கல்லறை வாசகம்

சாலையின் இருபுறமும் உள்ள
பூக்கள் பேசிக்கொண்டன
அவள் செளந்தர்யத்தில்
மயங்காத ஆடவர்களே
இல்லை என்றது முதல் பூ
டாலடிக்கும் தோலுக்கு உள்ளே
இருப்பது
ரத்தமும், சதையும் தான்
என்றது இரண்டாம் பூ
எனக்கு மட்டும்
உருமாறும் வித்தை
தெரிந்தால்
அவள் அணியும் காலணியாக
மாறி காலடியிலேயே
ஆயுள் முழுதும் கிடப்பேன்
என்றது முதல் பூ
அவள் இறந்தால்
இந்தப் பாதையின்
வழியாகத்தான்
தூக்கி வருவார்கள்
என்றது இரண்டாம் பூ
பேரழகிகளை சாவு
நெருங்குவதில்லை என்றது
முதல் பூ
மண் யாரையும்
ருசி பார்க்காமல் விட்டு வைத்ததில்லை
என்றது இரண்டாம் பூ.

“கல்லறை வாசகம்” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன