அக்கரையில் நின்று கொண்டு

கார் நனையாமலிருக்க
கவர் போட்டு விட்டு
திரும்பினேன்

ஒரு கிழவர்
அரைகுறை வேட்டியோடு
சட்டை இல்லாமல்
மழையில் நனைந்தவாறு
பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்

ஓடிப்போய் என் பழைய
சட்டையொன்றை எடுத்து வந்து
அவரை கூப்பிட்டேன்

அதெல்லாம் வேணாம் தம்பி
சோறு கொஞ்சம் போடேன்….
என்று
வயிற்றை தடவினார் கிழவர்…!

“அக்கரையில் நின்று கொண்டு” இல் 3 கருத்துகள் உள்ளன

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன