மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 51

 

அழகியசிங்கர்  

 

 

சாலைக் குயில்

 

         

நோயல் ஜோசப் இருதயராஜ் 

 

 

ஒரு பஸ்ஸிலிருந்து குதித்து

மறு பஸ்ஸ÷க்கு ஓடிக் கொண்டிருந்தேன்.

ஒரே இரைச்சல்;

சைலன்சர் கழட்டிய மோட்டார் சைக்கிள்.

ஏர் ஹார்ன்கள், போலீஸ் பொறுக்கி விசில்கள்,

ஹோட்டல் ரேடியோ, கேசட் லைப்ரரி ஸ்டீரியோக்கள்,

கைதட்டல் அழைப்புகள்,

சினிமா அரசியல் சேம விசாரங்கள்

திடீரென ஓர் ஸ்வபரம்;

குக்கூ குக்கூ

சாலை ஆலக்கிளை ஒளிவில்

அமர்ந்த கடவுள் குரல்.

ஞானம் விளித்தது

சந்தியில்

நானே செவியுற்றேன்,

கால் மனம் அற்றேன்

உள்மன முடுக்குகளில்,

ஞாபகத்தின் ஒருவழிகளில்

வெறிகள், நிராசைகள்

நெரிந்து மோதி

நின்றன

ஒரு நொடிக்குள்

அந்த ஈரசைச் சந்த எதிரொலி எங்கெங்கும்.

மறு நொடி

சந்தடி

நன்றி : மறுமொழி – கவிதைகள் – நோயல் ஜோசப் இருதயராஜ் –  முதல் பதிப்பு : ஜøலை 1997 – பக்கங்கள் : 80 – விலை : 30  – வெளியீடு : ரூபி பெலிசியா வெளியீடு, 63/64 மூன்றாம் குறுக்குத் தெரு, சுந்தர் நகர், மீட்டர் பாக்டரி ரோடு, திருச்சிராப்பள்ளி – 620 021  

தவிர்க்க வேண்டியவை

 
அழகியசிங்கர்
 
 
சிலசமயம் நம்மை அறியாமல் சில காகிதங்கள் கிடைக்கும். அந்தக் காகிதங்களில் எதாவது அச்சடித்திருக்கம். அது நமக்கு உபயோகமாக இருக்கும். அப்படி ஒரு அச்சடித்தக் காகிதம் கிடைத்தது. சரவணா காபி அச்சடித்த 2016 காலண்டரின் பின் பக்கம் உள்ள வாசகம்தான் அது.
 
சில தவறான செயல்கள், தவிர்க்க வேண்டியவை என்று எழுதியிருந்தது. அதைப் படித்தவுடன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது எல்லோரும் தெரிந்துகொண்டால் நல்லது என்று நினைத்தேன். இதோ உங்களுக்கும் படிக்க அளிக்கிறேன். இதில் காணப்பட்ட வாசகங்களைக் குறித்து நீங்கள் கூற விரும்புவது என்ன என்பதையும் அறிய ஆவலாக இருக்கிறேன்.
 
 
1. இரவில் துணி துவைக்கக் கூடாது
2. இரவில் குப்பை வெளியில் கொட்டக்கூடாது
3. இரவில் மரத்தின் கீழ் தூங்கக்கூடாது
4. விரதம் இருக்கும் தினத்தில் அடிக்கடி நீர் அருந்தக்கூடாது. பகலில்
தூங்கக் கூடாது. வெற்றிலை பாக்குப் போடக் கூடாது. உணவில் கத்திரிக்காய் சேர்க்கக் கூடாது.
5. முகத்தை இடது கையால் தொடக்கூடாது
6. ஓரடி நடவேன், ஈரடி கடவேன்,
இருந்தும் உண்ணேன். படுத்து உறங்கேன்
இது பழம் பாடல். இதன் பொருள்.
 
தனது உடலின் நிழல் கால் அளவில் ஒரு அடியாக இருக்கும் நேரமாகிய உச்சிப் பொழுதில் வெளியே திரிய மாட்டேன். ஈரமான இடங்களில் நடக்க மாட்டேன். ஏற்கனவே சாப்பிட்டது வயிற்றில் இருக்க மேலும் உண்ண மாட்டேன். தூக்க வராமல் படுக்கைக்குச் செல்ல மாட்டேன்.
 
7. பயணம் செய்யும்போது அதிர்ச்சி இருந்தால் படிக்கக்கூடாது.
8. சளி பிடிக்கும்போது மூக்கை பலமாகச் சீந்தக் கூடாது.
9. தலைக்கு வைக்கும் தலையணை மீது உட்காரக்கூடாதுü
10. ஒரே ஆடையுடன் உணவு உட்கொள்ளக்கூடாது.
11. பிறர் பயன்படுத்திய ஆடை, செருப்பு முதலியவற்றை அணியக்கூடாது.
12. காலில் ஈரம் இருக்கும்பொழுது படுக்கக்கூடாது. ஈரம் காய்ந்த பின் படுக்க வேண்டும்.
13. வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு ஆகிய திசைளில் தலை வைத்துப் படுக்கக்கூடாது.
 
மேலே குறிப்பிட்ட கட்டளைகளில் சிலவற்றை நான் ஏற்றுக்கொள்கிறேன். சிலவற்றை ஏற்க முடியாது. உதாரணமாக பகலில் தூங்கக் கூடாது என்று ஒரு கட்டளை. உண்மையில் பகலில்தான் எனக்கு தூக்கம் வரும். சரியாக சாப்பிட்ட 12 அல்லது ஒரு மணி சுமாருக்கு கண் தானகவே தூக்கத்தைத் தந்து விடும். நான் ஒரு நாற்காலியில் அமர்ந்து என்னை அறியாமல் தூங்கி விடுவேன். அப்போது வருகிற அந்தத் தூக்கத்திற்கு இணை எதுவும் கிடையாது. அதேபோல் ஓரே ஆடையுடன் உணவு உட்கொள்ளக்கூடாது என்று ஏன் சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை. உணவில் கத்திரிக்காய் சாப்பிடக்கூடாது என்று சொல்வது ஏன் என்று தெரியவில்லை. கத்திரிக்காய் போல ருசியான காய்கறி யாராலும் தவிர்க்க முடியாது. வெற்றிலைப் பாக்கும் போடக்கூடாது என்பதையும் நம்ப முடியவில்லை. வெற்றிலை சீரணமாக உதவும். அதை ஏன் போடக்கூடாது.
 
நாமே முகத்தைத் தொடும் வழக்கம் அற்றவர்கள். முகத்தை அலம்பும்போதுதான் முகத்தைத் துடைப்போம். அப்போது வலது கை இடது
கை என்பதை அறிய மாட்டோம்.

நீங்களும் படிக்கலாம்… 26

கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நாவல் எழுதுவது எளிதானதா?

 

அழகியசிங்கர் 

 

இப்போதெல்லாம் நான் புத்தகம் படிக்க ஆரம்பித்தால் ஒரு புத்தகத்தின் கால் பகுதியைப் படித்தவுடன், அப் புத்தகத்தைத் தொடர்ந்து படிக்க எனக்கு எண்ணம் தோன்றாது.  மேலும் அப் புத்தகம் என் அருகில் இல்லாமல் எங்காவது போய்விடும்.  எந்தவித நிர்ப்பந்தமும் இல்லாததால் புத்தகம் மறந்து போய்விடும்.  இன்னும் சில புத்தகங்களை அரைப் பகுதியாவது படித்திருப்பேன்.  அதுவும் முழுவதும் முடிப்பதற்குள் என்னை விட்டு எங்காவது போய்விடும்.  இதையும் மீறி வேறு சில புத்தகங்களை நான் முக்கால்வாசிப் படித்து நிறுத்தியிருப்பேன்.  முழுதாக ஒரு புத்தகத்தைப் படிப்பது என்பது என்னால் இயலாத காரியமாகவே இருக்கும்.

ஆனால் ஒரு கூட்டத்தில் பேசுவதாக இருந்தால் அல்லது ஒரு கட்டுரைத் தயாரித்து எழுத வேண்டுமென்றால் ஒரு புத்தகத்தை முழுவதுமாக நான் படித்துவிடுவேன்.  2015ஆம் ஆண்டு நான் இப்படித்தான் ஒரு இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களைப் படித்து அது குறித்து எழுத வேண்டுமென்ற முனைப்பில் இருந்து செயல்பட்டேன்.

எம் ஜி சுரேஷ் அவர்களின் தந்திர வாக்கியம் என்ற நாவலைப் படிப்பதற்கு எனக்கு எந்தவித தடங்களும் இல்லை. 230 பக்கங்கள் கொண்ட நாவல் இது என்பதால் இந்தத் தடை இல்லை.  கடந்த சில தினங்களாக நான் விடாமல் தந்திர வாக்கியம் என்ற நாவலை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்தேன்.  சமீபத்தில் என் சூழ்நிலை வாசிப்பதற்கு ஏற்றதாக அமையவில்லை என்றாலும் இந்த நாவலைப் படித்து முடித்துவிடவேண்டும் என்ற முனைப்பில்  படித்து முடித்தேன்.

தமிழில் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் எம் ஜி சுரேஷ்.  அவர் கிட்டத்தட்ட 6 நாவல்கள் எழுதி இருக்கிறார்.  பல சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.  பல கட்டுரைத் தொகுப்புகளைக் கொண்டு வந்திருக்கிறார்.

பின் நவீனத்துவம் என்றால் என்ன என்ற அறிமுக நூலை எழுதி உள்ளார்.  திரைப்படத்துறையிலும் அவர் தன் பங்கை செலுத்தி உள்ளார்.

ஒரு கோட்பாடை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாவலை எழுதுவது என்பது சற்று சிரமமான ஒன்று.  எனக்குத் தெரிந்து ஒரு பின் நவீனத்துவ கோட்பாடு பேசும் ஒரு நாவலாசிரியர் எழுதிய பல நாவல்களை அவர் அப்படியே மேலநாட்டு நாவல்களின் மாதிரிகளை எடுத்து அப்படி எழுதியிருக்கிறார்.  அந் நாவல்களை எல்லாம் படிக்கும்போது உள் வாங்கிக்கொள்ள முடியவில்லை.  ஆனால் எம் ஜி சுரேஷ் அப்படி இல்லை. அந்த மாதிரிகளை உதாரணமாக வைத்துக்கொண்டு தன் இயல்பாய் புதிய வகை நாவல்களை எழுதி உள்ளார்.

தந்திர வாக்கியம் என்ற நாவலும் துண்டாடப்பட்ட விவரணைகளைக் கொண்ட நாவல்தான்.

இந் நாவலில் இரண்டு விதமான வாழ்க்கை முறையைக் கொண்டு வருகிறார்.  ஒன்று தற்கால வாழ்க்கை முறை.  இன்னொன்று புத்தர் வாழ்ந்த கால வாழ்க்கை முறை.  ஐடி துறையில்  படுகிறபாட்டை ரொம்ப சுலபமாக சுரேஷ் விவரித்துக்கொண்டு போகிறார்.  நிகண்டன் என்பதுதான் நிக்கியின் நிஜமான பெயர்.  அப்பா ஜெயராமனுக்கும், இருளாயிக்கும் பிறந்த பையன்.

நிக்கிக்கு அம்மாவின் கறுப்பும், அப்பாவின் மாநிறமும் கலந்த அரைக் கறுப்பு நிறம் என்று விவரிக்கிறார். பார்க்க தெற்கு சூடானில் இருக்கும் நூபியனின் தோற்றம் என்று விவரிக்கிறார்.  பின் நிக்கி பள்ளிக்கூடங்களில் படுகிற பிரச்சனைகளை விவரிக்கிறார்.  மேல் நாட்டு வர்க்கத்தினர் படிக்கும் விலையுயர்ந்த பள்ளிக்கூடத்தில் தாழ்த்தப்பட்ட ஜாதியைக்கொண்ட நிக்கி படும் அவஸ்தைகளை விவரிக்கிறார்.

ஐடி கம்பெனியில் ஒவ்வொரு கம்பெனியாக மாறிக்கொண்டிருக்கிறான் நிக்கி.  தனுஜா கங்குலி என்பவளைச் சந்திக்கிறாள்.  அவள் அவனை மாற்றுகிறாள்.  நவநாகரீக யுவனாக மாறுகிறான்.  கங்குலி என்ற பிராமண வகுப்பைச் சேரந்த வங்காளி தனுஜா.  அவள் அவனைத் திருமணம் செய்துகொள்ள உடனடியாக சம்மதிக்க மாட்டேன் என்கிறாள்.  சினை முட்டைகளை சேமிப்பு வங்கியில் உறைநிலையில் சேமித்து வைக்கும் நவநாகரீக மங்கை.  தற்போது எதிர்கொள்ளும் ஐடி பிரச்சினையை தீவிரமாக இந்த நாவல் ஆராய்கிறது. ஐடி பிரச்சினையை முன் வைத்து நகர்ந்துகொண்டிருக்கிறது. 26ஆம் அத்தியாயத்திலிருந்து சீனாவின் மூன்று பேரரசுகளின் காலம் பற்றி விவரிக்கிறது.  ஹøவாகுவாங் ஜாங் என்ற புத்தத் துறவி எழுதிய கடிதங்களின் தொகுப்பை கொஞ்சம் கொஞ்சமாக இந் நாவலில் எம் ஜி சுரேஷ் விவரிக்கிறார்.  இந்தியாவிற்கு பயணியாகப் புறப்பட்ட ஜாங்கின் பயணத்தைக் கடிதம் மூலம் இந்த நாவல் தொடருகிறது.  இந்தப் பயணத்தை மொழிபெயர்த்து தன் அப்பாவிற்கு அனுப்புகிறான் நிக்கி.

திரமிள் நாட்டின் தலைநகரமான மதுரையின் பிரதான சாலையில் ஜாங்கும் லுவோஜியாவும் நடந்து கொண்டிருப்பதெல்லாம் கடிதம் வழியாக நாவல் விவரிக்கிறது.

ஐடி கம்பெனியில் பணிபுரிவது என்பது ஆபத்தானது.  குடைராட்டினத்தில் மேலும் கீழும் செல்வதுபோல், நிக்கிக்கு திடீரென்று வேலை போய்விடுகிறது.  அந்தத் துக்கத்தைத் தாங்காமல் தனுஜா அவனை விட்டு அவனிடம் சொல்லாமல் போய்விடுகிறாள்.  ஐடி கம்பெனியில் நேரம் தெரியாமல் பணிபுரியும் ஆபத்து.  அதனால் பலருக்கு மனக் குழப்பம் ஏற்படுவதும், பைத்தியம் பிடித்துவிடுவதும், தற்கொலை செய்துகொள்வதும் சகஜமாக வருகிறது.

இந்த நாவல் மாற்றி மாற்றி நிகழ்கால ஐடி துறையில் உண்டாகும் அவலநிலை, பின் புத்தர்கால அனுபவ நிலையை விவரித்துக் கொண்டே போகிறது.  புத்தரின் தர்க்கம் என்ற தலைப்பில் ஒரு அத்தியாயம் வருகிறது.  பாரத்வாஜர் புத்தருடன் பேசுவதுபோல் ஒரு காட்சி வருகிறது.

புத்தர் எப்படி பாரத்வாஜருடன் வேறுபடுகிறார் என்ற கேள்வி எழும்புகிறது.  அதற்கு புத்தர் இவ்வாறு சொல்கிறார் :

‘அவர் மந்திரங்களை நம்புபவர்.  பிறப்பு, வாழ்க்கை, இறப்பு என்ற எல்லாவற்றுக்கும் மந்திரங்களை உச்சாடனம் செய்பவர் அவர்.  எனக்கு மந்திரங்களில் நம்பிக்கை இல்லை .  நான் தந்திரத்தை நம்புவன்.  தந்திரம் என்றால் உபாயம்.  இவர் மந்திரவாதி.  நானோ தந்திரவாதி.’  இந்த நாவலின் முழு தாத்பரியம் இந்த 93வது அதி;தியாயத்தில் அடங்கி விடுவதாகத் தோன்றுகிறது.  இந்த வாழ்க்கையின் சாரம்சத்தைத் தருணங்களால் ஆனது என்கிறார் இந் நாவலாசிரியர்.

இருட்டு ஒரு தருணம். வெளிச்சமும் ஒரு தருணம்.  இது ஒரு நிகழ்ச்சி.   மாறி மாறி நடக்கிறது என்கிறார் எம்.ஜி சுரேஷ்.  இந் நாவலைப் படிப்பது கூட ஒரு நல்ல தருணம் என்று எனக்குத் தோன்றுகிறது.

தந்திர வாக்கியம் – எம். ஜி சுரேஷ் – நாவல் – பக்கங்கள் : 232 – விலை : ரூ.200 – முதல் பதிப்பு : 2016 – வெளியீடு ; சொல்லங்காடி, புதிய எண் : 10, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை 600 011

 

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 50

அழகியசிங்கர்

ஞாயிறு

ஷாஅ

இன்று ஞாயிறு

இல்லை ஆமாம் விடுமுறை

இல்லை இது ஒரு கிழமை

எதுவாக இருந்தால் என்ன

அற்வுதங்கள் இடம் பெயரும்

ஓர் கணம்

ஒரு தாவல்

ஒரு மீளல்

ஒரு சஞ்சாரம்

ஒரு ஓட்டம்

ஒரு சொல் மொழி

ஒரு வரி

ஒரு அசைவு

ஒரு மிடறு

ஒரு கவளம்

ஒரு நுகர்வு

ஒரு வீச்சு

ஒரு சரிவு

ஒரு விலகல்

ஒரு நடை

ஒரு சிமிட்டல்

ஒரு ஸ்பரிசம்

ஒரு அயர்ச்சி

ஒரு ஆசுவாசம்

ஒரு ஒப்பனை

ஒரு வீழ்ச்சி

ஒரு புகல்

ஒரு துயில்

ஒரு ம்

நன்றி : கண் புகா வெளி – கவிதைகள் – ஷாஅ – பக்கங்கள் : 96 – முதல் பதிப்பு : டிசம்பர் 2014 – வெளியீடு : காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 669 கே பி சாலை, நாகர்கோவில் 629 001

ஒரே மேடையில் இரண்டு இலக்கியக் கூட்டங்கள்

அழகியசிங்கர்
 
 
இந்த மாதம் நாலாவது சனிக்கிழமை இலக்கியச் சிந்தனை என்ற அமைப்பும், குவிகம் இலக்கிய வாசல் என்ற அமைப்பும் இரு இலக்கியக் கூட்டங்களை அம்புஜம்மாள் தெருவில் உள்ள ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் ஏற்பாடு செய்தன. இரண்டு அமைப்புகளும் சேர்ந்து கடந்த இரண்டு கூட்டங்கள் நடத்துகின்றன. இலக்கியச் சிதனை கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தியிருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக இலக்கியச் சிந்தனை மாதாந்திர கூட்டத்தை சரிவர செய்ய இயலவில்லை. பொதுவாக இலக்கியச் சிந்தனைக் கூட்டங்களுக்கு யாரும் வருவதில்லை. சிலசமயம் கூட்டத்தில் பேச வருபவரும் அதை ஏற்பாடு செய்தவர் மட்டும் இருப்பார்கள். அதனால் குவிகம் வாசக சாலை மூலம் ஏற்பாடு செய்வதால் இன்னும் சிலர் கூடுதலாக கூட்டத்திற்கு வரலாம்.
 
கிருபானந்தனும், சுந்தர்ராஜனும் முழு மூச்சாக இலக்கியக் கூட்டங்களை நடத்த வேண்டுமென்று தீவிரமாக இயங்குபவர்கள். இதுவரை வெற்றிகரமாக 20க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தியவர்கள். அவர்கள் முயற்சியில் இலக்கியச் சிந்தனை அமைப்பும். குவிகமும் சேர்ந்து கூட்டங்களை நடத்தத் துவங்கி உள்ளன. முதலில் அந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
இப்படி இரண்டு கூட்டங்களை ஒரே சமயத்தில் நடத்துவதால் ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள் கூட்டங்களை முடிக்க முடியுமா என்பது தெரியவில்லை.
 
சனிக்கிழமை நடந்த கூட்டத்தில் இலக்கியச் சிந்தனை சார்பில் நாராயணியம் பற்றி சுந்தரராஜனும், குவிகம் சார்பில் லா ச ராமமிருதத்தின் அபிதா என்ற நாவலைப் பற்றி ஒரு கலந்துரையாடலும் நடந்தது. நேரம் போனதே தெரியவில்லை. நாராயணியம் பற்றி பேசிய சுந்தரராஜன் மனதைத் தொடும்படி பேசினார். 9 மணிக்குத்தான் கூட்டங்கள் முடிந்தன. லாசராவின் அபிதா என்ற நாவலைப் படிதத்தது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. தொடர்ந்து இரண்டு அமைப்புகளும் செயல்பட என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

101வது இதழ் நவீன விருட்சம் பற்றி கொஞ்சம் சொல்லட்டுமா

அழகியசிங்கர்

 

101வது இதழ் நவீன விருட்சம் வந்துவிட்டது.  அதை ஒவ்வொரு இடமாய் கொண்டு போய் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.  க்ரோம்பேட்டையில் காந்தி புத்தக ஸ்டால் என்கிற ரயில்வே பேப்பர் கடையில் கொடுத்திருக்கிறேன். ஸ்டேஷன் உள்ளே இந்தக் கடை இருக்கும்.  அதேபோல் டிஸ்கவரியில் கொடுத்திருக்கிறேன். இப்போதுதான் மெதுவாக ஒவ்வொருவருக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.  புத்தகக் காட்சியின்போது சிலர் வாங்கிச் சென்றிருக்கலாம்.

விருட்சம் பத்திரிகை மூலம் என் நோக்கம் என்ன?  பத்திரிகையைப் புரட்டினால் ஒரு அரை மணி நேரம் அல்லது முக்கால் மணி நேரத்தில் பத்திரிகையைப் படித்துவிட வேண்டும்.  எளிதாக அப்படி படித்துவிடக் கூடிய பத்திரிகைதான் இது.  எதாவது ஒரு கதையையோ கவிதையையோ படிக்கும்போது ஒருவித ருசி வேண்டும்.  அதை சிலர் கிண்டல் செய்கிறார்கள்.  ஒரு பத்திரிகை என்றால் அதை உடனே படித்துவிட வேண்டும்.  எளிமையாக இருப்பதால் அது ஆழமாக இருப்பதில்லை என்ற அர்த்தம் இல்லை.  எளிமையும் ஆழமும் சேர்ந்தால் அது பெரிய பலம்.

நவீன விருட்சம் 101வது இதழில் நான் குறிப்பிட விரும்புவது நகுலனின் சிறுகதை.  அந்தக் கதையின் பெயர் ஒருநாள்.  இது அவருடைய தொகுப்பில் இருக்காது. எழுத்தில் வந்திருந்த இந்தக் கதையை எனக்குக் கொடுத்தார். அதை பிரசுரம் செய்திருக்கிறேன்.  இந்தக் கதையை அசோகமித்திரன் எனக்குக் கொடுத்தார்.  நகுலன் எப்படி எழுதியிருக்கிறார் என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும்.  எளிமையான ருசியான கதை ஆனால் ஆழமான கதை.

அசோகமித்திரன் ஒரு நாடகம் எழுதியிருக்கிறார்.  நாடகத்தின் பெயர் ஆகா கான் மாளிகை.  நான் விருட்சம் இதழில் வெளிவந்த சிறந்த நாடகமாக இதைக் கருதுகிறேன்.  பொங்கல் 1996 என்ற பெயரில் சோ சுப்புராஜ் ஒரு கதை எழுதி உள்ளார்.  வெளிநாட்டில் தமிழர்கள் படும்பாட்டை விவிரிக்கும் கதை.  எஸ் சங்கரநாலராயணன் மகிழ்ச்சியின் தூதுவன் என்ற கதையை எழுதி உள்ளார்.  அவர் கதைத் தலைப்பின் முன் விரித்து சுருண்டு என்ற வார்த்தைகள் எப்படி வந்தன என்ற அவருடைய கேள்விக்கு என்னால் பதில் சொல்லத் தெரியவில்லை.  கதை என்று சொல்லி முடிப்பதற்குள் கதையை எழுதி அனுப்பி விடுகிற வேகம் அவரிடம் உள்ளது.  குழல்காரனைப் பற்றிய உருக்கமான கதை.  சுப்ரஜா ருசி என்ற கதையை எழுதி உள்ளார்.  நமுத்துப் போன கடலையைக் கூட ருசிக்க முடியவில்லை. தாஜ் எழுதிய சைத்தான் கட்டுரை வடிவில் உள்ள கதைதான்.

இடைவெளி  என்ற பானுமதியின் கதையில் ஆண் பெண் உறவின் சிக்கலை துல்லியமாக படம் பிடித்துக் காட்டி உள்ளார்.  ஏன் எழுதினார் என்ற தலைப்பில் அழகியசிங்கராகிய நான் ஒரு கதை எழுதி உள்ளேன்.  ஒரு வருடத்திற்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன்.  என் நண்பர் ஒருவர் என் வீட்டிற்கு வந்திருந்தார்.  என் வீட்டுச் சூழலை வைத்து ஒரு கதை எழுதி அது தினமணிகதிரில் வெளிவந்துவிட்டது.  என்னையும் அப்பாவையும் தவறாக படம் பிடித்துக் காட்டியிருந்தார்.  ரொம்ப நாளாக அந்தக் கதைக்கு மாற்றாக ஒரு கதை எழுத நினைத்தேன்.  அந்தக் கதைதான் ஏன் எழுதினார் என்ற தலைப்பில் நான் எழுதிய கதை.  இதைத் தவிர பலர் கவிதைகள் எழுதி உள்ளார்கள்.  பெருந்தேவி 4 கவிதைகள் எழுதி உள்ளார்.  சிபிச்செல்வன் மூன்று கவிதைகள் எழுதி உள்ளார். நோயல் விமர்சனப் புத்தகத்தைப் பற்றி முத்துக்குமார் விமர்சனம் எழுதி உள்ளார்.  பிரபு அவர் பயணத்தைப் பற்றி கட்டுரை எழுதி உள்ளார்.  நானும் வேடிக்கையாக ஜெகன் மோகினி கட்டுரை எழுதி உள்ளேன்.

எல்லோரும் வாசிக்க வேண்டிய பத்திரிகை நவீன விருட்சம்.  நான் கொஞ்சம் கொஞ்சமாக பத்திரிகையை எல்லோருக்கும் அனுப்பிக்கொண்டிருக்கிறேன்.  102 வது இதழ் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் வந்துவிடும்.

படித்தால் மட்டும் போதுமா

அழகியசிங்கர் 

 

நான் ஒரு புத்தகத்தை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தேன்.  அதில் ஒரு வரியைப் படிக்கும்போது, அந்த வரி என்னை திகைக்க வைத்தது. அந்த வரி இதுதான் : üபடித்துப் படித்துப் பைத்தியமானான் கோசிபட்டன்,ý இது ஒரு பழமொழி.   உண்மையில் படித்துக்கொண்டிருந்தால் பைத்தியமாகி விடுவார்களா?  எனக்குத் தெரிந்து எப்போதும் படித்துக்கொண்டிருக்கும் பலரை பார்த்திருக்கிறேன்.  சாப்பிடும்போது கூட எதாவது ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு படித்துக்கொண்டிருப்பார்கள்.  இன்னும் சிலர் பாத்ரூமில் படிப்ôர்கள்.  எனக்கு சாப்பிடும்போதும், பாத்ரூமிலும் இருக்கும்போதும் படிப்பதற்கு விருப்பம் இருக்காது.  படிக்கும் பழக்கம் நம் மனத்தையும், அறிவையும் ஆட்கொண்டு நம்மை அடிமைகளாக்கி விடலாமா?  இந்தக் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதேபோல் சுலபமாக பொழுதைப் போக்க படிக்கும் பழக்கம் ஒரு சிறந்த வழி.  ஆனால் பெரும்பாலோர் படிக்காமலேயே பொழுதைக் கழிக்கிறார்கள்.  அவர்களை நாம் குறை சொல்ல முடியாது.  நேற்று பூங்காவில் நடைபயிற்சி செய்து கொண்டிருக்கும்போது, ஒருவரை விஜாரித்தேன்.  அவர் சில மாதங்களில் பதவி மூப்பு அடைய உள்ளார்.  ‘எப்படி பொழுதைப் போக்கப் போகிறீர்கள்?  எதாவது தினமும் புத்தகம் படிப்பீர்களா?’ ‘இல்லை,’ என்றார் அவர்.  ‘படித்ததெல்லாம் எப்போதோ முடிந்து போய்விட்டது.  இனிமேல் புத்தகத்தை எடுத்துப் படிக்க முடியாது,’ என்றார்.  ‘அப்படியென்றால் பொழுது எப்படிப் போகும்?’ என்று கேட்டேன்.  ‘பொழுது போவதற்கு நான் வழி சொல்கிறேன்.  ஆனால் புத்தகம் வேண்டாம்,’ என்றார் அவர்.

சரி கோசிபட்டனுக்கு என்ன ஆயிற்று? ஏன் படித்து படித்து பைத்தியம் ஆனான்.  புத்தகம் படித்து ஒருவர் தன் வாழ்க்கையில் எதிர்படும் பிரச்சினைகளை சமாளிக்க முடியும் என்று நினைத்தால், அதேபோல் ஒரு முட்டாள்தனத்திற்கு நாம் ஒன்றும் சொல்வதிற்கில்லை.

என்னுடைய நண்பர்கள் பலவிதமாய்ப் புத்தகங்களைப் படிப்பார்கள். ஒருவர் சிறுகதைகளை மட்டும் படித்துக்கொண்டிருப்பார்.  நாவல்களைப் படிக்க பொறுமை இருப்பதில்லை என்பார்.  அதேபோல் கவிதையைப் படிப்பது என்றால் வேம்பங்காயாய் கசக்கும் அவருக்கு.  இன்னொருவர் இருக்கிறார் இவர் வெறும் நாவல்களாகப் படித்துத் தள்ளுவார்.  அதேபோல் வேறு ஒருவர் கவிதைகளை மட்டும் படிப்பார். இன்னும் ஒருவர் கட்டுரைகளை மட்டும் படிப்பார்.

கதை கவிதை எல்லாம் படிக்காமல் ஆன்மிகப் புத்தகங்களை மட்டும் வாசிப்பவர்கள் உண்டு.  இன்னும் சிலர் மருத்துவப் புத்தகங்களை மட்டும் படிப்பார்கள்.  இப்படி பலர் பலவிதமான புத்தகங்களைப் படித்தக்கொண்டுதான் இருப்பார்கள். நான் ஒரு காலத்தில் ஜே கிருஷ்ணமூர்ததி புத்தகங்களை மட்டும் படித்துக்கொண்டு திரிந்தேன்.  அப்போது எனக்கு கவிதை, நாவல், சிறுகதை எதுவும் படிக்க பிடிக்காது.  நானே ஜே கிருஷ்ணமூர்த்தியாக மாறிவிட்டேனா என்று தோன்றும். நானே கோசிபட்டனாக மாறிவிட்டேனா என்று தோன்றும்.  ஆனால் இதில் பைத்தியமாவதற்கு வாய்ப்பு ஏன் ஏற்படுகிறது.  படிக்கும் பழக்கம் அளவு மீறினால் பைத்தியம் ஆகும் நிலை ஏற்படுமா?  அதற்காகத்தான் இது சொல்லப் படுகிறதா?

ஒருவர் டிவியைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். காலையிலிருந்து இரவு தூங்கும் வரை ஒருவர் டிவியைப் பார்த்துக்கொண்டிருந்தால் அவருக்கு பைத்தியம் பிடிக்க வழி இல்லையா?  அதேபோல் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர், 24 மணிநேரமும் அலுவலகம் ஒன்றையே நினைத்துக்கொண்டிருந்தால் பைத்தியம் பிடிக்க வழி ஏற்படாதா?  எப்போது அதுமாதிரி நிலை ஏற்படுமென்றால், ஒரு நாள் அவரைக் கூப்பிட்டு,ü நீங்கள் பணி புரிந்தது போதும்..வீட்டிற்குப் போங்கள்,ý என்று சொன்னால்போதும், அவருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் பைத்தியம் பிடித்து விடும்.

தீவிரமாக நாம் எதில் ஈடுபட்டாலும் அந்தத் தீவிரத் தன்மை நம்மை ஒரு வழி செய்து விடும்.  சிலரிடம் கேட்டு அறிவோம்.  சில நூல்களைப் படித்துத் தெளிவோம்,ý என்பது புலிசெரெ சோமேசுவர கவியின் கூற்று.  அதேபோல் நாம் கேட்டு தெளிவடைவோம்.  அதற்கு வாய்ப்பு இல்லாவிட்டால், புத்தகங்களைப் படித்து தெளிவடைவோம்.

என் கையில் கிடைத்தப் புத்தகம் கன்னடக் கட்டுரைத் திரட்டு. அதிலிருந்து படிக்கும் பழக்கம் என்ற கட்டுரைதான் என்னை பலவாறு சிந்திக்க வைத்தது.

நன்றாக மாட்டிக்கொண்டேன்

அழகியசிங்கர்

உங்களுக்கெல்லாம் தெரியும்.  நான் மாம்பலத்தில் இருக்கிறேன் என்று. பின் நானோ ட்விஸ்ட் என்ற கார் வைத்திருக்கிறேன்.  அதை அறுபது வயதிற்குப் பிறகு ஓட்டக் கற்றுக்கொண்டுள்ளேன் என்பதும் தெரியும். ஆனால் அந்த வண்டியை எடுத்துக்கொண்டு அசோக்நகரில் உள்ள கார்ப்பரேஷன் ஸ்கூல் வரைச் சென்று ஒரு வாக் செய்துவிட்டு பின் வீட்டிற்கு ஓட்டிக்கொண்டு  வந்துவிடுவேன்.  ஆனால் சமீபத்தில் அதை பலநாட்களாய் பயன்படுத்தவில்லை.  அதை சர்வீஸ் கொடுக்க நினைத்தேன்.  நானே நானோவை ஓட்டிக்கொண்டு க்ரீம்ஸ் சாலையில் உள்ள டாவே ரீச் என்ற இடத்தில் கொடுக்க நினைத்தேன்.

நேற்றுதான் (23.01.2017) அதற்கான முயற்சியை மேற்கொண்டேன்.  காலையில் 10 மணி சுமாருக்குக் கிளம்பி அண்ணாசாலையை அடைந்தேன். வண்டிகள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்ததைப் பார்த்தவுடன், எனக்கு திகைப்பு ஏற்பட ஆரம்பித்தது.  முக்கியமான காரணம் ஜெமினி அருகில் உள்ள மேம்பாலத்தில் வண்டியை எப்படி எடுத்துக்கொண்டு போகப் போகிறேன் என்ற பதைப்புதான் என்னிடம் இருந்தது.  சமதரையில் வண்டியை மெதுவாகக் கொண்டு செல்வதும் பின் நகர்த்துவதும் என்னால் முடிந்தது.  ஆனால் மேம்பாலத்தில் வண்டியைக் கொண்டு செல்லும்போது, பின்னால் நகர்ந்தால் எப்படி அதை நிறுத்துவது.?

இப்படி யோசித்துக்கொண்டே இருக்கும் வண்டியில் உள்ள பெற்றோலின் அளவு மிகக்குறைவாக இருந்தது.  வண்டி எங்காவது நின்று விட்டால் என்ன செய்வது என்று யோசித்தேன். ஒரு பாயின்ட் அளவிற்கு வந்து விட்டது பெற்றோளின் அளவு.  மெதுவாக நகர்ந்து நகர்ந்து வண்டியை ஓட்டிக்கொண்டு போனேன்.  ஒரு இடத்தில் பெற்றோல் நிரப்பும் இடத்தைக் கண்டு பிடித்தேன்.  அங்கு சென்று பெற்றோல் போட்டேன்.  ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், கூட்டத்தில் மெதுவாய் முன்னே செல்லும் வண்டியுடன் முட்டாமல் பெற்றோல் நிலையத்தில் மெதுவாக திருப்பி பெற்றோலும் போடுவது ஒரு அனுபவம்.  பின் நான் மெதுவாக க்ரீம்ஸ் ரோடு சென்று விடுவேன் என்று நினைத்தேன். பெரிய ஏமாற்றம்.  பஸ்கள் மற்றும் பல வண்டிகள் கலைஞர் டிவி என்ற இடத்தின் எதிரில் நின்று விட்டன.  என் வண்டியும். அசையவே இல்லை.  அப்போதுதான் என் முட்டாள்தனத்தை எண்ணி வருத்தப்பட்டேன்.  பாரத பெட்றோலியம் உள்ள அலுவலகத்தின் பக்கத்துத் தெருவில் சிறுவர்கள் சிறுமியர்கள் பெண்கள் என்று எல்லோரும் அமர்ந்திருந்து போராட்டம் நடத்திக்கொண்டிருந்தார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.  வண்டியின் உள்ளே சிறிது நேரம் உட்கார்ந்திருந்தேன். பின் என் பால்யகால நண்பரும் கவிஞருமான வைத்தியநாதனைப் பார்த்தேன். அவர் பாரத பெற்றோலியம் அலுவலகத்தில் முக்கியமான பதவியில் இருப்பவர்.  சமீப காலமாக அவரை நான் சந்திக்கவே இல்லை.  அவரிடம் தயிர்சாதம் கிடைக்குமா என்று செய்தி அனுப்பினேன். அவர் சிறிது நேரத்தில் 8 கீரை வடைகளும் இரண்டு சிறிய தண்ணீர் பாட்டில்களும் கொண்டு வந்து கொடுத்தார்.  நான் இருந்த பகுதியில் பக்கத்தில் ஓட்டல்கள் இல்லை. மேலும் வண்டியைத் தனியாக எத்தனை நேரம் விட்டுவிட்டுச் செல்வது என்பதும் தெரியவில்லை.  என்ன அவஸ்தை இது என்று தோன்றியது.

நான் பொதுவாக மாம்பலத்திலேயே காரில் வலம் வருபவன்.  மிஞ்சி மிஞ்சிப் போனால் டி நகர் செல்வேன்.  மற்றபடி எங்குமில்லை. ஏன் நேற்று மட்டும் இதுமாதிரி மாட்டிக்கொண்டேன்.  இதுமாதிரி ஒன்று நடக்கப் போவதை ஏன் ஞானக்கண் மூலம் எனக்குத் தெரியாமல் போய்விட்டது.  வண்டியின் உள்ளேயே இருந்து எப்எம் எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன்.  என் கையில் எந்தப் புத்தகமும் இல்லை படிக்க.  என்னை மாதிரி அவஸ்தைப் பட்ட பலரை சந்தித்தேன்.  பஸ்களில் பயணம் செய்த பலரும் பஸ்ûஸவிட்டுப் போய்விட்டார்கள். என் நண்பர் வைத்தியநாதனுடன் சிறிது நேரம் பேசினேன். அவர் நடந்தே மயிலாப்பூரில் உள்ள வீட்டிற்குச் சென்றுவிடுவேன் என்று சொன்னார்.

கூட்டத்தைக் களைக்க போலீசார்கள் லேசாக தடியடி அடிக்க ஆரம்பித்தவுடன், கூட்டம் கலைந்து விட்டது. பின் மாலை ஆறுமணி சுமாருக்க மெதுவாக வண்டியை ஓட்டிக்கொண்டு வந்து விட்டேன்.  வண்டியை விட்டுவிட்டு என் வீட்டிற்குச் சென்றபோது, நானோ என்னுடைய நண்பனாக மாறிவிட்டதாகத்தான் தோன்றியது.  இனிமேல் எளிதாக என் நானோ வசப்படும் என்றும் நினைத்தேன். ஆனால் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் என் பங்காக நானும் மாட்டிக்கொண்டேன்.

40வது புத்தகக் காட்சியும், ஜல்லிக்கட்டும்…

அழகியசிங்கர்

 

ஒரு வழியாக 40வது சென்னைப் புத்தகக் காட்சி நிறைவு அடைந்து விட்டது.  ஆரம்பிக்கும்போது எதிர்பாராத அப்பாவின் மரணம் என்னை இதில் கலந்துகொள்ள முடியாமல் செய்து விட்டது.  கிருபானந்தன் என்ற நண்பர் மூலம் சிறப்பாகவே நடந்து முடிந்து விட்டது.  இன்னும் பல நண்பர்கள் உதவி செய்தார்கள். புத்தகக் காட்சி யில் கலந்துகொண்ட நண்பர்களுக்கு நான் மதிப்பெண்கள் வழங்குவது வழக்கம்.  அந்த வழியில் கீழ்க்கண்டவாறு மதிப்பெண்கள் வழங்குகிறேன் :

கிருபானந்தன்          101%

பிரபு மயிலாடுதுறை 55%

ஜீவா                 55%

கல்லூரி நண்பர்

சுரேஷ்                 90%

சுந்தர்ராஜன்        60%

வேம்பு                15%

பெருந்தேவி           2%

அழகியசிங்கர்         10%

பாயின்ட் ஆப் சேல்ஸ் மெஷின் ரொம்ப உபயோகமாக இருந்தது.  விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாகவும், சாதாரண நாட்களில் கூட்டம் குறைவாகவும் இருந்தது.  ஏர் இந்தியாவில் பணிபுரிந்து ஓய்வுப்பெற்றவர் எங்களிடம் புத்தகங்கள் வாங்கி எடுத்துக்கொண்டு போகாமல் விட்டுவிட்டுச் சென்று விட்டார்.  நாங்களும் அவருடைய தொலைபேசி எண்ணைக் குறித்துக்கொள்ளாமல் விட்டுவிட்டோம்.

முதல் இரண்டு மூன்று நாட்கள் கூட்டங்கள் நடத்தினோம்.  பின் போரடித்து விட்டது.  இந்த முறை கிருபானந்தன் நீட்டாக இடத்தை பயன்படுத்தி உள்ளார்.  கசாமுசா இல்லை.  ஸ்டில் ராக்ஸ் எல்லாம் நன்றாகப் பயன்படுத்தி உள்ளார்.  இடம் விஸ்தாரமாக இருந்தது.  புத்தகங்கள் பார்வையில் படும்படி இருந்தது.  எப்போதும் புத்தகம் வைத்திருக்கும் இடம் குழப்பமாக இருக்கும்.  லாப்டாப் எடுத்துக்கொண்டு வந்து விற்பனையையும் குறித்துக்கொண்டு வந்துள்ளார்.

********

புத்தகம் வாங்க வந்த வழக்கறிஞர் ஒருவரிடம் ஜல்லிக்கட்டு பற்றி  பேசிக்கொண்டிருந்தேன்.  அவர் சொன்ன கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.  ‘முதலமைச்சரும், பிரதமரும் நினைத்தால் எந்தவித எதிர்ப்பின்றியும் இந்தப் பிரச்சினைய தீர்க்கலாம்’ என்று.  கேள்விப்படாத கூட்டமாக உள்ளது மெரினாவில் கூடிய கூட்டம்.  தலைவர் என்று இல்லாமல் கூட்டு முயற்சியில் இதை சாதிக்க முடியும் என்பதை இளைஞர்கள் நிரூபித்துள்ளார்கள்.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்குவது என்பதை கற்பனைசெய்து பார்க்க முடியாத காட்சியாக இருக்கும்.  துள்ளும் காளைகள், ஓடிப்பிடித்து அடக்க முயற்சி செய்ய விழையும் இளைஞர்கள், அதை ரசிக்க கூட்டமாய் கூடும் கூட்டம்.

புத்தகக் காட்சியும் ஜல்லிக் கட்டு மாதிரிதான்.  கூட்டம் கூட்டமாக வரும் புத்தக விரும்பிகள் மனது வைத்தால் ஒரு பார்வை பார்த்தால் புத்தகமெல்லாம் விற்றுத் தீர்ந்து விடும்.

*********

நேற்று எழுத்தாளர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் படைப்பாளிகள் பலர் ஒன்று சேர்ந்து சிவன் பூங்காவில் ஜல்லிக் கட்டு நடைபெற போராடும் இளைஞர்களுக்கு ஆதரவு தரக் கூடினோம்.  மாலை ஐந்து மணிக்கு. ராமகிருஷ்ணன் ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டால், முழுவதும் அது குறித்து பல விவரங்களைச் சேகரித்துப் பேசுவார்.  ஜல்லிக்கட்டு விஷயத்திலும் அப்படித்தான்.  பலர் கலந்துகொண்ட இக் கூட்டம் சிறப்பாக நடந்தது.  தினமும் யோக சொல்லிக்கொள்ளும் ஒரு கூடத்தில் அமர்ந்துகொண்டு விவாதித்தோம்.  எனக்கு ஜல்லிக்கட்டு பற்றி ஒன்றும் தெரியாது.  அது வீர விளையாட்டா விபரீத விளையாட்டா என்பது கூடத் தெரியாது.  சி சு செல்லப்பா வாடிவாசல் என்ற சிறிய நாவல் எழுதியிருக்கிறார் என்பதுதான் தெரியும். ஆங்கிலத்தில் ஹெமிங்வே எழுதிய புத்தகம் கூட சிறப்பாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதை இப்போது எடுத்துப் படிக்க வேண்டுமென்று தோன்றுகிறது. தொடர்ந்து அந்த இடத்தில்  கூட்டம் ஏற்பாடு செய்யலாம்.  வேடியப்பன்தான் ஏற்பாடு செய்ய வேண்டும்.

***********

நான் எப்போதும் புத்தகக் காட்சி முடிந்த அடுத்தாநாள்தான் புத்தகங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வருவேன்.  20ஆம் தேதி கடைஅடைப்பு.  வேன்கள் ஓடாது என்ற நிலையில் திகைத்தேன்.  ஆனால் எனக்கு எப்போதும் உதவி செய்யும் வேன் டிரைவர் ஒருவரைக் கூப்பிட்டேன்.  புத்தகங்களையும் ராக்ûஸயும் எடுத்து வர உதவி செய்தார்.   சோனி காமெராவில் வழக்கம்போல் நண்பர்களைப் படம் பிடித்திருக்கிறேன்.  ஆனால் காமெராவிலிருந்து இந்த கம்ப்யூட்டருக்கும் மாற்றும் வித்தை தெரியவில்லை.

 

எப்போது புத்தகம் படிக்கப் போகிறீர்கள்….

எப்போது புத்தகம் படிக்கப் போகிறீர்கள்….

அழகியசிங்கர்

ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சியின்போது என் நண்பர்களைச் சந்திப்பது வழக்கம்.  அதன்பின் அடுத்த ஆண்டுதான் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.  என் புத்தக ஸ்டாலுக்கு வரும் நண்பர்களைப் பார்த்துக் கேட்பேன் :

‘எப்போது புத்தகம் படிக்கப் போகிறீர்கள்?’ என்று.

ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சியில் பலரும் புத்தகங்களை வாங்கிக்கொண்டு செல்கிறார்கள்.  சிலர் 10க்கும் மேற்பட்ட புத்தகங்களை வாங்கி சேகரித்துக் கொள்வார்கள்.  நானும் ஒரு பைத்தியம்.  ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சியின்போது புத்தகங்கள் வாங்காமல் இருக்க மாட்டேன்.

சரி ஒரு புத்தகத்தை உடனடியாக படித்து விட முடிகிறதா? நிச்சயமாக இல்லை.  புத்தகம் வாங்கும் பலரை நான் ஒரு கேள்வி கேட்பது உண்டு.  போன ஆண்டு நீங்கள் வாங்கிய புத்தகங்களைப் படித்து விட்டீர்களா? என்று.  யாரும் படித்து விட்டேன் என்று சொல்ல மாட்டார்கள்.  கொஞ்சம் படித்து விட்டேன்.  இன்னும் படிக்க வேண்டும் என்பார்கள்.  இன்னும் சிலரோ இனிமேல்தான் ஆரம்பிக்க வேண்டுமென்பார்கள்.  பெரும்பாலோர் நேரம் கிடைப்பதில்லை என்றுதான் சொல்வார்கள்.

பெரும்பாலோர் அவர்களுக்குப் பிடித்தப் புத்தகங்களைத்தான் வாங்குவார்கள்.  ஆனால் படிப்பதில் ஏனோ ஒருவிதத் தயக்கம் அல்லது வேகம் இல்லாமல் போவது ஏன்?

அதனால் கீழ்க்கண்ட அறிவுரைகளை புத்தகம் படிக்கும் அன்பர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன் (எனக்கும் இந்த அறிவுரைகளைச் சொல்லிக்கொள்கிறேன்) :

1. நீங்கள் வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களை உங்கள் பார்வையில் எப்போதும் படும்படி வைத்திருங்கள்.  நீங்கள் எடுத்துப்

படிக்கிறீர்களோ இல்லையோ உங்கள் பார்வையில் பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

2. நீங்கள் கவிதைப் புத்தகங்களை விரும்புகிறவர்களாக இருந்தால், முதலில் கவிதைப் புத்தகங்களை எடுத்து வாசித்துவிடுங்கள்.  ஒரு மாதத்தில் நீங்கள் 4 அல்லது 5 கவிதைப் புத்தகங்களைப் படித்துவிடலாம்.

3. நீங்கள் அலுவலகம் போவராக இருந்தால், அலுவலகம் போகும்போது கிடைக்கும் நேரத்தில் படிக்கலாம்.  ஆனால் அலுவலகத்தில் மட்டும் புத்தகத்தை எடுத்தப் படித்து விடாதீர்கள்.  உங்களை ஒரு மாதிரியாகப் பார்க்க ஆரம்பிப்பார்கள்.

4. என்னைப் போல வீட்டில் சும்மா இருப்பவராக இருந்தால், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் புத்தகத்தைப் படிப்பது என்று தீர்மானமாக இருங்கள்.

5. தேர்வு எழுதும்போது எப்படி மாணவர்கள் முனைப்புடன் செயல்படுகிறார்களோ அதேபோல் புத்தகம் படிப்பதிலும் முனைப்புடன் செயல்படுங்கள்.

6.  உங்கள் எழுத்தாள நண்பர்கள் யாராவது உங்களுக்குப் புத்தகங்களைக் கொடுத்துப் படிக்கச் சொல்வார்கள்.  அவர்கள் நீங்கள் படித்து உங்கள் கருத்துக்களைச் சொல்வீர்கள் என்று நம்பிக்கொண்டிருப்பார்கள்.  அவர்கள் புத்தகங்களை உடனடியாகப் படித்து விடுங்கள். அபிப்பிராயமும் சொல்லிவிடுங்கள். ஒருவர் முயற்சியை நாம் ஆதரிக்க வேண்டுமென்று இதை சொல்கிறேன். நான் அதுமாதிரி என் கதைப் புத்தகங்களைக் கொடுத்து விட்டு, அதைப் படித்துவிட்டு அபிப்பிராயம் சொல்வார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்து போயிருக்கிறேன்.

7. வேலைக்குப் போகிறவர்கள் சனி, ஞாயிறுகளில் நிறையா நேரம் கிடைக்கும்.  அந்த நேரத்தில் புத்தகங்களைப் படித்து விடலாம்.

8. புத்தகம் படிக்க நீங்கள் ஒரு தீர்மானம் வைத்துக்கொள்ளுங்கள்.  மாதத்திற்கு ஒரு புத்தகம் எப்படியாவது படிக்க வேண்டுமென்ற தீர்மானம்தான் அது.  அந்தத் தீர்மானத்துடன் புத்தகத்தைப் படித்தீர்கள் என்றால், புத்தகத்திலேயே தேதியைக் குறிப்பிட்டு எழுதுங்கள்.

9. தயவுசெய்து நீங்கள் படித்தப் புத்தகங்களை யாருக்கும் இரவல் கொடுக்காதீர்கள்.  இரவல் கொடுத்தால் உங்களுக்குத் திரும்பவும் புத்தகம் கிடைக்காது.  மேலும் அப் புத்தகத்தை அவர்கள் வாங்கி வைத்துக்கொள்வார்களே தவிர, படிக்க மாட்டார்கள்.  தி ஜானகிராமனின் மரப்பசு என்ற நாவலை அப்படித்தான் இரவல் கொடுத்தேன்.  இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய முயற்சி செய்து அந்தப் புத்தகத்தை மீட்டேன்.  அப் புத்தகம் ரொம்பவும் மோசமான நிலையில் கிடைத்தது.

10. நீங்கள் வாங்கிப் படிக்கும் புத்தகத்தைப் படித்தவுடன் உங்களுக்குத் திருப்தி இல்லை என்றால் அது குறித்து எந்த அபிப்பிராயத்தையும் வெளியே பிறர் காதுபடி சொல்லாதீர்கள்.  அப்படிச் சொல்வது எழுதுபவர்களுக்குத் துன்பத்தைத் தரும். அதேபோல் ஒரு புத்தகம் உங்களுக்குப் பிடித்திருந்தால், மனம் திறந்து பாராட்டுங்கள்.

11.  ஒரு புத்தகக் காட்சியில் நீங்கள் வாங்கிய புத்தகங்களைப் படிக்கமுடியாவிட்டால் கவலைப் படாதீர்கள்.  அடுத்தப் புத்தகக் காட்சியிலும் புத்தகம் வாங்குவதைத் தவிர்க்காதீர்கள்.  புத்தகத்தைச் சேகரிப்பது வேறு, புத்தகம் படிப்பது வேறு என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.

இன்னும் எதாவது உங்களுக்குத் தோன்றினால் குறிப்பிட வேண்டுமென்று தெரிவித்துக்கொள்கிறேன்.