கண்ணீரின் புனிதம்

உப்பெல்லாம் கண்ணீரில்

கரைந்து விடுவதால்

உணர்வுகளும் கண்ணீரோடு

கரைந்து விடுமாவெனத்

தெரியவில்லை.

கன்னத்தில் சொட்டுகிற

கண்ணீர் சுத்தமானதா

அசுத்தம் கலந்ததாவென

அறிய இயலவில்லை.

தோண்டி விட்டார்களா

ஊற்றாய் ஊறி

வந்ததாவெனவும்

தெரியவில்லை.

ஆனால் அனுதாப

அலைகளால்

அனைவரையும்

சுனாமியாய் அபகரிக்க

இயல்கிறது சில துளி

சொட்டும் கண்ணீரால்.

“கண்ணீரின் புனிதம்” இல் 2 கருத்துகள் உள்ளன

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன