்.
0
அப்படியே இருப்பதுதான்
என்றைக்காவது
பார்த்தால்
கேட்பதற்கென்று
சில கேள்விகள்
என் வசம்.
என்றைக்காவது
பார்த்தால்
கேட்கப்படாமல்
அவைகள்
அப்படியே
இருப்பதுதான்
அழகு.
o
எப்போதும் போல
எப்போதும் போல்தான்
இதையும் சொன்னேன்.
எப்போதையும் போலின்றி
கேட்கின்ற வகையில்
நீ இருந்ததுதான்
இன்றைய சிறப்பம்சம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன