கொரோனாவின் கொடூர முகம்..

 துளி 196

அழகியசிங்கர்

கொரானாவால் ஏற்படும் மரணத்தை விட, அது குறித்து ஏற்படும் அச்ச உணர்வு காரணமாகப் பலர் இறந்து விடுகிறார்கள்.


சில தினங்களுக்கு முன் கி.ரா இரங்கல் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி திருப்பூர் கிருஷ்ணனை அழைத்தேன். அப்போதுதான் ஒரு அதிர்ச்சியான தகவலைத் தெரியப்படுத்தினார்.

அவர் வீட்டில் மூவருக்கும் கொரானா என்று. அவர் புதல்வனை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகக் கூறினார். அவரும் அவர் மனைவியும் வீட்டிலேயே வைத்தியம் பார்த்துக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.


யாரிடமும் சொல்லாதீர்கள் என்று அப்போது கூறியதால் நான் யாரிடமும் இதைப் பற்றி தெரிவிக்கவில்லை.


அவருடைய பையன் இளவயது என்பதால் அவருக்கு ஒன்றும் ஆகாது என்று நினைத்தேன்.
இன்று அவர் புதல்வன் இறந்து விட்டானென்ற செய்தியை என்னால் நம்பமுடியவில்லை. அதிர்ச்சி. அவர் எப்படித் தாங்கிக்கொள்வார்? குறிப்பாகத் திருப்பூர் கிருஷ்ணனின் மனைவி எப்படித் தாங்கிக் கொள்வார்?


உண்மையில் கொரானா என்ற கொடிய நோயைவிட, அதன் பயம் ஒருவரை கொன்று விடும் என்று தோன்றுகிறது.


அதனால் தயவு செய்து கொரானா செய்திகளைப் படிக்காதீர்கள், தினசரிகளைப் பார்க்காதீர்கள், குறிப்பாக முகநூலைத் தவறுங்கள்.

ஒரு கதை ஒரு கருத்து -லா.ச.ரா உத்தராயணம்

அழகியசிங்கர்

லா ச ராவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் என்ற தொகுப்பில் 23 கதைகளில் உத்தராயணம் ஒரு கதை. நினைவோடை உத்தியில் எழுதப்பட்ட கதை. தன்னைப் பற்றிச் சொல்கிற மாதிரி கதை. அப்படிச் சொல்லிக்கொண்டே போகும்போது எதை எதைச் சொல்லலாம் எதை எதைச் சொல்லக் கூடாது என்பது இக் கதையில் ஒழுங்காகக் கொண்டு வருகிறார்.

எல்லாவற்றுக்கும் மொட்டை மாடிதான். அதிகம் குடி இல்லாத ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் வீடு கட்டி வந்திருக்கிறார்.

பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். இதெல்லாம் கதையில் நேரிடையாக சொல்லப்படவில்லை.

கதையை இப்படி ஆரம்பிக்கிறார். ‘அந்தா கொண்டைக்கு எல்லாருக்கும் கொடுப்பனை இருக்காது. நெற்றியிலிருந்து பின்னுக்கு இழுத்து, அழுந்த வாரி இறுகப் பிணைத்து எழுப்பி கொண்டையின் கோபுரம் நெஞ்சை முட்டுகிறது.’

வயதானவர் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு கனவு காண்கிறார். இவர் கனவு காண்பதற்குத்தான் மொட்டை மாடிக்கே போகிறார்.

அவர் வீட்டில் உள்ளிருந்து மொட்டை மாடிக்கு ஏணி மூலமாகத்தான் போக முடியும். அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறார் தினமும்.

தூக்கக் கலகத்திலிருந்தவரை அவள் பெண் சாந்தா எழுப்புகிறாள். சாந்தாவைப் பற்றி விவரிக்கும்போது பரந்த முகத்தில் பேரழகு என்று விவரிக்கிறார்.

அவர் புதல்வன் சேகர் வெட்டி வீழ்த்திய முள்ளை வென்னீரடுப்புக்காக, ஏணியடியில் சுவரோரம் சேர்த்து வைத்திருக்கிறான்

இங்கே ஒரு வர்ணனை வருகிறது. கிணற்றடியில் வாழை இலைகள் நர்த்தனமாடி வரவேற்கின்றன. கவித்துவமான வரிகள். லாசரா எப்போதும் தன் கதையில் கவித்துவமான வரிகளைக் கொண்டு வந்து விடுவார்.

க.நா.சு எப்போதும் கவிதையை உரைநடையாக மாற்றி எழுதிவிடுவார். ஆனால் லாசாராவோ உரைநடையில் கவித்துவ நடையைக் கொண்டு வருகிறார். அதுதான் அவருடைய சிறப்பு.

நடுப்பிள்ளையும்ல அடுத்தவனும் பல் தேய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘இந்த வீட்டில் ஒரு பேஸ்ட்டா, மண்ணா, ஒண்ணு உண்டா? எப்பவும் மாசச் கடைசிதானா?’

என்று கேட்கிறார்கள்.

‘ஏன் மண்ணு இருக்கே’ என்று பெரியவர் நக்கலடிக்கிறார்.

டாமி என்ற நாய் வாலை ஆட்டிக்கொண்டு வருகிறது. இங்கே எழுதுகிறார்: ஆனால் கண்களில் மட்டும் உள்ளொளியின் அழகு மங்கவில்லை.

எட்டி உதைக்கிறார். உதையை வாங்கிக்கொண்டு குரைக்கக்கூட இல்லை. தென்னை மரத்தடியில், தான் ஏற்கனவே பறித்து வைத்திருக்கும் பள்ளத்துக்குப் போய்ப் படுத்துக் கொள்கிறது.

நடுப்பையன் பெரியவரைக் கேட்கிறான்.

‘என்ன அப்பா வாரம் ஒருநாள் மௌன விரதம் என்று வாயை அடைச்சுட்டு கண்ணால் பேசிக்கொண்டிருக்கிறாய், பேசுகிறாயா சுட்டெரிக்கிறாய். ஒரு கதவை மூடிவிட்டு இன்னொரு கதவைத் திறந்து விடுகிறாய். இப்படிக் கண்ணால் கரிப்பதற்குப் பதிலாக வாயைத் திறந்து எங்களைத் திட்டிவிடலாம் என்கிறான்.’

‘நான் பதில் பேசவில்லை. பேசும் நியாயம் எப்பவோ தாண்டியாச்சு’ என்கிறார் பெரியவர்.

இந்தக் கதையில் எல்லோரும் பெரியவர் செய்கையை அங்கீகரிப்பதில்லை. அவர் சொல் கேட்பதில்லை. இதை விவரித்துக்கொண்டே போகிறார்.

நட்ட பயிர் அம்புகளாய்க் காய்கிறது. சரப்படுக்கையில் படுத்து. உன் உத்தராயணத்துக்குக் காத்திரு என்ற ஒரு வரி வருகிறது நடுவில்.

அவர் இருப்பிடத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். எட்ட எட்டத்தான் வீடுகள். மனைகளை வாங்கிப் போட்டவர்களுக்கு வீடு கட்ட இன்னும் வசதி கிட்டவில்லை. உச்சிவெய்யிலில் பூமி பாளம்பாளமாக வெடித்திருக்கிறது.

இங்கே ஒரு வரி அற்புதமாக எழுதியிருக்கிறார் லா.ச.ரா. தூரத் தூரக் கட்டடங்கள் கானலில் நடுங்குகின்றன.

இங்கு மனைவி ஹரிணி பற்றி விவரிக்கிறாள்

‘மண்டை இடிக்கிறது, பெருமாள் எப்பவோ வந்து தயாராக வைத்திருந்த ஏனத்தில் பாலை ஊற்றி விட்டுப் போய் விட்டான். ஹரிணி தயவு பண்ணனும். ஆனால் அவள் அயர்ந்து தூங்குகிறாள்.’

அவருக்கும் ஹரிணிக்கும் நடக்கும் பேச்சு வார்த்தையில் அவள் கொல்கிறாள்.

‘அத்வானம் பிடிச்ச இந்த இடத்தில் வீட்டை வாங்கிப் போட்டுடடு, ஒரு நாளை பார்த்தாப்போல் நான் வயித்தில் நெருப்பைக் கட்டிக்கொண்டு …ஐயையோ என்னால் இனிமேல் முடியாது. உங்கள் வீட்டை நீங்கள் காவல் காத்துண்டு கிடங்கோ..எங்களை எங்காணும் மயிலாப்பூரில் குடி வெச்சுடுங்க.’.என்கிறாள்.

அடுத்தது மனைவி முழங்குவது. ‘மொட்டை மாடியில் காத்து வாங்கலாம்னா படி கிடையாது. என்ன வீட்டில் வாழறோமோ?’

‘மாடிப்படி கட்டுவதற்குள், பணம் போண்டி. அப்படியும் விடவில்லை. ஏணி வைத்து ஏறுகிறோம.’

ஹரிணிக்கு ஏற முடியாத எரிச்சல் என்கிறார் பெரியவர்.

இப்போது எல்லோரும் அவரை விட்டுவிட்டு வெளியில் போய்விடுகிறார்கள். அவர்கள் புதல்வர்கள் மாம்பலத்திஙூருகும் பாட்டி வீட்டிற்குப் போய் விடுகிறார்கள்.

மனைவியும், பெண்ணும் கட்டை தொட்டி நாடார் வீட்டிற்கு டிவி பார்ப்பதற்குப் போய் விடுகிறார்கள்.

இந்த இடத்தில் சொல்கிறார் : நான் இப்போது உணர்வது என் தனிமையையா வெறுமையையா..

எல்லோரும் போனபின் இவருடைய பொழுது போக்கு மொட்டை மாடிதான்.

மாடிக்குப் போய் எதையெதையோ யோசித்துக் கொண்டிருக்கிறார்.

அவர் அப்படி என்ன யோசிக்கிறார் என்பதற்கு உதாரணமாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.

‘சரி, என்ன செய்யப் போகிறாய். அத்தனை நட்சத்திரங்களையும் வாரிச்கூடையில் அள்ளிப் போட்டுக்கொண்டு, பீச்சில் சுண்டலா விற்கப்போகிறாயா. அல்லது நட்சத்திரப் பூக்கள் தொடுக்கப் போகிறாயா.’

இப்படியெல்லாம் மொட்டை மாடியில் யோசிக்கிறார். பின் கீழே இறங்கி வருகிறார்.

‘இசைகேடாய், தூக்கக் கலக்கத்தில் நான்தான் ஒரு பக்கமாய்ச் சாய்ந்து விட்டேனோ?’

அப்படியே சாய்ந்து முள் படுக்கையில் சுமார் இருபது அடி உயரத்திலிருந்து விழுந்து விடுகிறார்.

‘சாந்தாவும், ஹரிணியும் வரும்வரை இங்கேதானா?’ என்று கேட்கிறார்.

அவருடைய நாய் ஓடிவந்து அவர் முகத்தை ஓரிரு தடவை முகர்ந்து பார்த்த பிறகு தலைமாட்டில் உட்கார்ந்து, மூக்கை வானத்துக்கு நீட்டி ஒரு நீண்ட ஊளை….

இதுவேதான் அவர் உத்தராயணமா? என்பதுடன் கதை முடிகிறது.

நினைவோடை உத்தியில் எழுதப்பட்ட கதை. நிறையா கதைகள் நினைவோடை உத்தியில் கதைகள் எழுதியிருக்கிறார் லா.ச.ரா. இன்னொரு எழுத்தாளரைப் பற்றியும் நான் இங்குக் குறிப்பிட வேண்டும். அவர் நகுலன். நினைவோடை உத்திக்குப் பெயர் போனவர்.

((திண்ணை முதல் இணைய வார இதழில் 16.05.2021 இல் வெளி வந்தது ) See Less

52வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

. 22.05.2021 அன்று சனிக்கிழமைமை மாலை 6.30 மணிக்கு. அதன் காணொளி. 


சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 52வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி நேற்று (22.05.2021) நடந்தது.  மொழிபெயர்ப்புக் கவிதை வாசிப்புக் கூட்டம்.  அதன் காணொளியை இப்போது கண்டு களியுங்கள்.

சூம் மூலமாக விருட்சம் – குவிகம் நடத்தும் கி.ராஜநாராயணனின் நினைவைப் போற்றி கூட்டத்தின் ஒளிப்பதிவு.

17.05.2021 அன்று காலமான முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாரயணின் நினைவாக 21.05.2021 அன்று வெள்ளிக்கிழமைûஅ மாலை 6.30 மணிக்கு நடந்த கூட்டத்தின் ஒளிப்பதிவு. கீழ்க்கண்ட படைப்பாளிகள் கலந்துகொண்டு பேசினார்கள். உயர் திரு 1. பா.செயபிரகாசம் 2. சிட்டி வேணுகோபாலன் 3. பாரதிமணி 4. இந்திரன் 5. அம்ஷன்குமார் 6. தமிழ்ச்செல்வன் 7. நாறும்பூநாதன் 8. டாக்டர் பாஸ்கரன் 9. உதயசங்கர் 10. ரவீந்திரன் 11. எஸ்.வி வேணுகோபாலன்

சூம் மூலமாக விருட்சம் – குவிகம் நடத்தும் கி.ராஜநாராயணனின் நினைவைப் போற்றி கூட்டம்.

அழகியசிங்கர்  

சமீபத்தில் காலமான முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாரயணின் நினைவாக நாளை (வெள்ளிக்கிழமை) 21.05.2021 அன்று
மாலை 6.30 மணிக்குக் கூட்டம் நடத்துகிறோம்.

கீழ்க்கண்ட படைப்பாளிகள் அவர் குறித்துப் பேச உள்ளார்கள்.

உயர் திரு

1. பா.செயபிரகாசம் 2. வண்ணதாசன் 3. சிட்டி வேணுகோபாலன் 4. பாரதி மணி 5. இந்திரன் 6. பஞ்சாங்கம் 7. இளவேனில் 8. கீரா பிரபி 9. அம்சா 10. அம்ஷன்குமார் 11. தமிழ்ச்செல்வன் 12. சமயவேல் 13. நாறும்பூநாதன் 14..டாக்டர் பாஸ்கரன் 15.எஸ்.வி வேணுகோபாலன் See Less

‘மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்’ என்ற டயான் ப்ரோக்கோவன் என்ற நாவலை முன் வைத்து…

 

அழகியசிங்கர்

டாக்டர் பாஸ்கரன், இந்தப் புத்தகத்தை – ‘மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள் – என்ற புத்தகத்தைப் படிக்கக் கொடுத்தார்.

கிட்டத்தட்டப் பல மாதங்கள் நான் படிக்காமலே இந்தப் புத்தகத்தை வைத்திருந்தேன். திரும்பவும் அவர் ஞாபகப்படுத்தியபோது, இன்று (27.10.2020) இந்தப் புத்தகம் முழுவதும் படித்து முடித்தேன்.

இதை ஒரு நாவல் என்று சொல்லலாமா? குறுநாவல் என்று சொல்லலாமா? ஒரு நாவல் என்றால் குறைந்த பட்சம் 80 பக்கங்களாவது இருக்க வேண்டும். இந்தப் புத்தகம் 71 பக்கங்களில் முடிந்து விடுகிறது. காலச்சுவடு பதிப்பகம் நவீன உலக கிளாசிக் நாவல் வரிசையில் இந்தப் புத்தகத்தைச் சேர்த்துள்ளது. டயான் ப்ரோகோவன் (பிறந்த வருடம் 1976)

ஃப்ளெமிஷ் மொழியில் எழுதிய இந்த நாவல், ஜெர்மன் மொழியில் மட்டும் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆகியுள்ளன. ஜூல்ஸுன் மரணம் இயல்பாக இந்த நாவலில் விவரிக்கப்படுகிறது. ஜூல்ஸு மரணத்தோடு நாமும் பயணம் செய்கிறோம். ஜூல்ஸ் இறந்து போயிருந்தார். ஆனால் முதலில் அவர் தன் கடமையைச் செய்து முடித்திருந்தார். மேஜையைச் சீர்செய்து காபி கலந்து வைத்திருந்தார்.

‘உயிரோடு இருப்பவர்கள் நிலைமைதான் மோசமானது’ என்று ஆலிஸ் நினைக்கிறாள். மௌனமாக ஒரு உரையாடல் நடக்கிறது ஜூல்ஸுடன். ஆலிஸ் அந்த உரையாடலை நடத்துகிறாள்.

அவர் இறந்து விட்டார் என்று அவளுக்கு வருத்தமும் துக்கமும் இருந்தாலும் அவருடன் ஒரு மென்மையான உரையாடலை நிகழ்த்திக்கொண்டிருக்கிறாள். இந்த நாவல் முழுவதும் அவளுடைய அவரைப் பற்றிய நினைவுகள்தான். அதைச் சிறப்பாக நிகழ்ந்திருக்கிறது. அவள் என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறாள்? உண்மையில் மருத்துவரை அழைக்க வேண்டும். ஹெர்மன் என்ற அவள் பையனிடம் தெரிவிக்க வேண்டும்.

அப்படியில்லாவிட்டால் அவன் மனைவி எய்மியை கூப்பிட வேண்டும். அவள் இதையெல்லாம் செய்யவில்லை. இயல்புக்கு மாறாக அவள் இருப்பதால் அவளுக்குப் பீதி ஏற்படுகிறது. பீதியைத் தடுக்க இன்னொரு கோப்பை தேநீரைக் குடிக்கிறாள்.அவள் எப்போதும் குளித்துவிட்டு வரும்போது செய்தித்தாள்களைப் படிப்பாள். இன்றும் ஜூல்ஸ் உயிரோடு இல்லை என்று தெரிந்தும், ‘கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் ஜூல்ஸ் , ஒரு நிமிடத்தில் செய்தித்தாளைக் கொண்டு வருகிறேன்,’ என்கிறாள். அது அவருடைய காலைநேரச் சடங்கு வெளியே தக்காளி வாங்கச் சென்றால் எல்லோரும் ஜூல்ஸ் பற்றிக் கேட்பார்கள் என்று அவளுக்குத் தோன்றுகிறது. அதற்கு என்ன பதில் சொல்வது? அவள் யாரிடமும் சொல்லாதவரை அவர் இன்னும் இறந்து போகவில்லை. ஜூல்ஸுடன் சதுரங்கம் ஆட டேவிட் வந்து விடுவான் என்பதை நினைத்துத் திகைத்து விட்டாள். டேவிட்டுக்கு ஆட்டிஸம். டேவிட் தாய் பியா அவன் பள்ளிக்கூடத்தில் சதுரங்கம் ஆடக் கற்றுக் கொள்கிறாள். அவர்களை லிப்ட்டில் ஒருநாள் ஜூல்ஸிம் ஆலிஸிம் சந்திக்கிறார்கள். இப்படியே தொடங்கியது நட்பு. தினமும் டேவிட் ஜூல்ஸுடன் சதுரங்கம் ஆட வருவான். சரியாக பத்து மணிக்குத் தினமும் டேவிட் சதுரங்கம் விளையாட வந்துவிடுவான். போன் செய்து பியா சொன்னாள்.

அவள் தாய் இன்று காலை பனியில் சறுக்கி விழுந்துவிட்டாள். அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவள் வீட்டில் தனியாக விட்டுவிட்டுச் சென்றால் டேவிட் குலைந்து போவதாகச் சொல்கிறாள். அவனை ஆலிஸ் பொறுப்பில் விட்டுவிட்டுப் போக நினைக்கிறாள்.லி டேவிட் வந்து விடுகிறான். அவள் சதுரங்கப்பெட்டியைத் தேடி எடுத்து வருகிறாள். அவன் கோபத்துடன் ஆலிஸ் உடன் செஸ் விளையாட விரும்பவில்லை. “எனக்குப் பத்து மணிக்கு மிஸ்டர் ஜூல்ஸுடன் சதுரங்கம் ஆட வேண்டு” மென்கிறான் டேவிட். “மிஸ்டர் ஜூல்ஸ் சற்று உடல்நலம் இல்லாமல் இருக்கிறார்,” என்கிறாள் ஆலிஸ்.

அவனை ஜூல்ஸ் இருக்குமிடத்திற்கு அழைத்துச் செல்கிறாள். அவன் ஜூல்சைத் தொட்டுப் பார்க்கிறான். பிறகு சொல்கிறான். “மிஸ்டர் ஜøல்ஸ் இறந்து விட்டார்” என்கிறான். டேவிட் சதுரங்கம் விளையாடுகிறான். இரண்டுபேர் ஆட்டங்களையும் அவன் ஒருவனே ஆடுகிறான். ஆட்டம் முடிவில் “மிஸ்டர் ஜூல்ஸ் நீங்கள் ஜெயித்து விட்டீர்கள்,” என்கிறான் டேவிட். ஒயின் பாட்டிலை எடுத்துக்கொண்டு வந்து டேவிட்டை திறக்கச் சொல்கிறாள். தக்கைத் திருகியை அவனிடம் கொடுக்கிறாள். “தக்கைத் திருகி ஒரு நெம்புகோல்” என்கிறான் டேவிட். ஆட்டிஸம் இருந்தாலும் டேவிட் ஒவ்வொரு முறையும் எதாவது குறிப்பாகச் சொல்வான்.

“சொர்க்கத்திலிருந்து வந்த அமிர்தம்” என்றான் டேவிட் திறந்த ஒயின் பாட்டிலை அவள் பக்கமாகத் தள்ளி வைத்தபடி. இதுதான் முதல் முறையாக அவன் தேவையின்பாற்படாத ஒன்றைச் சொன்னது என்கிறார் நாவலாசிரியர். பியா வந்து டேவிட் அழைத்துச் சொல்வதற்கு முன்,’பிற்பகல் என் அம்மாவிற்கு அறுவை சிகிச்சை. நான் திரும்பவும் போக வேண்டும்’ என்கிறாள். டேவிட் தன் தாயைப் பார்த்தவுடன் ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னான். ” மிஸ்டர் ஜூல்ஸ் ஜெயித்துவிட்டார்,” என்று.

ஒரு புதையல் போல் மிஸ்டர் ஜூல்ஸ் காதலியான ஓல்காவிற்கு எழுதிய கடிதத்தை, கண்டுபிடித்து விட்டேன் என்கிறாள் ஆலிஸ். அந்தக் கடிதத்தில் மிஸ்டர் ஜூல்ஸ் விடுமுறை தினத்தில் ஓல்காவை அழைத்துப் போவதாக எழுதியிருந்தார். ஆனால் ஏனோ அது நிறைவேறவில்லை. அவருடன் வாழ்ந்த பழைய நினைவுகளை அசை போடுகிறாள்.

மிஸ்டர் ஜூல்ஸ் ஓல்காவுடன் விடுமுறைக்குச் செல்லவில்லை. அதைத் தடுத்து விட்டாள் ஆலிஸ். ‘உங்களை வாழ்க்கைக்கு அர்பணிப்பதைவிட மரணத்திற்கு அர்ப்பணிப்பது எளிதாக இருக்கிறது’ என்று நினைக்கிறாள் ஆலிஸ். தன் நினைவுகள் மூலம் அவருடன் ஆலீஸ் வாழ நினைக்கிறாள். ஓல்காவுடன் ஏற்பட்ட கள்ள உறவு முறிந்ததற்குக் காரணமாக ஆலிஸ் இருக்கிறாள். அவள் அதை அவர் முன் அவர் இறந்தபின் வெளிப்படுத்துகிறாள். அவள் நினைத்துப் பார்க்கிறாள் தன் மகன் ஹெர்மனிடம் எப்போது சொல்வது என்று. முன் மாலையில்தான் ஹெர்மனை அழைக்க நினைக்கிறாள். ஆனால் அவள் மகன் ஹெர்மனை அழைக்கவில்லை. ‘ ஹெர்மனை அழைப்பதற்கு மிகவும் பயமாக இருக்கிறது’ என்று அவள் இறந்து போன கணவருடன் பேசுகிறாள்.

தந்தை இறந்து விட்டதை ஒரு மகனிடம் சொல்வதை விட ஒரு மகளிடம் சொல்வது எளிதாக இருக்குமென்று நினைத்தாள். இப்போது அவள் ஏற்கனவே பிறக்க இருந்த தன் முதல் குழந்தை அரைகுறைப் பிரசவமாகப் போனதை நினைத்துப் பார்த்தாள். திரும்பவும் பியா போன் செய்தாள். அவள் அம்மா உடல்நிலை மோசமாகி விட்டதாகவும், அவள் கட்டாயம் போகும்படி இருக்கும் என்றும், ஆனால் அவள் பையன் டேவிட் அழைத்துக்கொண்டு போக முடியாது என்றும் சொல்கிறாள். எப்படியும் டேவிட்டை அவள் பொறுப்பில் விட்டுச் செல்கிறேன் என்று அழாதகுறையாகச் சொல்கிறாள்.

ஆலிஸ். அந்த வேண்டுகோளைத் தட்ட முடியவில்லை. டேவிட்டை பியா அழைத்துக்கொண்டு அவளிடம் விடும்போது, ”மிஸ்டர் ஜூல்ஸ் எப்படி இருக்கிறார்,” என்று கேட்கிறாள். “அவர் அப்படியே இருக்கிறார்,” என்று ஆலிஸ் பதில் அளிக்கும்போது டேவிட்டைப் பார்க்கிறாள். அவன் முகத்தில் ஒருமாற்றம் நிகழ்கிறது. அவன் அவள் அம்மாவிடம் மிஸ்டர் ஜூல்ஸ் இறந்து போய்விட்டார் என்று சொல்லவில்லை . எப்படி அவனைப் பாதுகாப்பது என்று அவளுக்குப் பெரிய நிர்ப்பந்தமாக இருக்கிறது. மிஸ்டர் மிஸ்டர் ஜூல்ஸ் இருந்த அறையில் அவனை அழைத்துக்கொண்டு போக விரும்பவில்லை. ஏன்னென்றால் மிஸ்டர் ஜூல்ஸ் விரும்பாத தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப விரும்பவில்லை. டேவிட் எப்போதும் பத்துமணிக்குத்தான் சதுரங்க ஆட்டம் ஆடுவான். அதனால் தற்சமயம் பத்து மணியைக் கடந்து விட்டதால் அவன் ஆட மறுக்கிறான். “வா நாம் ஜூல்ஸ் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ளலாம்” என்று அவனை அழைத்துக்கொண்டு போகிறாள்.

“மிஸ்டர் ஜூல்ஸ் இறந்து விட்டார்” என்றாள் டேவிட்டைப் பார்த்து. டேவிட் ஜூல்ஸ் இறந்த உடலைத் தொட்டுப் பார்க்கிறான். அவருடைய முகத்தின் மீது அவனுடைய கையை ஓட்ட விட்டான். அப்போது ஒன்று சொல்கிறான். அது முக்கியமாக இந்த நாவலில் தோன்றுகிறது. “மிஸ்டர் ஜூல்ஸ் போய்விட்டார். இது மிஸ்டர் ஜூல்ஸின் வெளிப்புறம்தான்” என்கிறான். இங்கே அவன் சொல்வது முக்கியமாகத் தோன்றுகிறது. அவன் சொன்னதை விட்டு கதாசிரியர் சொல்வதுபோல் ஒரு வரி வருகிறது. கல்லாகிப்போய் சோஃபாவில் அமர்ந்திருந்த ஜூல்ஸின் உடல் அவருடைய வெளிப்புறம்தான் உலகத்திற்கான அவரது ஆடை அது. இப்போது அதை அவர் கழற்றிப் போட்டுவிட்டார்.

சாப்பிடக் கூப்பிடுகிறாள் டேவிட்டை. ‘சமையல் அறையில் நுழைந்த அலங்கோலம்..அலங்கோலம்..அலங்கோலம்’ என்று தன்னிச்சையாக ஒரு கருத்தைக் குறிப்பிடுகிறான். சிறிது நேரத்தில் டேவிட் சொல்கிறான், ‘ஜூல்ஸின் வெளிப்புறம் தனியாக இருக்கிறது’ என்று. டேவிட் அம்மா போன் செய்து தான் அங்கு வர முடியாது என்று தெரிவிக்கிறாள். டேவிட் சோபாவில் ஜூல்ஸின் பக்கத்தில் அமர்ந்தபடியே தூங்கிக் கொண்டிருந்து விட்டு விழித்துக் கொள்கிறான்.

அவன் ஆலிஸ் பார்த்துக் கேட்கிறான். நான் சோஃபாவின் தலையணி, போர்வையுடன் படுத்துக்கொண்டால் மிஸ்டர் ஜூல்ஸின் வெளிப்புறம் எங்கே போகும் என்று கேட்கிறான். ஆலிஸ் அவனைத் தனியாகப் படுக்கை அறையில் படுத்துக் கொள்கிறான். அப்போது அவன் சொல்கிறான் “பனி வெளி யே பெய்கிறது. வெம்மை உள்ளே இருக்கிறது” என்கிறான். அது ஒரு கவிதைபோல் ஒலித்தது என்கிறார் கதாசிரியர். அவளும் தூங்கி விடுகிறாள். காலையில் எழுந்தபோது ஒரு புதிய நறுமணத்தை நோக்கி அவள் சென்றாள் என்று முடிவுக்கு வருகிறது நாவல். டேவிட் ஆட்டிஸம் என்ற நோயிக்கு ஆளாகப்பட்ட சிறுவன் அவருடைய மரணத்தைப் புறம் என்று விவரிக்கிறான். அவன் அவர் உயிரோடு இருப்பதாகத்தான் நினைக்கிறான்.

‘மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்’ – நாவல் – ஆசிரியர் : டயான் ப்ரோகோவன் – தமிழில் ஆனந்த் – முதல் பதிப்பு : டிசம்பர் 2014 வெளியீடு : காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிமிடெட், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001(குவிகம் மே மாத மின் இதழில் வெளி வந்தது)

1Chandramouli Azhagiyasingar1 ShareLikeCommentShare

0 Comments

51வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 15.05.2021 அன்று சனிக்கிழமைûமை மாலை 6.30 மணிக்கு நடந்ததின் ஒளிப்பதிவு.

 

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 51வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 
இந்தக் கவி அரங்கத்தில் மற்றவர்கள் கவிதைகளை வாசித்தார்கள். சிறப்பாக நடந்து நிகழ்ச்சி.  ஒளிப்பதிவில் கேட்டு மகிழுங்கள்.  

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் பதினொன்றாவது கதை வாசிக்கும் நிகழ்ச்சியின் ஒளிப்பதிவு

 

வரும் 14.05.2021 வெள்ளிக்கிழமை அன்று கதை வாசிக்கும் கூட்டத்தில் இரு கதைஞர்களின் கதைகளை எடுத்து 10 பேர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள். அதன் ஒளிப்பதிவைக் கேட்டு மகிழுங்கள்.


தேர்ந்தெடுக்கப்பட்ட இரு கதைஞர்களின் பெயர்கள். எஸ்.வி வேணுகோபாலன், பானுமதி. கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்

51வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

15.05.2021 அன்று சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு.

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 51வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 15.05.2021 நடைபெற உள்ளது.

இந்தக் கவி அரங்கத்தில் மற்றவர்கள் கவிதைகளை வாசிக்க வேண்டும். உங்கள் கவிதைகளை வாசிக்கக் கூடாது. நீங்கள் நேசிக்கும் கவிஞர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.

அவர்களை ஞாபகப்படுத்துகிற கவிதைகள் வாசிக்க வேண்டும். நிகழ்ச்சியைச் சிறப்பிக்கக் கேட்டுக்கொள்கிறேன்

.Topic: சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 51வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

Time: May 15, 2021 06:30 PM IndiaJoin Zoom Meetinghttps://us02web.zoom.us/j/87893417974…

Meeting ID: 878 9341 7974Passcode: 514841

இன்று செவிலியர் தினம்…

27.04.2021


துளி – 194



அழகியசிங்கர்


இன்று உலக செவிலியர் தினம். போற்றப்பட வேண்டியவர்கள் செவிலியர்கள். அறுபதுகள் முடிவில் நான் ஒரு முறை சுரத்தில் விழுந்தேன். ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். என் பெரியப்பா செவிலியர்களுக்கெல்லாம் தலைமை வகித்தவர்.
ஒரு வாரம் நரக வேதனை. அப்போது ஒரு பெண் செவிலியர் அன்பாக இருந்தார். எனக்கு அவருடைய அன்பு ஆச்சரியமாக இருந்தது. நான் சிறுவன். ஊரிலிருக்கும் அவளுடைய சகோதரன் ஞாபகத்திற்கு வந்து விட்டான்.


நான் அவருடைய சகோதரனை ஞாபகப்படுத்தினேன். என்னை 1 வாரம் நன்றாகக் கவனித்துக்கொண்டார். அவரால் என்னை மறக்க முடியவில்லை. அடிக்கடி வந்து பார்க்கும்படி கூறினார். மருத்துவமனை என்பதால் என்னால் அங்குத் திரும்பவும் போகவில்லை.


அவரை கதாபாத்திரமாக வைத்து நோயாளிகள் என்று சிறுகதை எழுதியிருக்கிறேன். என் கதையை ஆங்கிலத்தில் பேஷன்ட் என்ற பெயரில் அஷ்வின் குமார் மொழிபெயர்த்திருக்கிறார். ஜீரோ டிகிரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
ஏனோ இன்றைய செவிலியர் தினத்தில் அவரை நினைவுக் கூறுகிறேன்.