தஞ்சை ப்ரகாஷ÷ம் நானும் – ஒளிப்படம் 1

தஞ்சாவூர் கவிராயர் தஞ்சை ப்ரகாஷ் குறித்து 16.12.2017 அன்று பேசிய பேச்சின் ஒரு பகுதியை இங்கு அளிக்கிறேன். இது மூன்று பகுதிகளாக உள்ளது.

பத்து கேள்விகள் பத்து பதில்கள்

சில தினங்களுக்கு முன் நான் பங்களூர் சென்றிருந்தேன். நெருங்கிய உறவில் ஒரு திருமணம். பங்களூரில் வசிக்கும் ஸிந்துஜாவைச் சந்தித்து அவரைப் பேட்டி எடுக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தேன். அந்தப் பேட்டி எடுத்த இடம் வேடிக்கையான இடம். அவரை கல்யாணத்திற்கு அழைத்திருந்தேன். கல்யாண சத்திரம் முழுவதும் எதாவது தனியாக அமர்ந்து பேச இடம் கிடைக்குமா என்று பார்த்தோம். ஒரு இடமும் கிடைக்கவில்லை. சரி வேற வழி இல்லை என்று ஸிந்துஜா அவர்களின் காரில் அமர்ந்து பேட்டி எடுத்தேன்.

அந்தப் பேட்டியில் சில இடங்களில் எடிட் செய்ய வேண்டியிருந்ததால் நான் உடனடியாக அதை வெளியிட முடியாமல் தவித்தேன். அமெரிக்காவிலிருந்து வந்த பையனிடம் கொடுத்து இதைச் சரி செய்து தரும்படி கேட்டுக்கொண்டேன். அவன் அதைச் செய்ததோடு அல்லாமல் என்னைத் திரும்பவும் பேசச் செய்து அதையும் ஏற்கனவே எடுத்தப் பேட்டியுடன் சேர்த்துவிட்டான். என்னதான் முயன்றாலும் இதை என்னால் கற்றுக்கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை. இதோ அந்த ஒளிப்பதிவு. இந்தத் தலைப்பில் நான் எடுக்கும் 13வது பேட்டி இது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னுடைய ‘திறந்த புத்தகத்திற்கான’ அறிமுக உரை பகுதி 3

என் ‘திறந்த புத்தகம்’ பற்றிய அறிமுக உரையை 14.11.2017 அன்று ராஜேஷ் சுப்பிரமணியன் என்பவர் பேசி துவக்கி வைத்தார். எல்லோரும் கேட்டிருப்பீர்கள். அதன்பின் வ வே சுப்ரமணியன் அவர்கள் இந்தப் புத்தகத்தைப் பற்றி பேசியதையும் கேட்டிருப்பீர்கள். இன்னும் பலர் பேச உள்ளார்கள். எல்லோரும் 5 நிமிடங்களிலிருந்து 10 நிமிடங்களுக்குள் பேச உள்ளார்கள். .இப்போது ஆர் கே ராமனாதன் என்கிற என் நண்பர். ஆந்திரா வங்கியில் பணிபுரியும் ஆர் கே ஒரு நாடக நடிகர். திறமையாக நடிப்பவர். நாடகங்களை இயக்குபவர். அவர் என் புத்தகத்தைக் குறித்துப் பேசுவதைக் கேட்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

புத்தகத்தின் விலை ரூ.170. புத்தகம் வேண்டுபவர் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண். 9444113205.

என்னுடைய ‘திறந்த புத்தகத்திற்கான’ அறிமுக உரை பகுதி 2

என் ‘திறந்த புத்தகம்’ பற்றிய அறிமுக உரையை 14.11.2017 அன்று ராஜேஷ் சுப்பிரமணியன் என்பவர் பேசியதை எல்லோரும் கேட்டிருப்பீர்கள். இதோ வ வே சுப்ரமணியன் அவர்கள் இந்தப் புத்தகத்தைப் பற்றி பேசுகிறார். இன்னும் பலர் பேச உள்ளார்கள். எல்லோரும் 5 நிமிடங்களிலிருந்து 10 நிமிடங்களுக்குள் பேச உள்ளார்கள். வ வே சுப்ரமணியன் விவேகானந்தா கல்லூரியில் முதல்வராக இருந்து பணி மூப்பு பெற்றவர். சிறந்த பேச்சாளர்.பல புத்தகங்கள் எழுதி உள்ளார். கவிஞர். தமிழ் வளர்த்த சான்றோர் என்ற சிறப்பு நிகழ்ச்சியை விடாமல் வெற்றிகராமாக நடத்துபவர்.

புத்தகத்தின் விலை ரூ.170. புத்தகம் வேண்டுபவர் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண். 9444113205.

லத்தீன் அமெரிக்க இலக்கியமும் நானும் – ஒளிப்படம் 2

இலக்கியமும் நானும் என்ற தலைப்பில் ராஜேஷ் ஆற்றிய உரையின் முதல் பகுதியை நேற்று முகநூல் நண்பர்களுக்கு அளித்தேன். இதோ இரண்டாவது பகுதியை அளிக்கிறேன்.

என்னுடைய சோனி காமிராவில் இவ்வளவு தூரம் படம் பிடிக்கலாமென்று முன்னதாகவே தெரிந்திருந்தால் பலவற்றைப் படம் பிடித்திருப்பேன். இந்தக் காமெரா மூலம் நேரிடையாகவே இந்தக் கூட்ட.த்தை உலகம் முழுவதும் பலரும் ரசிக்க முடியும். ஆனால் ஒவ்வொருவரும் நேரம் ஒதுக்க வேண்டும்.

லத்தீன் அமெரிக்க இலக்கியமும் நானும் – ஒளிப்படம் 1

லத்தீன் அமெரிக்க இலக்கியமும் நானும் என்ற தலைப்பில் ராஜேஷ் சுப்பிரமணியன் நிகழ்த்திய உரையின் முதல் ஒளிப்படத்தை இங்கு அளிக்கிறேன்.

வகுப்பில் பாடம் நடத்துவதுபோல் ராஜேஷ் போர்டில் சில வரைப்படங்கள் எல்லாம் வரைந்து லத்தீன் அமெரிக்க இலக்கியத்தை விளக்கி உள்ளார். அவர் முயற்சிக்கு என் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இதை நீங்கள் கண்டு களிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்னுடைய ‘திறந்த புத்தகத்திற்கான’ அறிமுக உரை

சமீபத்தில் வெளிவந்த என் புத்தகத்தின் பெயர் ‘திறந்த புத்தகம்.’

200 பக்கங்களுக்கு மேல் உள்ள புத்தகம். இது கட்டுரைகளின் தொகுப்பு. எல்லாக் கட்டுரைகளும் அதிகப் பக்க அளவு போகாதவாறு எழுதப்பட்டவை. கிட்டத்தட்ட 50 கட்டுரைகள் கொண்ட புத்தகம். இப் புத்தகத்தின் விலை : Rs..170.

இப் புத்தகத்தை அறிமுகப்படுத்தி என் நண்பர் ராஜேஷ் சுப்பிரமணியன்
பேசி உள்ளார். அதேபோல் இன்னும் சிலரும் பேச உள்ளார்கள்.

புத்தகம் வேண்டுபவர் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண். 9444113205.

பத்து கேள்விகள் பத்து பதில்கள் …..11

தமிழவன் பேட்டி அளிக்கிறார்.

இந்தத் தலைப்பில் இதுவரை 11 படைப்பாளிகளைப் பேட்டி எடுத்துள்ளேன். இன்று 12.11.2017 (ஞாயிறு) தமிழவனின் புத்தக விமர்சனக் கூட்டத்திற்குச் சென்றேன். கூட்ட முடிவில் அவரைப் பேட்டி எடுத்தேன். அவரிடம் நான் கேட்ட கேள்விகள் பின்வருமாறு:

1. முதலில் உங்கள் எழுத்துப் பணி எப்படி ஆரம்பித்தது?
2. பத்திரிகையில் உங்கள் படைப்பு எப்போது எதில் முதலில் வந்தது?
3. இதுவரை எத்தனை நாவல்கள், சிறுகதைகள் எழுதி உள்ளீர்கள்?
4. கோட்பாடு ரீதியாக விமர்சனத்தைத் தமிழில் ஏன் இந்திய அளவில் நீங்கள்தான் தொடங்கினீர்களா?
5. உங்களுக்கு எதாவது பரிசு கிடைத்துள்ளதா?
6. எப்படி நீங்கள் ஒரு தமிழ் பேராசிரியாக இருந்துகொண்டு படைபாளியாகவும் உள்ளீர்கள்?
7. உங்கள் இலக்கிய முயற்சிக்கு உங்கள் குடும்பத்தினர்கள் ஆதரவு தருகிறார்களா?
8. இப்போது உள்ள தமிழ்ச் சூழல் எப்படி உள்ளது?
9. சிறுபத்திரிகை என்ற ஒன்றை இன்னும் தொடர்ந்து கொண்டு வர முடியுமா?
10. இதுவரை நீங்கள் எழுதிய படைப்புகளில் எது சிறந்த படைப்பு?

திருவாசகமும் நானும் – ஒளிப்படம் 3

இது மூன்றாவது உரை. முதல் இரண்டு உரைகளை ரசித்தவர்கள் இதையும் ரசிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இந்த உரையைக் கேட்பவர்கள் திருவசாகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தால், இந்தக் கூட்டம் நடத்துவதற்கான அர்த்தத்தைக் கொடுக்கும் என்று நினைக்கிறேன்.

திருவாசகமும் நானும் – ஒளிப்படம் 2

இதோ இரண்டாவது ஒளிப்படத்தை இப்போது அளிக்கிறேன். கூட்டத்திற்கு வர முடியாதவர்கள் இதைப் பார்த்து ரசிக்கலாம். கூட்டத்திற்கு வந்திருந்தவர்களும் இதை இன்னொரு முறை கேட்டு ரசிக்கலாம்.

முடிந்தால் உங்கள் கருத்துக்களைக் குறிப்பிடவும்.