மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 84

அமர்ந்திருக்கும் நெடுங்காலம்

ஸ்ரீஷங்கர்

நீ என்பது
எனக்கு
துலங்கும்
வெம்மைமிகு தாபச் சொற்கள்
என்னில் புத்துயிர்களை ஈணுவது

நான் என்பது உனக்கு
உனது நீர்மையில்
அடியுறக்கம் கொள்ள அனுமதித்திருக்கும் மீன்

சிலவேளை
சிறு சலனம்கூட அற்ற
பூட்டிய கதவுகளுக்குக்கீழ்
அமர்ந்திருக்கும் என் நெடுங்காலமும்தான் நீ

நானென்பது
உன் விருப்பத்துக்கென குற்றங்கள் புரிய
நீ நியமித்திருக்கும் ஒப்பந்தக்காரன்

எனக்கு நீ
உறங்கும் என் குறியின்மேல்
அலைந்து கொண்டிருக்கும் பூரான்
அதன் துளைக்குள் பரபரத்து நுழைவது

மேலும்
நீ என்பது எனக்கு
தனித்து கரையில் அமர்ந்திருக்கும்
பசித்த உயிரை
இரை காட்டி அழைக்கும் தெப்பம்

நானோ
நீ தரும் மாமிசம் உண்டு
உயிர்த்திருக்குமுன் வளர்ப்பு விலங்கு

நீயோ
என்னைத் தெரிவிக்கமுடியாதபோது
தரித்தயென் ஆடைகளிலிருந்து
கழற்றிவிட்டுக்கொள்ளும் முழுப்பொத்தான்களும்தான்

நானுனக்கென்பது
உனை மீட்டெடுக்கும் கனவுகளின்மேல் நீ
உருவாக்கிக்கொண்டிருக்கும்
சித்திரத்தய்யல்

நீயெனக்கென்பது
உன்னோடு கிடந்து
நாம் இல்லாது போக விரும்பும் புலன்களின் காமத்தை
ஆராதிப்பவள்
மற்றும்
எனது வீடு பேறு

நன்றி : திருமார்புவல்லி – ஸ்ரீஷங்கர் – கவிதைகள் – ஆதி பதிப்பகம் – மாரியம்மன் கோயில் தெரு, பவித்திரம், திருவண்ணாமலை – விலை ; ரூ.60 செல் : 999488000

பத்து கேள்விகள் பத்து பதில்கள்

09.02.2018 அனறு பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்ற தலைப்பில் 15வதாக கடற்கரை அவர்களைப் பேட்டி எடுத்தேன். அமைதியாக அவர் அளித்தப் பதிலை கேட்டு ரசிக்கவும். சமீபத்தில் பாரதி விஜயம் என்ற தலைப்பில் மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகள் கொண்ட புத்தகத்தைத் தயாரித்துள்ளார்.1040 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் ஒரு அரிய பொக்கிஷம்.

நடிகை ஸ்ரீ தேவியின் மரணம்

நடிகை ஸ்ரீ தேவியின் மரணத்தை அறிந்தவுடன் என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. ஸ்ரீதேவி என்ற நடிகை நடித்தப் பல படங்களைப் பார்த்து ரசித்தவன். அவருக்குக் குழந்தைத் தனமான ஒரு முகம். அட்டகாசமான நடிப்புத் திறன் கொண்டவர். படம் பார்த்துவிட்டு வந்தபின்னும் சில தினங்கள் அவர் ஞாபகம் இருந்துகொண்டு இருக்கும். நம்ம் வீட்டில் உள்ள ஒரு பெண்மணி என்று தோன்றும். ரஜனியுடனும் கமல்ஹாசனுடன் அவர் நடித்த 16 வயதினிலே என்ற படத்தை என்னால் மறக்க முடியாது. இப்படி கவர்ச்சிகரமான ஒரு தமிழ் நடிகை மும்பையில் ஹிந்திப் படங்களில் நடிக்கப் போய்விட்டாரே என்று தோன்றும். பின்பு அவர் மும்பையிலேயே திருமணம் செய்துகொண்டு இருந்துவிட்டார் என்ற செய்தி எட்டியபோது, அந்த நடிகையைப் பற்றிய கவனம் சற்று கலைந்து போயிற்று. நேற்று இரவு அவர் மாரடைப்பால் இறந்து விட்டார் என்ற செய்தியை அறிந்தபோது வருத்தமாக இருந்தது. 54 வயதுதான்.

மாரடைப்பால் ஏற்படும் மரணம் குறித்து என் சிந்தனை குதித்து ஓடிற்று. நான் பந்தநல்லுரில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது என் அலுவலகத்தில் பணிபுரியும் காஷ÷யர் ஒருநாள் காலையில் ஒரு மாதிரியாக இருந்தார். கிராமத்தில் மருத்துவரைப் பிடிப்பது என்பது கஷ்டம். ஒரு மருத்துவரைப் பிடித்து அழைத்துக்கொண்டு வந்தோம். அவர் உடனே காஷ÷யரை கும்பகோணம் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு போகும்படி அறிவுரை கூறினார். உடனே கும்பகோணம் கிளம்பினோம். நான்தான் முன்னின்று அவரை அழைத்துக்கொண்டு போனேன். நான் என்ன நினைத்தேன் என்றால் காலையில் அவர் தக்காளி சாதம் சாப்பிட்டதாகச் சொன்னார் என்பதால் அது அவருடைய வயிற்றை ஒரு கலக்கு கலக்குகிறது என்று நினைத்தேன். ஆனால் அப்படி இல்லை. அவருக்கு தீவிர மாரடைப்பு. மருத்துவமனையில் அவரைக் காப்பாற்றி விட்டார்கள்.

அப்போது நான் தனியாக மயிலாடுதுறையில் ஒரு வீடு எடுத்துத் தங்கியிருந்தேன். இதுமாதிரியான சம்பவம் இயற்கையானது. ஆனால் நம் மனம் சஞ்சலம் அடையாமல் இருப்பதில்லை. அதுவும் தனியாக இருக்கும்போது அதி தீவிரமாக யோசித்துக்கொண்டிருப்போம். நானும் அப்படித்தான். அப்போதுதான் யோசித்தேன். ஏன் இப்படி குடும்பத்தை விட்டு பதவி உயர்வு என்ற போர்வையில் இப்படி மாட்டிக்கொண்டோம் என்று. கார்லஸ் காஸ்டினேடா ஒரு புத்தகத்தில் கூறுகிறபடி மரணம்தான் ஒருவனுக்கு எதிரி என்ற எண்ணம் எனக்குத் தோன்றிக்கொண்டிருக்கும். அதைத் தயார் நிலையில் எதிர்கொண்டு போராடுவதுதான் முக்கியம் என்று தோன்றும்.

என் நண்பர் சந்தியா நடராஜன் ‘இனி இல்லை மரணபயம்’…என்ற புத்தகத்தை தொகுத்து உள்ளார். அதில் அவருக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தைக் குறிப்பிட்டுள்ளார். பலர் கூறிய மரண அனுபவங்களை புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார். 120 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை . ரூ.110. அப் புத்தகத்தில் வெளியான ‘கால வரிசையில்’ என்ற தலைப்பில் வெளிவந்த கதையுடன் இதை முடிக்கிறேன்.

‘கால வரிசையில்’

ஜென் துறவி சென்காயைப் பார்க்க ஒரு பணக்காரன் வந்தான். தனக்கு ஒரு அழகிய வாசகமொன்றை அலங்காரமாய் எழுதித் தரவேண்டுமென்று சென்காயிடம் கேட்டான்.

அப்பா மரணம், மகனின் மரணம், பேரனின் மரணம் என்று ஒரு தாளில் எழுதிக் கொடுத்தார் துறவி.

பணக்காரனுக்குக் கோபம் வந்தது. ‘இப்படி ஒரு அமங்கள் மான வாசகத்தையா எழுதித் தருவது. நீர் என்ன துறவி?” என்று சத்தம் போட்டான்.

துறவி சொன்னார்: உனக்கு முன் உனது பிள்ளைகள் இறந்தால் அது எத்தகைய புத்திர சோகம். உனது மகனுக்கு முன் உனது பேரன்கள் இறந்தால் நீ எத்தகைய கொடிய சோகத்திற்கு ஆட்படுவாய். உனது குடும்பத்தினர் ஒரு தலைமுறைக்குப் பின் அடுத்த தலைமுறையினர் என்று காலக் கிரமப்படி இறந்தனர் என்றால் அது நற்பேறு அல்லவா?

‘ஆமாம். அர்த்தம் புரிகிறது’ என்றான் பணக்காரன்.

ஆனால் தற்போது இதன் விலை ரூ.50 மட்டுமே.

விருட்சம் கவிதைகள் தொகுதி 1

1988 ஆம் ஆண்டிலிருந்து 1992ஆம் ஆண்டு வரை நவீன விருட்சம் இதழில் வெளிவந்த கவிதைகளின் தொகுப்பு நூல் விருட்சம் கவிதைகள் தொகுதி 1 என்ற பெயரில் வெளியிட்டுள்ளேன். 94 படைப்பாளிகளின தொகுப்பு நூல் இது. புதிதாக கவிதை எழுத விருமபுகிறாவர்கள் அவசியம் இத் தொகுப்பு நூலை வாங்கி வாசிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கறேன். 230 பக்கங்கள் கொண்ட இத் தொகுப்பு நூலின் விலை ரூ.120. ஆனால் தற்போது இதன் விலை ரூ.50 மட்டுமே. வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண் : 9444113205

எஸ் வைத்தியநாதன் என்பவர் எழுதிய நாற்காலி என்ற கவிதையை வாசிக்கவும்.

வேண்டும் சமயம் சென்றமர்வேன்
புத்தகங்களை வைப்பேன்
உடைகளை வைத்ததுண்டு
உயரமெட்ட உபயோகித்ததுண்டு
காணாதது போல்
இருந்ததும் உண்டு
கிடந்து கட்டிலில் கால் வைத்துக்கொள்வேன்
சமீபத்தில்
நாற்காலியாகிப் போனேன்

ஓர் உரையாடல்

மாதம் ஒருமுறை ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யலாமென்று நினைக்கிறார் அழகியசிங்கர். உண்மையில் இந்தக் கூட்டத்தின் நோக்கம் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் பொதுவாக புத்தகங்களைப் பற்றித்தான் பேச வேண்டும். அவர் வீட்டில் பால்கனியில் காத்துக்கொண்டிருக்கிறார். வழக்கம்போல் அவரைப் பார்க்க ஜெகனும், மோகினியும் வருகிறார்கள்.
காலிங் பெல்லை அடித்துவிட்டு வாசலில் நிற்கிறார்கள். “வாருங்கள் வாருங்கள்..” என்று வரவேற்கிறார் அழகியசிங்கர்.

மூவரும் ஒரு அறையில் உட்கார்ந்து பேச ஆரம்பிக்கிறார்கள்.

மோகினி : உங்கள் மனைவி எங்கே?

அழகியசிங்கர் : பெண் வீட்டிற்குப் போயிருக்கிறாள்.

ஜெகன் : கமல்ஹாசன் ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கிறாரே அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்?

அழகியசிங்கர் : இந்த அரசியலே எனக்குப் புரியவில்லை. மதுரையில் நடந்த கூட்டத்தைப் பார்த்தால், இந்தக் கூட்டத்திற்கு எவ்வளவு செலவு ஆகியிருக்கும்? இதெல்லாம் யார் கொடுத்திருப்பார்கள் என்றெல்லாம் தெரியவில்லை.

மோகினி : நீங்கள் நடத்திற இலக்கியக் கூட்டம் என்று நினைத்தீரா?

அழகியசிங்கர் : நான் நடத்தும் இலக்கியக் கூட்டத்திற்கு 20 பேர்கள் கூட வருவதில்லை. ஆனால் என் கூட்டம் ஏற்படுத்தும் அமைதியை கமல்ஹாசன் கூட்டத்தில் காண முடியுமா என்பது தெரியவில்லை.

ஜெகன் : அரசியல் வேண்டுமா வேண்டாமா? நீங்கள் சொல்லுங்கள்.

அழகியசிங்கர் : மக்களுடைய பிரச்சினையை யார் தீர்ப்பார்கள்? அல்லது தீர்க்கத்தான் முடியுமா? இதற்கெல்லாம் விடை தெரியவில்லை.

மோகினி : எந்தத் துயரம் ஏற்பட்டாலும் தமிழ் மக்களைப் போன்ற பொறுமைசாலிகளை எங்கும் காண முடியாது.

ஜெகன் : என்ன புத்தகம் கையில் வைத்திருக்கிறீர்கள்?

அழகியசிங்கர் : MARGINAL MAN என்கிற சாருநிவேதிதாவின் ஆங்கிலப் புத்தகத்தை வைத்திருக்கிறேன்.

ஜெகன் : ஒரு வினாடி கொடுங்கள். பார்த்துவிட்டுத் தருகிறேன்.
(அழகியசிங்கரிடமிருந்து புத்தகத்தை வாங்கிக் கொண்டு பார்க்கிறார்)

ஜெகன் : என்னால் நம்ப முடியவில்லை.

அழகியசிங்கர் : என்ன நம்ப முடியவில்லை

ஜெகன் : இந்தப் புத்தகம்.

மோகினி : ஆமாம். ஒரு ஆங்கில புத்தகம் போலவே இருக்கிறது.

அழகியசிங்கர் : ஆமாம். புத்தகக் கண்காட்சியின் போது என் இலக்கிய நண்பர் ஒருவர், இந்தப் புத்தகத்தைப் பார்த்துவிட்டு சிலாகித்துப் பேசிக்கொண்டே இருந்தார்.

ஜெகன் : Zero Degree Publishing தான் இந்தப் புத்தகத்தைத் தயாரித்துள்ளார்கள்.

மோகினி : தமிழிலிருந்து வெளிவரும் எத்தனையோ ஆங்கிலப் புத்தகங்களைப் பார்த்திருக்கிறேன். அவற்றைப் பார்த்தால் ஒரு ஆங்கிலப் புத்தகம் பார்க்கிற உணர்வே ஏற்படாது.

ஜெகன் : உண்மைதான். நான் ஒரு சமயம் திருவல்லிக்கேணி பிளாட்பாரத்தில் வாட்டர் என்ற அசோகமித்திரன் புத்தகத்தைப் பார்த்துவிட்டு பதறி விட்டேன். இரண்டு மூன்று வாங்கி வைத்துக்கொண்டேன்.

அழகியசிங்கர் : அசோகமித்திரனிடம் சொன்னீர்களா?

ஜெகன் : சொன்னேன். அவர் ‘எனக்கு ஒரு பிரதி வாங்கிக்கொண்டு வாருங்கள்,’ என்றார். வாங்கிக்கொண்டு போய்க் கொடுத்தேன்.

அழகியசிங்கர் : ஏன் அங்கு வந்தது என்று தெரியுமா?

ஜெகன் : தெரியாது.

மோகினி : சரி நீங்கள் சாருவின் ஆங்கிலப் புத்தகத்தைப் படித்தீர்களா?

அழகியசிங்கர் : இனிமேல்தான் ஆரம்பிக்க வேண்டும். ஆனால் கொஞ்சம் கொஞ்சம் புரட்டிப் பார்த்தேன். தமிழில் அவர் புத்தகம் படிப்பதற்கு எப்படி இருந்ததோ அப்படியே ஆங்கிலத்திலும் இருந்தது.

ஜெகன் : தமிழில் என்ன புத்தகம் இது.

அழகியசிங்கர் : புதிய எக்ûஸல் என்ற நாவல்தான் என்று சாரு என்னிடம் கூறினார்.

மோகினி : அவர் எழுத்தில் ஒரு வசீகரம் இருக்கிறது. படிக்க ஆரம்பித்தால் கீழே வைக்க முடியாது.

அழகியசிங்கர் : நான் கூட ராச லீலா என்ற அவருடைய நாவலைப் படிப்பதற்குப் பதில் புதிய எக்ûஸல் என்ற நாவலைப் முதலில் படித்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

ஜெகன் : இப்போது படித்துக் கொண்டு இருக்கிறீர்களா?

அழகியசிங்கர்: ஆமாம். இப்போது படித்துக்கொண்டிருக்கிறேன். முன்பு இப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். பின் எங்கோ வைத்துவிட்டேன். அப்போது ஒரே சமயத்தில் பல புத்தகங்களைப் படிக்க வேண்டுமென்று பேராசை கொண்டிருந்தேன். ஆனால் ஒன்றையும் உருப்படியாகப் படிக்க முடியவில்லை.

மோகினி : நாம் பேசும்போது ஒரு புத்தகத்தைப் படித்தாலும் படிக்காவிட்டாலும் பேசிக்கொண்டிருப்போமா?

அழகியசிங்கர் : ஆமாம். நாம் ஒரு புத்தகத்தை முழுவதும் படித்துவிட்டுத்தான் பேச வேண்டுமென்பதில்லை. ஒரு புத்தகத்தின் சில பகுதிகளைப் பற்றிப் பேசுவோம். திரும்பவும் பின்னால் இன்னும் கொஞ்சம் படித்து முடித்த விட்டப் பிறகு அந்தப் புத்தகத்தைப் பற்றி திரும்பவும் பேசுவோம்.

ஜெகன் : புத்தகங்களில் காணப்படும் சுவாரசியங்கள்தான் நம் பேச்சில் இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.

மோகினி : இன்றைய சூழ்நிலையில் நாம் ஒரே புத்தகத்தை முழுவதும் படித்து முடித்துவிட முடியும் என்று தோன்றவில்லை.

அழகியசிங்கர் : அன்று சந்தியா பதிப்பகம் போய் பாரதி விஜயம் என்ற புத்தகத்தை வாங்கிக் கொண்டு வந்தேன். அப் புத்தகத்தை நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். படிக்கவில்லை. பின் ஒருநாள் அந்தப் புத்தகத்தை எடுத்துப் புரட்டி ஒரு இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன். அது ஒரு நல்ல அனுபவமாக எனக்குப் பட்டது.

மோகினி : என்ன படித்தீர்கள்?

அழகியசிங்கர் : ரிக்ஷாகாரனின் துன்பத்தைப் பார்த்து தான் வாங்கிவந்த ஐம்பது ரூபாய் சம்பளத்தை பாரதியார் கொடுத்து விடுகிறார். அந்தப் பணத்தை நம்பியிருந்த பாரதி மனைவிக்கு வருத்தம். அந்த வருத்தத்தை பாரதியின் நண்பரிடம் தெரிவிக்கிறார். அந்த நண்பர் ரிக்ஷாகாரனைப் பார்த்துப் பேசி ஐந்து ரூபாய் மட்டும் கொடுத்து விட்டு மீதிப் பணத்தை வாங்கிக்கொண்டு பாரதியின் மனைவியிடம் கொடுக்கிறார்.

ஜெகன் : நாம் இப்படிப் பேசிக்கொண்டே போனால் பொழுது போவதே தெரிவதில்லை. நான் காப்பிப் பொடி வாங்கிக்கொண்டு வீட்டிற்குப் போக வேண்டும்.

மோகினி : நானும்தான்.

அழகியசிங்கர் : நானும் தபால் அலுவலகம் போக வேண்டும்.
(ஜெகனும், மோகினியும் அழகியசிங்கர் வீட்டை விட்டுப் போகிறார்கள்)

கு அழகிரிசாமியும் நானும் என்ற தலைப்பில் கல்யாணராமன் பேசிய பேச்சின் மூன்றாம் பகுதி

கிட்டத்தட்ட முக்கயமான கு அழகிரிசாமியின் சில கதைகளைக் குறித்த கல்யாணராமன் ஆற்றய உரை மூன்று பகுதிகளாக வந்துள்ளன. முதல் பகுதி இரண்டாம் பகுதிகளைப் பார்த்து ரசித்திருப்பீர்கள். இதோ மூன்றாவது பகுதியும் இறுதிப் பகுதியும் அளிக்கிறேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவித்தால் உற்சாகமடைவேன்.

கு அழகிரிசாமியும் நானும் என்ற தலைப்பல் கல்யாணராமன் பேசிய பேச்சின் முதல் பகுதி

கிட்டத்தட்ட முக்கயமான சில கதைகளைக் குறித்த கல்யாணராமன் ஆற்றய உரை மூன்று பகுதிகளாக வந்துள்ளன. முதல் பகுதியை இன்று அளிக்கிறேன். உங்கள் கருத்துக்களைப் பதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மூன்றாவது சனிக்கிழமை நடந்த கு அழகிரிசாமியும் நானும் என்ற கூட்டம்

இது வரை 8 கூட்டங்கள் நடத்தி உள்ளேன். முதலில் தி ஜானகிராமனும் நானும் என்ற தலைப்பில் திரூப்பூர் கிருஷ்ணன் தலமையில் ஜøன் மாதம் 2017 ஆண்டு இக் கூட்டத்தைத் துவக்கினேன். திருப்பூர் கிருஷ்ணன்தான் இதுமாதிரியான தலைப்பைத் தேர்ந்தெடுத்தார். அதிலிருந்து ஒவ்வொரு எழுத்தாளரைக் குறித்தும் கூட்டங்களை நடத்தி வருகிறேன். இதுவரை நடந்த கூட்டங்கள் ஒவ்வொன்றும் எனக்குத் திருப்தியை அளித்து உள்ளன. எல்லாவற்றையும் ஆடியோவிலும் வீடியோவிலும் பதிவு செய்துகொண்டு வருகிறேன்.

போன மாதம் தஞ்சாவூர் கவிராயர் தஞ்சை ப்ராகஷ் பற்றி பேசினார். இதோ இந்த மாதம் 17ஆம் தேதி கல்யாணராமன் (பேராசிரியர்) கு அழகிரிசாமியைப் பற்றி..

இக் கூட்டங்களில் இரண்டு விதமான போக்குகளை நான் காண்கிறேன். ஒன்று : ஒரு எழுத்தாளரை நன்கு அறிந்துகொண்டு அவருடன் பழகிய நட்புடன் அவர் படைப்புகளைக் குறித்தும், அவரைக் குறித்தும் பேசுவது. இன்னொரு போக்கு அந்த எழுத்தாளரையே தெரியாமல் அவர் படைப்புகளை மட்டும் படித்துவிட்டுப் பேசுவது. கல்யாரணராமன் அழகிரிசாமியின் கதைகளை மட்டும் படித்துவிட்டுப் பேசினார். அந்தக் கதைகளை முழுக்க முழுக்கப் படித்துவிட்டு ஞாபகத்திலிருந்து அக் கதைகளின் பெருமைகளைப் பற்றி பேசினார்.

நான் கொடுத்த ஒரு மணி நேரம் அவர் பேசுவதற்குப் போதாது என்று எனக்குத் தோன்றியது. மேலும் அவர் ஒரு கதையை எடுத்தே ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசுவார் என்று தோன்றியது. இக் கூட்டத்தில் பேசியதை கூடிய விரைவில் வீடியோவில் பதிவு செய்ததை வெளியிடுகிறேன்.

என் கதைக்குக் கிடைத்த ஆறுதல் பரிசு

தினமணியைப் படித்துக்கொண்டு வரும்போது üதினமணி சிவசங்கரி சிறுகதைப் போட்டியைýப் பற்றிய விளம்பரம் ஒன்றைப் பார்த்தேன். எப்போதும் நான் கதைகள் எழுதுவது என்பது குறைவாகத்தான் இருக்கும். கதை எழுது என்று எந்தப் பத்திரிகைக்காரரும் என்னைக் கேட்பதில்லை. ஏன் யாரையும் கேட்பதில்லை? என் பத்திரிகையில் நான் எழுதுவது தவிர. எந்தப் பத்திரிகையிலும் நான் கதை அனுப்பினால் கிணற்றில் கல்லைப் போட்டதுபோல் இருக்கும். பத்திரிகைகாரர்களைக் குறை சொல்ல முடியாது. ஏகப்பட்ட கதைகள் அவர்களுக்கு வரும். அதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது அவர்களிடையே குழப்பமாக இருக்கும். ஏன் போட்டியாகக் கூட இருக்கும்.
ஒருமுறை அசோகமித்திரனுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் அடிக்கடி என்னிடம், üமற்றப் பத்திரிகைகளுக்குக் கதைகள் எழுதி அனுப்புங்கள்,ý என்று கூறிக்கொண்டிருப்பார். üயாரும் கண்டுக்க மாட்டாங்க, சார்,ý என்பேன் நான். ஏனென்றால் எல்லாப் பத்திரிகைகளிலும் எனக்குத் தெரிந்தவர்கள் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு என் கதைகளை அனுப்பி தொந்தரவு செய்யக்கூடாது என்று நினைப்பவன் நான். எனக்கும் சங்கடம். அவர்களுக்கும் சங்கடம் என்பதுதான் உண்மையான காரணம்.
இந்தத் தருணத்தில்தான் üதினமணி சிவசங்கரி சிறுகதைýப் பற்றிய அறிவிப்பைப் படித்தேன். இதைச் சாக்காக வைத்து ஒரு கதையை 2 அல்லது 3 நாட்களுக்குள் எழுத முடியுமா என்று முயற்சி செய்தேன். என் முயற்சி வெற்றி பெற்றது. முதலில் போட்டிக்கு அனுப்புவோம். போட்டியில் இக் கதை தேர்ந்தெடுக்கப் படவில்லை என்றால் என் பங்குக்கு ஒரு கதை எழுதி விட்டேன் என்று இருப்போம் என்றுதான் நினைத்தேன். போட்டிக்கும் அனுப்பினேன். பின் மறந்துவிட்டேன்.
அதேபோல் முடிவுகள் அறிவித்தவுடன் என் கதையைப் பற்றி எந்தத் தகவலும் தெரியவில்லை என்று தெரிந்ததும் பேசாமல் இருந்து விட்டேன். வழக்கமாக நேற்று விருட்சம் சார்பில் கு அழகிரிசாமியும் நானும் என்ற கூட்டத்தை நடத்துவதற்கான முனைப்பில் இருந்தேன். அந்தத் தருணத்தில் தினமணியிலிருந்து எனக்குத் தொலைப்பேசி வந்தது. என் கதையை ஆறுதல் பரிசுப் பெற்ற கதையாகத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினார்கள். என்னால் நம்ப முடியவில்லை. ஏன் நம்ப முடியவில்லை என்றால் இதுமாதிரி போட்டிக்கு வரும் கதைகள். கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான கதைகள் வரும். அதில் எல்லாவற்றையும் படித்துத் தேர்ந்தெடுப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதில் என் கதையும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது. ஆறுதல் பரிசாக இருந்தாலும் என் கதை தினமணிக்கதிரில் பிரசுரமாகும், அதைப் பலர் படிப்பார்கள் என்ற வகையில் எனக்கு மகிழ்ச்சி. சிவசங்கரி என்ற எழுத்தாளர் தினமணியுடன் சேர்ந்து ஒரு லட்சம் பணம் சிறுகதைகளுக்காக ஆண்டுதோறும் செலவழிக்கப் போகிறார். இந்த ஆண்டு பல புதியவர்கள் விதம் விதமாகக் கதைகள் எழுதி வெற்றி பெற்றிருக்கிறார்கள். வரும் ஆண்டுகளிலும் இன்னும் அதிகம் பேர்கள் வெற்றி பெறுவார்கள். இப்படி சிறுகதைகளை ஊக்கப்படுத்தும் சிவசங்கரிக்கும் அதைப் பலப்படுத்தும் தினமணிக்கும் திரும்பவும் என் நன்றி. இதற்கு ஒரு விழா ஏற்பாடு செய்து கௌரவம் செய்ததற்கும் இன்னும் நன்றி.

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 33

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 33

கு அழகிரிசாமியும் நானும்

சிறப்புரை : கல்யாணராமன்

இடம் : ஸ்ரீராம் குரூப் அலுவலகம்
மூகாம்பிகை வளாகம்
4 லேடீஸ் தேசிகா தெரு
ஆறாவது தளம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
(சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே)

தேதி 17.02.2018 (சனிக்கிழமை)

நேரம் மாலை 6.00 மணிக்கு

பேசுவோர் குறிப்பு : சமீபத்தில் ஆரஞ்சாயணம் என்ற பெயரில் காலச்சுவடு பதிப்பகமாக ஒரு கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. பேராசிரியர், விமர்சகர்.

அனைவரும் வருக,

அன்புடன்
அழகியசிங்கர்
9444113205