சில கவிதைகள்

தூக்கி எறியும்
பழைய செருப்புகளும்
புதிதில்
ஆசையாக வாங்கியதுதான்

*
வரும்போது
இனிதே வரவேற்று
போகும்போது
இனிதே வழியனுப்பும்
இரு பக்கங்கள்
வாய்க்கிறது..
ஊர் எல்லை
பெயர்ப்பலகைக்கே.
*
ஊருக்குப்போயிருக்கும்
மகனின்
மழலைச்சிரிப்பை
எண்ணுந்தோறும்
தனிமையில் விரக்தியாய்
சிரித்துக்கொள்கிறான்

அதற்கும் பெயர்
சிரிப்புத்தானா?
*
கைகளேந்திப் பெற்றுக்கொண்டு
திரும்பி நடக்கும்

அந்தக் கண்களை
உற்று நோக்குங்கள்
திரளும் கண்ணீர்

மூன்று கவிதைகள்


நகரம் தொலைத்த வானம்

வானத்து நட்சத்திரங்களை
பகலில்
சூரியன் விழுங்கிக்கொள்கிறான்.

சாலை விளக்குகளும்
குண்டு குழிகளும்
சக ஊர்திகளும்
இல்லத்திரைக்
காட்சிகளும்
மேல் வீட்டுக்காரனின்
கட்டாந்தரையும்
இரவில்
மறைத்துக்கொள்கின்றன.

இறுதி ஊர்வலம்…

இதோ புறப்பட்டுவிட்டது
இறுதி ஊர்வலம்…

மகள் கதறி
தரையில் அழுது புரள…

மனைவி கடைசிக் கடைசியாய்
முகம் பார்த்துத் தவிக்க…

உறவினர்களல்லாத சஹ்ருதயர்களும்
கண்களில் கரைமீறாமல் நீர் துளிர்க்க.

வாரியிறைக்கப்படும் சில்லறைக் காசுகளை பொறுக்குபவன்
குறுக்கிடும் கேபிள்களைத் தள்ளி
வழியேற்படுத்தித் தருகிறான்.

தெருவோரப் பிச்சைக்காரி ஏனோ
தன்குழந்தையின் முகத்தின் முன் துண்டுவிரித்து
காட்சியை மறைக்கிறாள்.

இணையாக வந்த யாரோ இரு இளம்பெண்கள்
மூக்கைப் பொத்திக்கொண்டு ஒதுங்கி நிற்கின்றனர்.

இரண்டு தெரு கடந்ததும்
யாரோவாகிப்போன மனிதர்கள்
சலனமற்று வேடிக்கைப் பார்க்கின்றனர்.

தெருவெங்கும் இறைக்கப்பட்ட
சிவப்பு ரோஜாக்களைப் பார்க்கையில்
ஊர்வலம் போய்க்கொண்டிருந்த ஒருவன் நினைவில்
காதலி கூந்தலின் ஒற்றை ரோஜா
நினைவுக்குவர
அவசரமாய் நினைவை அழிக்கிறான்.

பிணத்தின் காலடியில் கட்டப்பட்ட
மிரண்ட கண்களுடனானக் கோழியின் கத்தல்
யாருக்கும் கேட்காமல் போக
கோழிக்கும் இதுவே இறுதி ஊர்வலம்.

3 சிறுமிகள்

பல வருடங்கள் கழித்துப்
பார்க்க நேர்ந்த என்
பள்ளித் தோழியின்
இடுப்பில் ஒன்றும்
கைப்பிடித்து ஒன்றுமாய்
இரு பெண்கள்.

என் கண்களுக்குத் தெரிகிற
அக்குழந்தைகளின் அம்மாவுக்கு
மூத்த மகளைவிட
ஓரிரண்டு வயதே
அதிகமிருக்கும்.

36 W

36 W- வில்
எனது இருக் கை.
சன்னலுக்கு வெளியே
மாறும்
நிலக்காட்சிகள்..
மனிதர்கள்,பொழுதுகள்..

யார் சொல்வது?
ஒரே இடத்தில்
அமர்ந்திருக்கிறேனென்று

பால்ய வீடு – மழலை உலகம்

பால்ய வீடு

பாடப்புத்தகங்கள் கலைந்து கிடந்த மாடம் அன்றென் கைகளுக்கு எட்டியது முக்காலியின் உயரத்தினால்தான்… சுவர் மேல் கால்வைத்தேறிதண்ணீர் மோந்த பெரிய தொட்டியும்இன்றேனோ சின்னதாய் தெரிகிறது… அதே பழைய படிக்கட்டுகளும் தெருக்களும் கூடஅளவில் சிறுத்துப் போயிருக்கிறது…அன்றென் கைகளுக்கு எட்டாமல் போன பலவும்
இன்றென் கைகளுக்கு எட்டினாலும்
கை நழுவிப் போனதாயிருக்கிறது
என் பால்யத்தின் தலைகோதிய வீடு…கோலப்பொடி டப்பா வைத்திருந்த
மாடமிருந்த சுவரை இடித்து
கருமான் பட்டறை போட்டிருக்கிறீர்கள்பற்றி எரிகிறதுஉலைக் கூடமும்…!
உலைக் கூடமும்…!

மழலை உலகம்

மழலைக்குரலில்நட்பு வளர்க்கும்குழந்தைகளுக்குதேவையற்றதாகவும்தெரியாததாகவும் இருக்கிறது…தத்தம் தாய்மொழிவெவ்வேறானது என்பது…
२.
கிழமைகள் பற்றியெல்லாம் அதற்குள் அவனுக்குதெரிந்திருக்க வாய்ப்பில்லைஎன்றே நம்பினாலும்ஒரு ஞாயிற்றுக்கிழமையில்சும்மா கேட்டு வைத்தேன்’இன்னிக்கி என்ன கிழம?”சனிக்கிழம கிழம’