பார்டர் அனுபவங்கள்..


நான் இப்பொழுது ஒரு
பள்ளத்தாக்கிற்கு முன்புள்ளேன் ..

பனிக்கட்டிகள் என்னை சுற்றி
படர்ந்துள்ளது ..

வாடைக்காற்று இதயத்தை
தொட்டு செல்கிறது ..

பெயர் தெறியா பறவையொன்று
“க்கி க்கி” என சப்தமிட்டுக்கொண்டே
வானில் பறந்து கொண்டுள்ளது ..

கவிதை புத்தகம்
கையில் வைத்துள்ளேன்

கம்பனி கமாண்டரின்
விசில் சுப்தம் கேட்கிறது ..

சாய்த்து வைத்திரிந்த
இன்சாஸ் துப்பாக்கியை
எடுத்துகொண்டேன் ..

இப்போது

கடமையையும்
கவிதையையும்
சுமந்துகொண்டு செல்கிறேன் ..

மரம்வளர்ப்போம்….

அரசன் போல் ஒக்காந்திருக்கும்
ஊர் தலைவர்களே -எம்
பேச்சையும் கொஞ்சம் கேளுங்கலே ….
கல்லுப்பட்டி கர வேட்டி
கந்தசாமி எம் பேரு கார வீடு எனக்கில்ல
காசுபணமும் அதிகமில்ல….
அரச மரம் சுத்தி வந்து வருஷம் பல
போனபின்னே ஒத்தப்புள்ள பெத்தெடுத்தேன்
அவன ஒசத்திகாட்ட ஆச பட்டேன் ,,,
கஷ்டப்பட்டு படிக்கவச்சேன் – எம் புள்ள
கலெக்டராக …
உழுது உழுது உரிகிபோனேன் – எம் புள்ள
கமிஷனராக …
கஷ்டப்பட்டு படிச்சப்பய கலெக்டரும் ஆகிபுட்டன் …
காசுபணம் கூடுனதும் என்னைய
வீதில விட்டுபுட்டான் ..

எல்லோருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன் மனுசபயல
நம்புறதுக்கு மரத்த நம்பலாமுன்னு ….