முப்பதொன்றாம் நாளின் வாசிப்பனுபவம்

(02.10.2019)

அழகியசிங்கர்

ராஜேஸ்குமார் எழுத்துலகில் 50 ஆண்டு பாராட்டு விழா  இன்று கவிக்கோ மன்றத்தில் 5.30 மணிக்கு நடைபெறுகிறது.  ராஜேஸ்குமார் வாசகர்கள் இதை நடத்துகிறார்கள். 

கூட்டத்திற்கு வருபவர்களுக்கு அவருடைய சிறந்த சிறுகதைப் புத்தகத்தை வழங்குகிறார்கள்.

அறுபதுகளில் எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது நான் துப்பறியும் கதைகளை வாசிப்பதுண்டு.  க்ரவுன் தியேட்டர் எதிரில் பிளாட்பாரக் கடைகளிலிருந்து பி டி சாமி, சிரஞ்சீவி, மாயாவி என்று பலருடைய மர்ம நாவல்களை வாங்கிப் படித்திருக்கிறேன்.  அதை இப்போது முழுக்க முழுக்க மறந்து விட்டேன்.  ஆனால் பின்னால் க்ரைம் நாவல்களுக்கு அதிக மரியாதையை ஏற்படுத்தியவர் சுஜாதா.

ராஜேஸ்குமார் ஐம்பது ஆண்டு எழுத்து வாழ்க்கையில்  1500 க்ரைம் நாவல்கள் எழுதி உள்ளார்.  அசோகமித்திரன் ராஜேஸ்குமாரைப் பற்றி சொல்லும்போது அவருடைய உழைப்பை யாரும் குறைவாக மதிப்பிட முடியாது என்பார்.

அசோக்நகரில் உள்ள பழைய பேப்பர் கடையில் அதிகமாக ராஜேஸ்குமார் புத்தகங்கள் கிடைக்கும்.  15 ரூபாய் புத்தகங்கள் என்றாலும் ரூ,5 க்குக் கிடைக்கும்.  ராஜேஸ்குமார் தவிர இப்போதெல்லாம் புதிதாக நாவல் எழுதுபவர்கள் குறைந்து போய்விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

ராஜேஸ்குமார் ம்ட்டுமல்ல பாக்கெட் நாவல் மார்க்கெட்டை பிடித்துக்கொண்டவார்கள் தேவிபாலா, சுபா, ரமணிசந்திரன், பட்டுக்கோட்டை பிரபாகரன், இதில் பாலகுமாரனும் ஒருவர்.  பெண் எழுத்தாளர்களில் இந்துமதி, சிவசங்கரி நாவல்களையும் பார்த்திருக்கிறேன்.  நிறைய பெண் எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள்.  அவர்கள் பெயர்கள் எதுவும் தெரியவில்லை.

இவர்கள் நாவல்கள் ஏன் அதிகமாக விற்கின்றன என்று யோசித்துப் பார்த்தால், மிகக் குறைவான விலையில் விற்கிறார்கள். பொதுவாக பயணத்தின்போது இந்த நாவல்கள் வாங்கிப் படிக்கிறார்கள்.  பேப்பர் கடைகளில் இந்த நாவல்கள் விற்கப்படுகின்றன.  இந்த நாவல்களைப் பெரும்பாலும் படித்து முடித்தவுடன் சில நாட்களில் படித்தோமா என்று கூட மறந்து விடுவோம்.  ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் 13.11.2015ல் ராஜேஸ்குமார் நாவல் ஒன்றைப் படித்தேன்.  இப்போது அது சுத்தமாக ஞாபகத்தில் இல்லை.  திரும்பவும் படிக்கவேண்டும். படிக்க ஆரம்பித்தால் புதிய நாவலை படிப்பதைப் போல படிக்க வேண்டி உள்ளது.   ராஜேஸ்குமார் 1500 நாவல்கள் எழுதி உள்ளாரே அவரே அத்தனை நாவல்களையும் ஞாபகம் வைத்திருப்பாரா? 

இந்த முறை ராஜேஸ்குமார் நாவல் ஒன்றை எடுத்துப் படிக்கலாமென்று தோன்றியது.  எக்ஸலண்ட் நாவல் என்ற தலைப்பில் ராஜேஸ்குமார் நாவல் ஒள்றை வாங்கினேன். üஎனக்கு நானே பகையானேன்ý என்பது நாவலின் தலைப்பு. இந்த நாவல் எந்த மாதத்தில் எந்த வருடத்தில் வந்தது என்ற குறிப்பு இல்லை.காலையில் எழுந்தவுடன் பத்திரிகைகளில் கொலைகளைப் பற்றி செய்திகள் வராமல் இருப்பதில்லை.  பேர்கள்தான் மாற்றம் விதம்விதமான கொலைகள்.  அதைதான் ராஜேஸ்குமார் கண்ணும் காதும் வைத்து கதைகளாக மாற்றுகிறாரென்று நினைக்கிறேன்

கைக்கு அடக்கமான புத்தகம்.  விலை ரூ.15. 98 பக்கங்களில் இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது. முதலில் கதையை சுலபமாக சொல்லி விடுகிறார்.  படிக்க ஆரம்பிக்கும்போது கீழே வைக்கத் தோன்றவில்லை.  அவ்வளவு விறுவிறுப்பு.  

அக்காவும் தங்கையும்.  அக்கா நர்ஸ். திருமணம் செய்து கொள்ள ஆர்வமில்லாதவள். தங்கையை பெரிய பணக்காரர் ராகவராஜ் அவர் பையன் பார்த்திபனுக்கு கல்யாணம் முடிப்பதற்காக பெண் பார்க்க வருகிறார்கள்.  சாந்தா உடனே சம்மதிக்கவில்லை.  அவள் அக்கா லலிதா அவசரப்படுகிறாள்.  சாந்தா சம்மதிக்கிறாள்.  திருமணம் ஆனவுடன்தான் அவள் கணவன் பார்த்திபனுடைய சொரூபம் தெரிகிறது.  அலுவலகத்தில் பார்க்கவி என்ற பெண்ணுடன் அவனுக்குத் தொடர்பு. அந்தத் தொடர்பால் கருத்தரித்துவிடுகிறாள் பார்கவி. அபார்ஷன் செய்யும்போது இறந்து விடுகிறாள்.  பார்த்திபன்தான் காரணம் அதைப் பற்றி கவலைப்பட வில்லை.  

பார்க்கவி தமபி  கொடுத்தப் புகாரில் போலீஸ் அவனை கேள்வி கேட்கிறது.  இப்படியே போய் கொண்டிருக்கிறது நாவல். ஒருமுறை அவனுக்கும் அவன் மனைவி சாந்தாவுக்கும் ஏற்பட்ட கலகலப்பில் போதை அதிகமாக இருந்த பார்த்திபன் மாடிப்படிகளிலிருந்து தவறி கீழே விழுநது விடுகிறான்.  நினைவு தப்பிப் போகிறது.

ஆபத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான்.  பார்த்திபன் உயிரோடு இருக்க வேண்டாம் என்று அவனை கருணை கொலை செய்துவிடுகிறாள் சாந்தா.  96 பக்கங்களில் கடகடவென்று எழுதிக்கொண்டு போகிறார்.  இதுதான் கதை. ராஜேஸ்குமார் மாத்தி மாத்தி பல கதைகள் எழுதிக்கொண்டு போகிறார்.  1500 கதைகள் வரை.  அவர் கதைகளுக்கு இலக்கிய அந்தஸ்து கேட்கவில்லை. அவர் இதுமாதிரியான கதைகளுடன் வாழ்கிறார்.  அவர் கதைகளுக்கு டிமான்ட் இருக்கிறது. 

முப்பதாம் நாளின் வாசிப்பனுபவம் (01.10.2019)

அழகியசிங்கர்

ஜானகிராமனின் மரப்பசு என்ற புதினத்தை எடுத்துப் படித்தேன்.  1978ல் புத்தகத்தை வாங்கியிருந்தபோது  ஒரு முறை படித்திருந்தேன்.  இப்போது படிக்கும்போது அன்று என்ன படித்தோம் என்று சுத்தமாக ஞாபகமில்லாமலிருந்தது.  ஜானகிராமன் கதைகள் எல்லாம் பிராமண சமுதாயத்தை ஒட்டி நடக்கிறது.  அந்த சமுதாயத்தில் நடக்கும் அபத்தங்களைக் கிண்டல் பண்ணுவதுபோல் ஜானகிராமன் படம் பிடித்திருக்கிறார்.

இந்தக் கதையிலும் அம்மணி என்ற கதாபாத்திரம் மூலம் அதை வெளிப்படுத்துகிறார்.  வாழ்க்கை நடைமுறையில் உள்ள போலியான சம்பவங்களைப் பார்த்து அம்மிணிக்கு சிரிப்பு சிரிப்பாக வரும்.  எல்லார் முன்னிலும் அவள் சிரித்துவிடுவாள்.  சாவு வீட்டிற்குப் போனால் அழுவதற்குப் பதில் சிரிப்பாள்.  அங்குப் போலியாக நாடகமாடுவதைப் பார்த்துதான் அப்படிச் சிரிக்கிறாள். அவளுடைய இந்தச் செய்கையைப் பார்த்து அவள் அம்மா, üஎனக்குன்னு வந்து பொறந்தியேம்மா,ý என்கிறாள் அவள் அம்மா.

அந்தக் காலத்தில் பால்ய விவாகம் பிராமண சமுதாயத்தில் நடக்கும். பையன் இறந்துவிட்டால், பெண்ணை மொட்டை அடித்து வெள்ளைப் புடவையைக் கட்டி விடுவார்கள்.  இப்படி ஒரு சம்பவத்தைப் பார்த்து விடுகிறாள்.  கண்டு சாஸ்திரி என்கிற பண்ணை வைத்திருக்கும் வீட்டில் உள்ள அவர் பெண்ணிற்கு நடக்கிறது.  பெரிய அதிர்ச்சி அம்மணிக்கு.  அவள் பெரிதும் மதித்திருந்த கண்டு சாஸ்திரி மீது வெறுப்படைகிறாள் அம்மணி.அந்தக் குடும்பத்தில் எந்த சகவாசமும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று நினைக்கிறாள்.  அவள் அப்பா கண்டு சாஸ்திரி பண்ணையிடம்தான் காரியதரிசியாகப் பணிபுரிகிறார்.

அன்னவாசல் கிராமத்தில் ஐந்தாம் வகுப்பிற்கு மேல் வகுப்பு இல்லை என்பதால், கும்பகோணத்தில் உள்ள பெரியப்பா வீட்டிற்கு மேலே படிக்க வருகிறாள்.  கண்டு மாமா பெண்ணிற்கு ஏற்பட்ட நிகழ்ச்சியிலிருந்து அம்மணிக்கு யாரையும் திருமணம் செய்துகொள்ளப் பிடிக்கவில்லை.  கழுத்தில் தாலி சரடோடு சுற்றப் பிடிக்கவில்லை.  

சென்னையிலிருந்து கல்லூரி படிக்க சென்னை வந்து விடுகிறாள் அம்மிணி.  தன் பெரியப்பா பெண் திருமணத்திற்கு கோபாலி கச்சேரியை ஏற்பாடு செய்கிறாள். கோபாலி பாடுவதில் கெட்டிக்காரர்.  பல இடங்களில் அவர் புகழ் பரவியிருந்தது.  ஆனால் பெண்கள் விஷயத்தில் பலவீனமானவர்.  கோபாலிக்கு அம்மிணியைப் பிடித்து விடுகிறது. அவள் அவருடைய பெண் பையனை விட இரண்டு வயது சின்னவள்.   இதை அம்மிணி யின் மார்பில் முகம் புதைத்தபடி கோபாலி சொல்கிறார். 

அம்மணி எப்படி வாழ விரும்புகிறாள்.  அவளுக்கு எல்லோரையும் பார்த்தாலும் கை குலுக்க வேண்டும் போல் தோன்றுகிறது.  அல்லது தழுவிக்கொள்ள வேண்டும் போல் தோன்றுகிறது.  ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் இதைச் செய்ய விரும்புகிறாள்.  கோபாலி ஒரு தனி இடத்தில் அவளை குடி வைக்கிறாள்.  அவளுக்கு உதவி செய்ய பச்சையப்பன் என்ற வேலைக்காரனை கோபாலி ஏற்பாடு செய்கிறார்.  அம்மிணிக்கு எந்தக் குறிக்கோளும் இல்லை. எம் எ படிக்கிறாள்.  இசையைப் கோபாலியுடன் கற்றுக்கொள்கிறாள்.  நடனம் கற்றுக் கொள்கிறாள்.  இதையெல்லாம் கோபாலியின் ஏற்பாட்டில் செய்கிறாள்.  கோபாலி தினமும் அவளைப் பார்க்க வருவார்.  பாட்டு சொல்லித் தருவார்.  இருவரும் குடிப்பார்கள். கட்டிப் புரள்வார்கள்.  அம்மணி கொஞ்சங்கூட மனம் கோணாதபடி நடந்து கொள்கிறார்.  அம்மிணி இந்த மாதிரி வாழ்க்கையை விரும்புகிறாளா?  அவளிடம் கேட்டால் அது குறித்து அவள் தெளிவாகப் பதில் சொல்வதில்லை.

பெரியம்மாவும், பெரியப்பாவும் தனித்தனியாக அவளைப் பார்க்க வருகிறார்கள்.  அவர்களுக்கு ஒழுக்கக் கேடாக அவள வாழும் முறையைப் பார்க்கும்போது ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது.  பெரியப்பா அவளை கண்டபடி திட்டி அடித்தே விடுகிறார்.  தற்செயலாக கோபாலி அவர் இருக்கும்போது வந்து விடுகிறார்.  கோபாலியையும் ஆத்திரத்துடன் அடிக்கிறார்.  “ஏன்டா என் பெண்யை அவுசாரியாக மாற்றப் பார்க்கிறாயா?” என்று கத்துகிறார்.  

திரும்பவும் அவருடன் வரச்சொல்லி அம்மிணியைக் கூப்பிடுகிறார்.  அம்மிணி வர விரும்பவில்லை.  “நீ எக்கேடு வேண்டுமானாலும் கெட்டுப்போ.  நீ என் பெண்ணே இல்லை.  தலை மூழ்கிவிடுகிறேன்..” என்று கோபத்துடன் போய்விடுகிறார்.

இந்த நாவல் முழுக்க முழுக்க பேச்சுதான்.  தி ஜானகிராமன் மார்க்சியத்தைக் கிண்டல் செய்கிறார்.  எந்த அர்த்தமும் இல்லை வாழ்க்கைக்கு என்ற தத்துவத்தைக் கொண்டு வருகிறார்.  எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் சபலப்படும் கோபாலி.  எது குறித்தும் கவலைப்படாத அம்மணி.  நாளைய வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்வது என்று கூட கவலைப்பட மாட்டாள். அம்மிணிக்கு வேண்டியது அன்பு மட்டும்தான்.  

அம்மிணி நாட்டியமாடி பிரபலமாகி விடுகிறாள்.  கோபாலிதான் பிரபலப்படுத்துகிறார். எல்லோரும் அம்மிணியைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள்.  இங்கே ஜானகிராமன் இப்படி எழுதுகிறார் :üஎன்னைச் (அம்மணியை) சுற்றிச் சுற்றி வந்தார்கள்.  கோபாலியோடு வந்து சொண்டிருந்தவர்கள் கோபாலி இல்லாமல் தாமாக வந்தார்கள்.  சில சமயம் தனியாக வந்தார்கள்.  கிழவர்கள் வருவார்கள் – நடு வயதுகள் வரும், சிறிசுகள் வரும்,ý

ஒரு பெண்பிள்ளை, தாராளமாக நடமாட இடம் உள்ள வீட்டில் தனியாக இருந்தால் ஒரு வருடத்திற்குள் நூற்றுக் கிழவி கண்டதைக் கண்டு விடலாம்- கேட்பதையெல்லாம் கேட்கலாம், நினைப்பதையெல்லாம் நினைக்கலாம் – உணர்வதையெல்லாம் உணரலாம்- என்கிறார் ஜானகிராமன்.

கோபாலி அம்மிணியை கண்காணிக்க நினைக்கிறார்.  பட்டாபி என்ற அவருடைய உறவினர் பையனை கல்லுரியில் படிக்கிற பையனை அவளுக்குத் துணையாக இருக்க வைக்கிறார். அவன் அவளுடன் இருந்து கல்லூரியில் படிக்கிறான்.  அவனுக்கு பாட்டு மீது ஆர்வமில்லை.  

பத்திரிகையில் விமர்சனம் எழுதுகிற சுந்தரம் என்கிறவர் அம்மணியைப் பார்க்க அடிக்கடி வருவார்.  வயதானவர் ஆனால் சபலமானவர்.  ஒரு முறை அம்மணியைக் கட்டி அணைத்துவிடுகிறார்.  அமமணி அருவறுப்படைகிறாள். எனக்கு இதெல்லாம் பிடிக்காது என்கிறாள் அம்மணி.  ஒரு கிழமே போதும் (கோபாலியை நினைத்துச் சொல்கிறாளா?) என்கிறாள்.  ஒரு ஓரமாகப் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த பட்டாபி இந்தக் காட்சியைப் பார்த்து விடுகிறான்.  சுந்தரத்தை அப்படியே தூக்கிக் கொண்டு போய் வீட்டின் வெளியே விட்டுவிடுகிறான்.

அம்மணி அவன் செய்கையைப் பார்த்து ஆச்சரியப்படுகிறாள்.  அவனுடன் அவளுக்கு நெருக்கம் அதிகமாகிறது.  

இந்த இடத்தில் ஜானகிராமன் பட்டாபி மூலம் ஒன்றை சொல்கிறார்: ‘சோஷலா இருந்தா உண்டிப் பொட்டி மாதிரி பொன்னமான்னு நினைக்கிறா சில பேர்.’

அப்படின்னா என்ன என்று கேட்கிறாள் அம்மணி.  பட்டாபி விவரிக்கிறான். “பொன்னம்மான்னு ஒருத்தி இருந்தாளா, மேலத் தெருவிலே, ஆமடையான போனப்பறம் நாதியில்லாம போயிட்டாளாம்.  பிள்ளை குட்டி இல்லை. உறவும் ஜனமும் இல்லை. சாப்பிடணுமே.  எல்லோரையும் உறவாக்கினுட்டாளாம். புருஷா, காசைப் போட்டுட்டு…”

பட்டாபியுடன் உறவு நெருக்கமாகிவிடுகிறது.  கல்யாணத்திற்கு எதிரி அம்மணி.  கல்யாணம் செய்து கொண்டவர்களைக் கிண்டல் செய்கிறாள்.  அவளுக்கு உதவி செய்கிற பச்சையப்பன் திருமணம் செய்துகொள்கிறான். அதையும் கிண்டல் செய்கிறாள்.  மரகதம் என்கிற பெண்ணை திருமணம் செய்துகொள்கிறான்.  அவ அட்டைக் கருப்பு. அம்மிணிக்குப் புரியவில்லை.

கோபாலியோடு வெளி மாநிலங்களுக்குத் துணையாகக் கச்சேரிக்குப் போகிறாள் அம்மணி.   அங்குப் போனபோதுதான் அவள் உடம்பில் மாற்றம் ஏற்படுகிறது.  முதன் முறையாக அதை நினைத்துப் பயப்படுகிறாள்.  சிரித்துக்கொண்டே இருப்பவள் வாய் விட்டு அழுகிறாள்.   பட்டாபிக்கு மனம் திறந்து கடிதம் எழுதுகிறாள்.  

இந்த இடத்தில் ஜானகிராமன் இதை இன்னும் விவரிக்காமல் குறிப்பாக மட்டும் விளக்கிக் கொண்டு போகிறார். சென்னை வந்தவுடன் கோபாலி பட்டாபியின் இடத்தை மாற்றிவிடுகிறார்.  அம்மணிக்கு அதிர்ச்சி.  அவளைப் பார்க்க விடாமல் செய்து விடுகிறார்.

பச்சையப்பனையும் அவன் மனைவியையும் தன்னுடன் வைத்துக்கொள்கிறாள் அம்மணி.   அம்மணிக்கு நாடு நாடாகச் சுற்றும் வழக்கம்.  பச்சையப்பனையும் மரகத்தத்தையும் வைத்துவிட்டு அவள் போய்விடுவாள்.  திரும்பவும் வரும்போது வீடு சுத்தமாக இருக்கும். நாலாவது தடவையாக வெளிநாடு சுற்றுகிறாள்.  இந்த முறை வெறுமனே சுற்றிப் பார்க்கப் போகி0றாள்.  பிக்காடியா சதுக்கத்தில் அம்மணியும் அவள் தோழி சுபலாவும் üஇரவு ராணிகள்ý மாதிரி நடந்துகொண்டு இரண்டு இளைஞர்களை அழைத்துப் போகிறார்கள்.  அப்போதெல்லாம் அம்மணிக்கு மரகதம் ஞாபகம் வருகிறது.  ப்ரூஸ் என்ற சிப்பாயைச் சந்திக்கிறாள். அவனுடன் எல்லா இடங்களுக்கும் சுற்றுகிறாள்.  

ப்ரூஸ் அம்மிணியைப் பார்த்துச் சொல்கிறான் : நீ முந்நூறு பேரோடு படுத்துக்கொண்டிருக்கலாம், மூவாயிரம் பேரை முத்தமிட்டிருக்கலாம்  ஆனால் நீ மிக மிகத் தூய்மையான மனுஷி.

ப்ரூஸ÷ற்கு அம்மிணியை விட்டுப் பிரியவே மனமில்லை.  வீட்டிற்கு வந்தபோது மரகதமும், பச்சையப்பனும் இல்லை.  கோபாலி மாத்திரம் இருந்தார்.  ஏன் அவர்கள் இருவரும் இல்லை என்று கேட்கிறாள் அம்மணி.  மரகதத்திடம் கோபாலி செய்த சேஷ்டையினால் அவர்கள் இருவரும் அங்கிருந்து போய்விட்டார்கள்.

ப்ரூஸ் அம்மணிக்குக் கடிதம் எழுதுகிறான் : இளமை போன பிறகு; உடம்பு இரண்டாம் பொருளாக, மூன்றாம் பொருளாக, கண்ணாடியில் பார்க்க விரும்பாத பொருளாக, ஆகும் வயதில், என்ன ஆகும்? உன்னை யார் கவனித்துக் கொள்வார்கள்? என்கிறான் அம்மணியிடம்.

நடுத்தெருவில் பசு செத்துக் கிடக்கிறது.  அதை யாரும் கவனிக்கவில்லை. யாராவதுல்ட அதைத் தூக்கினால்தான் உண்டு.  செத்துப்போன பசு அப்போது நினைக்கிறது.- நான் ஏன் மரப்பசவாக இல்லை.  பாலும் கொடுத்திருக்க வேண்டாம் – இப்படி நடுத்தெருவில் செத்திருக்க வேண்டாம்.

எல்லாவற்றையும் விட்டுவிட்டு கோபாலியிடமிருந்து வந்துவிடலாமென்று நினைக்கிறாள்.  இப்போது அவளுடைய நண்பர்கள் மரகதம், பச்சையப்பன், பட்டாபி ப்ரூஸ்தான்.  பலவற்றை  கேள்வி கேட்கிற நாவல் இது.  

நிச்சயமாக ஒருவர் படிக்க வேண்டும்.  1978ல் நான்  மீனாட்சி புத்தக நிலையம் மதுரையிலிருந்து இந்த நாவலை வாங்கினேன்.

இருபத்தெட்டாம் நாள் வாசிப்பனுபவம் (29.09.2019)

அழகியசிங்கர்

நேற்று ஞாயிற்றுக்கிழமை.  எதுவும் படிக்க முடியவில்லை.  பேரன், பேத்தியைப் பார்த்துக்கொள்ளும்படி ஆயிற்று.  உண்மையில் தப்பாகச் சொல்கிறேன்.  அவர்கள்தான் என்னைப் பார்த்துக் கொண்டார்கள்.  

ஒரு கவிதைப் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டேன்.  796 பக்கங்கள் 600க்கும் மேற்பட்ட கவிதைகள்.  முதலில் முன்னுரையைப் படித்தேன்.  அந்த முன்னுரை எழுதியவர் என் நண்பர்தான்.  முன்னுரை வருத்தத்தை ஏற்படுத்தியது.  பிறகு அந்தக் கவிதைப் புத்தகத்தைத் தனியாக வைத்துவிட்டேன்.  அந்த முன்னுரை குறித்து எழுத வேண்டும்.  பின் கவிதைகளைப் படித்துத் தனியாக எழுத வேண்டும்.

184 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தைப் படித்தேன்.  எஸ்வி.வி என்ற எழுத்தாளர் எழுதிய ஹாஸ்யக் கதைகள்.   இந்தப் புத்தகத்தை முழுவதும் படித்து முடித்தேன்.  ஹாஸ்யக் கதைகள் என்பதைவிட ஹாஸ்யக் கட்டுரைகள் என்று குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.  லா.ச.ரா வின் குருநாதர் எஸ்.வி.வி.  1993ல் வாங்கிய இந்தப் புத்தகத்தை இப்போதுதான் எடுத்துப் படித்து முடித்தேன்.

பதிப்புரையில் எஸ்.வி.வி ஒரு சகல கலா வல்லவர் என்று பதிப்பகத்தார் குறிப்பிடுகிறார்.   அவருக்கு ஆங்கிலம், சமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் போன்ற பல மொழிகளிலும், ஜோசியம், வைரம் பார்ப்பது, மாடு வாங்குவது,  பாட்டு, வீணை வாசிப்பது போன்ற இன்னும் பல கலைகளில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார்.  1933 ஆம் ஆண்டில் ஆனந்தவிகடனில் எழுத ஆரம்பித்து, ஏராளமான நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.  1952ல் மறைந்து விட்டார்.  ஆனால் இன்னும் கூட இவர் கட்டுரைகளைப் படிப்பதில் ஒரு வித அலுப்போ சலிப்போ ஏற்படுவதில்லை.  11.8.1940ல் எஸ.வி.விப்பற்றி கல்கி இப்படி எழுதியிருக்கிறார். 

‘நான் சென்னைக்கு வந்த புதிதில் , ‘இந்த எஸ்.வி.வி யார்?’ உங்களுக்குத் தெரியுமா?’ என்று சென்னையில் சந்தித்தவர்களையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன்.  அப்போது என்னைக் கேட்கும்படியாக செய்தது, எஸ்.வி.வி ஆங்கிலத்தில் எழுதிய கோவில் யானை என்ற கதைதான்.  இதைப் படித்தபோது நான் சிரித்ததை நினைத்தால் இப்போது கூட வயிற்றை வலிக்கிறது.’ என்கிறார் கல்கி.  

ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருந்த எஸ்.வி.வி தமிழில் எழுதச் சொல்ல வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தார் கல்கி.  நண்பர்கள் சிலருடன் இரவு பதினோரு மணிக்கு எஸ்.வி.வி யை திருவண்ணாமலையில் போய்ப் பார்க்கிறார்.  அப்போது எஸ்.வி.வியை தமிழில் எழுதும்படி வற்புறுத்துகிறார் கல்கி.

‘தாக்ஷôயணியின் ஆனந்தம்’ என்ற கதையை 1.7.1933ல் ஆனந்தவிகடனில் எஸ்.வி.வி எழுதியிருக்கிறார்.  அதைப் பாராட்டியவர்கள் ராஜாஜி, டி கே சி.

கிட்டத்தட்ட இந்தப் புத்தகத்தில் 23 கட்டுரைகள் உள்ளன.  எல்லாம் கதைகள் என்று குறிப்பிட்டாலும் கட்டுரைகள் என்ற வகைமையில்தான் அடங்கும் என்று தோன்றுகிறது.  காந்தாமணி போன்றது கதையாகவும் வந்திருக்கிறது.  

இன்றைய சூழ்நிலையில் எஸ்.வி.வி ஹாஸ்யத்தை பலர் காப்பி அடித்து எழுதுவதாகத் தோன்றுகிறது.  என் கண் முன்னே ஒரு உதாரணம்.  ராகவன் என்பவர் மாம்பலம் டைம்ஸ் என்ற பத்திரிகையில் வாரம் ஒரு முறை எழுதுவது எஸ்.வி.வியை ஞாபக மூட்டுகிறது. 

ஏண்டிக்குத் தலைமுழுக்கு என்ற தலைப்பில் ஒரு கதை அல்லது கட்டுரை. சாரஙக்பாணி வீட்டில் அவரும் அவர் மனைவி கோமளமும் உபசரிப்பதில் வல்லவர்.  குறிப்பாக அவர் மனைவி  கோமளமும் வல்லவள். கதைசொல்லியைப் பார்த்தவுடன் ஏன் உங்கள் மனைவியை அழைத்து வரவில்லையா என்று கேட்காமல் இருக்க மாட்டாள்.  சாரங்கபாணிக்கு சம்சாரம் பெருமையே அடங்காப் பெருமை.  கோமளம் பத்திரிகைகளுக்கு ருசிகரமான கட்டுரைகள் எழுதுவாள்.  கட்டுரைகள் எழுதுவதோடலலாமல் பொது ஜனத் தொண்டிலும் ஈடுபட்டுப் பிரஸித்து பெற்றிருப்பவள். கோமளத்தின் தொண்டு மாதர்கள் சம்பந்தமானது.  அவர்கள் அந்தஸ்தை உயர்த்தும் இயக்கத்தில் அவள் மிகவும் ஆழ்ந்திருக்கிறவள். 

அன்று ஞாயிற்றுக்கிழமை.  வீட்டிற்கு வெளியே எங்காவது போக வேண்டுமென்று தோன்றுகிறது.  “எங்கே திரும்பிப்போவேள்? எப்பொழுது திரும்பி வரும்படி யிருக்குமோ?” என்று கேட்டாள் கதைசொல்லியின் மனைவி மீனா.

“போகும்போது எங்குப் போகிறாய்?” என்று கேட்காதேன்

என்று உனக்கு எதத்னைத் தரம் சொல்லியிருக்கிறேன்? சமுத்திரத்தில் போய் விழப்போகிறேன்,ýý என்கிறார் கதைசொல்லி.

“அதெற்கெல்லாம் தைரியம் வேண்டாமா?” என்று கிண்டலாகக் கேட்கிறாள் மனைவி  கதைசொல்லி சாரங்கபாணி வீட்டிற்கு வருகிறார்.  சாரங்கபாணி மணிலாகொட்டையை கொடுத்துவிட்டு உபசரிக்கிறார்.  பின், உள்ளே பார்த்து, “கோமளம்மா, இங்கே யார் வந்திருக்கிறார்கள் பாருங்கள்,” கோமளம் காதிற்கு விழும்படி கூப்பிடுகிறார்.  சாரங்கபாணி பெண்ஜாதியை வாங்கள் போங்கள் என்று மரியாதையாய்ப் பேசினது அச்சரியமாக இருக்கிறது கதைகொல்லிக்கு. 

எதிரில் வந்த கோமளம், கதைசொல்லி யைப் பார்த்து அவர் மனைவியை எப்படி அழைக்கிறார் என்று கேட்கிறாள்.  அடி போடி என்று அழைப்பதாகக் கூறுகிறார்.  “இனிமேல் அப்படி அழைக்காதீர்கள்?” என்கிறாள் கோமளம்.  ‘பெண்மணிகளே.  சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்?’ என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரம் அச்சடித்திருக்கிறாள் கோமளம்.  அந்தத் துண்டுப் பிரசுரத்தில் 40, 50 பிரதிகள் கதைசொல்லியிடம் விநியோகம் செய்ய கொடுக்கிறாள்.  ஏற்கனவே அவர் மனைவியிடமும் கொடுத்திருக்கிறாள். 

வீட்டிற்கு வந்தவுடன் கதைசொல்லியுடன் அவர் மனைவி நடத்தும் உரையாடல் நகைச் சுவை ததும்ப. 

“இனிமேல் அடிபோட்டுக் கூப்பிடக்கூடாது,” என்று மிரட்டுகிறாள் அவர் மனைவி. 

ஆனால் கோமளம்மாள் சொல்வதிலும் முழுதும் நியாயம்தானே என்கிறார் கதைசொல்லி.

இதில் உள்ள 23 கதைகளையும் தானே சொல்வது போல் நகர்த்திக்கொண்டு போகிறார் எஸ் வி வி.  சம்சாரத்திற்குத் தேக அசௌக்கியம் என்ற கட்டுரையில் மனைவியின் தேக அசௌக்கியதால் ஏற்படும் பாதிப்பை நகைச்சுவையாக சொல்லி சென்றிருக்கிறார். 

கிராம அனுபவம் என்ற கதையில் துக்கம் விஜாரிக்க ஒரு கிராமத்திற்குப் போய் படுகிற அவஸ்தையை விவரிக்கிறார்.  இது மாதிரியான அனுபவங்கள் நமக்கும் ஏற்பட்டிருக்கும்.  

கிறிஸ்துமஸ் என்ற தலைப்பில் உள்ள கதையில் வீட்டிற்கு எதிர்பாராதவிதமாய் விருந்தாளிகள் வந்திருந்து தொந்தரவு செய்வதுபோல் கதை. 

அசட்டுப் புளுகு என்ற கதையில் எதாக இருந்தாலும் புளுகு சொல்லிக்கொண்டிருப்பான்.  மத்தியானம் டிபன் சாப்பிட்டீர்களா? என்று மனைவி கேட்டால், டிபன் சாப்பிட்டிருப்பான் ஆனால் அவளிடத்தில் இல்லை என்று புளுகுவான்.  எதற்கெடுத்தாலும் புளுகுவதுதான் அவன் வேலை.  கதையைப் படித்தப்பிறகு நானும் அப்படி இருக்கலாமென்று தோன்றுகிறது.

விருந்துண்ணல் என்ற கதையல் வீட்டில் சாப்பிடுவது பற்றியும், ஓட்டல்களில் சாப்பிடுவதைப்பற்றியும், மற்ற நண்பர்கள் வீடுகளில் சாப்பிடுவதைப்பற்றுயம் நகைச்சுவை உணர்வோடு படிப்பவரை கவர்ந்திழுக்கிற நடையில் வெளிப்படுத்துகிறார். 

இதையெல்லாம் எப்படி விவரிக்கிறது என்று தெரியவில்லை ஒருவர் புத்தகத்தை எடுத்துப் படித்தால்தான் ரசிக்க முடியும்.   நமக்கும் இதுமாதிரி எழுத வேண்டுமென்று  தோன்றுகிறது. 

அல்லயன்ஸ்தான் எஸ்.வி.வி கதைகளை வெளியிட்டுள்ளார்கள்.  எஸ் வி வி எழுதிய மற்ற நூல்களையுû; வாங்கிப் படிக்க வேண்டும்.

இருபத்தேழாம் நாள் வாசிப்பனுபவம் (28.09.2019)



அழகியசிங்கர்

சங்கரராமின் காணிக்கை என்ற சிறுகதைத் தொகுப்பு தற்செயலாக என் கண்ணில் தட்டுப்பட்டது.  உடனே அதைப் படித்து அதைப் பற்றி அபிப்பிராயம் சொல்ல வேண்டுமென்று தோன்றியது.  சங்கரராம் புத்தகமெல்லாம் தேடத் தொடங்கியபோது சங்கரராமன் நாவலான காரியதரிசி என்ற நாவல் கிடைத்தது.  அது கலைமகள் வெளியீடாக வெளிவந்துள்ளது.  முதல் பதிப்பாக அந்தப் புத்தகம் 1949ஆம் ஆண்டிலும் இரண்டாம் பதிப்பாக 1964ஆம் ஆண்டு வந்துள்ளது.

காலையில் நடராஜனுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர்தான் மண்ணாசை என்ற சங்கரராமின் நாவல் ஒன்றையும் குறிப்பிட்டார்.

சிறுவாணி வாசகர் மையம் மூலம் 2018 இந் நாவல் என் கைக்கு வந்திருக்கிறது.  திரும்பவும் தேடிப் பார்த்தபோது என் புத்தகக் குவியலில் இது கிடைத்தது.  அதேபோல் லயம் வெளியீடாக வந்த புத்தகமும் கிடைத்தது.

மண்ணாசை என்ற நாவல் பிரபலமாக இருந்தாலும் என்னால் சங்கரராம் என்ற பெயருடன் அதை யோசிக்கத் தோன்றவில்லை. மேலும் காரியதரிசி என்ற நாவலையாவது அல்லது மண்ணாசை என்ற தலைப்பில் உள்ள நாவலையாவது படித்திருக்க வேண்டும்.  நான் இதுவரை படித்ததில்லை. இனிமேல்  அவற்றைப் படித்துவிட்டு பிறகு எழுதுவதாக உத்தேசித்துள்ளேன்.

காணிக்கை என்ற சிறுகதைத் தொகுப்பைப் பார்க்கலாம்.  இதில் 11 கதைகள் அடங்கிய தொகுப்பு.  மண்ணாசை என்ற நாவலில் கால சுப்ரமண்யம் சங்கரராமின் பல சிறுகதைத் தொகுப்புகளைக் குறிப்பிட்டுள்ளார்.  அதெல்லாம் இப்போது கிடைக்குமாவென்று தெரியவில்லை.   மேலும் அவர் குறிப்பிடும்போது, பாசம், பொன் படைத்த மனம், தண்டனையே வெகுமானம், பரிசலோட்டி, ரத்தவாகம், பணம் பாஷாணம், கடவுளுக்கு வைத்தியம் போன்ற சில சிறுகதைகள் மட்டும் இலக்கியத்தரம் வாய்ந்தவை என்றும் மற்றெல்லாம் வெகுஜன பத்திரிகைக் கதைகள் என்பதுபோல் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கருத்துப்படி பார்த்தால் நான் படித்திருக்கும் காணிக்கை யில் உள்ள கதைகள் அனைத்தும் வெகுஜன இதழ் கதைகளாகத்தான் தோன்றுகின்றன. முதலில் இந்தக் கருத்தை ஏற்கவில்லை.  ஆனால் சங்கரராமன் கதைகள் இப்போது படிக்க எப்படி உள்ளன என்ற குறிக்கோளுடன்தான் படித்தேன். எல்லாவற்றையும் என்னால் படிக்க முடிகிறது.  ஆர்ப்பாட்டமில்லாத நடையில் வெகு சுலபமாகக் கதைகளை எழுதிச் செல்கிறார்.  முப்பது இறுதியில் அவர் தமிழில் கதைகள் எழுதி வருவதாகத் தெரிவதாக கால சுப்பிரமணியன் குறிப்பிடுகிறார்.

கிட்டத்தட்ட 1940களிலிருந்து சங்கரராம் கதைகள் வெளிவருவதாகக் கொள்ளலாம்.  எல்லாக்  கதைகளும் இப்போது வாசிக்கும்போது எப்படி தோன்றுகிறது?  காணிக்கை என்ற தொகுப்பில் உள்ள கதைகளை எந்த ஆண்டில் எழுதி உள்ளார் என்ற குறிப்பும் எதுவும் என் புத்தகத்தில் இல்லை.

1978ஆம் ஆண்டு பழனியப்பா பிரதர்ஸ் இந்தப் புத்தகத்தை அச்சடித்துள்ளார்கள்.  இன்னும் கூட அங்கு இந்தப் புத்தகப் பிரதி விலைக்குக் கிடைக்கலாம்.  விலை ரூ.4 தான்.  வாசகர்களைப் பிடித்து இழுப்பதுபோல் ஒரு நடையில்  கதைகளை சங்கரராம்  ஆரம்பிக்கிறார்.  உதாரணமாக:

காணிக்கை என்ற கதையின் ஆரம்ப வரிகளைப் பார்ப்போம்

.’வாசுதேவனும் பத்மாவதியும் ஒருவரையொருவர் மனப்பூர்வமாக விரும்பி மணந்துகொண்டவர்கள்.  ஊரே கண் போடும்படியான தம்பதிகளாக அவர்கள் அமைந்தனர்.’

இவ்வாறு ஆரம்பிக்கும் போது நமக்கு உடனே கதையைப் படிக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாகிறது.  இந்தக் கதை மட்டுமல்ல பெரும்பாலான கதைகளில் துடிப்பான ஆரம்ப வரிகள்.  எது கடமை என்ற கதையை எடுத்துக்கொள்வோம்.

‘பகல் சுமார் பன்னிரண்டு மணி இருக்கும். கடுமையான வெயில்.  பெரிய குளத்திலிருந்து கோடைக்கானலுக்குச் செல்லும் காட்டுப்பாதையில் காளியம்மாள் வந்து கொண்டிருந்தாள்.’

கிட்டத்தட்ட எல்லாக் கதைகளும் நாலைந்து பக்கங்களுடன் முடிந்து விடுகின்றன.   ஆபாசமாக எழுதப்படவில்லை.   கதைகளைப் படிக்கும்போது அந்தக் காலத்து மனசாட்சியைப் படம பிடித்திருப்பதுபோல் தோன்றுகிறது.

மனம் ஒரு புதிர் என்ற தொகுப்பிலுள்ள கடைசிக்கதையை எடுத்துக்கொள்வோம்.  விநாயத்திற்கு பதினைந்து வயதுதான்.  அவனை திருவண்ணாமலையில் வீடு கட்டியிருக்கும் அக்காவின் வீட்டு கிரஹப் பிரவேசத்திற்கு அனுப்புகிறாள் அவன் தாய்.  வண்டிச் செலவு போக தனியாக ரூ 100 பணம் கொடுத்து அனுப்புகிறாள்.  அவள் அக்காவிற்கும் கணவருக்கும் புத்தாடைகள் வாங்கிக்கொடுக்க.

பஸ் ஒரு இடத்தில் நிற்கிறது.  அங்குள்ள ஓட்டலில் சாப்பிட்டு வரும்போது நூறு ரூபாய் பணத்தை விட்டுவிடுகிறான் விநாயகம்.  அவ்வளவுதான் துடியாய் துடித்துப் போய்விடுகிறான்.  என்ன செய்வது என்று தெரியவில்லை. தற்கொலை பண்ணிக்கொள்ளலாமா என்றும் யோசிக்கிறான்.  அம்மா வீட்டிற்கும் அக்கா வீட்டிற்கும் போக முடியாத நிலை.  பஸ் பயணத்தை ரத்து செய்துவிடுகிறான்.

யார் அந்தப் பணத்தைத் திருடினார்களோ அந்தப் பணமே திரும்பவும் கிடைப்பதுபோல் நாடகம் ஆடுகிறார்கள்.  விநாயகத்திற்கு பணம் திரும்பவும் கிடைத்த மகிழ்ச்சி.  வருகிற இன்னொரு பஸ்ஸில் திருவண்ணாமலைக்குக் கிளம்புகிறான்.  பணத்தை எடுத்துக்கொண்டவன் மனம் மாறி திரும்பவும் விநாயகத்திற்கு பணம் கிடைக்கும்படி செய்கிறான் இதுதான் கதை.

‘ஆனால் இந்தக் கதையின் முடிவில் ஒரு வரி வருகிறது.  மனம் ஒன்றுதான். ஆனால் அதற்கு இரண்டு குணமா? இது ஒருபுதிர்தான்.’

திருட்டைப் பற்றி இரண்டு மூன்று கதைகள் இத் தொகுதியில் வருகின்றன. பணம் இல்லாதவனிடம்தான் பணம் பறிபோகிற மாதிரி கதைகளில் வருகின்றன.

தனிப்பிறவி என்ற கதையும் அப்படித்தான்.  திருடுப் போவதைப் பற்றி கதை.

‘ஆறுமுகத்துக்குச் சுமார் முப்பத்தைந்து வயது இருக்கும் சிறுவயதிலிருந்து அவன் கற்றுக்கொண்ட தொழில், தென்னைமரம் ஏறுவது ஒன்றுதான்.ý என்று ஆரம்பிக்கிறது கதை.  உடனே கதையை கடகடவென்று படிக்கத் தோன்றுகிறது.   ரேஷன் அரிசி வாங்கச் செல்லும்போது ஆறுமுகத்தின் மனைவி தனம் ஐந்து ரூபாய் பணத்தைத் தொலைத்துவிடுகிறாள்.  அன்றைய காலத்தில் ஐந்து ரூபாய் பணம் பெரிய தொகை.  அங்கு குப்பன் என்கிறவன் பரிதாபத்துடன் பணத்தைத் தொலைத்த தனத்தைப் பார்க்கிறான்.  அவள் அவன் அக்கா போல் தோன்றுகிறாள். அவளுக்கு உதவி செய்ய அவன் பணத்தையே ஒரு நாடகமாடிக் கொடுத்து விடுகிறான். இதுதான் கதை.  முன் கதைச் சுருக்கமாக இத் தொகுதியில் உள்ள கதைகள் அனைத்தையும் விவரிப்பது வேண்டாமென்று தோன்றுகிறது.

கடவுளுக்குக் காணிக்கை அளிப்பதால் தீராத நோய் தீர்ந்து விடும் என்பதுபோல் சங்கரராமிற்கு நம்பிக்கை இருக்கிறது.  அதன் அடிப்படையை வைத்து இரண்டு கதைகள் எழுதியிருக்கிறார்.   எது எப்படி இருந்தால் என்ன? கதையின் வடிவம் பிடித்துப் போய் விடுகிறது.  படிக்க வேண்டுமென்ற எண்ணத்தைத் தூன்டுகிறது.

இந்த சிறுகதைத் தொகுப்பை வாசித்தவுடன்தான் அவருடைய காரியதரிசி என்ற நாவலையும் மண்ணாசை என்ற நாவலையும் வாசிக்க வேண்டுமென்று எடுத்து வைத்திருக்கிறேன்.  கூடிய சீக்கிரம் வாசித்துவிடுவேன் என்று நினைக்கிறேன்.

இருபத்தாறாம் நாளின் வாசிப்பனுபவம் (27.09.2019)



அழகியசிங்கர்

க நா சுப்ரமண்யம் நாவலான ‘பெரிய மனிதன்’ புத்தகத்தைப் படித்து முடித்தேன்.  85 பக்கங்கள் கொண்ட புத்தகம். ஆனால் அவ்வளவு எளிதாகப் படித்துப் புரிந்துகொள்ள முடியாத நாவல் இது.

குறைவான பக்கங்களைக் கொண்ட நாவல்களை க நா சு எழுதித் தள்ளியிருக்கிறார்.  என் கையில் இந்தப் புத்தகம் பல ஆண்டுகளாக இருந்தாலும் படிக்கத் துணியாத புத்தகமாக இது இருந்தது.  க நா சு நாவல்களைப் படிக்கும்போது நாம் வேற ஒரு நிலைக்குத் தயாராக வேண்டும். நாவல் மூலம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பெரிய மனிதன் என்ற இந்த நாவலில் யார் பெரிய மனிதன் என்ற கேள்வியை எழுப்புகிறார்.  எப்படிப்பட்டவர்கள் பெரிய மனிதனாக மாறுகிறார்கள் என்ற ஐயமும் எழுகிறது.  சமூகத்தில் இன்றுள்ள நிலையில், தவறு செய்யாமல் பொருளாதார ரீதியில் முன்னேறவும் முடியாது என்கிறார் க.நா.சு.  அவர் கூற்று இன்றுவரை உண்மைதான். 

பெரிய மனிதனாக இருக்க வேண்டியவன் தவறு செய்யாமல் பொருளாதார ரீதியில் முன்னேறவும் முடியாது.  தவறு செய்யலாம் தப்பித்துக்கொள்ளலாம் என்கிற பொருளாதார யுகத் தத்துவம் இருக்கிறதே, அது பயங்கரமானது என்கிறார் க நா சு.  நாம் பார்க்கிறோம் இன்று கூட இது உண்மையாக இருக்கிறது. 

சமுதாயத்தில் பெரிய மனிதனாக அறிமுகம் ஆகிறவர்களெல்லாம் அயோக்கியனாக இருக்கிறான் என்ற தத்துவத்தை க நா சு 1959 ஆண்டிலேயே கண்டுபிடித்து ஒரு நாவல் எழுதியிருக்கிறார்.

இந்த நாவலில் நாத் என்பவன் ஒரு சுயசரிதமாக டைரி குறிப்பாக எழுதுகிறான்.  உண்மையில் அவன் எழுத்தாளன் இல்லை.

இந்த நாவலில் ஒருவர் 25 அல்லது 30 பக்கங்கள் படித்து மீண்டு வந்தால்தான் மேலும் படிக்க முடியும்.  முதல் 30 பக்கங்களில் இது கட்டுரையா நாவலா என்பது தெரியவில்லை.  கட்டுரை மாதிரி யோசித்துப் பார்த்தால் கட்டுரை மாதிரியும் தெரியவில்லை.

ஒரு நாவல் எப்படியும் எழுதலாம் என்பதற்கு இந்த நாவல் உதாரணம்.  படிக்கிறவர்களின் ஆர்வத்தைக் கட்டுடைத்தல்தான்  இந்த நாவல்.    

மிஸ்டர் நாத் என்பவனுக்கு 45 வயது முடிந்து  விடுகிறது.  தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி யோசித்துப் பார்க்கிறான்.  எல்லோரும் குறிப்பிடுவதுபோல் சமூகத்தில் அவன் பெரிய மனிதன்.  பெரிய மனிதனாகவே எப்போதும் இருப்பதற்கு அவன் தவறு செய்து விடுகிறான்.  இந்த 46வது வயதில்தான் அதைப் பற்றி யோசிக்கிறான்.

அவன் மனைவியின் பெயர் மீனாட்சி.  அவள் ஏற்கனவே திருமணமாகி விதவை ஆகிவிட்டாள்.  அவளுக்கு ஏற்கனவே முதல் கணவன் மூலம் ஒரு பையன் இருக்கிறான்.  இருந்தும் அவளைத் துணிந்து திருமணம் செய்து கொள்கிறான் நாத்.  

மீனாட்சியைப் பற்றிக் குறிப்பிடும்போது இப்படிச் சொல்கிறான் நாத்.  

‘நான் அவளை (மீனாட்சியை) மணம் செய்துகொண்டது காதலால் அல்ல.  வேறு ஏதோ காரணத்தினால்தான் என்பதை அவள் ஊஹித்துக் கொண்டிருக்கலாம்.  அதனால் தான் அவளுக்கு என்னுடன் வாழ்ந்த வாழ்வு சௌகரியமான வாழ்வாக இருந்ததே தவிர, உண்மையில் இன்பம் அளிப்பதாக இல்லை.’

இந்த இடத்தில் க.நாசு நாத் பாத்திரம் மூலம் பெண்களின் சுபாவத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். 

‘பெண்கள் சுபாவத்தில் இரண்டு வகையுண்டு.  ஒரு வகையினர் எல்லா விஷயங்களையும் உரக்க வாய்விட்டுப் பேசியே தீர்த்துக் கட்டிவிடுவார்கள்.  வார்த்தைகளுக்கு அடங்காத விஷயங்களைக் கண்ணீரால் கொட்டித் தீர்த்து விடுவார்கள்.’ 

நாத்திற்கு மீனாட்சி மூலம் பிறந்த குழந்தைகளில் மூத்தவள் மைதிலி, இரண்டாவது ராஜாராமன் என்கிற பையன், மூன்றாவது ஒரு பெண்.  நளினிக்கு வயது பதினாறுதான் ஆகிறது.  அதற்குப்பின் இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்து விட்டன.  அதற்குப் பிறகு பிறந்தவன் ராமநாதன்.  மைதிலி, ராஜாராம் பற்றிய குறிப்புகள்தான் இந்த நாவல் முழுவதும் வருகிறது. மற்ற பிள்ளைகளான நளினி, இராமநாதனை பின்னால் குறிப்பிடப்படவில்லை.   அதேபோல் மீனாட்சி முதல் கணவன் மூலம் பிறந்த பையன்  வினாயகத்தை நாத்தால் சரிவர அறிந்துகொள்ள முடியவில்லை.

மூன்று நிகழ்ச்சிகளை நாத் எழுதுகிறான் அவனுடைய சுய சரிதத்தில்.  முதல் நிகழ்ச்சி ஒரு தடவை பாரிஸ÷க்குப் பறந்து கொண்டிருக்கும்போது விமானத்தில் ஏதோ பழுது ஏற்பட்டு, நாத்தும் இன்னொருவரும் மோதிக்கொண்டு விழுந்து கிடக்கிறார்கள்.  அவர்கள் இருவருக்கும் சொற்பக் காயங்கள் மட்டுமே.  அவர்களுடன் பயணம் ஆன இரண்டு பயணிகள் அந்த இடத்திலேயே இறந்து விட்டார்கள்.  எத்தனையோ தடவைகளில் ஆச்சரியமாக உயிர் தப்பியது என்பது தன் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை அறிவுறுத்தப்பட்டதாக நினைக்கிறான்.

இரண்டாவது நிகழ்ச்சி.  ஒரு தடவை நாத்தின் பணம் ஒரு சினிமா எடுக்கப் பயன் பட்டது.  இந்த மாதிரி சந்தர்ப்பத்தை நாத்தின் தகப்பனார் எப்படிப் பயன்படுத்தி இருப்பார் என்பதை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இந்தப் பணத்தை ஒன்றுக்கு ஒன்றரையாகப் பெருக்குவதற்குத் தவிர. இந்த முயற்சி எதனாலும் பயன்படப் போவதில்லை என்று நினைக்கிறான் நாத்.

ஒரு பெரிய மனிதர் வீட்டுப் பெண் காரியதரிசியாக நாத்திற்கு இருந்தாள்.  அவள் முத்தப் பெண் மைதிலி மாதிரி இருந்தாள்.  அவளை நாத் தன் பெண் போல் நடத்தத் தயாராய் இருந்தான்.  அந்தப் பெண் வேறுவிதமாக நினைத்தாள்.  இரண்டு பங்கு வயதான நாத்தை தன் காதலனாக அங்கீகரிக்க அவள் தயாராக இருப்பதுபோல் இருந்தது.  அதனால் அவளை வீட்டிற்கு அனுப்பி விட்டான் நாத்.  அவனுடைய பாங்க் பணத்திற்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம். 

வியாபாரம் விருத்தி அடைந்து வரும் காலத்தில் நாத்தின் வாழ்க்கையில் ஒரு முட்டாள் குறுக்கிட்டான்.  அவனை முட்டாள் என்று சொல்வது தவறு.  அவன் மகா புத்திசாலி. 1950 ல் செய்ய வேண்டிய காரியத்தை 1935 லேயே செய்யச் சொல்லி வற்புறுத்துவான்.  அவன் சண்டைக்காரன் பிடித்த பிடியை லேசில் விட மாட்டான்.  டைரக்டல் போர்டில் தொல்லை கொடுப்பான்.  அவனைத் தீர்த்துக் கட்ட வேண்டுமென்று நினைத்துத் தீர்த்துக் கட்டிவிடுகிறான்.  நாத் பற்றி யாருக்கும் சந்தேகம் வரவிலலை.  கொலை செய்ததை ருஜ÷ப்படுத்த முடியவில்லை.  அன்றிலிருந்து மீனாட்சி நாத்திடமிருந்து ஒதுங்கி நின்று வாழத் தொடங்கினாள்.  நாத்தின் வாழ்க்கையில் அன்பு என்கிற அம்சம் சிறிதும் இல்லாமல் போனதற்கு அது ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாமென்று நினைக்கிறான்.

இந்த 45வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நாத் தன் வாழ்நாளில் குறுக்கிட்ட சீனுவாசனை அப்புறப்படுத்திய நிகழ்ச்சியை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறான்.  அவனுக்கு உறுத்தலாக இருக்கிறது.   அதற்குப் பிராயச்சித்தம் செய்ய வேண்டுமென்று தோன்றுகிறது.  

அந்த சீனுவாசனுக்கு ஒரு பையன் இருக்கிறான்.  நாத்தின் பெண் மைதிலிக்கு திருமணம் செய்து வைத்துவிடலாமென்று நினைக்கிறான்.   அவ்வாறு செய்துவிட்டால் கொலைகாரன் என்ற உணர்ச்சி தனக்குப் போய்விடும் என்று நினைக்கிறான் நாத்.  இப்படி யோசிக்கும்போது அவன் மனது நிம்மதி அடைகிறது.

தொடர்ந்து கவனமாக இந்த நாவலை ஒருவர் வாசித்துக்கொண்டிருக்க வேண்டும்.  மனசாட்சியைத் திருப்பிப் பார்க்கிற ஒரு நிகழ்வாக 46வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிற நாத்திற்குத் தோன்றுகிறது. 

இந்த நாவல் கைப்பிரதியாக இருக்கும்போது ஒரு நண்பரிடம் படிக்கக் கொடுத்திருக்கிறார் க நா சு.  üஇது ஒரு மனிதக் குணத்தைத் தகர்க்கும் கதை,ý என்று நண்பர் கூறியிருக்கிறார்.  க.நாசு அந்த நண்பரிடம், üஅப்படி இருந்தால் அது இக்காலத்து நிலையைப் பூரணமாகப் பிரதிபலிப்பதாக ஆகும்ý என்று கூறி உள்ளார்.

குறைவான பக்கங்கள் ஆனால் அதிக கனமான ஒரு விஷயத்தைக் கையாண்டுள்ளார்.   

திருவல்லிக்கேணியில் உள்ள வேல் புத்தக நிலையத்திலிருந்த இந்த நாவல் முதல் பதிப்பாக 1959ல் வெளிவந்துள்ளது.  அப்போது விலை : ரூ.1.50.

இருபத்தைந்தாம் நாளின் வாசிப்பனுபவம் (24.09.2019)

அழகியசிங்கர்

தொடர்ச்சியாக சின்ன அண்ணாமலை புத்தகமான சொன்னால் நம்ப மாட்டீர்கள் புத்தகத்தை ஒரு வழியாகப் படித்து முடித்துவிட்டேன்.   இது ஒரு சுயசரிதம்.   தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை வரிசையாக அடுக்கிக் கொண்டு போகிறார்  பல பெரிய மனிதர்களுடன் அவருக்கு சவகாசம்.  கல்கி மீது அளவற்ற நம்பிக்கை.  நட்பு.  முதலில் குறிப்பிட்டமாதிரி ஒரு காரையே கல்கி அவர்கள் சின்ன அண்ணாமலைக்கு வழங்கி விடுகிறார்.

காங்கிரஸ், காந்தி, கல்கி, ராஜாஜி என்று சுற்றிச் சுற்றி வருகிறார்.  இதைத் தவிர மற்ற விரோத கட்சிகளுடன் கூட நட்புடன் பழகுபவர்.  ம பொ சியின் அபிமான நண்பர்.   1946ஆம் ஆண்டு இவர் ஒரு பத்திரிகை ஆரம்பிக்கிறார்.  வெள்ளி மணி என்று பத்திரிகையின் பெயர்.  குமுதம் பத்திரிகையும் அப்போதுதான் துவங்கப்பட்டது.  வாரம் ஒரு முறை வெள்ளி மணி பத்திரிகை வெளிவருகிறது.  அப்போது குமுதம் கூட வாரம் ஒரு முறை வரவில்லை. ஆனால் ஆனந்தவிகடன், கல்கி முதலிய பத்திரிகைகளைப் பார்த்துக்கொண்டு தீபாவளி மலர் தயாரிக்கிறார்.  அதில் சறுக்கி விழுகிறார்.  தீபாவளி மலர் விற்பனை ஆகவில்லை.  ஏகப்பட்ட பணம் நஷ்டம் ஏற்பட்டு விடுகிறது.  அதன் காரணமாகப் பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை.

பம்பாயில் வகுப்புக் கலவரம் நடைபெறுகிறது.  சினிமா பார்த்துவிட்டு சின்ன அண்ணாமலை அவர் தங்கியிருக்கும் மாதுங்காவிற்குப் போக நினைத்து ஆட்டோவைக் கூப்பிடுகிறார்.  எந்த ஆட்டோகாரனும் வரப் பயப்படுகிறான். கடைசியில் ஒரு கார்காரனிடம் கெஞ்சிக் கூத்தாடி வரும்படி கேட்டுக்கொள்கிறார்.  அவனிடம், üநானும் ஒரு இந்து.  நீயும் ஒரு இந்து.  உதவி செய்ய வேண்டாமா?ý என்கிறார். “ஆமாம். இந்துவிற்கு இந்து உதவி செய்ய வேண்டும் ?” என்று அவரைக் கொண்டு போய் மாதுங்காவில் விடுகிறான்.  கொண்டு போய் விட்டவுடன், சொல்கிறான், “சார், நான் இந்துவல்ல, ஒரு முஸ்லிம்,” என்கிறான்.  மேலும், ‘உண்மையில் முஸ்லிம் யாருக்கும் தீங்கு செய்யக் கூடாதென்பது குரான் வாக்கு,’ என்கிறான். சின்ன அண்ணாமலை கல்லாய் சமைந்து நிற்கிறார்.

 இப்படி ஏகப்பட்ட அனுபவங்கள்.   திராவிடக் கழகத்தினரின் அட்டகாசம் எல்லை மீறி போய்விடுகிறது.  சின்ன அண்ணாமலையும், ம பொ சி அவர்களும் தான் மேடைக்கு மேடை திராவிடக் கழகத்தைக் கண்டிக்கிறார்கள். அதனால் அவர்கள் உயிர்களுக்கே ஆபத்தாகப் போய்விடும் போல் இருக்கிறது. இந்தப் புத்தகத்தில் காமராஜ் ராஜாஜி உரசலை மிக துல்லியமாக சின்ன அண்ணாமலை வெளிப்படுத்துகிறார்.   ராஜாஜி – காமராஜ் சண்டையில்தான், காங்கிரஸ் நாளாவட்டத்தில் பலவீனமடைந்தது.  தேசிய சக்திகள் குன்ற, தேச விரோத சக்திகள் பலமடைந்தன என்று குறிப்பிடுகிறார். இரண்டு முக்கியமான திரைப்படங்களை எடுக்க சின்ன அண்ணாமலை காரணமாக இருந்திருக்கிறார்.  1. கப்பலோட்டிய தமிழன் 2. வீர பாண்டிய கட்டபொம்மன்.  

‘இந்த இரண்டு திரைப்படங்களும் தமிழில் வெளிவர அஸ்திவாரம் நான்தான் என்பது பலருக்குத் தெரியாது.  அஸ்திவாரம் எப்போதும் கண்ணுக்குத் தெரியாது என்பது அனைவருக்கும் தெரியும்,’ என்று சின்னஅண்ணாமலை குறிப்பிடுகிறார். அதே போல் எம்ஜியாரின் திருடாதே என்ற படம் வருவதற்கு இவர்தான் காரணம்.  சரோஜாதேவி என்ற நடிகையை அறிமுகப்படுத்திய பெருமை இவருக்குச் சேரும். பெரியார் தந்த பத்து ரூபாய் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரையை ஒருவர் கட்டாயம் வாசிக்க வேண்டும்.  பெரியாரை சின்ன அண்ணாமலை தாக்கிப் பேசுவது வழக்கம்.  ஒருமுறை பெரியாரைப் போய்ப் பார்க்கிறார்.  பெரியார் இவர் தாக்கிப் பேசுவதை வரவேற்கிறார். மேலும் இவர் பேசுவதைக் கேட்க வேண்டும் என்று விரும்புகிறார்.  ராஜாஜி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி விடுகிறார். புதியதாக ஸ்வராஜ்யா என்ற கட்சி ஆரம்பிக்கிறார்.  சின்ன அண்ணாமலையை தன் கட்சியில் சேரும்படி ராஜாஜி வற்புறுத்துகிறார்.  சின்ன அண்ணாமலை அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.  

காங்கிரûஸ விட்டு வர முடியாது என்கிறார்.  அப்படியும் ராஜாஜியுடன் நட்புடன் இருக்கிறார்.   ராஜாஜி ஒருமுறை சின்ன அண்ணாமலை வீட்டிற்கு வருகிறார்.  அந்த சமயத்தில் சின்ன அண்ணாமலை டிபன் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.  பாதி சாப்பிட்டவுடன் எனக்காக எழுந்திருக்க வேண்டாம் என்கிறார் ராஜாஜி.   ‘தாங்களும் ஏதாவது சாப்பிடுவதாக இருந்தால் நானும் சாப்பிடுவேன்,ý’என்கிறார் சின்ன அண்ணாமலை.   ‘செட்டி நாட்டு இட்லி எனக்கும் இரண்டு கொடுங்கள்,’ என்கிறார் ராஜாஜி.   வாழை இலையைப் போட்டு இரண்டு இட்லி எடுத்து வைத்து அவர் மனைவி, ‘பிராமணர்கள் எங்கள் வீட்டில் சாப்பிட்டால் பெரும் பாவம் என்கிறார்களே?’  என்கிறார் அவர் மனைவி. அதற்கு ராஜாஜி, ‘சுத்தமான இடத்தில் சமையலாகும் எதையும் யாரும் சாப்பிடலாம்,’  என்கிறார். இந்த நிகழ்ச்சி சின்ன அண்ணாமலையும் ராஜாஜி எவ்வளவு நெருக்கமாக இருந்தார் என்பதைக் காட்டுகிறது.  

திடீரென்று ஒரு நாள் ராஜாஜி இறந்த செய்தியைக் கேள்விப்பட்டு அவரது சடலத்தைத் தரிசிப்பதற்கு அவசரம் அவசரமாக ராஜாஜி மண்டபத்திற்கு போகிறார் சின்ன அண்ணாமலை. அப்போது சின்ன அண்ணாமலை மனைவி உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்.  தானும் போய்ப் பார்க்கவில்லையே என்று அழுதுகொண்டு படுக்கையை விட்டு எழுந்திருக்கிறாராம்.  ராஜாஜியின் சடலத்தைத் தரிசிக்க வேண்டுமென்று தட்டுத் தடுமாறி எழுந்திருக்கிறார்.  அப்படியே கீழே விழுந்து விடுகிறார்.  ராஜாஜி போய் விட்டாரே என்று சொல்லியபடி அவர் உயிரும் போய் விடுகிறது. இந்தப் புத்தகம் முழுவதும் பல சம்பவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.  இந்தப் புத்தகத்தை முடித்தபின் எனக்குத் தோன்றிது சின்ன அண்ணாமலை எப்படி கூட்டத்தில் பேசுவார் என்பதைக் கேட்க வேண்டுமென்று தோன்றியது.  அதையெல்லாம் யார் பதிவு செய்திருக்கப் போகிறரர்கள்.  இந்தப் புத்தகத்தில் சொல்வதைப் போல இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டேன் என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள்.

துளி – 64 எங்கள் வீட்டுக் கொலுவில் காந்தி பொம்மை இல்லை..

அழகியசிங்கர்

நான் இந்த ஆண்டுதான் காந்தியைப் பற்றி அதிகமாகச் சிந்திக்கிறேன்.   சிந்திக்கச் சிந்திக்க எனக்கு பல விஷயங்கள் புரிகின்றன.   காந்தி யுகத்தைச் சேர்ந்த மனிதர்களுக்கு காந்தி ஒரு உகந்த மனிதர். ஒப்பற்ற தலைவர்.  எனக்கோ? காந்தியை இந்த வருடம்தான் படிக்கிறேன்.  இதற்கு முன்னால் கேள்விப்பட்டிருக்கிறேன். காந்தி என்னதான் எழுதியிருக்கிறார் என்று படித்தது கூட கிடையாது.  பள்ளிக்கூட வயதில் காந்தி சுயசரிதத்தை ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன்.  

ஆனால் காந்தியை முழுவதும் படிக்கவில்லை.  எனக்கு அக்டோபர் 2ஆம் தேதியைப் பிடிக்கும்.  அன்று ஒருநாள் அலுவலக விடுமுறை விட்டுவிடுவார்கள்.  அலுவலகக் கோரப்பிடியிலிருந்து தப்பிக்கும் நாள்.  ஆனால் இப்போதோ பதவி மூப்பு அடைந்து விட்டேன்.  எல்லாம் நாளும் அக்டோபர் 2தான்.  ஒரு முறை பெ சு மணி,  லா சு ரங்கராஜன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போனார்.  லா சு ரா  காந்தியைப் பற்றிய புத்தகங்களைப் படிக்கக் கொடுத்தார். நான் வாங்கிக்கொண்டு வந்தேனே தவிர, படிக்கவில்லை.  உடனே ஒரு புத்தகத்தை படிக்க முடியவில்லை என்றால் படிக்கவே தோன்றாது.  படிக்கவும் முடியாது. அது என்னைப் பொறுத்தவரை உண்மை.  

ஆனால் காந்தியைப் படிக்கவில்லை என்றாலும் அவரைப் பத்தி எழுதப்படுகிற எல்லாப் புத்தகங்களையும் வாங்கி வைத்துவிடுவேன். கண்ணில் காந்தி பட்டால் போதும் வாங்கி வைத்துவிடுவேன்.  காந்தி தர்ஷன் என்ற பெரிய புத்தகத்தை வாங்கி வைத்துவிட்டேன்.

ஜே கிருஷ்ணமூர்த்தி காந்தியைப் பற்றி உயர்வாகச் சொல்லவில்லை.  ஆனால் நான் கிருஷ்ணமூர்த்தி ரசிகன்.  அவருடைய சத்தியாகிரகத்தை அவர் கிண்டல் செய்திருக்கிறார்.  ஓஷோ காந்தியைப் பற்றிச் சொல்லும்போது அவர் சிக்கனமாக வாழ்வதற்கு ஏராளமாகப் பணம் செலவழிக்க வேண்டி உள்ளது என்கிறார்.  இன்னும் பலரும் காந்தியைப் பற்றி ஏதேதோ சொல்லிக்கொண்டு போகிறார்கள். 

ஒரு சமயம் சென்னைக்கு காந்தி வந்தபோது அவர் ரமணரை சந்திக்க விரும்பினார்.  ஆனால் சிலர் தடுத்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.  ரமணர் எந்த இடத்திற்கும் போகாமல் திருவண்ணாமலையிலேயே வசித்திருக்கிறார்.  ஆனால் காந்தி இந்தியாவில் எல்லா இடங்களுக்கும் சுற்றி மக்களை நேரிடையாகப் பார்த்துப் பேசியிருக்கிறார்.  ரமண ஆசிரமத்தில் இருக்கும் ஒரு அன்பர் காந்தியைப் பார்க்க ஆவலாக இருக்கிறார்.  ரமணர் அவரைப் போய்ப் பார்க்கச் சொல்கிறார்.  காந்தியைப் பற்றி உயர்வாக ரமணர் குறிப்பிடுகிறார்.

அதேபோல் காந்தியை பாரதி பார்ப்பதில் ஏதோ சரியில்லாதது மாதிரி தோன்றுகிறது.  காந்தியை இன்னும் நெருங்கிப் பழக பாரதிக்கு அனுமதி மறுத்து விட்டார்களென்று நினைக்கிறேன். 

காந்தி இருக்கும் மேடையில் சின்ன அண்ணாமலை பேசும்போது தமிழில் ஹரிஜன் பத்திரிகையைக் கொண்டு வர விருப்பம் தெரிவிக்கிறார். உடனே காந்தியிடமிருந்து அனுமதி கிடைத்துவிடுகிறது. 

காந்தியைப் பற்றி ஏராளமான தகவல்கள் இருக்கின்றன.  இவை எல்லாவற்றையும் ஒருவர் படித்துப் பார்க்கவேண்டும்.  அப்படிப் படிக்க முடியுமா என்பது தெரியவில்லை.  

இன்று காந்தி ஜெயந்தி.  என்னிடம் உள்ள பத்திரிகைகளில் காந்தியைப் பற்றி எந்தப் பத்திரிகையிலும் இல்லை.  ஏன் என்று தெரியவில்லை.  ஆனால் கணையாழி அக்டோபர் மாத இதழில் காந்தி படத்தை அட்டையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.  உள்ளே விவேக் கன நாதன் கட்டுரை உள்ளது.  அதேபோல் எல்லா தினசரிகளிலும் காந்தியைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதி உள்ளார்கள்.  வேற யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.  துக்ளக் இதழில் காந்தியைப் பற்றி ஒரு தகவலும் இல்லை. சோ ராமசாமி ஆசிரியர் பொறுப்பிலிருந்தால் எதாவது எழுதியிருப்பார்.  இந்த முறை சந்தியா பதிப்பகம் காந்தியைப் பற்றி ஐந்து புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இதை வரவேற்க வேண்டும்.  

1. அ பிச்சையின் üகாந்திய சுவடுகள்,ý 2. காந்தியின் இந்திய சுவராஜ்ஜியம்- தமிழில் ஈரோடு டாக்டர் ஜீவானந்தம் 3. கஸ்தூர்பா ஒரு நினைவுத் தொகுப்பு – ஆங்கிலத்தில் சுசிலா நய்யார் – தமிழில் பாவண்ணன் 4. மகாத்மா காந்தியும் பகத் சிங்கும் – எஸ் என் தத்தா – தமிழில் அக்களூர் ரவி 5. காந்தி படுகொலை – பத்திரிகைப் பதிவுகள் – தொகுப்பு: கடற்கரை மத்தவிலாச அங்கதம். 

நான் வீட்டிற்கு வந்து எங்கள் வீட்டில் வைத்திருக்கும் கொலுவைப் பார்த்தேன்.  அதில் காந்தி பொம்மை, பாரதி பொம்மை இல்லை. 

இதோ நான் உடனே அந்தப் பொம்மைகளை வாங்கி கொலுவில் சேர்க்க வேண்டும். 

இருபத்துநான்காம் நாளின் வாசிப்பனுபவம் (24.09.2019)



அழகியசிங்கர்

கடந்த சில தினங்களாக நான் சில புத்தகங்களை முழுவதும் முடிக்க முடியாமல் திணறுகிறேன்.  இரண்டு நாட்கள் எடுத்துக்கொள்கிறேன்.  இன்று நான் படிக்க எடுத்துக்கொண்ட புத்தகம். சொன்னால் நம்ப மாட்டீர்கள்.  சின்ன அண்ணாமலை எழுதிய புத்தகம்.  நான் இந்தப் புத்தகத்தை வாங்கிய தேதி. கிழமையைப் புத்தகத்திலேயே குறித்து வைத்திருக்கிறேன்.  வாங்கிய தேதி 05.10.2015 – திங்கட் கிழமை.  கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் முடிந்து விட்டன.

படிக்காமலேயே இந்தப் புத்தகத்தை வைத்திருக்கிறேன்.  இன்னும் பல புத்தகங்கள் பல ஆண்டுகளாகப் படிக்காமல் வைத்திருக்கிறேன்.  நான் படித்த புத்தகங்களில் பல படித்தும் மறந்து போயிருக்கிறேன்.  

கட்டாயம் படிக்க வேண்டுமென்ற நிபந்தனையின் (நானே ஏற்படுத்திக்கொண்டது). பேரில்தான் இந்தப் புத்தகங்களை எல்லாம் எடுத்து வாசிக்கிறேன்.  ஒரு புத்தகம் வாங்கினால் நாம் எப்போது வாசிக்கப் போகிறோம் என்பதில்தான் நம் கவனம் இருக்க வேண்டும். 

இன்று பலர் புத்தகம் வாங்குவதுமில்லை, படிப்பதும் இல்லை. ஜாலியாக இருக்கிறார்கள்.  என்னைப் பார்க்க வரும் உறவினர்கள் எல்லோரும் இவன் ஏன் புத்தகங்களைக் கட்டிக்கொண்டு அழுகிறான் என்று நினைக்கத் தோன்றும்.  ஆனால் அவர்கள் நினைப்பது போல் இல்லை.  வாழ்க்கையில் அவர்கள் எதையோ தவற விட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைப்பேன்.

சொன்னால் நம்ப மாட்டேன் புத்தகத்தில் நான் இதுவரை 110பக்கங்கள் படித்துவிட்டேன்.  இதுவரை படித்ததைப் பற்றி எதாவது சொல்வோம் என்றுதான் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.  இந்தப் புத்தகத்தில் பாரதி நிதி வரை 110 பக்கங்கள் படித்து விட்டேன்.  30 அத்தியாயங்கள் படித்து விட்டேன். இன்னும் 34 அத்தியாயங்கள் படிக்க வேண்டும்.  கிட்டத்தட்ட 82 பக்கங்கள் படிக்க வேண்டும். நாளை படித்துவிட்டு அதைப் பற்றியும் எழுதுகிறேன்.

முதல் அத்தியாயம் காந்தி தரிசனம் என்ற பெயரில் காந்தியைப் பார்த்த அனுபவத்தை எழுதுகிறார்.  கார் ஒன்று அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது.  அதில் மகாத்மாவை வைத்து ஊர்வலம் நடத்தப் போவதாகச் சொன்னார்கள். அதைக் கேள்விபட்டதலிருந்து சின்ன அண்ணாமலை பரபரப்புக்கு ஆளாகிறார்.  எப்படியாவது காந்தியைப் பார்க்க வேண்டுமென்று துடிப்பாக இருக்கிறார்.

காந்தி வந்து விட்டார்.  காரிலும் ஏறி உட்கார்ந்து விட்டார்.  ஆனால் கூட்டம்.  காந்திஜியின் முகம் தெரியவில்லை.  முதுகு மட்டும் தெரிந்தது. சட்டென்று காரின் காரியலில் ஏறி உட்கார்ந்துகொண்டு காந்திஜியின் முதுகைத் தொடுகிறார்.  காந்திஜி திரும்பிப்பார்த்துச் சிரிக்கிறார்.  உடனே ஒரு ஆப்பிளைக் கொடுத்து கன்னத்தில் செல்லமாகத் தட்டுகிறார்.  அதன்பின் அவர் பின்னுக்குத் தள்ளப் படுகிறார்.  காந்தி கொடுத்த ஆப்பிளைச் சுவைத்துச் சாப்பிடுகிறார்.  அன்றிலிருந்து சின்ன அண்ணாமலை காந்தியைப் பின்பற்றி வருவதாக எழுதியிருக்கிறார்.

பாட்டியின் சாபம் என்கிற இன்னொரு கட்டுரை உருக்கமாக இருக்கிறது. சின்ன அண்ணாமலையை தேவகோட்டைக்கு சுவீகாரம் விடுவதென்று அவர் பெற்றோர்களால் தீர்மானிக்கப்படுகிறது.  இந்த முடிவு பாட்டிக்குப்பிடிக்கவில்லை (தந்தையைப் பெற்றவர்).  விக்கி விக்கி அழுதபடி சின்ன அண்ணாமலையின் அப்பாவைப் பார்த்து சாபம் இடுகிறார்.  இனிமேல் ஆண் வாரிசே இல்லாமல் போகுமென்று.  அதேபோல் ஆகிவிடுவதாக சின்ன அண்ணாமலை குறிப்பிடுகிறார்.  அவர் அப்பாவை சேர்ந்த யாருக்கும் ஆண் வாரிசு இல்லாமல் போய் விடுகிறது. 

ஒவ்வொரு கட்டுரை முடிவிலும் சொன்னால் நம்ப மாட்டீர்கள் என்று குறிப்பிட்டு முடிக்கிறார்.  அதுதான் இந்தக் கட்டுரைகளின் விசேஷம்.  

டாக்டர் டி எஸ் எஸ் ராஜன் அவர்கள் ராஜாஜி மந்திரி சபையில் இருந்தபோது அவரைப் பார்க்கப் போகிறார் சின்ன அண்ணாமலை.  “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று டாக்டர் ராஜன் கேட்கிறார். “புத்தகம் போட்டுக்கொண்டிருக்திறேன்,” என்று பதில் சொல்கிறார் சின்ன அண்ணாமலை. 

“அது சரி சாப்பாட்டுக்கு என்ன பண்ணுகிறீர்கள்?” என்று கேட்கிறார் ராஜன்.  

“என் மனைவியின் நகைகளை விற்றுச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்,” என்று கூறுகிறார்.

மறுநாள் ராஜாஜி சின்ன அண்ணாமலை வீட்டிற்கு வந்து மனைவியிடம் இனிமேல் நகைகளை விற்பதில்லை என்று உறுதிமொழி வாங்கிக்கொள்கிறார்.  

கூட்டங்களில் பேசும்போது சின்ன அண்ணாமலை கல்கி எழுதும் தலையங்கக் கட்டுரைகளை மனப்பாடமாகப் படித்து விடுவார்.  பின் அதையே கூட்டங்களில் பேசப் பயன்படுத்துவார். கூட்டத்தில் பேச வேண்டுமென்ற மோகம் சின்ன அண்ணாமலைக்கு உண்டு.  ஒரு சமயம் ராஜாஜி  தேவகோட்டையில் பேசக் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. சின்ன அண்ணாமலை கெஞ்சி ராஜாஜி கூட்டத்தில் பேச அனுமதி வாங்கியிருந்தார்.  

ஆனந்தவிகடனில் எழுதிய கல்கியின் தலையங்கக் கட்டுரையை அப்படியே ஒப்பித்துப் பேசிவிட்டார் சின்ன அண்ணாமலை.  கூட்டத்தில் கரகோஷம்.  ராஜாஜி அன்புடன் சின்ன அண்ணாமலையைத் தட்டிக்கொடுத்து தைரியமாகப் பேசு என்று கூறி உள்ளார்.  எல்லோரும் பேசி முடித்தவுடன், ராஜாஜியின் பாதத்தைத் தொட்டு வணங்கியபோது, ‘நன்றாக மனப்பாடம் செய்திருக்கிறாய்,’ என்று பாராட்டி உள்ளார்.  சின்ன அண்ணாமலைக்கு சங்கடமாகப் போய் விட்டது, ராஜாஜி கண்டு பிடித்துவிட்டாரேயென்று.  

மேடையின் பின்னால் போய் அமர்ந்து கொள்கிறார் சின்ன அண்ணாமலை. அருகிலிருந்த ஒருவர், ‘நன்றாகப் பேசினீர்கள், இதையெல்லாம் எதில் படித்தீர்கள்?’ என்று கேட்டுள்ளார். ‘ஏன்?’ என்று வெலவெலத்துப் போய்க் கேட்கிறார்.  

‘யார் எழுதியது என்பது தெரியுமா?’ என்று கேட்கிறார். 

‘கல்கி எழுதியது,’ என்கிறார் சின்ன அண்ணாமலை.

‘கல்கியைத் தெரியுமா?’ 

‘தெரியாது. பார்த்ததில்லை.’

‘பார்த்தால் என்ன செய்வீர்கள்?’

‘பார்த்தால் நமஸ்காரம் செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன்.’

‘சரி என்னையே நமஸ்காரம் பண்ணுங்கள்?’ என்கிறார் கல்கி.

‘ஏன்?’

‘நான்தான் அந்த கல்கி.’

கல்கியின் திருக்கரங்களைப் பற்றி ஆனந்தக் கண்ணீர் வடித்தேன் என்கிறார் சின்ன அண்ணாமலை.   ராஜாஜியுடனும், கல்கியுடனும் உள்ள அவருடைய நட்பு கடைசி வரை வருகிறது.

இந்தப் புத்தகத்தில் கல்கி தந்த கார் என்ற அத்தியாயம் இருக்கிறது.  கல்கி சென்னையில் அடையாறு பங்களாவில் வசித்தபோது, தினமும் 4 மணிக்கு கல்கியைப் பார்க்கப் போவார் சின்ன அண்ணாமலை.  ஒருநாள் இரவு பத்து மணி மேல் ஆகிவிட்டது.  கல்கியிலிருந்து விடைபெற்றுப் போகும்போது, கல்கி சின்ன அண்ணாமலையைப் பார்த்து, ‘கார் எங்கே?’ என்று கேட்கிறார். ‘காரா? கார் ஏது?’ என்கிறார் சின்ன அண்ணாமலை.  

‘தினமும் மாம்பலத்திலிருந்து எப்படி வருகிறீர்கள்?’ என்று கல்கி கேட்க.

‘பஸ் மூலம்தான்.  தினமும் லஸ்வந்து பஸ் மாறி அடையாறு வருவேன்,’ என்கிறார் சின்ன அண்ணாமலை.

மைத்துனனைக் கூப்பிட்டு சின்ன அண்ணாமலையை காரில் கொண்டு போய் விடச் சொல்கிறார்.  அடுத்தநாள் வழக்கம்போல சின்ன அண்ணாமலை கல்கியைப் பார்க்கப் போகிறார்.  அவரை கீழே கூட்டிக்கொண்டு போய் போர்டு ஆங்கிலியா காரை கொடுத்து விடுகிறார். திகைப்பாகப் போய்விடுகிறது சின்ன அண்ணாமலைக்கு. ‘என்னிடம் பணம் இல்லை.  இந்த காருக்குப் பணம் கொடுக்க முடியாது.’ என்கிறார் சின்ன அண்ணாமலை.  

கல்கி சொல்கிறார் : ‘என் ஆப்த நண்பராகிய நீங்கள் பஸ்ஸிலும் நடையிலும் என்னைப் பார்க்க வருவதை நான் தெரிந்துகொண்டும் சும்மா இருந்தால் அந்த நட்பு உண்மை நட்பாகாது. இந்தக் கார் உங்களையும் என்னையும் தினம் சேர்த்து வைக்கும்,’

சொல்லும்போது அவர் கண்களில் நீர் பனித்தது.  ‘என் கண்களோ குளமாயின,’ என்கிறார் சின்ன அண்ணாமலை.  

‘என் தாய் இறந்தபோது கூட எனக்கு அழுகை பொங்கி வரவில்லை.  ஆனால் காந்திஜி இறந்தபோதும், கல்கி இறந்தபோதும் நான் விக்கி விக்கி அழுதேன்,’ என்கிறார் சின்ன அண்ணாமலை.    

திருவாடானைச் சிறையில் 1942ஆம் ஆண்டு  ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு 12 மணிக்கு போலீசார் சின்ன அண்ணாமலையை கைதி செய்கிறார்கள்.  

20000க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து திருவாடானை சப்-ஜெயிலுக்கு சின்ன அண்ணாமலையை விடுதலை செய்ய வந்து கொண்டிருக்கிறார்கள் என்று அதிகாரிகள் கேள்வி படுகிறார்கள்.  எல்லோரும் என்ன செய்யலாம் என்ன செய்யலாம் என்று சின்ன அண்ணாமலையிடமே ஆலோசனை கேட்கிறார்கள்.

சின்ன அண்ணாமலை யோசனைப்படி போலீஸôர் தங்கள் உடைகள் அனைத்தையும் கழற்றி அவர் இருந்த சப்ஜெயிலுக்கு முன்னால் போட்டார்கள்.  எல்லோரும் அவரவர் வீட்டிற்குப் போய் நிம்மதியாக இருக்கச் சொல்கிறார் சின்ன அண்ணாமலை.  

‘இந்தச் சிறையை உடைத்து உங்களை விடுதலை செய்ய வந்திருக்கிறோம்,’ என்கிறது கும்பல்.  ‘சரி அப்படியே செய்யுங்கள்?’ என்கிறார் சின்ன அண்ணாமலை.  அதன்படியே அவர்கள் கொண்டு வந்த கடப்பாரை முதலிய ஆயுதங்களால் சின்ன அண்ணாமலையை அடைத்து வைத்திருந்த சப்-ஜெயில் பூட்டை உடைத்து விடுதலை செய்கிறார்கள்.  

இது குறித்து சின்ன அண்ணாமலை இப்படி எழுதுகிறார் : üபட்டப் பகல் 12 மணிக்குப் பல ஆயிரக்கணக்கான மக்கள் சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தில் இம்மாதிரி சிறைக் கதவை உடைத்து ஒரு அரசியல் கைதியை விடுதலை செய்தது சரித்திரத்தில் அதுதான் முதல் தடவை.,ý என்கிறார். புத்தகம் தலைப்புப்படி சொன்னால் நம்ப மாட்டீர்கள்.  

இதுமாதிரி எத்தனையோ சம்பவங்களை விவரித்துக்கொண்டு போகிறார் சின்ன அண்ணாமலை.  படிக்க படிக்க இன்னும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.  இந்தப் புத்தகம் முழுவதையும் படித்து விட்டு இன்னும் எழுதுகிறேன்.  

இருபத்திமூன்றாம் நாளின் வாசிப்பனுபவம் (23.09.2019)



அழகியசிங்கர்

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் என்னால் முழுவதும் புத்தகம் படிக்க முடியவில்லை.  அவ்வளவு கெடுபிடி.  அதேபோல் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது.  ஒரு புத்தகத்தை முழுவதும் படிக்க முடியவில்லை.  நான் முதலில் ம பொ சியின் தமிழன் குரல் என்ற புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டிருந்தேன்.  அதைப் படிக்க ஆரம்பித்தவுடன் என்னால் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை படிக்க முடியாது.  அதனால் வேற புத்தகம் எடுத்துக்கொண்டேன்.  80 பக்கங்கள் அடங்கிய புத்தகம்.

நேற்று பாதிப் பொழுது நம்மவீட்டுப் பிள்ளை என்ற பேத்தலான படம் பார்த்தோம்.  கூட்டமோ கூட்டம்.  அதுவும் உதயம் தியேட்டரில் அந்தப் படம் பார்த்தேன்.  இனிமேல் உதயம் தியேட்டரில் மட்டும் படம் பார்க்கக் கூடாது என்று தோன்றியது.  காரணம் குடித்து விட்டு சினிமாவிற்கு வருகிறார்கள்.  அப்படி வருகிறவர்கள், அமைதியாகப் படம் பார்த்துவிட்டுப் போகலாம், ஆனால் கெட்ட வார்த்தையால் எல்லோரையும் பார்த்து சத்தம் போடுகிறார்கள். உதயம் தியேட்டர் நிர்வாகம் இது குறித்து ஒன்றும் செய்யவில்லை.  அந்த 3 மணி நேரததிற்கு பல புத்தகங்களைப் படித்து விட்டிருக்கலாம்.  என் நேரமெல்லாம் வீண்.

என்ன புத்தகம் படிப்பதென்று நான் தேடிக்கொண்டிருந்தேன்.  என் கையில் நவகாளி யாத்திரை என்று சாவி எழுதிய புத்தகம் கிடைத்தது.  ஆனாலும் அந்தப் புத்தகத்தை நேற்றே படித்து முடிக்க வில்லை.

இன்று காலையில்தான் படித்து முடித்தேன்.  மொத்தமே 80 பக்கங்கள்தான்.  க்ரவுன் அளவில் அந்தப் புத்தகம் உள்ளது.  கொஞ்சம் பெரிய எழுத்தில்தான் அந்தப் புத்தகம் அச்சடிக்கப்பட்டிருக்கிறது.

சாவி எழுதிய இந்தப் புத்தகத்திற்கு கல்கி முன்னுரை எழுதியிருக்கிறார். இதில் காந்தியின் மரணத்தை கல்கி தன் முன்னுரையில் பதிவு செய்திருக்கிறார்.  

‘காந்தி மகான் காலமாகி நாள் இருபது ஆகியும் கலக்கம் சிறிதும் நீங்கவில்லை.    உலகம் சுழன்றுகொண்டிருக்கிறது; வாழ்க்கை நடந்து ஆறுதலும் கொண்டிருக்கிறது. 

எனினும், ஜனவரி 30க்கு முன்பு இருந்ததுபோல் இப்போது ஒன்றுமில்லைý என்கிறார் கல்கி உருக்கமாக.

கல்கி பத்திரிகை சார்பாக நவகாளிக்குப் போகிறீர்களா என்று கல்கி சாவியைக் கேட்கிறார். உடனே ஒப்புக்கொள்கிறார்.  கல்கி உடனே நவகாளிக்குப் போவது எவ்வளவு ஆபத்தானது என்று விவரிக்கிறார்.  

‘காரியம் யோசிக்க வேண்டிய காரியம்தான்.  நவகாளி என்று சொன்னாலே அப்போதெல்லாம் உடம்பு நடுங்கிற்று.  உள்ளம் பதைத்தது.  மனிதர்கள் செய்வார்கள் என்று எண்ண முடியாத பயங்கரமான பைசாச் செயல்கள் அந்தப் பிரதேசத்தில் நடந்திருக்கினறன.  பத்திரிகைகளில் படிக்கும்போதே குலைநடுக்கம் உண்டாயிற்று.’ என்கிறார் கல்கி.

ஆனால் சாவி அவர் கட்டுரையில் அப்படி பயந்தபடி எழுதவில்லை.  காந்தி நவகாளியைப் பற்றி குறிபிட்டுருப்பதைப் பற்றி கல்கி எழுதியிருக்கிறார்.

“என்னுடைய இலட்சியங்களுக்குக் கீழ் வங்காளத்தில் கடும் சோதனை ஏற்பட்டிருக்கிறது.  இதற்குமுன் இத்தகைய ஒரு பெரும் சோதனையில் நான் ஈடுபட்டதில்லை.  இந்தப் பரீட்சையில் நான் தேறாமல் போனால் அஹிம்சா தர்மத்திற்குத் தோல்வியாகாது.  அஹிம்சைக் கொள்கையை ஸ்தாபிக்க நான் கடைப்பிடித்த முறைதான் தோல்வி அடைந்ததாகும்.  இப்போது நான் தோல்வி அடைந்தாலும் பிற்காலத்தில் தோன்றப் போகும் உத்தமர்களும், மகான்களும் இந்த முயற்சியில் வெற்றி பெறுவார்கள் என்பது நிச்சயம்,” என்று கூறியுள்ளார். 

காந்திஜி எப்போதும் பாடும் பஜனை பாட்டில் üஈசுவர அல்லா தேரே நாம்ý இந்த வரியை ஹிந்துக்கள் விரும்பவில்லை.  

ஆனால் ஜனவரி 30ஆம் தேதி காந்தி மகான் உயிர்த் தியாகம் செய்த பிறகு, எத்தனை லட்சக்கணக்கான ஹிந்துக்கள் மனதில் சிறிதும் தயக்கமோ கல்மஷமோ இல்லாமல், ஈசுவர அல்லா தேரே நாம் என்னும் பஜனை வரியை விம்மிக்கொண்டும் வாசித்துக்கொண்டும் பாடியிருக்கிறார்கள்

ஒருநாள் மாலை தியாகராயநகர் பனகல் பார்க்கைச் சுற்றி வேகமாக நடை போட்டுக் கொண்டிருக்கிறார் சாவி.  அவரைக் கவனித்த நண்பர்கள் சிலர், ஏன் இதுமாதிரி நடை போடுகிறீர்கள் என்று கேட்கிôர்கள்.  நவகாளிக்குப் போகிறேன் என்கிறார் சாவி.  அவர்கள் கேட்கிறார்கள்.  நவகாளிக்கு நடைப் பயணமாகப் போகிறார்களா என்று கேட்கிறார்கள்.  இல்லை இல்லை. 

காந்தியடிகளின் அடிச் சுவடுகளைப் பின்பற்றி நடக்கப் போவதாகவும். அவருடன் கூட நடக்கும்போது வேகமாக நடக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார் சாவி.

நவகாளிக்குப் போவதற்கு முன் தென்னிந்தியப் பிரமுகரான திரு சாரியார் வீட்டிற்குப் போகிறார் சாவி.  இரண்டு நாட்களுக்கு நவகாளியைப் பற்றி விஜாரிக்கிறார்.  இரண்டாவது பிரயாணத்திட்டத்தில் காந்திஜியை ஸ்ரீநகர் என்னும் கிராமத்தில்தான் சந்திக்க முடியும் என்ற விபரம் கிடைக்கிறது. 

ஒரு வழியாக அரை குறை ஹிந்தி பாஷையை வைத்துக்கொண்டு, ரயில் ஏறி, கப்பல் ஏறி, மூங்கில் படகு ஏறி, மோட்டார் ஏறி, மாட்டு வண்டி ஏறிக் கடைசியில் ஒரு விதமாக úஸôணாய் மூரி என்ற கிராமத்துக்குப் போய்ச் சேர்கிறார் சாவி.  அங்கிருந்து மகாத்மாஜி இருக்குமிடத்துக்குப் பத்து மைல் தூரம்.  அந்த இடத்துக்கு வண்டிப் பாதை இல்லை.  நடைபாதைதான். தனியாய் ஏகாந்தமாகப் பிரயாணம் செய்கிறார்.

சிரமப்பட்டு காந்தி மகாத்மாவைக் காண்கிறார் சாவி.  அது குறித்து, ‘என்னுடைய பிரயாண அலுப்பெல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல் அடியோடு மறைந்தன,’ என்கிறார்.  

மகாத்மாஜி காலையில் தடியை ஊன்றிக்கொண்டு வெளியே புறப்பட்டு விட்டார்.  வாசலில் நின்ற நாய் அவரை அணுகியது.  ‘அச்சா குத்தா’ என்று சொல்லி காந்திஜி அதை அன்புடன் தடவிக்கொடுத்தார்.  அந்த நாயைப் பற்றி  அங்கு சந்தித்த மாணிக்கவாசகம் என்ற சாவி நண்பர் விபரமாய் கூறினார். 

“நவகாளி ஜில்லாவிலுள்ள நோவாகாலா என்ற ஒரு கிராமத்தில் பெரிய ஹிந்துக் குடும்பம் இருந்தது.  அந்தக் குடும்பத்தில் ஆண் பெண்  அடங்கிய ஒன்பது பேர் இருந்தனர்.  அந்த ஒன்பது பேர்களும் வெறிகொண்ட காலிக் கூட்டத்தினரின் வாளுக்குப் பலியாகிக் கூண்டோடு போய்விட்டனர்.  அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தது இந்த நாய்.  மகாத்மாஜி மேற்படி கிராமத்துக்குப் போயிருந்த சமயம். இந்த நாய் அவரைப் பார்த்துவிட்டு ஓடி வந்து அவரைச்சுற்றிச் சுற்றி வந்தது. பின், தன்னுடைய குடும்பத்தார் வெட்டிப் புதைக்கப்பட்டிருந்த இடத்துக்கு மகாத்மாஜியை அழைத்துச்சென்று புதைக்கப்பட்ட இடத்தைக் காட்டியது.  காந்திஜி நாயின் அபூர்வ அறிவைப் பார்த்து வியந்தார்.  அன்றிலிருந்து மகாத்மாஜி செல்லும் இடங்களுக்கெல்லாம் பின் தொடர்ந்து நாய் வருகிறது.”

இப்படிப் பல சிறு சிறு சம்பவங்களைக் கொண்டதுதான் இந்தப் புத்தகம். மகாத்மாவின் மாசு மருவற்ற தூய வாழ்க்கையில் சந்தேகம் கொண்ட ஒரு துராத்மா கடிதத்தின் மூலம் ஒரு சந்தேகத்தைக் கிளப்பியிருந்தான்.  

பிரார்த்தனைக் கூட்டத்தில் அதற்குப் பதில் அளிக்கிறார். ‘கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக நான் பிரம்மசரியத்தைக் கடைபிடித்து வருகிறேன். ஐம்புலன்களையும் அடக்கி ஆண்டு வருகிறேன்.  நாவுக்கு ருசியாகப் பண்டங்களைச் சாப்பிடுவது கிடையாது.  உயிர் வாழ்வதற்கு எவ்வளவு ஆகாரம் அவசியமோ, அதைவிடக் குறைவாகவே சாப்பிட்டு வருகிறேன். என்னுடன் எந்த நேரமும் பெண்கள் இருந்து வருவது உண்மையே. பெண்களின் அருகிலேயே இருந்தும் பிரம்மசரியத்தைக் காப்பதுதான் உண்மை யோகியின் லட்சணம்.’

இந்தப் புத்தகம் நான்கு அத்தியாயங்கள் கொண்டது.  முதல் அத்தியாயம். நவகாளி யாத்திரை, இரண்டாவது அத்தியாயம். இந்துஸ்தானி விழா, மூன்றாவது அத்தியாயம் மதுரையில் மகாத்மா, நான்காவது அத்தியாயம் நவகாளி நினைவுகள்.

மகாத்மாவின் சென்னை மாம்பல விஜயத்தினால் மாம்பலம் சில தினங்களாகத் தேர்த் திருவிழா பட்ட பாடாயிருந்து கொண்டிருக்கிறது.   ஓட்டல்களில் கொடுக்கப்படும் காப்பியிலிருந்து மாம்பலத்தில் கூடும் அன்றாடக் கூட்டத்தின் கணக்கைச் சுலபமாக அறிந்துகொண்டு விடலாம் என்கிறார் சாவி.

காப்பி கறுப்பு வர்ணமா? சரி, ஐம்பதினாயிரம் பேர்.  கொஞ்சம் தண்ணீர் கலந்த வெண்மை நிறமா? எழுபத்தைந்தாயிரம் பேர்.  நீர் நிறைந்த வெறும் திரவ பதார்த்தமா? சரி, லட்சம் போர்.  இப்படியே கணக்கிட்டு விடலாம் என்கிறார் சாவி.

அடுத்தபடியாக காந்திஜி மதுரை, பழனி யாத்திரையின்போது 30 லட்சம் தமிழ் மக்கள் அவரைக் கண் குளிரக் கண்டு மகிழ்ந்தார்கள். ஹரிஜன் நிதிக்காக ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் கொடுத்தனர்.

நவகாளி நினைவுகள் என்ற பெயரில் எழுதியிருக்கும் பகுதியில் சாவிக்கு மகாத்மாவை நேரிடையாகப் பார்க்க ஒரு நிமிஷம்தான் ஒதுக்கப்பட்டிருந்தது.

சென்னையிலிருந்து இங்கு வர எவ்வளவு பணம் செலவாயிற்று? என்று கேட்கிறார். 

“300 ரூபாய்.”

உடனே காந்தி, “வீண் தண்டம்.  அந்தப் பணத்தை ஹரிஜன நிதிக்குக் கொடுத்திருக்கலாமே, சரி நாளை மறுதினம் திரும்பிப் போய்விடவேண்டும், என்ன?” என்று கூறுகிறார்.

இரண்டே தினங்கள்தான் காந்தியுடன் தங்கும் வாய்ப்பு கிட்டியது.  இந்த இரண்டு தினங்களுக்குள் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் என் வாழ்நாட்களில் வேறு எப்போது கிடைக்கும் என்கிறார்.  

இந்தப் புத்தகத்தின் பின் அட்டையில் சாவியைப் பற்றிக் குறிப்பு வருகிறது. அத்தனை தமிழர்களும் அறிந்த எழுத்தாளர் சாவி பேராசிரியர் கல்கி அவர்களிடம் பத்திரிகை உலக வாழ்க்கையைத் தொடங்கியவர். கல்கி, ஆனந்தவிகடன், பத்திரிகைகளில் நீண்ட நாள் பணியாற்றி அனுபவம் பெற்ற பின், தினமணி கதிர் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தியவர்.  

கலைஞர் மு கருணாநிதி குங்குமம் வார இதழைத் தொடங்குவது என்று முடிவு செய்தபோது அதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்கும்படி கலைஞர் அழைத்தது சாவியைத்தான்.

இருபத்தோராம் நாளின் வாசிப்பனுபவம் (22.09.2019)

அழகியசிங்கர்

இன்று பரனுர் பயணம். ஒரு விசேஷம்.  ஒன்றரை மணி நேரம் மின்கார வண்டியில்.  இரண்டு புத்தகங்கள் எடுத்துக்கொண்டு போக வேண்டுமென்று நினைத்தேன.  ஒரு புத்தகம் லா ச ராமாமிருதத்தின் ‘நான்’.  இன்னொரு புத்கதம் ‘காண்டாமிருகம்’.  ஆனால் லா ச ராவின் ‘நான்’ மட்டும் எடுத்துக்கொண்டு போனேன்.  இதைப் படி முதலில் போதும் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டேன்.  

உறவினர் வீட்டுக்குப் போனபோது ‘கண்டாமிருகத்தையும்’ எடுத்துக்கொண்டு வந்திருக்கலாமென்று தோன்றியது. 

ஏற்கனவே சிந்தா நதி என்ற பெயரில் லா ச ரா அவருடைய வாழ்க்கைக் குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறார் என்று தோன்றியது.  அதைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.  கிடைத்தால் அதை உறுதி செய்ய முடியும்.  üநான்ý என்கிற இந்தப் புத்தகம் அவருடைய சுயசரிதம்.  அவர் அம்மாவைப் பற்றி ரொம்ப எழுதியிருக்கிறார்.  குமுதம் ஜங்ஷனில் ஒரு பேட்டி வந்திருந்தது.  அதை இந்தப் புத்தகத்தில் சேர்த்திருக்கிறார்கள்.  இந்தப் புத்தகம் முழுவதும் அவருடைய சுயசரிதம்மட்டும் இல்லை.  3 சிறுகதைகள் சேர்த்திருக்கிறார்கள்.  ஒரு கட்டுரை. 

குமுதம் ஜங்ஷனில் ஒரு பேட்டி.  அதில் ஒரு இடத்தில் இப்படி குறிப்பிடுகிறார்.  ‘ஒருமுறை மௌனி என் வீட்டிற்கு வந்திருந்தார்.  இங்கே இப்படி எனக்கு எதிரேதான் உட்கார்ந்திருந்தார்.  கூட இன்னொருவரும் வந்திருந்தார்.  அவர், “நீங்க ராமாமிருதத்தைப் படித்திருக்கிறீர்களா?” என்று மௌனியைக் கேட்டார்.  “நான் படித்ததும் இல்லை. படிக்கப் போவதும் இல்லை.” என்று மூஞ்சியில் அடிப்பது போல் பதில் சொன்னார் மௌனி.

அவர் படிக்காவிட்டால் போகிறார்.  அது பற்றி எனக்கு வருத்தமும் இல்லை.  அவசியமும் இல்லை.  ஆனால் இந்த மனிதன் இப்படிப் பேச வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது.  எனக்குத் தெரியவில்லை, என்று கோபப்படுகிறார் லா ச ரா. 

ஏன் மௌனி அவர் எதிரிலியே அப்படிப் பேசினார்?  எழுத்தாளர்களுக்குள் பொறாமை உணர்ச்சி அதிகமாகவே இருக்கிறது. ஆனால் ஒரு எழுத்தாளர் முன் இன்னொரு எழுத்தாளர் இப்படி வெளிப்படுத்துவது அநாகரிகம். என்னிடம் கூட ஒரு விமர்சகர் மௌனியை தூக்கி வைத்து ராமாமிருதத்தை மட்டமாகப் பேசுவார்.  அதைக் கேட்டு ரொம்ப நாட்களாக ராமாமிருதம் புத்தகங்களைப் படிக்காமல் இருந்திருக்கிறேன்.  அபிதா என்ற நாவலை படித்தவுடன் என் எண்ணம் மாறிவிட்டது.  ஆனால் உண்மையில் மௌனி எழுத்து வேற, ராமாமிருதம் எழுத்து வேற.  இதை நான் ராமாமிருதத்தைப் படிக்கத் தொடங்கிய பிறகுதான் உணர்ந்தேன்.

பல இடங்களில் அம்மாவைப் பற்றி சொல்லியிருக்கிறார்.  üஎன் அப்பா ஒரு பள்ளிக்கூட வாத்தியார், 36, 37 ரூபாய் சம்பளம்.  என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது என்று அம்மா கையில் பணத்தைக் கொடுத்து விடுவார்.  அவள் கை நல்ல கை.  பசுமாடு வளர்த்தாள்.  தோட்டம் போட்டாள்.  எல்லாம் நன்றாக வந்தது.  சீக்காளி ஆம்படையான்.  அவள் ஒழுங்காக அவரைப் பார்த்துக்கொண்டாள். கடமைதான் இது.  காதலினால் பார்த்தாள் என்று அதனை நான் சொல்ல வரவில்லை.  அவளே சொன்னாள். வேண்டியது பண்ணியாகிவிட்டது உங்க அப்பாவுக்கு.  அப்புறம் எனக்கு ஒன்றும் கடன் இல்லையப்பா.  எனக்கு இது பண்ணவில்லையே என்று எந்த குற்றமும் இல்லை.  அவர் இறந்தபோது கொஞ்ச நேரம்தான் அழுதாள்.’ 

இன்னொரு இடத்தில் லா ச ரா, “என் எழுத்து புரியவில்லை என்று என்னிடமே வந்து சொல்கிறார்கள்.  புரியவேண்டும் என்பது அவசியமா என்ன? புரியாமல் இருந்துவிட்டுதான் போகட்டுமே.  இப்போது என்ன கெட்டுப் போய் விட்டது?”  இப்படி சொல்வது விரக்தியில் சொல்லாமல் இருக்க வேண்டும்.

லா ச ரா சில இடங்களில் அபாரமாக சிலவற்றை சொல்லிக்கொண்டு செல்கிறார். :. ‘கண்ணாடியில் என்னைப் பார்க்கிறேன்.  பிம்பம் என்னைத் திரும்பிப் பார்க்கிறது. எத்தனை அழகு.  நான் இவ்வளவு அழகா என்ன? இல்லை. பிம்பம் என்னைக் காட்டிலும் அழகாக எனக்குத் தோன்றுகிறது.’

லா ச ரா புத்தகத்தில் நான் ரசித்த பகுதிகள்.

சின்ன வயதில், வீட்டில் நடமாடும் சில மொழிகள்.

வேலையிலிருந்து மகன், மாலை திரும்பி வந்ததும், தாய் அவன் வயிற்றைத் தடவிப் பார்ப்பாளாம்.  (என் குழந்தை சாப்பிட்டானா

இல்லியா) பெண்டாட்டி இடுப்பைத் தடவிப் பார்ப்பளாம். (இன்னிக்கு எனக்கு என்ன கொணார்ந்திருக்கே?)

அப்புறம் ஒரு குட்டி உபநிஷக்கதை.

ஒரு மருமகள், மாமியாரை வீட்டை விட்டுத் துரத்தியதுடன் திருப்தி அடையாமல் அவள் தலையைக் கொண்டு வரச் சொன்னாளாம்.  அவள் சொன்னபடியே கணவன் செய்து, தாயின் தலையைப் பிடித்துக் கொண்டு வரும் வழியில் கல் தடுக்கி விழுந்தானாம்.  உடனே தலை பேசிற்றாம்.

‘கொழந்தே, அடிபட்டுட்டுதா?’

‘ஒரு சமயம் வயல் பரப்பின் மேல் நான் பையனாய் ஓடிக்கொண்டிருக்கையில், திடுக்கென என் வழி குறுக்கே ஒரு பாம்பு தென்பட்டது.  சுமார் நாலடிக்கு எட்ட, அது படமெடுத்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது.  நின்றேன்.  ஒருவரையொருவர் அந் நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தோமோ?

எனக்குக் கல்லெடுத்து அடிக்கத் தோன்றவில்லை.  ஓடிவிடத் தோன்றவில்லை.  பயமாயில்லை.  கைகால்கள் வெலவெலத்துச் செயலிழந்து விடவில்லை.  எங்களுக்குள் ஏதோ சொந்தம் இருந்ததாகப் பட்டது.  இதோபார் நாம் சோதரர்கள்.  அவரவர் வழியில் போய் விடுவோம்.  ஒருவரையொருவர் ஏன் துன்புறுத்திக் கொள்ள வேண்டும்? என்கிற மாதிரி.

அது படத்தைக் கீழே போட்டு, சாவதானமாக வயலில் இறங்கி தேங்கிய தண்ணீரில் கதிர்களிடையே மறைந்தது.’

தி.ஜ.ர தான் மானசீக குரு என்கிறார் லா ச ராமாமிருதம்.  இதை இந்தப் புத்தகத்தில் பல இடங்களில் குறிப்பிடுகிறார்.  அவர் வார்த்தைகளிலேயே தி ஜ ர வைப்பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.  

‘தி ஜ ர என் எழுத்தை அதன் போக்கில் வளர்த்தவர்.  அதிநுட்பமான விமர்சகர்.  அவர் காலத்திலேயே அவருடைய முழுத் தகுதியை யாரும் உணரவில்லை.  என் மானஸீக குரு.  புரியாத மட்டுமல்ல, வக்ரமான எழுத்தாளன் என்று நான் எழுத்தாளனாக உருவாகிக் கொண்டிருக்கும் நாளில் சக எழுத்தாளர்களாலேயே கண்டனமான போது எனக்குப் பக்கபலமாய் என் எழுத்தில் நம்பிக்கை மாறாதவராக இருந்தவர்.  அவர்தான், “நீ எதை வேணுமானாலும் எழுதுடா, நான் போடுகிறேன்,” என்று தான் சக்தி பத்திரிகை ஆசிரியராக இருந்தபோது சொன்னதை செயலில் காட்டி எனக்குத் தைரியமூட்டினர் அவர்.  அப்படி முதுகைத் தட்டி என்னை வளர்த்திராவிடில், இப்போது எழுத்தாளனாக எங்கிருந்திருப்பேனோ?’

இலக்கியப் பார்வை என்பதற்கு இப்படி பதில் அளிக்கிறார்.

‘இலக்கியப் பார்வை என்பது எழுத்தின் பண்பாடு மட்டும் அன்று.  மனத்தின் பண்பாடும் என்றே தோன்றுகிறது.  உலகத்தை இப்படியே பார்த்துக் கொண்டிருக்கும் அளவுக்கு மனப்பக்குவம் கிட்டிவிடுமா?’

லா ச ரா அவருடைய படைப்பில் அடிக்கடி மரணத்தைப் பற்றி எழுதியருப்பார். இதோ:

‘யாருடைய மரணமும் அதன் வேளையில்தான் நேர்கிறது என்பது தவறாத உண்மை.  ஆனால் அது எங்கள் குடும்பத்தில் சற்று அடிக்கடி வாசற்படியைக் கடந்திருக்கிறது என்பதும் உண்மை.  அதன் மூட்டம் என் எழுத்தில் அதிகமாகக் கவிந்திருப்பின், அது ஆச்சரியமில்லை.

‘ஒருவனின் மறைவுடன், மறைந்தன அவன் அதுகாறும் அவனில் திரட்டிய அனுபவம், ஞானம், சமுதாயத்துக்கு அவன் பயன் அந்த மட்டில் உயிரின் முடிவு, உயிருக்குத் துரோகம், ஆனால் இது ஒரு கோணம், கோணங்கள் எத்தனையோ, அவைகளின் நியாயங்களும் அப்படியே…

‘எனக்கு சின்ன வயதில் வாசலில் பிணம் போனால் பயம்.  பிராம்மணப் பிணம் முகத்தையும் மூடி பின்னால் யாரோ துரத்துவதுபோல் அவசரமாய் ஓடும்.

‘சாவே, உன்னை ஏற்கிறேன்.  ஏனெனில் எனக்கு வேறு வழியில்லை. நீ நியதி, அதனால் நீ கர்வமடைய வேண்டாம்.  உன்னுடன் என்றும் சமாதானமாக முடியாது.  நீ பலவான்.  ஆனால் நியாயவான் இல்லை…

‘இன்றைய பையன்கள் ரொம்பவும் தேறிவிட்டார்கள்.  என் இரண்டாவது பிள்ளை கண்ணனுக்கு மாதம் ஒரு விபத்தேனும் பார்ப்பதில் தனி ராசி போலும்.  ‘தலை தனியா தண்டவாளம் தாண்டி உருண்டு விழுந்தது பாருங்கோ! என்னப்பா, உடம்பை சிலிர்த்துக்கறேளே! உங்கள் காலத்தை விட இப்போ இடைஞ்சல் அதிகம்.  காலையில் கிளம்பிப் போனோம்னா, மாலை திரும்பி வறோம்னு நிச்சயமில்லை.  உங்கள் காலத்தில் இது சொல்லலங்காரம்.  இப்போ அப்பட்டமான உண்மை.  நாமெல்லாம் இட்லி சாம்பார்தானே! பிணத்தைப் பார்க்கவே பயம்.  விபத்தை எங்கே ஜரிச்சுக்கப் போகிறோம்! ‘

தி ஜ ரா, ராமாமிருதம் கதைகளைப் பற்றி இப்படி விமர்சிக்கிறார்: 

üüஇன்னொன்று உன்னிடம் பார்க்கிறேன்.  கதைக்குத் கதை பாம்பு வருகிறது.  காரணம் இல்லாவிட்டாலும் பாம்பு வரும்பவடி ஒரு காரணத்தை ஏற்படுத்திக் கொள்கிறாய்.  உபமானமாகவோ உருவகமாகவோ பாம்பைக் காட்டுகிறாய்.  அப்புறம் இன்னொன்று உன் கதைகளில், ஸ்னானம் செய்துவிட்டு ஈரப் புடவையைச் சுற்றிக்கொண்டு ஒரு ஸ்திரி படித்துறை ஏறி வருவாள். இது மாதிரி காட்டல்கள், நீ ஒரு சமயம் பார்த்து, சித்திரம் உன் மனத்தில் அழுத்தமாய் விழுந்திருக்கும்.  ஆனால் அதுவே அப்ùஸஸன் ஆகிவிடக் கூடாது.  ஆனால் எழுதுவதே அப்ùஸஸன்தான்.ýý 

எந்த எழுத்தாளர் இப்படி இன்னொரு எழுத்தாளர் மீது அக்கறை கொண்டு சொல்வார்கள்.  இன்றைய காலத்தில் அப்படி யாரையும் பார்ப்பது அரிது. 

இந்தப் புத்தகத்தில் அவருடைய சுய சரிதம் தவிர நான்கு கதைகள் உள்ளன.  ‘நன்னு விடசி… பிம்பம்.  சோழம் பாக்க வாங்கோ..பாய் ஃப்ரண்ட்..’ இதில் நன்னு விடசி சிறப்பான கதை.  அக் கதையை ஒருவர் கட்டாயம் படிக்க வேண்டும்.  சினிமாவில் தருணங்கள் என்றும் ஒரு கட்டுரை இருக்கிறது.  

மணிகொடி எழுத்தாளர்கள் எல்லோரும் பீச்சில் சந்தித்த நிகழ்ச்சியை ஒரு இடத்தில் விவரிக்கிறார்.  அவர்கள் எல்லோரும் என்ன பேசினார்கள்? இலக்கியம். இங்கே மார் தட்டல் கிடையாது.  வகுப்பு நடத்தவில்லை. உபதேசம் செய்யவில்லை.  இலக்கியத்திலேயே யாருக்கேனும் வாரிசு எடுத்துக்கொண்டு கட்சி ப்ரசாரம் கிடையாது. ஆனால கடற்கரையில் மாலை அந்த இரண்டு இரண்டரை மணி நேரம், இந்த ஏழெட்டு பேர் கூடி மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தார்களே, இதுதான் உண்மையில் இலக்கியப் பட்டறை.ý என்கிறார் லா சு ராமாமிருதம் பரவசத்தோடு.

.