வருகை

பழுத்த இலைகள்
மண்ணில் உதிர்கின்றன
இன்று காலையிலேயே
வெயில் கொளுத்தத் துவங்கிவிட்டது
ரிடையர்டு ஆன பின்பு
சூரல் நாற்காலி தானே கதி
ஆளரவமற்ற வீதியில்
காற்று அலைகிறது
நேற்று நடமாடியவர்கள்
இன்று காணாமல் போகும்போது
மரணம் என்னைப் பார்த்து
பல் இளிக்கிறது
அந்தி வேளையில்
கண்களை மூடி
பறவைகளின் சப்தத்தை
கேட்கும் போது
மனம் இலேசாகிறது
தூரத்தில் யார் வருவது
இந்தக் கண்ணாடியை
எங்கே வைத்தேன்
ஓ பரந்தாமனா –
எங்கிருந்து என்று கேட்டேன்
காதோரம் வந்து சொன்னான்
கைலாயம் என்று.

“வருகை” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன