இரண்டு கவிதைகள்

மொன்னை மனசு
முற்றத்தில்மழைநீர் கொஞ்சம்மிச்சமிருந்தது
கத்திக் கப்பல்செய்து தாவென்றதுகுழந்தை
கத்தி எதற்கென்றேன்
முட்டும் மீனைவெட்டுவதற்கு என்றதுவிழிகள் விரிய்முனை கொஞ்சம்மழுங்கலாகச்செய்து கொடுத்து விட்டேன்.

இறகின் பிறகும்..

பாலொத்த வெள்ளையும்பரிச்சயமானதொரு மென்மையும்அந்த இறகில் இருந்தது
இறந்திருக்க முடியாதென்றபெருநம்பிக்கையோடு தேடியலைந்தேன்அப்பறவையை
எதிர்ப்பட்ட மின்கம்பங்களில்எருமையின் முதுகிலெனஎங்கேயுமில்லை
அம்மாதிரியொரு பறவைகவலை பெருக்கியும்கையிலிருந்த இறகு கருக்கியும்கவிழ்ந்து கொண்டிருந்த இரவில்வெண்பறவை தென்படாவானம் வழிபறந்து மறைந்ததொரு கருங்காக்கைஎஞ்சியிருந்த அவ்விறகின்நிறமொத்த எச்சமிட்டு