இன்னும் அவளுக்குத் தெரியாது

 
நீ கனவில் வந்து 
காலடி வைக்கும் 
நேரங்களிலெல்லாம் 
அதிகாலை வந்து 
என் கதவைத் தட்டி 
எழுப்பிவிடுகிறது…
உன்னைப் பார்க்கும் 
தருணங்களில் 
காமம் பீறிட்டு
ஊற்றெடுக்கும் 
ஆனால் 
உத்தமனாகக்
காட்டிக்கொள்கிறேன் என்னை…
நீ அருகில் இருக்கையில் 
கரம் பிடிக்கவிடாமல் 
கட்டுப்படுத்திவிடுகிறது 
உன் பார்வை 
பார்வையைத் தின்று தொலைத்துவிட்டேன் 
என்ன செய்ய…
விக்கல் நிற்க முத்தம் கொடு 
சந்தர்ப்ப வசத்தால் 
உயிர் பரிகசிக்கும் 
விரலின் 
மெல் உரசலுக்காக 
காத்துக்கிடக்கிறேன்…
உன் கீழ் வானம் இறங்குமா?
இத்தனையும் 
நான் உன்னை 
காதலிக்க தொடங்கிய நாள் முதல் 
தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது…
                                         

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன