இரண்டு கவிதைகள்

1.கவிதையின்றி அலைதலின் அவஸ்தைகள்கவிதைகளை துறந்துவிட்டுசில காலமாய் திரிந்துகொண்டிருந்தேன்.கற்பனைகள் தூர்ந்து,கனவுகள் தகர்ந்து,பாதாளத்தின் வாய்பிளந்துஎன்னை உள்ளிழுத்துக்கொண்டது.இருள் கவிந்திருந்த அவ்விடத்தில்தொலைந்த பேனாக்களைதேடிக்கொண்டிருந்தனர் எந்திரத்தனம் நிறைந்த என்னையொத்த மனிதர்கள் சிலர். 2. சுயத்தை எரித்தல்மிகுந்த வெம்மையாயிருந்ததுஒரு சொல்.வெம்மையின் கதிர்கள் முதலில்நுழைந்தது செவியில்.செவிக்குள் நுழைந்த அச்சொல்லின்வெட்பம் இதயத்திற்கு இடம்பெயர்ந்திருந்ததுவலியின் நீட்சியில்.இதயம் கருகி கண்ணீராய்வெளியேறுகையில்மறுசொல்லுக்காய் காத்திருக்கஆரம்பித்தது சுயம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன