மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 31
ஜெ. பிரான்சிஸ் கிருபா
நீரென்று தெரியும் மீனுக்கு
மீனென்று தெரியாது நீருக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்
குரலென்று தெரியும் குயிலுக்கு
குயிலென்று தெரியாது குரலுக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்
புயலென்று தெரியும் கடலுக்கு
கடலென்று தெரியாது புயலுக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்
உயிரென்று தெரியும் உடலுக்கு
உடலென்று தெரியாது உயிருக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்
கதிரென்று தெரியும் பகலுக்கு
பகலென்று தெரியாது கதிருக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்
நிலவென்று தெரியும் இரவுக்கு
இரவென்று தெரியாது நிலவுக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்
நீயென்று தெரியும் எனக்கு
நானென்று தெரியாது உனக்கு
ஏனென்று கேட்காதே என்னிடம்!
நன்றி : சம்மனசுக்காடு – கவிதைகள் – ஜெ பிரான்சிஸ் கிருபா – பக்கம் : 111 – விலை ரூ.95 – சந்தியா பதிப்பகம், புதிய எண் : 77, 53வது தெரு,9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83 – தொலைபேசி : 044 – 24896979
நவீன விருட்சம் 100வது இதழ் குறித்து இன்னும் சில தகவல்கள்
விருட்சம் 100வது இதழ் வந்து விட்டது
ஐராவதமும் புத்தக விமர்சனமும்…
மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 30
பாரதிதாசன்
சிட்டுக்குருவிச் சிறுபெண்ணே,
சித்தம் போலச் செல்பவளே,
கொட்டிக் கிடக்கும் தானியமும்
கொல்லைப் புழுவும் திண்பவளே,
எட்டிப் பறந்தாய் மண்முழுதும்
ஏறிப் பறந்தாய் வானமெல்லாம்
இஷ்டப் படிநீ செய்கையிலே
ஏன்? என்பாரைச் üசீý என்பாய்.
உன்னைக் கேட்பேன் ஒருசேதி.
உரிமைத் தெய்வத்தின் மகளே,
தின்னத் தீனி தந்திடுவேன்.
தெரிவிக்காமல் ஓடாதே!
மன்னன் அடிமைப்பணி யில்லான்.
வாய்மைச் சிறகால் உலகேழும்.
மண்ணும் காந்திப் பெருமானார்
மகிழும் தோழி நீ தானா?
நன்றி : பாரதிதாசன் கவிதைகள் – மணிவாசகர் பதிப்பகம், 55 லிங்கித்தெரு, சென்னை 600 001 – இந்தப் பதிப்பில் புதிய கவிதைகள் இடம் பெற்றுள்ளன – விலை ரு.17.50 (பிளாஸ்டிக் உறையுடன்)
தேடல் என்கிற கதை..
மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 29
திரிசடை
என் நேற்றையக் கனவில்
அந்தப் பாலம் தகர்ந்தது.
வெகுநாள் வருந்தி,
வியர்வை சிந்தி,
கல்லுடைத்து,
வெயிலில் வெந்து,
பகிர்ந்துகொள்ள எவருமற்ற நிலையில்
தனியே ஏங்கி அழுது
சிறுகச் சிறுக நான் கட்டி முடித்திருந்த
அந்தப் பாலம்
நேற்று என் கனவில் தகர்ந்தது
மீண்டும் அதைக்கட்ட
எனக்குக் காலம் இல்லை.
காலம் இல்லையென்றால் கனவேது?
கனவு இல்லையென்றால் ஆக்கமேது?
என் கனவை உணர்ந்த ஒரு இதயம்
எனக்காக அதைக் கட்டும்
தன் கனவில்.
PUBLISHED BY :
THAMIZH SANGAM OF
METROPOLITAN WASHINGTON AND bALTIMORE INC.
C/O DR N GOPALSAMY, 11205 GREENWATCH WAY,
NORTH POTOMAC MD20878, U S A
இன்று ஞானக்கூத்தன் பிறந்தநாள்…..
மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 28
எதன் கைதி
சமயவேல்
அடிக்கடி வெளியே
எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
இந்த ஜன்னல்
அல்லது நிலையோரம்
சமையலறை ஜன்னல்
பின்வாசல்
அல்லது ஓர ஜன்னல்
மாற்றி மாற்றி
எட்டி எட்டிப் பார்க்கிறேன்
அலுக்காமல் தெருவைப் பார்த்தபடியே
நிற்கிறேன் அல்லது
மொட்டை மாடி ஏறி
எல்லாத் திசைகளையும் பார்த்து
நிற்கிறேன்
எவ்வளவு பார்த்தாலும்
வீட்டுக்குள் நுழைந்ததும்
திரும்பவும்
எட்டி எட்டி
நன்றி : அகாலம் – கவிதைகள் – சமயவேல் – பக்கம் : 52 – வெளிவந்த ஆண்டு : மே 1995 – விலை ரூ.12 – சவுத் ஏசியன் புக்ஸ் 6/1 தாயார் சாகிப் 2ஆவது சந்து, சென்னை 600 002