அழகியசிங்கர்
‘மண் பயனுற வேண்டும்’ என்ற தலைப்பின் 25.09.2020 அன்று
திருமதி பத்மா மோகன் அவர்களின் உரையின் ஒளிப்பதிவை இங்கு அளிக்கிறேன்.
அழகியசிங்கர்
‘மண் பயனுற வேண்டும்’ என்ற தலைப்பின் 25.09.2020 அன்று
திருமதி பத்மா மோகன் அவர்களின் உரையின் ஒளிப்பதிவை இங்கு அளிக்கிறேன்.
அழகியசிங்கர்
1. காந்தி பிறந்தநாள் இன்று
காந்தியைப் போற்றுவோம்
காந்தியைப் போற்றுவோம்
அவர் கொள்கைகளை ஆதரிப்போம்
அவர் நாமம் வாழ்க
அவர் நாமம் வாழ்க
2. வாசலில் வந்து நின்றார்
அவரைப் பார்த்து யார் என்று கேட்டேன்
காந்தி என்றார்
நான் அழகியசிங்கர் என்றேன்
அதன் பின் அவர் பேசினார் அவர் மொழியில்
நானும் பேசினேன் என் மொழியில்
ஆனால் இருவருக்கும் என்ன
பேசினோமென்று புரியவில்லை
ஒரே தேசத்திலிருந்தாலும்..
3. காந்தியைப் பற்றி
பாரதியார் எழுதினார்
வெ ராமலிங்கப் பிள்ளை எழுதினார்
மாடர்ன் பொயட் ஞானக்கூத்தன் எழுதினார்
இன்னும் இன்னும் பலரும் எழுதினார்கள்
கவிஅரங்த்தில் கவிதைகள் வாசித்தார்கள்
இதோ –
நானும் எழுதி விட்டேன்.
4. நேற்று என் கனவில்
காந்தி வந்தார்
பரவசத்துடன் உட்காரச் சொன்னேன்
கோபமாக முறைத்துப் பார்த்தார்
ஏன் ஏன் என்றேன்
எல்லோரும் கவிதைகள் எழுதி என்னைச்
சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள்
எவ்வளவு முறை சாவது?
5. தெருவில் ஒரு மனிதன் படுத்திருந்தான்
உடலெல்லாம் புழுதி
கண்கள் இடுங்கி இருந்தன
காந்தி அவனைப்
பரிதாபத்துடன் பார்த்தார்
பின் தட்டி எழுப்பினார்
“என்ன?” என்று கேட்டான்
“நான் காந்தி,” என்றார்
“போய்யா..” என்றான் குடிகாரன்
(01.10.2020)
(அக்டோபர் 2ம்தேதி விருட்சம் கவிதை வாசிப்பு கூட்டத்தில் வாசித்த கவிதை)
அழகியசிங்கர்
‘இன்றும் காந்தி’ என்ற தலைப்பில் ஸ்ரீ பா.வீரராகவன் உரை நிகழ்த்துகிறார்.
கூட்டத்தில் எல்லோரும் அனுமதிப் பெற்றே உள்ளே நுழைய முடியும்.
காந்தி ஜெயந்தி நாளை. காந்திய சிந்தனைகளை, காந்தியைப் பற்றி கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். பொதுவாகவும் கவிதை வாசிக்கலாம்.
இதுவரை இக் கூட்டங்களில் கலந்து கொண்டு கவிதை வாசித்தவர்களும் இணைந்து கவிதை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். கூட்டம் அதிகமாகச் சேர்ந்துவிட்டால் ஒரே ஒரு கவிதை வாசிக்கும்படி நேரிடும். இல்லாவிட்டால் அதிகமாக எண்ணிக்கை உள்ள கவிதைகள் வாசிக்கவும்.
அரசியல் கவிதை, மதச்சார்பான கவிதை, நாத்திக கவிதை, ஆபாசமாக எழுதப்படுகிற கவிதை, கொரானா கவிதையெல்லாம் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
கூட்டம் நடக்கும் அன்று உங்கள் பெயர்களைப் பதிவுசெய்து கொள்ளலாம்.
எல்லோரும் வாருங்கள் கவிதை வாசிப்போம் இந்த முறை 6.30 மணிக்குக் கூட்டம்.
சூமில் இணைவதற்கான
Topic: விருட்சம் நடத்தும் சூம் வழியாக 19வது கூட்டம்
Time: Oct 2, 2020 06:30 PM India
Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/81101721564?pwd=STVKS2hrZkVuZ3lEcTU1TkpBM3U1UT09
Meeting ID: 811 0172 1564Passcode: 271815
அழகியசிங்கர்
சமீபத்தில் கவிஞர் வைதீஸ்வரன் பிறந்த நாள் போது அவரை அழைத்துப் பேச அழைத்தோம். அவரும் மனம் விட்டுப் பேசினார். இது மிகக் குறைவான எண்ணிக்கைக் கொண்ட கூட்டம். ஒரு சிலரைத் தவிரக் கூட்டத்திற்குக் கூப்பிடவில்லை. கிட்டத்தட்ட 1 மணிநேரம் பேசினார். அதனுடைய ஒளிப்பதிவை இங்கு அளிக்கிறேன்.
https://www.youtube.com/watch?v=NyzlxqVIpdw&t=4660s
அழகியசிங்கர்
22ஆம் தேதி அசோகமித்திரன் பிறந்தநாள். 24ஆம் தேதி நாங்கள் ஒரு 18 பேர்கள் கூடினோம் ஒவ்வொருவராக ஒரு கதையை வாசித்தோம். எல்லோரும் 3 நிமிடங்களுக்குள் ஒரு கதையை வாசிக்க வேண்டும். நான் 2.30 நிமிடங்களுக்குள் அவருடைய இந்திரா வீணை கற்றுக்கொள்ளவில்லை என்ற கதையைப் பற்றி சொன்னேன். இது ஒரு அற்புதமான அனுபவம். சூம் மூலமாகப் படித்ததை யாருடனும் அப்போது பகிர்ந்து கொள்ளவில்லை. கலந்துகொள்பவர்கள் மட்டும்தான் அந்தக் கூட்டம். மொத்தமே 18 பேர்கள் அதாவது கதையை வாசித்தவர்கள் மட்டும் பகிர்ந்துகொண்ட கூட்டம்.
இங்கே உங்களுடன் அந்தப் ஒளிப்பதிவைப் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
https://www.youtube.com/watch?v=pCYVrNebwAk&t=115s
அழகியசிங்கர்
1. இன்றைய தினத்தைத்
துக்க தினமாக அனுசரிக்கப்பட்டு
நம் மதிப்பிற்குரிய
பாடகர் எஸ்.பி.பி பூலோக
வாழ்வைத் துறந்து விட்டார்
அவர் ஒரு இசை மேதை
அவர் ஒரு சகாப்தம்
யாரோ ஒருவர்தான் அப்படித்
தோன்றுவார்கள்
கடந்த சில தினங்களாக
அவரைப் பற்றி செய்தி
குடும்பத்தில் எல்லோரிடமும்
நுழைந்து நுழைந்து
வந்து கொண்டிருந்தது.
2. இன்று மதியம்தான் தெரிந்தது
தூங்கி விழித்தபோது
எஸ்.பி.பியின் மறைவு
வாட்ஸ்அப்பில் செய்தியாகப் பரவியிருந்தது
நண்பர் ஒருவர் தெரிவித்திருந்தார்
அவருக்கு எஸ்.பி.பி என்றால்
உயர் மூச்சு
நிச்சயம் கண்ணீர் சிந்தியிருப்பார்
என் நினைவில்
எஸ்.பி.பி வந்து வந்து போய்க்
கொண்டிருந்தார்
அவர் பூத உடல்
அவர் இல்லத்தை அடைந்தபோது
மழை பெய்ததாம்
ஆம்
அவருக்காக வானமும் துக்கத்தைத்
தெரிவித்து கண்ணீர் சிந்தியதா?
(25.09.2020)
(நேற்று விருட்சம் கவிதை வாசிக்கும் கூட்டத்தில் படித்த கவிதை)
அழகியசிங்கர்
நாளை வெள்ளிக்கிழமை அதாவது 25.09.2020 அன்று கூடுகிற கவிதைக் கூட்டத்தில், கவிதை எழுதுபவர்கள் எல்லோரும் இணைந்து கவிதை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். கூட்டம் அதிகமாகச் சேர்ந்துவிட்டால் ஒரே ஒரு கவிதை வாசிக்கும்படி நேரிடும்.
அரசியல் கவிதை, மதச்சார்பான கவிதை, நாத்திக கவிதை, ஆபாசமாக எழுதப்படுகிற கவிதை, கொரானா கவிதை, பற்றி கவிதையெல்லாம் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
கூட்டம் நடக்கும் அன்று உங்கள் பெயர்களைப் பதிவுசெய்து கொள்ளலாம்.
பாரதியைக் குறித்து சிறப்புரை ஆற்ற வருபவர் பதமா மோகன் அவர்கள். அவர் பேசப் போகிற தலைப்பு : மண் பயனுறு வேண்டும்.
எல்லோரும் வாருங்கள் கவிதை வாசிப்போம் இந்த முறை 6.30 மணிக்குக் கூட்டம்.
சூமில் இணைவதற்கான
Topic: virutcham pooem meetingTime: Sep 25, 2020 06:30 PM India
Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/87503178512?pwd=bi9ENTN3aWlzaVlvNldROEZuNy9vZz09
Meeting ID: 875 0317 8512Passcode: 478140
அழகியசிங்கர்
கொரானா நேரத்தில் நான் 112வது இதழ் நவீன விருட்சம் அச்சிட்டு எல்லோருக்கும் அனுப்பியிருந்தேன். அதன்பின் 113வது இதழைத் தயாரித்தேன். முதலில் வோர்டில் தயாரித்ததால் சில சிக்கல்கள் ஏற்பட்டுவிட்டன. சரிசெய்து 113வது இதழை அச்சடிக்க வேண்டும்.
ஆனால் இப்போது 114வது இதழை எப்போதும் போல் பேஜ்மேக்கரில் தயாரித்து அச்சடித்து விட்டேன். பிஒடியாக அச்சடித்துள்ளேன். ஒரு இதழ் தாயாரிச்சும் செலவு ரூ.33. ஆனால் பத்திரிகையின் விலையோ ரூ.20 தான்.
இந்த இதழை முதலில் சந்தாதாரர்களுக்கு மட்டும் அனுப்புவதாக உள்ளேன். இன்னும் தேவையான பிரதிகளை அச்சடித்து விடுவேன்.
செலவு அதிகமாக இருந்தாலும் தேவையான பிரதிகளை அச்சடித்து நிறுத்தி விடலாம். சாதாரண ஆப்செட்டில் அடிக்க வேண்டுமானால் குறைந்தபட்ச 300 எண்ணிக்கையில் அடிக்க வேண்டும். இதழ் பிரதிகள் மீந்து போய்விடும்.
வழக்கம்போல இந்த இதழிலும் 5 கதைகள் இடம் பெற்றிருக்கின்றன.
பொதுவாக என்பெண், மனைவியெல்லாம் நவீன விருட்சம் இதழைப் பார்த்தால் படிக்க மாட்டார்கள். படி, படி என்று கெஞ்ச வேண்டும். ஆனால் இந்த முறை விதிவிலக்காக அவர்கள் படித்து விட்டார்கள்.
எல்லாக் கதைகளையும் என் பெண் படித்துவிட்டுப் பாராட்டினாள். இது என்னமோ பெரிய அதிசய நிகழ்ச்சி நடந்ததுபோல் தோன்றியது.
வழக்கம்போல் சிறுபத்திரிகை என்றால் சில கதைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள்.
ஆனால் கட்டுரைகள் பெரிதும் வருவதில்லை. ஒரு சிறுபத்திரிகையில் எழுத்துதான் இருக்கும். ஒரு கதைக்குப் படம் வரைவதெல்லாம் கிடையாது. அப்படித்தான் தயாரித்திருக்கிறேன் இந்த இதழை. 113வது இதழில் படங்கள் சேர்த்ததால் சில டெக்னிக்கல் பிரச்சினை. கூடிய விரைவில் சரிசெய்து அதையும் சந்தாதாரர்களுக்கு அனுப்பி விடவேண்டுமென்று தோன்றுகிறது.
வழக்கம்போல் 5 சிறுகதைகள். இந்தக் கதைகளைப் பற்றி ஒரு வார்த்தை சொல்ல வேண்டும். இந்த இதழில் உறைபனி என்கிற வசந்த தீபன் கதை சிறப்பாக உள்ளது. ஒவ்வொருவரும் படிக்க வேண்டும். மாறும் கணக்குகள் என்கிற ஜெயஸ்ரீ கதை முதன் முறையாக விருட்சத்தில் கதை எழுதி உள்ளார்.
இன்னும் பலருடைய கதைகளை உரிய நேரத்தில் பிரசுரிக்க முடியவில்லை.
எல்லோரும் கதைகளை பத்து பக்கங்களுக்குக் குறைவில்லாமல் எழுதி
அனுப்புகிறார்கள். நான்குப் பக்கங்களுக்குள் கதையோ கட்டுரையோ வரவேண்டும்.
பலர் கவிதைகள் அனுப்புகிறவர்கள் ஒரே ஒரு கவிதைதான் ஒவ்வொருவரும் அனுப்ப
வேண்டும். அப்படி அனுப்பினால் அதிகமாகப் படைப்புகளைச் சேர்க்க முடியும்.
படைப்பை அனுப்புவர்கள் அந்தப் படைப்புகள் விருட்சத்தில் பிரசுரமாகும் வரை வேறு எங்கும் அனுப்பப் போவதில்லை என்று உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பா.ராகவன், ஸிந்துஜா, தொடர்ந்து தஞ்சாவூர் கவிராயர் பேட்டிகளை வெளியிட்டிருக்கிறேன். மிலான் குந்தரா வின் ஒரு பேட்டியை வெளியிட்டிருக்கிறேன். அய்யப்பப் பணிக்கரின் மலையாளக் கவிதைகளை மொழிபெயர்த்திருப்பவர் தி.இரா மீனா அவர்கள்.
இதோ பத்திரிகையில் வெளிவந்த படைப்பாளிகளின் பட்டியல்.
1. பத்து கேள்விகள் – பத்து பதில்கள் – தஞ்சாவூர் கவிராயர்
2. செல்லத்தாயிக்குப் பேய் பிடித்துவிட்டது – சிறுகதை – சோ.சுப்புராஜ்
3. கறுப்பு அஞ்சல் அட்டைகள் (ஸ்வீடன் நாட்டுக் கவிஞர் டோமஸ் ட்ரான்ஸ்ட்ரோமெர்)
4. நேயம் – சிறுகதை – ஸிந்துஜா
5. கொரோனா கேட் – கவிதை – அழகியசிங்கர்
6. கதைக் கொலைகள் – கட்டுரை – கிருபானந்தன்
7. ஒரு கவிதை – அழகியசிங்கர்
8. மாறும் கணக்குகள் – சிறுகதை – ஜெயஸ்ரீ
9. 4 கவிதைகள் – பானுமதி ந
10. மலையாளக் கவிதைகள் – அய்யப்பப் பணிக்கர்
11. மிலான் குந்தரே – நேர்காணல் – ராம் முரளி
12. ஸ்..ஸ் சுரங்கம் 2 – சிறுகதை – சிறகு இரவிச்சந்திரன்
13. தீக்குளி – கவிதை – ந. பிச்சமூர்த்தி
14. உறைபனி – சிறுகதை – வசந்த தீபம்
15. நானும் பராசக்தியும் நலம் – சுப்பு
16. கவிதை வாசிக்கும் கூட்டங்கள் – கவிதை – அழகியசிங்கர்
என்பது
22.09.2020
அழகியசிங்கர்
வைதீஸ்வரனின் பிறந்த நாள் இன்று. 1935ஆம் ஆண்டு பிறந்தவர். 4 ஆண்டுகளுக்கு முன் பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்ற தலைப்பின் கீழ் பேட்டி எடுத்தேன்.
அவர் பிறந்தநாளை முன்னிட்டு அந்தப் பேட்டியை மறுஒளிபரப்பு செய்கிறேன்.
அன்று கவிதைகள் வாசித்தவர்கள் :
1. கவிஞர் புவனா முத்துக்குமார் 2. கவிஞர் எல்.ரகோத்தமன்
3. கவிஞர் நந்தாகுமாரன் 4. கவிஞர் ப.சகதேவன்
https://www.youtube.com/watch?v=1OTJ3nL-5GA&t=4s