ஒரு மழை நாள்

கார்மேக ஊர்வலத்தைக் கண்டு
மயில் தோகை விரிக்கும்
பூமியை குளிரச் செய்ய
வானம் கருணை கொள்ளும்
மரங்கள் தான் செய்த தவங்கள்
வீண்போகவில்லையென
மெய்சிலிர்க்கும்
குடை மனிதர்களுக்கு
மூன்றாவது கையாகும்
காகிதக் கப்பல்கள்
கணித சமன்பாடுகளைச்
சுமந்து செல்லும்
கொடியில் காயும்
துணிகளெல்லாம்
எஜமானியம்மாவை
கூவி அழைக்கும்
ஆடுகள் மே என்று
கத்தியபடி
கொட்டிலுக்கு ஓட்டமெடுக்கும்
தேகம் நனையச் செல்லும்
தேவதையை
கண்கள் வெறித்துப் பார்க்கும்.

“ஒரு மழை நாள்” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன