அழைப்பிதழைப் பார்க்கவும்

 

 

தொடர்ந்து விருட்சம் கூட்டம் மூன்றாவது சனிக்கிழமை ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறேன். கூட்டத்திற்கு வந்திருந்து ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு நன்றி. கூட்டத்தின் முக்கிய நோக்கம். ஒருவரை ஒருவர் சந்திக்கிறோம். கருத்து பரிமாற்றம் செய்து கொள்கிறோம் என்பதைத் தவிர ஒன்றுமில்லை. இதோ அழைப்பிதழ்.

 

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 30

திருவாசகமும் நானும் 

சிறப்புரை :  சந்தியா நட்ராஜன் 

 

இடம் :      ஸ்ரீராம் குரூப் அலுவலகம்     மூகாம்பிகை வளாகம்     (4 லேடீஸ் தேசிகர் தெரு)     ஆறாவது தளம்     மயிலாப்பூர்     சென்னை 600 004(சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே)      

தேதி 21.10.2017 (சனிக்கிழமை) நேரம் மாலை  6 மணிக்கு

பேசுவோர் குறிப்பு :  தமிழ் அறிஞர், மொழி பெயர்ப்பாளர், பதிப்பாளர் 

அனைவரும் வருக,

அன்புடன்

அழகியசிங்கர்

9444113205

விருட்சம் இலக்கியச் சந்திப்பின 29வது கூட்டம்….

 

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 29வது கூட்டம், வருகிற 16.09.2017 அன்று சனிக்கிழமை நடைபெறுகிறது. செந்தூரம் ஜெகதீஷ் அவர்கள் ‘ஓஷோவும் நானும்’ என்ற தலைப்பில் உரையாட உள்ளார். தமிழில் ஓஷோவை செந்தூரம் ஜெகதீஷ் அவர்கள்தான் அறிமுகப்படுத்தினார். எப்படி அவருக்கு ஓஷோ மீது ஈடுபாடு வந்தது போன்ற விபரங்களை சனிக்கிழமை அன்று உரை ஆற்றுவார். யாவரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அதற்கான அழைப்பிதழை இணைத்துள்ளேன். அழைப்பிதழைத் தயாரித்த நண்பர் கிருபானந்தனுக்கு என் நன்றி.

 

 

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 28

ஏ கே செட்டியாரும் நானும்

 

சிறப்புரை : கடற்கரய் மந்தவிலாச அங்கதம்

 

இடம் : ஸ்ரீராம் குரூப் அலுவலகம்
மூகாம்பிகை வளாகம்
4 லேடீஸ் தேசிகர் தெரு
ஆறாவது தளம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
(சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே)

தேதி 19.08.2017 (சனிக்கிழமை)

நேரம் மாலை 6 மணிக்கு

பேசுவோர் குறிப்பு : கவிஞர், பத்திரிகையாளர், தொகுப்பாளர்

அனைவரும் வருக,

அன்புடன்
அழகியசிங்கர்
9444113205

விருட்சம்  இலக்கியச் சந்திப்பின் 27வது கூட்டம்

ஒவ்வொரு மாதமும் மூன்றாவது சனிக்கிழமை கூட்டம் நடத்துவதாக தீர்மானித்துள்ளேன்.  முதல் கூட்டத்தை திருப்பூர் கிருஷ்ணன் தி ஜானகிராமனும் நானும் என்ற தலைப்பில் பேசி துவக்கி வைத்தார்.  இரண்டாவது கூட்டமாக நாளை பெருந்தேவி அவர்கள் புதுமைப்பித்தன் கதைகளும் நானும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.  இப்படியாக ஒவ்வொரு எழுத்தாளுமைகளையும் அறிமுகப்படுத்துவது விருட்சம் இலக்கியச் சந்திப்பின் முக்கிய நோக்கம்.  நாளை நடக்கும் கூட்டத்திற்கு புதுமைப்பித்தனின் முழுத்தொகுப்பு சந்தியா பதிப்பு வெளியிடு விற்பனைக்குக் கிடைக்க முயற்சி செய்கிறேன்.  கூட்டத்திற்கு எல்லோரும் கலந்துகொண்டு சிறப்பு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நாளை நடைபெறப் போகிற கூட்டம்

சாகித்திய அகாதெமி நாளை சிறுகதை மேதை அசோகமித்திரனுக்குப் புகழஞ்சலி என்ற கூட்டம் ஒன்றை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடத்துகிறது.

 இக் கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர் சா கந்தசாமி. பங்கேற்போர் இராம. குருநாதன், அழகியசிங்கர், அம்ஷன்குமார். அம்ஷன்குமார் இயக்கிய அசோகமித்திரனின் ஆவணப்படத்தைத் திரையிட உள்ளார்கள். இக்கூட்டம் சாகிகத்திய அகாதெமி சென்னை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 2ஆம் தளம், 443 குணாவளாகம், அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18. அனைவரும் வருக.

தில்லி செல்கிறேன்…

இன்று மாலை தில்லி செல்கிறேன். முதல் முறை 1980 செப்டம்பர் மாதம். அப்போது குர்மானி என்ற ஹிந்திப் படம் பிரபலமாக இருந்தது. இது நாலாவது முறை என்று நினைக்கிறேன். அடுத்த வெள்ளிக்கிழமை கிளம்பி வந்து விடுவேன். அதுவரை முக நூல் நண்பர்கள் தொல்லை விட்டது என்று நிம்மதியாக இருப்பாரகள் என்று நினைக்கிறேன். நான் கையில் புத்தகங்கள் எதுவும் எடுத்துப் போகப்போவதில்லை. கின்டல் எடுத்துப் போகிறேன். அதில் ஏகப்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால் படிக்க முடியுமா என்பது தெரியவில்லை. நண்பர்கள் யாராவது தில்லியில் எங்கே செல்லலாம் என்று சொல்ல முடியுமா? டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில் என்ற சிறுகதைப் புத்தகம் எழுதிய கணேஷ் வெங்கட்ராமன் டில்லியில்தான் உள்ளார். அவர் அறிவுரை கூறுவார் என்று நினைக்கிறேன். அவர் புத்தகத்தைப் படிப்பதற்குக் கையில் வைத்துள்ளேன். ஒரு வாரத்திற்குள் முகநூலில் உள்ளே நுழைந்து எதாவது எழுத முடியுமா என்று பார்க்கிறேன். முடியாது என்றே தோன்றுகிறது.