18.09.2020 என்று பாரதியின் பேரறிவு

18.09.2020 என்று பாரதியின் பேரறிவு என்ற தலைப்பின் கீழ் பாரதி அன்பர் புலவர் இராம மூர்த்தியின் உரை வீச்சைக் கேளுங்கள். கவிதைகள் வாசிக்கும் சூம் கூட்டத்தில் இந்தச் சொற்பொழிவு நடந்தது. அறிமுக உரையை நிகழ்த்தியவர் வ.வே.சு.
https://www.youtube.com/watch?v=lQ1VxIi9pVo&t=754s

இது வரை……

அழகியசிங்கர்

    இதுவரை 75 கவிஞர்கள் விருட்சம் கவிதை வாசிப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு சூம் மூலம் கவிதை வாசித்து விட்டார்கள். இன்று நடைபெற உள்ள 17வது கூட்டத்தில் கலந்து கொள்பவர்களை (நான்கு பேர்கள்) வரவேற்கிறேன்.

    அரசியல், மத, ஆபாச கலப்பில்லாமல் கவியரங்கக் கூட்டங்களை நடத்தியதே பெரிய விஷயம் என்று தோன்றுகிறது.

    கவிதைகளில் பல வகை உண்டு.  மரபு, ஹைக்கூ, தன் முனைப்புக் கவிதைகள், புதுக் கவிதைகள் என்றெல்லாம்.  ஆனால் புதுக்கவிதை வாசிப்பவர்கள்தான் முன்னணியில் நிற்கிறார்கள்.

    ஆக மொத்தத்தில் பலவிதமான கவிதைகளைக் காது கொடுத்துக் கேட்க முடிந்தது. கவிதை வாசிக்கும் நண்பர்களைப் பிடித்திழுப்பது சற்று சங்கடமாக இருக்கிறது.  பலருக்கு சூமில் எப்படி கவிதை வாசிப்பது என்று தெரியவில்லை.  சிலருக்குக் கலந்து கொள்வதில் விருப்பமில்லை.  அதையும் வெளிப்படையாகச் சொல்லத்  தயங்குகிறார்கள்.  

    இனிமேல் இந்தக் கவிதை வாசிப்பு கூட்டத்தை வேறு விதமாக மாற்றி அமைக்கலாமென்று நினைக்கிறேன்.  கூட்டம் தொடங்குவதற்கு முன் கவிதை குறித்து உரை நிகழ்த்துபவரை ஏற்பாடு செய்யலாமென்று நினைக்கிறேன்.  பின் யார் வேண்டுமானாலும் கலந்து கொண்டு கவிதை வாசிக்கலாமென்று தோன்றுகிறது.

    இந்தக் கூட்டம் ஆரம்பம் முதல் இதுவரை சிறப்பாக நடைபெற வேண்டுமென்று அக்கறை கொண்டவர்கள் இருவர்.  சுந்தர்ராஜன், கிருபானந்தன். அவர்களுக்கு நன்றி.  அதேபோல் வ.வேசு. அபாரமாக எல்லோருடைய கவிதைகளையும் உள்வாங்கிக்கொண்டு யார் மனதையும் புண்படுத்தாமல் மதிப்பீடு செய்வது. இது லேசான விஷயமாகத் தோன்றவில்லை.  அவருக்கும் நன்றி.


விருட்சம் 17வது சூம் கவிதை வாசிக்கும் கூட்டம்

    அழகியசிங்கர்

     கூட்டம்  18..09.2020 – வெள்ளிக்கிழமை  மாலை 7 மணி அளவில் நடைபெற உள்ளது.

    சிறப்புரை : ‘பாரதியின் பேரறிவு’  என்பதைக் குறித்து புலவர் இராமமூர்த்தி  அவர்கள் உரை நிகழ்த்துகிறார்.

    கவிதைகள் வாசிக்க இசைந்துள்ளவர்களின் பட்டியல்.

    1. கவிஞர் புவனா முத்துக்குமார்
    2. கவிஞர் எல்.ரகோத்தமன்
    3. கவிஞர் நந்தாகுமாரன்
    4. கவிஞர் ப.சகதேவன்

Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/86546571162?pwd=dHdtb0Rvak1JbEZpUGlzOHlVWkg1QT09
Meeting ID: 865 4657 1162Passcode: 813182

பேரறிஞர் அண்ணா சமாதியைப் பார்க்கச் சென்றேன்



அழகியசிங்கர்

    பேரறிஞர் அண்ணா மரணம் அடைந்தபோது நான் பள்ளியில் படிக்கும் சிறுவன்.

    அப்போது அண்ணா சமாதியைப் பார்க்கப் போவது மாணவர்களிடம் பெரிய ஆர்வம் இருந்தது.  நானும் என் கூட பள்ளிக்கூட நண்பர்களும் சேர்ந்து அண்ணா சமாதியைப் பார்க்கச் சென்றோம்.

    நான் சென்னை தங்கச்சாலையிலிருந்து நடந்தே அங்குச் சென்றேன். மாணவர்களுடன் சேர்ந்துகொண்டு.  அண்ணா சமாதியைப் பார்த்தபிறகு, அங்குள்ள கடற்கரையில் விளையாடப் போனோம். மாணவர்கள் ஒருவருக்கொருவர் நீரை ஒருவர் மீது ஒருவர் வாரி அடித்தபடி விளையாடினோம்.

    என் சட்டை முழுவதும் நனைந்து விட்டது.  நான் சட்டையைக் கழட்டிப் பிழிய நினைத்தேன்.  ஒரு குறும்புக்கார மாணவன் என் சட்டையைப் பிடுங்கி பந்து விளையாடுவதுபோல் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து விளையாடினான்.  கடைசியில் என் சட்டை கடலில் போய் விட்டது. 

    நான் திரும்பும்போது சட்டை இல்லாமல் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன்.  குறிப்பாகச் சட்டை இல்லாமல் இருப்பதைப் பார்த்து என்அம்மா என்னை திட்டுவாளோ என்று திகைத்தபடியே வந்து கொண்டிருந்தேன். 

    நடந்து வரும் வழியில் ஒரு போலீஸ்காரரைப் பார்த்தேன். அவர் என்னைப் பக்கத்தில் வரும்படி கூப்பிட்டார்.  நான் நடுங்கி விட்டேன்.  போலீஸ்காரர் ஏன் கூப்பிடுகிறாரென்று.;

    கிட்டே சென்றபிறகு, “ஏன் இவ்வளவு ஒல்லியா இருக்கே?”என்று கேட்டார்.

    நான் அதற்கு என்ன பதில் சொல்வது.  மௌனமாக இருந்தேன்.

    “முட்டையெல்லாம் சாப்பிடு,” என்று அறிவுரை கூறி அனுப்பினார்.

    அன்று வழக்கம்போல் வீட்டில் திட்டு விழுந்தது. அதன் பிறகு நான் இன்னொரு முறை அண்ணா சமாதியைப் பார்க்கப்  போகவில்லை.  

சுட்டிப் பெண்ணே ஆரபியே


அழகியசிங்கர்

எழுந்ததும்
ஓடிவந்து என் போனைத் தட்டிப் பறிக்கிறாய்
பின்
என்னை விட்டு ஓட்டமாய் ஓடுகிறாய்
இதோ -
இப்போது இந்த ஊரை விட்டுக் கிளம்புகிறோம்
என்றால்
புரியாமல் முழிக்கிறாய்
தலையை வாரவிடாமல்
உடைகளைக் கழற்றி எறிந்து
அங்கும் இங்கும் குதிக்கிறாய்
அம்மாவையும் அப்பாவையும்
பாடாய்ப் படுத்துகிறாய்
உன் மழலைக் குரல்
இன்னும் காதில்
ஒலித்தவண்ணம் உள்ளது
சுட்டிப் பெண்ணே ஆரபியே....

                    03.05.2019
                    பீனிக்ஸ்
                    காலை : 6


11.09.2020 அன்று சூம் மூலம் விருட்சம் கவிதை வாசிப்பு கூட்டம்.

அழகியசிங்கர்

கடற்கரை மத்தவிலாஸம்  அங்கதம் அவர்கள் பாரதியைத் தூக்கிச் சுமந்த கல்கி என்ற தலைப்பில் வாசித்தார்.

24 கவிஞர்கள் பங்கு கொண்டு கவிதை வாசித்தார்கள்.

https://www.youtube.com/watch?v=yAyGsb-yPAs&t=6s

பாரதியாரைத் தூக்கி சுமந்த கல்கி

அழகியசிங்கர்

விருட்சம் 16 சூம் கவிதை வாசிக்கும் கூட்டம் 11.09.2020 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 7 மணி அளவில் 22கவிஞர்கள் கலந்து கொண்டு கவிதை வாசித்தார்கள். பாரதியாரைத் தூக்கி சுமந்த கல்கி என்ற தலைப்பில் கடற்கரை மத்த விலாஸம் அங்கதம் உரை நிகழ்க்தினார்

உலக தற்கொலை தினம்


அழகியசிங்கர்

    உலக தற்கொலை தினமாம் இன்று தற்கொலையைப் பற்றிப் பேசும்போது இரண்டு தற்கொலைகளை என்னால் மறக்க முடியாதது.
    ஒன்று ஆத்மாநாம். இரண்டு ஸ்டெல்லா புரூலு;.  ஆத்மாநாம் தற்கொலை குறித்து நான் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன்.

    ஆத்மாநாமிற்கு இரங்கல் கூட்டம் நடந்தபோது ஸ்டெல்லா புரூஸ் கலந்துகொள்ளவில்லை.

    முதன்முறை ஆத்மாநாம் தற்கொலைக்கு முயற்சி செய்தபோது, ரொம்பவும் பாதிப்பு அடைந்தவர் ஸ்டெல்லா புரூஸ். அந்த நிகழச்சிக்குப் பிறகு அவர் தனியாக இருக்கப் பிடிக்காமல் அவருடைய சகோதரி வீட்டில் தங்கியிருந்தார்.  அந்த அதிர்ச்சியிலிருந்து மீளப் பல நாட்கள் ஆயின.

    தற்கொலை செய்து கொண்டவர்கள் ஆத்மா சுற்றிக்கொண்டே இருக்குமென்று ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார்.

    இதில் என்ன வேடிக்கை என்னவென்றால் ஆத்மாநாம் தற்கொலையைக் கண்டித்த ஸ்டெல்லா புரூúஸ தற்கொலை செய்து கொண்டு விட்டார். தற்கொலை எண்ணிக்கையைப் பார்க்கும்போது சென்னைதான் முதலிடம் வகுக்கிறது தற்கொலைக்கு.

    இரங்கல் கூட்டத்தில் ஆத்மாநாம் தற்கொலையைப் பற்றிப் பேசிய ஒரு கவிஞர், தற்கொலைக்கு முன் அந்தக் கடைசி தருணத்தில் வேறு விதமாக அதிலிருந்து மீண்டு வந்து விடலாமென்று சொன்னார்.

    மனைவியின் மரணம் தாங்கமுடியாமல் தற்கொலை செய்து கொண்டுவிட்டார் ஸ்டெல்லா புரூஸ்.  மனைவி இறந்து 6 மாதம் கழித்துதான் தற்கொலை செய்து கொண்டார்.  மனைவியின் பிரிவுத் துயரை 6 மாதம் வரை தாங்கியவர் இன்னும் சில மாதங்கள் கழித்திருந்தால் அவர் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர்த்திருப்பார்.

    இன்னும் கேட்டால் அவர் தங்கியிருந்த இடத்திலிருந்து வேற இடம் மாறிப் போயிருந்தால், தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்திலிருந்து விடுபட்டிருப்பார்.

    ஆத்மாநாம்  தற்கொலையாக இருந்தாலும் சரி, ஸ்டெல்லா புரூஸ் தற்கொலையாக இருந்தாலும் சரி தவிர்க்க வேண்டிய தற்கொலைகள்.
    இதோ இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் போதே எத்தனைப் பேர்கள் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டிருப்பார்களோ தெரியாது


விருட்சம் சார்பில் சூம் மூலம் நடைபெற உள்ள 16வது கவிதை வாசிக்கும் கூட்டம்

அழகியசிங்கர்

    வருகிற 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று விருட்சம் சார்பில் சூம் மூலம் 16வது கவிதை வாசிக்கும் கூட்டம் நடைபெற உள்ளது.  கவிதை வாசிக்கும் கூட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், பாரதியை ஞாபகப்படுத்தும் விதமாக இந்த மாதம் முழுவதும் வெள்ளிக்கிழமை அன்று பாரதி அன்பர்கள் பாரதியைக் குறித்து உரை நிகழ்த்த உள்ளா கள் . 

    இந்த வாரம் உரை நிகழ்த்த இசைவு தந்துள்ளவர்
கடற்கரய் மத்தவிலாச அங்கதம் .  ‘பாரதியைத் தூக்கிச் சுமந்த கல்கி’ என்ற தலைப்பில் அவர் உரை நிகழ்த்துகிறார்.

    வழக்கம்போல் இந்த முறையும் கவிதை வாசிப்புக் கூட்டம் நடைபெறுகிறது.

    இக் கூட்டத்திற்கு எல்லாக் கவிஞர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

    ஒவ்வொருவரும் 2 நிமிடத்திற்குள் கவிதை வாசிக்க வேண்டும். நீளமான கவிதைகளைத் தவிர்க்க வேண்டும்.

    எந்தத் தலைப்பிலும் கவிதை வாசிக்கலாம்.  சூம் கூட்டத்தில் நேரிடையாக உங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டு கவிதையை வாசிக்கத் தொடங்கலாம்.

    இதுவரை பங்கு பெற்றவர்கள் கலந்து கொள்ளும்போது வாசிக்காத கவிதையை வாசிக்கவும்.

    கவிதையை வாசிக்கும்போது உச்சரிப்பைச் சரியாகக் கவனித்து உச்சரிக்கவும்.  அரசியல், மத சம்பந்தமான கவிதைகளை வாசிப்பதைத் தவிர்க்கவும்.  கவிதையில் ஆபாசத்தைத் தவிர்க்கவும்.

Virutcham Poetry MeetingTime: Sep 11, 2020 07:00 PM India
Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/83874520931?pwd=NU5JYXZqNGRIYmZhNG1YbjNKMXZkZz09
Meeting ID: 838 7452 0931Passcode: 599417

    .

அஞ்சலட்டைக் கதைகள் 19


அழகியசிங்கர்

இது என் 19வது கதை. இந்தக் கதை வாசிக்கும்போது இரண்டு நிமிடங்களுக்கு குறைவாக முடிந

இலக்கியக் கூட்டம்..

    அழகியசிங்கருக்காக நான் காத்துக்கொண்டிருந்தேன்.  இன்னும் வரவில்லை அவர்.   ஆறு மணி கூட்டத்திற்கு நாலரை மணிக்குக் கிளம்பினால்தான் சரியாக இருக்கும். 

    ஒவ்வொரு மாதமும் மூன்றாவது சனிக்கிழமைதான் கூட்டம் நடைபெறுகிறது.  சரியாக ஆறுமணிக்குக் கூட்டம் தொடங்கிவிட வேண்டும்.  நான் கார் எடுத்துக்கொண்டு அழகியசிங்கரை அழைத்துக்கொண்டு போவதாக சொல்லியிருந்தேன். 

    அவர் போஸ்டல் காலனியிலிருந்து வர வேண்டும்.  ஐந்தே கால் மணிக்குத்தான் வந்தார்.  வந்தவுடனே அவசரம். 

    அவசரம் அவசரமாகக் கிளம்பினோம். எல்லாம் எடுத்துக்கொண்டாயிற்றா என்று கேட்டேன் அழகியசிங்கரைப் பார்த்து.  
    எடுத்துக் கொண்டாயிற்று என்றார் அழகியசிங்கர்.

    கார் கதவைத் திறந்தவுடன் ஏறி உட்கார்ந்து கொண்டார். 

    “என் பக்கத்தில் காரில் உட்கார உங்களுக்குப் பயமில்லையா?” என்று கேட்டேன்.

   ” இல்லை ” என்று பதில் அளித்தார்.

   ” என் மனைவி நம்ப மாட்டாள்.”

   ” நான் உங்களை நம்புகிறேன்.  நீங்கள் நன்றாகத்தான் ஓட்டுகிறீர்கள்.”

    கார் மெதுவாக ஓடிக் கொண்டிருந்தது.  அடையார் கேட் ஓட்டல் அருகில் வந்தபோது காரை நகர்த்தவே முடியவில்லை. கார் முன்னால் தொழிற்சங்க ஊர்வலம். 

    “தெரியாமல் இந்தப் பக்க வழியில்  ஓட்டிக்கொண்டு வந்து விட்டேன்.”  

    அழகியசிங்கரோ பொறுமையின் எல்லையைக் கடந்து விட்டார்.

    “7 மணி ஆகிவிடும் போலிருக்கிறதே,” என்றார் பதட்டத்துடன்.

   ” எப்படியாவது போய் விடுகிறேன்,” என்றேன்.

    ஒவ்வொரு நிமிடமும் பதட்டம் கூடிக்கொண்டே போயிற்று.

    நாங்கள் ஒரு வழியாக மூகாம்பிகை காம்பளெக்ûஸ அடைந்து விட்டோம். நானோ அழகியசிங்கரோ உரிய நேரத்தில் வரவில்லை என்றால் இன்னொரு இலக்கிய நண்பர் கூட்டத்தை நடத்தி விடுவார்.  அவர் எப்போதும் சரியா நேரத்திற்கு வந்து விடுவார்.

    கூட்டம் நடக்குமிடத்திற்கு ஙூப்டில் ஏறக் காத்துக்கொண்டிருந்தோம்.  ஆறாவது மாடி.  லிப்ட் கீழே இறங்கி வந்தது.  அதில் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எல்லோரும் இறங்கிக் கொண்டிருந்தார்கள்.  கூட்டம் முடிந்து விட்டது. நான் அழகியசிங்கரைப் பார்த்தேன்.  அவர் முகத்தில் அசடு வழிந்தது.