சொல்லிச் சென்ற நொடியிலிருந்து..

*
நீ
மீண்டும் வருவதாக
சொல்லிச் சென்ற நொடியிலிருந்து
நான்கு மொட்டுகளோடு
மலராமல் காத்திருக்கிறது
பூச்செடி

உனக்கென எழுதிக் கொண்டிருக்கும்
கடிதத்தை
நினைக்கும் கணமெல்லாம்
மேஜை விளிம்புவரை வந்து
எட்டிப் பார்த்து விலகுகிறது
ஜன்னல் திரை

ஒரு வார இடைவெளியை
ஓராயிரம் பட்டாம்பூச்சி சிறகுகளின்
வர்ணங்கள் உதிர்ந்து
புரியா ஓவியமாகிறது இத்தனிமை அறை

******

“சொல்லிச் சென்ற நொடியிலிருந்து..” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன