ரோகி

ரணத்தில் நிணம் கசிய
வீதியில் நின்றிருந்தேன்
பாதசாரிகளின் பார்வைகள்
விநோதமாயிருந்தது
தனக்கு வந்து விடுமோ
என அஞ்சி விலகினர் சிலர்
சிலர் அருவருப்புக் கொண்டு
மண்ணில் காறி உமிழ்ந்தனர்
புண்ணிலிருந்து வீசி்ய
வாடையை காற்று
வாங்கிச் சென்று
இன்னொருவர் நாசிக்குள்
நுழைத்தது
உச்சி வெயிலால்
காயங்கள் எரிந்தன
உடலின் மேல்
மற்றொரு உடல்
போர்த்தியது போலிருந்தது
உடலின் கனத்தால்
பாரம் தாங்க இயலாத
தோணி ஆடுவது போல
உடம்பு அங்குமிங்கும்
அசைந்தது
மரணம் வந்து விடுதலை
தரும் வரை
வேறு கதிமோட்சம்
இல்லையென்று
உள்ளம் புலம்பி அழுதது.

“ரோகி” இல் 2 கருத்துகள் உள்ளன

  1. அருமை".உடல் மேல் ஒரு உடல் போர்த்தியதைப்போல.."
    புதுமையான சிந்தனை.கவிதையின் முடிவில் கொஞ்சம்
    கூடுதல் அழுத்தம் கொடுத்திருந்தால்
    இன்னும் சிறப்பாய் இருக்குமோ..!
    நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன