தொலைவானில் சஞ்சரிக்கும் ஒற்றைப் பறவை


வளைதலும்வளைந்து கொடுத்தலுமானநாணல்களின் துயர்களைநதிகள் ஒருபோதும்கண்டுகொள்வதில்லை
கூடு திரும்பும் ஆவல்தன் காலூன்றிப் பறந்தமலையளவு மிகைத்திருக்கிறதுநாடோடிப் பறவைக்கு
அது நதி நீரை நோக்கும் கணம்காண நேரிடலாம்நாணல்களின் துயரையும்
சிறகடித்து அவற்றைத் தடவிக்கொடுத்துதான் கண்டுவந்தஇரயில்பாதையோர நாணல்களின் துயர்இதைவிட அதிகமெனஅது சொல்லும் ஆறுதல்களைநாணல்களோடு நதியும் கேட்கும்பின் வழமைபோலவேசலசலத்தோடும்
எல்லாத்துயர்களையும்சேகரித்த பறவைதன் துயரிறக்கிவரதொலைவானம் ஏகும்அப்படியே தன் கூடிருந்த மரத்தினையும்கண்டுவரக் கூடும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன