இரண்டு கவிதைகள்

1 சற்றைக்கு முன்
 ஜன்னல் சட்டமிட்ட வானில்
 பறந்து கொண்டிருந்த
 பறவை
 எங்கே?
 அது
 சற்றைக்கு முன்
 பறந்து கொண்
 டிருக்கிறது.

2 பறந்து செல்லும்
 பறவையை
 நிறுத்திக் கேட்டான்:
 பறப்பதெப்படி?
 அமர்ந்திருக்கையில்
 சொல்லத் தெரியாது கூடப்
 பறந்து வா
 சொல்கிறேன் என்றது.
 கூடப்  பறந்து கேட்டான்:
 எப்படி?
 சிரித்து உன்போலத்தான்
 என்றது.
 அட ஆமாம்
 ஆனால் எப்படி
 எனக் கீழே கிடந்தான்
 பறவை
 மேலே பறந்து
 சென்றது.

 

“இரண்டு கவிதைகள்” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன