பூனைகள்…..பூனைகள்…….பூனைகள்…..பூனைகள்….23

தாரா கணேசன்
அனாதை இல்லத்துசயாமிப் பூனைக்குக் கண்கள் குருடுஅறை மூலை மென்னிருக்கையில்தன் அரூபக்கனவின் மீசைகள் துடிக்ககைகள் தந்து சந்தித்ததுஅது என்னை முதன் முதலாய்தூக்கியெடுத்து மீசையுரசிக் கொஞ்சித்திரும்பபிரியத்தின் கண் இடுங்கச் சோம்பல்முறித்ததுஅங்குமிங்கும் அலைந்தன கண்ணாடிவிழிகள்தேவதையின் இறக்கைகளுடன்கனவின் அடுக்குகள் ஒளிரமதில் மேல் சயனித்திருந்த அதன்கூவலில் கலைந்தது உறக்கம்மருண்ட பார்வையில் நானும் அதுவும்மயங்கி நின்றவள்துயருற்று நடுங்கும் மென்கரத்தால்கண்கள் சுழற்றி அதற்குப்பொருத்தினேன் அந்தப் பூனை பறவையாகிப் பறந்ததுஅன்றிலிருந்து இரவுகளில்பூனைக்குரலில் பேசும் பறவையொன்றுபின் தொடரவிநோதங்கள் நிறைந்த பூனைகளின்தீவில்அலைகிறேன் கோமேதகக் கண்களுடன்.

“பூனைகள்…..பூனைகள்…….பூனைகள்…..பூனைகள்….23” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன