நதி ஈந்த எறும்பு

ஓய்விலிருந்தது மாமரம்
உதிர்ந்த இலைகளோடு நானும்
நழுவிய தினசரியிலிருந்த
அணைக்கட்டின் மீது ஊர்ந்தன
வெள்ளை நிறத்திலும் கருப்பு நிறத்திலுமாக
இரு சாரியாக எறும்புகள்
வெள்ளையின் பசியறிந்த கருப்பு
சுமந்துவந்த வயலை ஈந்தது
கருப்பின் தாகமறிந்த வெள்ளை
விழுங்கிவந்த நதியை கொடுத்து கொடுத்து
தன்போக்கில் நகர்ந்துகொண்டிருந்தன…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன