இடைவெளி

அப்பா….!இரவுதூக்கத்தில்என்இரண்டு கால்களையும்இடுப்பில்சுமந்திருக்கிறீர்கள்நீங்கள்கூர் செய்த பென்சில்கள்இன்னும் என்நினைவில்எழுதிக்கொண்டுஇருக்கின்றனஎன் பரீட்ஷைநேரங்களில்நீங்களல்லவாஎன் விடிகாலை அலாரம்உங்கள்உள்ளங்கை சூட்டிலும்கைவிரல் ஜவ்வுகளிலும்என் இளவயது அச்சங்கள் தொலைந்துபோயிருக்கின்றனநான் சைக்கிள்சவாரி பழக நீங்கள்வேலைக்குவிடுமுறை சாவாரிபிரதி மாதம் முதல் தேதிநீங்கள் வாங்கி வரும்ஜாங்கிரி நெஞ்சில்இன்னமும்ஜீராவாய்ஒழுகிக் கொண்டுஇருக்கிறதுஎங்கு பிசகினோம் ?யார் கண் திருஷ்டி ?இமைக்கும் கண்ணுக்கும்இடையில்கள்ளி வேலிஎப்படி ? என் இடுப்பில்வேட்டி ஏறியதும்உங்கள் பாசம்ஏன் அம்மணமாயிற்று ?நான் கட்டியகாதல் கோட்டைநம் உறவிற்குபிரமிடாய் போனதேன்?ஒரே வீட்டில்இரண்டுமுகாம்களிட்டுவாழ்கிறோம்நம் வீட்டில்வசதிகள்வளர்பிறையாய்சூரியனாய் ஒளிர்ந்தநம் உறவோ…கிரகணமாய் தேய்ந்துகொண்டு நீங்கள்பேசத் தயாராயில்லைஎனக்கோபேசத் திராணியில்லைவருந்த மட்டும்செய்வதால்விரிந்துபோனஉறவுஉதடுகளாய் ஒட்டுமா என்ன ?

“இடைவெளி” இல் ஒரு கருத்து உள்ளது

  1. தொட்டுத் தூக்கித் தோளிலிட்டு வளர்த்த தந்தையிடமிருந்து எந்தப் புள்ளியில் விலகினோம்?

    நல்ல கவிதை. ஒவ்வொரு வார்த்தையாக விருப்பது அயர்ச்சியைத் தருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன