அறிவிப்பு
அன்று காலை நாவலாசிரியையும், நாவலைப் பிரசுரம் செய்த பதிப்பாளரையும் கௌரவம் செய்கிறார்கள்.
அந்த விழாவிற்கு பதிப்பாளர் என்ற பொறுப்பில் நானும் செல்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
1983ஆம் ஆண்டிலிருந்து திருமதி ரங்கம்மாள் பரிசு நாவல்களுக்குப் பரிசு கொடுத்து வருகிறார்கள். 1985ல் பாலங்கள் என்ற சிவசங்கரி நாவலுக்குப் பிறகு, இ ஜோ ஜெயசாந்திக்கு 2015ல் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். நாவலுக்குப் பரிசாக 17 முறைகள் கொடுக்கப்பட்ட விருதில், இரண்டே இரண்டு பெண் எழுத்தாளர்கள்தான் இதுவரை பரிசு பெற்றுள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சார்வாகன் இறந்துதான் விட்டார்…………
எழுத்தாளர் சார்வாகன் பற்றி அசோகமித்திரன் எழுதியது……
சின்ன தப்புகள்….
பேச்சாளராக வந்திருந்த அசோகமித்திரனுக்கும், என் பொருட்டு பேச வந்திருந்த ப்ரியாராஜ், க்ருஷாங்கினி, லதா ராமகிருஷ்ணன், உமா பாலு அவர்களுக்கும், குவியம்
சார்பில் ஏற்பாடு செய்த கிருபானந்தன், சுந்தர்ராஜனுக்கும் என் நன்றி. நன்றி. நன்றி.
வெள்ளம் பற்றிய ஐந்து கவிதைகள்
அழகியசிங்கர்
கவிதை 3
வெள்ளம் வடிந்த அடுத்தநாள்
காலை
பால் எங்கே கிடைக்கிறது
என்று அலைந்து கொண்டிருந்தேன்
எங்கள் தெரு வீரமணி
மாடுகளை வைத்து வியாபாரம்
செய்வான்
அவனிடம் உள்ள மாடுகளை
அடுத்தத் தெருவிற்கு மேட்டுப்பகுதிக்கு
ஓட்டிச் சென்று விட்டான்
மழைத் தூறலில்
அவனும் மாடும் நனைந்தபடி
பால் கறந்து கொண்டிருந்தான்
அவனைப் பார்த்து சிரித்தேன்
üதருகிறேன் அரை லிட்டர்
யார் கண்ணிலும் படாதீர்கள்..ý
என்றான்.
கவிதை 4
சொல்கிறேன் கேளுங்கள்
இனிமேல் மழை என்றால்
வெள்ளம் வருமென்று ஞாபகம்
வந்து
பதட்டமடைய நேர்கிறது
என்ன செய்வது?
கவிதை 5
தெருவில் வெள்ளம் புகுந்த
காலத்தில்
மொட்டை மாடியில் போய்
தஞ்சம் அடைந்தோம்
சுற்று முற்றும் பார்த்தோம்
வானத்தைப் பார்த்து
கையெடுத்துக் கும்பிட்டோம்
பின்
எதிர் வீடு பக்கத்து வீடென்று
எல்லோர் வீட்டு
மொட்டை மாடிகளையும்
பார்த்தோம்
இவ்வளவு பெண்களா
எங்கள் தெருவில்…..
வெள்ளம் பற்றிய ஐந்து கவிதைகள்
கவிதை 2
ராமன் வீடு தனியாக இருக்கும்
கீழே மேலே என்று
பள்ளத்தில் இருக்கும்
எப்பவோ கட்டிய வீடு
சாதாரண மழைக்கே வந்து விடும்
உள்ளே மழை நீர்
இது பெரும் மழை
தெருவில் உள்ள சாக்கடை
நீரெல்லாம் உள்ளே வந்து
ராமன் அதிர்ச்சி அடைந்து
தன் வீட்டு மாடியில் குடியிருக்கும்
வீட்டில் தஞ்சம் அடைந்தார் மனைவியுடன்
மறு நாள் மாடியில் இருந்து
தெருவைப் பார்த்தார் கவலையுடன்
அவர் முகமே சரியில்லை
அடுத்தநாளுக்கு அடுத்தநாள்
தெருவில் நடந்தபோது
என்ன ஆயிற்று என்று கேட்டேன்
சீலிங் பேன் வரை சாக்கடை நீர்
நாற்றம்
வீட்டுப் பத்திரம் எல்லாம் போய்விட்டது
இன்னும் என்னன்ன துயரமெல்லாம்
சுமக்கப் போகிறேனோ என்று
உடைந்த குரலில் கூறி
மேலும் பேசப்பிடிக்காமல்
நகர்ந்து விட்டார்
வெள்ளம் பற்றிய ஐந்து கவிதைகள்
கவிதை 1
கண் முன்னே நடந்தது
நீரின் ஓட்டம்
வகை தெரியாமல் மாட்டிக்கொண்டோம்
கீழ்த் தரை வளாகத்தில்
வைத்திருந்த புத்தகங்களின்
பெருமையை யார் அறிவார்
வந்த நீர் லபக்கென்று
வாயில் இட்டுக்கொண்டது.
திரும்பவும் நீர் அரக்கன்
முதல் மாடி வளாகத்தில் வீற்றிருக்கும்
எங்களை மிரட்டப் போகிறதோ
என்று பயந்தவண்ணம் இருந்தோம்
ஒவ்வொரு படிக்கட்டையும்
தொட்டு தொட்டு
வந்து கொண்டிருந்த கரும் நிற
நீர் அரக்கனை
ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தோம்
அன்று இரவு தூக்கம் சிறிதுமில்லை
ஆனால் தர்மத்திற்குக் கட்டுப்பட்ட
நீர் அரக்கன் எங்களை விட்டுவிட்டான்
பயபபடாதே
என்று ஆறுதல் படுத்தபடியே
கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து
பின்னோக்கிப் போய்விட்டான்
ஆனால்
எங்கள் மனதில் புகுந்த அச்சம்
அவ்வளவு சுலபத்தில்
எங்களை விட்டு அகலவில்லை
09.12.2015
புதன்
8.20 காலை
தனித்துவங்கள்
ராமலக்ஷ்மி