கே.பாலமுருகன் கவிதைகள்

1
முன்பொரு சமயத்தில்
நான் பார்த்து வளர்ந்த
காமம் ஒன்று
சில குட்டி பூதங்களாகவும்
சில கடவுள்களாகவும்
வாழ்ந்து கொண்டிருந்தன

2
சுயம் என்றேன்
இல்லை ஆக்கம் என்றான்
சுயம் என்றேன்
மீண்டும் கண்களை உருட்டி
நாக்கை நீட்டி
‘ஆக்கம்’ என்று
அழுத்திச் சொன்னான்

3
கண்டடைந்த பிறகு
தேடலும்
சோர்வாகிவிடுகிறது.
கண்டடைவதில் ஏன்
இவ்வளவு தேக்கம்?

4
பிட்டத்தையெல்லாம்
அடுக்கி வைத்து

அழகு பார்த்தேன்.
வெறும் குசுவிட்டு
எல்லாவற்றையும்
கெடுத்துக் கொண்டன
பிட்டங்கள்.

5
நீர் கசியும்
பாகங்களையெல்லாம்
சரிப்பார்த்துக் கொண்டேன்.
வழுக்கி விழுந்த
அண்டத்தில் பிறப்பில்
நீரில்லாமல்
ஏது சாத்தியம்.

6
என்னுடன் பழகி
விளையாடி
வளர்ந்த குட்டி பேயொன்று
என்னையறியாமல் துடிக்க
வளர, விரைக்க, நீள,
கசிய, முட்ட
தொடங்கின.

7
நிற்க
சரி நடக்கலாம்
மீண்டும் நிற்க
சரியாமல் நடக்கலாம்.
எல்லாம் ஒழுங்கு.

8
பட்டாம்பூச்சியைப்
பறக்கவிட்டது போதும்
போர்க்களத்திற்கு வாரும்.

9
தற்செயலாக
வயிறு கிழிந்து தொங்கியபோது
தெரிந்துவிட்டது
வயிற்றெரிச்சல்.

“கே.பாலமுருகன் கவிதைகள்” இல் 5 கருத்துகள் உள்ளன

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன