யாக்கை

 
ஆழ்கடல்
அமைதியாக இருக்கும்
கூட்டம் கடலலையை
கண்டு ரசிக்கும்

மேகக் கூட்டம்
படையெடுக்கும்
வானம்பாடி பாட்டுப் படிக்கும்

காட்டுப் பாதையில்
பூத்த மலர்
பறிக்க எவருமில்லை

வைகறை
மூடுபனி
உறக்கம் கலையவில்லை

திருத்தேர் வீதிஉலா
பலூன் வியாபாரியை
மொய்க்கும் சிறார்கள்

தீபாவளி நள்ளிரவு
வெடிச்சத்தம் ஓயவில்லை

தக்கை அசைகிறது
தூண்டிற்புழுவுக்கு
ஆசைப்பட்ட மீன்
பாத்திரத்தில் துள்ளுகிறது.

 

 
 
 
 

 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

“யாக்கை” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன