நீங்களும் படிக்கலாம் – 30

 

நேற்று குங்குமத்தில் என் பேட்டி வெளியாகி உள்ளது.  பேட்டி   எடுத்த குங்குமம் ஆசிரியர் குழுவிற்கு என் நன்றி.  பேட்டியை எடுப்பதை விட  பேட்டியைச் சரியாகக் கொண்டு வருவது என்பது சாதாரண விஷயம் இல்லை.  அதைத் திறமையாக குங்குமம் பொறுப்பாசிரியர் கதிர் திறன்பட செய்து முடித்துள்ளார். புகைப்படங்கள் எடுத்த வின்சன்ட் பால் அவர்களுக்கும் என் நன்றி.  இப் பேட்டியைப் பற்றி கே என் சிவராமன்  எழுதி உள்ளார்.  அவருக்கும் என் நன்றி.

சில தினங்களாக நான் ஒரு நேர்காணல் புத்தகத்தை எடுத்துப் படித்து முடித்தும் விட்டேன்.  260 பக்கங்கள் கொண்ட புத்தகம் அது.  மறுதுறை மூட்டம் என்பது புத்தகத்தின் பெயர்.  நாகார்ஜ÷னனைப் பேட்டி எடுத்தவர் எஸ். சண்முகம். செம்மையாக்கம் செய்தவர் முபீன் சாதிகா.

இந்தப் புத்தகத்தைத் தயாரிப்பதற்குள் போதும் போதுமென்று ஆகியிருக்கும்.  அந்த அளவிற்குக் கடினமான ஒன்றாக இருந்திருக்கும். இந்தத் தருணத்தில் பிரேமிளைப் பேட்டி எடுத்த மீறல் 4 சிறப்பிதழைப் பற்றியும் குறிப்பிட வேண்டும்.  100 பக்கங்கள் கொண்ட புத்தகம் இது. பேட்டி எடுத்தவர் காலப்ரதீப் சுப்ரமணியன்.

100 பக்கங்கள் கொண்ட பிரேமிள் பேட்டியையும், 260 பக்கங்கள் கொண்ட மறுதுறை மூட்டம் புத்தகத்தைப் படிக்கும்போது, இரண்டு புத்தகங்களிலும் உள்ள சில தொடர்பான விஷயங்களை இங்கு விவரிக்க முயற்சி செய்துள்ளேன். இந்த இரண்டு பேட்டிகளிலும் ஒரு முக்கியமான அம்சம், இரு பேட்டிகளிலும் பேட்டி தருபவரின் சுய சரிதம் வெளிப்படுகிறது.  முதல் கேள்வியே அப்படித்தான் ஆரம்பிக்கிறது.

பிரேமிளைப் பேட்டி எடுத்தவர் இப்படி ஒரு முதல் கேள்வியைத் தொடுக்கிறார்.

சம்பிரதாயமான ஒரு கேள்வியுடன் ஆரம்பிக்கலாமா?  உங்கள் எழுத்தியக்கத்தின் ‘ரிஷிமூலகங்கள்’ எவை?

இந்தக் கேள்விக்குப் பதிலாக பிரேமிள் தன் சுயசரிதத்தைக் கொஞ்சம் வெளிப்படுத்துகிறார்.  அவர் இப்படி சொல்கிறார் : என் தாயாரின் மூதாதைகளிடையே ஆசுகவிகள் இருந்திருக்கின்றனர்.  தாயார் கூட, எழுதப் படிக்கத் தெரிந்திருக்காவிட்டாலும் நுட்பமான ரசனையும் கவியுணர்வும் கொண்டவர்.  அவர் பேசும்போதும் சரி சண்டையிடும்போதும் சரி, சில வேளைகளில் அவர் சொல்கிறவை அசாதாரணமாக இருக்கும்.’

நாகார்ஜ÷னனைப் பேட்டி எடுக்கும் சண்முகம் úக்ளவி :

நீங்கள் பிறந்த இடம், உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்..

என்ற கேள்விக்கு, நாகார்ஜ÷னன் கிட்டத்தட்ட 50 பக்கங்கள் வரை அவருடைய குடும்பச் சூழலை விவரிக்கிறார்.  அம்மாவைப் பற்றி பல இடங்களில் குறிப்பிடுகிறார்.

ஒரு இடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார் : üஅம்மாவை எடுத்துக்கொண்டால் தி ஜானகிராமன், ஜெயகாந்தன் படைப்புக்களை வாசிக்கும் வழக்கம் கொண்டவர்.  ஜெயகாந்தன்  முன்னிலையில் நடந்த சென்னை சாஹித்திய அகாதமிக் கூட்டத்தில் குப்புசாமியின் சிறுகதை ஒன்று மௌனியின் ஆழியாச்சுடர் கதையை ஒத்திருப்பதை வைத்து அமைப்பியல் ஆய்வு செய்து நான் பேசியபோது அதைக் கேட்க அங்கே அம்மாவும் அமர்ந்திருந்தார்.’

இதுமாதிரியான நேர்காணல் புத்தகங்களில் நேர்காணலில் பங்கேற்பவர் என்ன சொல்கிறார் என்பதே முக்கியம்.  பிரேமிளும், நாகார்ஜ÷னனும் இந்த விதத்தில் பல தகவல்களை அளிக்கிறார்கள்.  அது குறித்து மாறுப்பட்ட கருத்துக்களைச் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்று தோன்றுகிறது.

நான் இங்கே கூற விரும்புவது. பிரேமிள் தன் பேட்டியில்சொன்ன ஒரு விஷயத்தையும் நாகார்ஜ÷னன் சொன்னதையும் தொடர்புப் படுத்த முடியுமா என்று பார்க்கிறேன்

பிரேமிள் சொல்கிறார் : கிருஷ்ணமூர்த்தியிடம் “உங்கள் உடல் மறைந்தபிறகு உங்கள் பிரக்ஞை என்னவாகும் என்று கேட்டபோது, “அது அப்படியே போய்விடும்.  ஆனால் நீங்கள் நான் சொன்னவற்றுடன் தொடர்பு கொண்டிருந்தால் ஒரு வேளை நீங்கள் அந்தப் பிரக்ஞையுடன் தொடர்பு கொண்டிருக்கலாம்,” என்று சொன்னதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாகார்ஜ÷னன் ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி ஒரு இடத்தில் இப்படிப் பதிவு செய்திருக்கிறார் :

ஜே கிருஷ்ணமூர்த்தியின் விரிவுரைகளைச் சென்று கேட்கும் வழக்கம் கொண்டிருந்தேன்.  அந்த விரிவுரைகள் அந்த வயதில் அலாதியான கவர்ச்சி கொண்டவையாக இருந்தன.  நாம் வழக்கமாக அடையும் உணர்வுகள் ஒவ்வொன்றையும் எடுத்து, அவை எப்படி நேரெதிராக மாறிவிடுகின்றன என்பதைத் தர்க்க ரீதியாக விளக்கும் உரைகள் அவை.  அந்த விவரிப்பு முறையில் எனக்குச் சுவாரசியம் ஏற்பட்டு அதற்கும் இருத்தலியலுக்குமான ஒப்புமையைக் கண்டு, அந்த வழிமுறைதான் நிகழ்வியல் எனும்

Phenomenology   என உணரப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன,’ என்கிறார்.

உண்மையில் நாகார்ஜ÷னன் ஜே கிருஷ்ணமூர்த்தி, ரமணரிடமிருந்து விலகிப் போய்விடுகிறார்.  பிரேமிளோ தன் வாழ்நாள் முழுவதும் ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் ஒன்றிப் போகிறார்.

இன்னொரு இடத்தில் நாகார்ஜ÷னன் சொல்கிறார் : ‘அழுக்கடைந்த பூணூலை விடுதி அறை ஆணியில் மாட்டிய ஓரிரவில் குளித்து, அறைக்குச் செல்லாமல், யாரும் பார்க்க நேரிடலாம் என்ற கவலையின்றி நிர்வாணமாக மொட்டை மாடிக்குச் சென்று கட்டாந்தரையில் கிடந்தேன்.  அப்போது பெரிதும் விடுதலை அடைந்த உணர்வு ஏற்பட்டது.  அந்த நொடிக்குப் பிறகு பூணூலை இதுவரை அணிவதே இல்லை.  குடும்பத்தாருக்கும் எனக்கும் உள்ளார்ந்த அளவில் தீராத பிரச்னையை உருவாக்கிவிட்டது இதுவே எனலாம்.  இது பற்றி இருதரப்பிலும் பேசுவதில்லை.

அதேபோல் என்னைப் பிராமணன், அந்தணன், பார்ப்பான், ஐயர் என்றெல்லாம் விமர்சிப்போரும் கிண்டல் செய்வோரும் என் நிலையின் தர்க்கத்தைப் புரிந்துகொண்ள முடியாதவர்களே மறுப்பவர்களே என்கிறார்.

ஒருவர் பிராமணரா இல்லையா என்பதற்கு ஒரு அடையாளம் பூணூல் என்றாலும் இது குறித்து இவ்வளவு தூரம் யோசிக்க வேண்டுமா என்று தோன்றுகிறது.

பிரேமிளோ அவருடைய பேட்டியில் ஒரு விஷயத்தைச் சொல்கிறார் :

கிருஷ்ணமூர்த்தி பவுன்டேசன் உள்ள வசந்த விஹாரில் சனிக்கிழமை மாலைகளில் வீடியோ காண்பிக்கிறார்கள்.  அங்கே ஒரு இளைஞர் நண்பரானார்.  அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பழகியபோது, ஒரு சமயத்தில் தான் ஐயங்கார் வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் ஆனால் பூணூல் போடுவதில்லை என்றும் சொன்னார்.  ஏன் என்று கேட்டேன்.  அது அபத்தமான விஷயம் என்றார்.  ஆனால் இதனால் தன்னுடைய வீட்டில் தகப்பனார், அவரைவிட முக்கியமாகத் தாய், பாட்டி, தாத்தா இவர்களுக்கெல்லாம் மிக வருத்தம் என்பதையும் சொன்னார்.  நான் அவரிடம் கேட்ட அடுத்த கேள்வி, üஉங்களுடைய வீட்டுப் பெரியவர்கள் ஏதேனும் ஜாதீய முரட்டுப் பார்வை உடையவர்களா? மற்ற ஜாதியினரை மிக இழிவாக நடத்துபவர்களா?  என்பதுதான்.  அவர்கள் ஜாதி வெறி பிடித்தவர்களா என்பதை  அறிந்துகொள்ள முயற்சித்தேன்.  ‘இல்லை.  அவர்கள் ரொம்பவும் சாதாரணமானவர்கள். அனுஷ்டானங்களைப் பின்பற்றுகிறார்களே தவிர, என்னளவில் பார்த்தால் மிகவும் மனிதத் தன்மை உள்ளவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். அதுமாதிரியான குறைபாடு அவர்களிடம் இல்லை,” என்றார்.  “அப்படியானால் நீங்கள் பூணூல் போடாமல் இருப்பது அவர்களுக்கு எதிரான ஒரு செயல் ஆகிவிடுகிறதே. இது காரணமற்ற எதிர்ப்பு ஆகிவிடுகிறது அல்லவா?” என்றேன்.  “இல்லையில்லை. நான் அவர்களுக்கு எதிராக இதைச் செய்யவில்லை.  மடத்தனமாகப்பட்டது.  அவ்வளவுதான்,” என்றார்.

பிறகு பிரேமிள் அவரைத் திரும்பவும் பூணூலைப் போடும்படி செய்கிறார்.

இப்படி இரண்டு வித மனோ நிலைகளை விவரிப்பதற்காக இதைக் கூறுகிறேன்.  நாகார்ஜ÷னன் நேர்காணல் பற்றி இன்னும் சொல்ல வேண்டியது உள்ளது.  அதை அடுத்தப் பகுதியில் சொல்கிறேன்.

ஏன் இந்தக் குழப்பம்?

 

நேற்று மாலை 7 மணிக்கு என் சம்மந்தி அவர்களின் அம்மா உடல்நலம் குன்றி இறந்து விட்டார்.  கடந்த பல மாதங்களாக அவர் படுக்கையிலேயே இருந்தார்.  மாலை 4 மணிக்கு காப்பி குடித்தப் பிறகு அவர் சிறிது நேரத்தில் இறந்து விட்டிருக்கிறார்.  என் உறவினர் டிபன் எடுத்துக்கொண்டு போய்க் கொடுக்கும்போது அவர் அசைவற்று இருப்பதைப் பார்த்து பக்கத்தில் யாராவது மருத்துவர் இருந்தால் அழைத்து வரலாமென்று எண்ணித் தவித்திருக்கிறார்.  எந்த மருத்துவரும் வரவில்லை என்பது பெரிய சோகம்.  அதை விட அவரை அழைத்துக்கொண்டு போய் பக்கத்தில் உள்ள மருத்துவ மனையில் சேர்க்கலாமென்று நினைத்து ஒரு ஆம்புலன்ஸிற்கு போன் செய்தார்கள்.  அந்த ஆம்புலன்ஸிலிருந்து வந்த ஒரு நர்ஸ் நோயாளியைப் பார்த்துவிட்டு, üபல்ஸ் நின்று போய்விட்டது.  அழைத்துக்கொண்டு போக முடியாது.  லோக்கல் டாக்டரைப் பாருங்கள்ý என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.  நான் அப்போது உறவினர் வீட்டில்தான் இருந்தான்.  என்னடா இப்படி ஒரு சங்கடம் என்று தோன்றியது.

மருத்துவர் வர விரும்பவில்லை. மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லலாமென்றால் ஆம்புலன்ஸ் அழைத்துக்கொண்டு போக முடியாது என்கிறார்கள்.

எப்படியோ சமாளித்து வேற ஒரு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து மேற்கு மாம்பலத்தில் உள்ள ஹெல்த் சென்டருக்கு அழைத்துச் சென்றோம்.  அங்கே அந்த உறவினர் அம்மா இறந்து போனதை உறுதி செய்தார்கள்.  ஆனால் சான்றிதழ் தர மறுத்துவிட்டார்கள்.  அதாவது நோயாளியை இறந்தே கொண்டு வந்துள்ளார்கள் என்று பேப்பரில் எழுதிக் கொடுத்தார்கள்.  மயானத்தில் மருத்துவரின் சான்றிதழ் இல்லாமல் பிணத்தை எரிக்க விட மாட்டார்கள்.  இந்தத் தருணத்தில்தான் டாக்டர் பாஸ்கரன் எனக்கு உதவி செய்தார்.  அவர் ஒரு சிறுகதை எழுத்தாளர், கட்டுரை ஆசிரியர்.  முதல் சான்றிதழ் என்று ஒரு கதையை விருட்சத்தில் எழுதியிருக்கிறார்.  முதன்முதலாக ஒரு மரணச் சான்றிதழைத் தரும்போது ஏற்படும் மன உளைச்சல்தான் அந்தக் கதை.  உண்மையில் ஒரு மரணச் சான்றிதழ் என்பது எவ்வளவு முக்கியமானது.  அதை எந்த விதத் தயக்கமும் இல்லாமல் கொடுத்துள்ளார்.  அவருக்கு என் நன்றி.

மரணம் அடைந்துவிட்ட ஒரு நோயாளியை எந்த மருத்துவரும் பார்க்க விரும்புவதில்லை.  அதற்கான மரணச் சான்றிதழையும் தர அவர்கள் விரும்புவதில்லை.  இதற்கு சில சமூக நிகழ்வுகளைத்தான் குறை சொல்ல முடியும்.  இதற்குப் பயந்தே மருத்துவர்களும் செயல் படுகிறார்கள்.   இது எவ்வளவு இக்கட்டான சூழ்நிலை.

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில்

 

1. இப்போது நடக்கும் ஆட்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நான் யார் நினைப்பதற்கு..நான் சாதாரண குடி மகன்.

2. குடி மகன் என்றால் எப்போதும் ‘குடி’க்கிற மகனா?

இல்லை. இல்லை.  நான் வெறுமனே தண்ணீர் மட்டும்தான் குடிப்பேன்.

3. டாஸ்மா கடைக்குக் கூட்டம் முண்டி அடிக்கிறதே..உங்கள் புத்தகங்களை வாங்க யாரும் உங்கள் வீட்டிற்கு வருவதில்லையே..

புத்தகம் வாங்க யாரும் வராவிட்டால் பரவாயில்லை. ஆனால் டாஸ்மா கடை முன் நிற்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.

4. எந்த எழுத்தாளரை நீங்கள் போற்றுகிறீர்கள்?

‘மறுதுறை மூட்டம்’ என்ற நேர்காணல் புத்தகம் எழுதிய நாகார்ஜ÷னனை. இப் புத்தகம் ஒரு வித சுயசரிதம் போல் இருக்கிறது.  154 பக்கங்கள் படித்துவிட்டேன்.  240 பக்கங்கள் வரை இப் புத்தகம் உள்ளது. இதுமாதிரியான வெளிப்படையான புத்தகத்தை நான் இதுவரை படித்ததில்லை.

5. உங்கள் பேரன் என்ன செய்கிறான் ?

பால்கனியிலிருந்து நான் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தைத் தூக்கிப் போடுகிறான்.

6. உங்கள் முன்னால் கவிதைப் புத்தகம், சிறுகதைப் புத்தகம், கட்டுரைப் புத்தகம், நாவல் புத்தகம் இருக்கிறது.. எதை எடுத்துப் படிப்பீர்கள்?

கவிதைப் புத்தகத்தை.  சீக்கிரம் படித்து முடித்து விடலாம்.

7. எந்த எழுத்தாளர் கையெழுத்தை நீங்கள் ரசித்திருக்கிறீர்கள்..

பிரமிள் கையெழுத்தை.  புரியும்படி பிரமாதமாக எழுதியிருப்பார். கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி மணி மணியாக இருக்கும் கையெழுத்து.  அவர் கையெழுத்தை  அவரிடம் பாராட்டியிருக்கிறேன்.  பொறாமைப் படாதீர் என்பார்.

8. எதன் மீது உங்களுக்குப் பக்தி அதிகம்?

விருட்சம் பத்திரிகை மீது.  100 இதழ்கள் வந்தபிறகும் இன்னும் நிறுத்த வேண்டுமென்று எனக்குத் தோன்றவில்லை.

9. நீங்கள் இப்போது என்ன நினைக்கிறீர்கள்?

மாதம் ஒரு முறை கூட்டம் கூடி கவிதைகளை வாசிக்க எல்லோரையும் அழைக்க நினைக்கிறேன்.

10. சமீபத்தில் டில்லி சென்ற உங்கள் விமானப் பயணம் எப்படி இருந்தது?

விமானத்தில் போகும்போது காரணம் இல்லாத பயம் தொற்றிக்கொண்டிருந்தது.  சென்னை வரும்போது விமானம் ஒரே ஆட்டமாக ஆடியது.  வானிலை சரியில்லை என்று காரணம் சொன்னார்கள்.  இன்னும் சில பயணங்கள் மேற்கொண்டால் விமானப் பயணப் பயம் என்னை விட்டுப் போய்விடும்.

12. 102வது இதழ் நவீன விருட்சம் முடிந்து விட்டதா?

முடிந்துவிட்டது.  அசோகமித்திரன் நினைவாக இந்த இதழ் வெளிவருகிறது.  100 பக்கங்களுக்கு மேல்.  அடுத்த வாரத்திற்குள் வந்துவிடும்.

13. சமீபத்தில் சந்தித்த கவிஞர் நாராணோ ஜெயராமனைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

சும்மா இருந்தால் போதும் என்கிறார்.  எந்தப் புத்தகம் கொடுத்தாலும் படிக்க விரும்பவில்லை அவர்.

கவனம் 7வது இதழ் கிடைத்துவிட்டது

 

1981ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் கவனம் என்ற சிற்றேடு ஞானக்கூத்தன் ஆசிரியர் பொறுப்பில் வெளிவந்தது.  அந்த இதழைக் குறித்து ஒரு சிறிய குறிப்பு கணையாழி பத்திரிகையில் அசோகமித்திரன் எழுதியிருந்தார்.  அந்தக் குறிப்பை வைத்துக்கொண்டு திருவல்லிக்கேணி சென்று ஆர் ராஜகோபாலன் என்பவரின் வீட்டில் கவனம் பத்திரிகையின் முதல் இதழை விலைக்கு வாங்கினேன்.  முதல் இதழ் விலை 75 காசுக்கள்.  நான் மேற்கு மாம்பலத்திலிருந்து பஸ்ûஸப் பிடித்து திருவல்லிக்கேணி வந்து கவனம் பத்திரிகையை வாங்கினேன்.

கவனம் என்ற பத்திரிகை மார்ச்சு 1981 ஆண்டிலிருந்து மார்ச்சு 1982 வரை 7 இதழ்கள்தான் வெளிவந்தன.  நான் இந்த கவனம் இதழ்களை பத்திரமாக எடுத்து பைண்ட் செய்து வைத்திருக்கிறேன்.  ரொம்ப ஆண்டுகள் ஆகிவிட்டதால், 6 இதழ்கள் கொண்ட கவனம் இதழ்களைத்தான் பைன்ட் செய்திருந்தார்.

ஆனால் 7வது இதழ் என்ற ஒன்று வரவில்லை என்று நினைத்திருந்தேன்.  என் நண்பர் ஒருவர் 7 இதழ்கள் கவனம் வந்திருக்கிறது என்று சொன்னவுடன், அந்த 7வது இதழைக் குறித்து என் கற்பனை போகாமல் இல்லை.

இனிமேல் 7வது இதழ் கிடைப்பதற்கே வாய்ப்பு இல்லை என்றே எனக்குப் பட்டது.  ஆனால் எதிர்பாரதாவிதமாக நேற்று என் புத்தகக் குவியலைப் பார்த்தபோது, 7வது இதழும் கண்ணில் பட்டது. எனக்க ஒரே ஆச்சரியம்.  அதில் பிச்சை என்ற தலைப்பில் ஆத்மாநாம் ஒரு கவிதை எழுதியிருப்பார்.  ஆத்மாநாமின் இந்தக் கவிதையைக் காட்டி இதற்கு என்ன அர்த்தம் என்று ஒரு பெண் அதிகாரியிடம் கேட்டிருக்கிறேன்.  ஓரளவு தமிழ் படிக்கிற அதிகார் என் வங்கிக் கிளையில் அவர் ஒருவர்தான்.  அந்தப் பெண்மணிதான் ஒருமுறை டூவீலரில் கணவருடன் ஜிஎஸ்டி ரோடில் செல்லும்போது விபத்தில் கீழே வந்து வயிற்றில் பின்னால் வந்த வண்டி ஏறி இறந்து போய்விட்டார்.

இந்த இதழில் வெளிவந்த ஆத்மாநாமின் பிச்சை என்ற கவிதையைப் படிக்கும்போது இந்தச் சம்பவம் என் ஞாபகத்திற்கு வந்து மனதை சங்கடப்படுத்தும்.

பிச்சை என்கிற கவிதையை இங்கு தர விரும்புகிறேன்

பிச்சை

நீ ஒரு பிச்சைக்காரனாய்ப் பúô

பிச்சை பிச்சை என்று கத்து

பசி இன்றோடு முடிவதில்லை

உன் கூச்குரல் தெரு முனைவரை இல்லை

எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும்

உன் பசிக்கான உணவு

சில அரிசி மணிகளில் இல்லை

உன்னிடம் ஒன்றுமே இல்லை

சில சதுரச் செங்கற்கள் தவிர

உனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லை

உன்னைத் தவிர

இதைச் சொல்வது

நான் இல்லை நீதான்…..

 

.

இரண்டு பூனைகள்

ஒரு கருப்புப் பூனை
நாற்காலி மீது அமர்ந்து கொண்டு
என்னைப் பார்த்து
மியாவ் என்றது..

இன்னொரு பூனை கருப்பும் வெள்ளையும்
கலந்த நிறத்தில்
நாற்காலி கீழே அமர்ந்திருந்தது.
என்னைப் பார்த்து மியாவ் மியாவ் என்று
இரண்டு முறை கத்தியது

நான் பேசாமல் வந்து விட்டேன்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 65

குழந்தைகள்

 

பொன். தனசேகரன்

 

காகிதங்களில் கிறுக்கட்டும்

குழந்தைகள் விருப்பம்போல;

திட்டாதீர்கள்.

சுதந்திரமாக

வார்த்தைகளைக் கொட்டட்டும்;

தடுக்காதீர்கள்.

விரும்பாததைக் கேட்டு

முரண்டு செய்யலாம்:

அடிக்காதீர்கள்.

உங்கள் பழக்கங்களை

மிரட்டித் திணிக்காதீர்கள்.

விளையாட்டுப் பொருள்களைக்

கொடுத்து

கவனத்தைத் திசை திருப்பாதீர்கள்.

நடைவண்டி இல்லாமலே

நடை பழகும்

குழந்தைகள்


நன்றி : காற்றிலும் மழையிலும் கைவிளக்கு – கவிதைகள் – பொன்.தனசேகரன் – பக்கம் : 80 – வெளியான ஆண்டு : 2005- விலை : ரூ.50. – வெளியீடு : கலைஞன் பதிப்பகம், தி நகர், சென்னை 17.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 64


தூதர்கள்


சிபிச்செல்வன்

இரவுகள் சிறியவை

இரவுகள் அழகானவை

இரவுகள் நீளமானவை

இரவுகள் குரூரமானவை

இரவுகள் புணர்ச்சிக்கானவை

இரவுகள் கனவுகளுக்கானû9வ

இரவுகள் கடைசி மூச்சின் கணங்களுக்கானவை

இரவுகளின் இருள் அடர்த்தியானது

இரவுகளில் நமது பயங்கள் பதுங்குகின்றன

மௌனத்தின் நாடி

இதயத்தில் துடிக்கிறது

இரவு உறங்குவதற்கானது

சாவு போல்.

நன்றி : கறுப்புநாய் – கவிதைகள் – சிபிச்செல்வன் – அமுதம் பதிப்பகம் – முதல் பதிப்பு : டிசம்பர் 2002 – விலை : ரூ.30

என்று தணியும் இந்தத் தண்ணீர் தாகம்….

 

கோடை பயங்கரமான தன் விஸ்வரூபத்தைக் காட்டத் தொடங்கி விட்டது.  கிணற்றில் தண்ணீர் இல்லை.  போரில் தண்ணீர் இல்லை.  கார்ப்பரேஷன் தண்ணீர் வருவது நின்றுவிட்டது.  நாங்கள் மெட்ரோ தண்ணீரை வாங்கிக் கொள்கிறோம்.  முதலில் 3 நாட்களுக்கு ஒரு முறை வந்து கொண்டிருந்த மெட்ரோ தண்ணீர், இப்போது ஒரு வாரம் காலம் ஆகிறது.  போகப் போக இது அதிக நாட்கள் ஆகும்.

கொஞ்சம் வசதியாக இருப்பவர்கள் தண்ணீரை வாங்க முடிகிறது.  ஆனால் தண்ணீர் வாங்க முடியாதவர்களின் நிலை என்ன? எங்கள் தெருவில் தண்ணீரை வாங்க முடியாதவர்கள் நிலை அதிகம்.  லாரியில் வரும் தண்ணீரைப் பெறுவதற்கு அவர்களிடம் போட்டியும் சண்டையும் அதிகமாகவே இருக்கிறது.

ஒருவரை ஒருவர் வாய்க்கு வந்தபடி திட்டுகிறார்கள்.  முறையாகப் பேசியவர்கள் முறையில்லாமல் பேசுகிறார்கள்.  தண்ணீரை விலை கொடுத்து வாங்கினாலும், பணம் கட்டிய ரசீதை எடுத்துக்கொண்டு தண்ணீர் கொண்டு தரும் இடத்திற்கு ஒரு வாரம் கழித்துச் செல்ல வேண்டும்.  தண்ணீரை அனுப்பும் படி கேட்டுக்கொள்ளவேண்டும்.  ஒரு லாரி தண்ணீர் ரூ.600 தான்.  அதை எடுத்துக்கொண்டு வருபவர்களுக்கு ரூ100 தரவேண்டும்.

எங்கள் தெருவில் தண்ணீர் லாரி வர பல தடைகள் உண்டு.  தெருவில் நுழைவதற்கு முன் இரு சக்கர வாகனங்கள், கார்கள் நிற்கும், பெரிய மெட்ரோ லாரி நுழைய முடியாதபடிக்கு மூன்று சக்கர வாகனம் நின்றுகொண்டிருக்கும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெள்ளம் வந்து இந்த இடம் நாசமாகிப் போனது.  அந்த இடமா இப்படி வெயிலில் காய்கிறது என்று தோன்றுகிறது.  இந்த வலியைச் சமாளிக்க என்ன வழி என்று யோசிக்கிறேன்.  கீழ்க்கண்டவாறு சில முயற்சிகளை செய்து பார்க்கலாமென்று தோன்றுகிறது.

1. தினமும் குளிக்கும் வழக்கத்தை விட்டு விட்டு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை குளிக்கலாம்;

2.  துணி துவைப்பதைத் தள்ளிப் போடலாம்.  ஒரு சட்டை பேன்ட் ஒரு வாரம் வரை பயன் படுத்திக்கொள்ளலாம்.

3.  தண்ணீரை எல்லோரும் அளந்து அளந்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

4. தண்ணீர் ரொம்பப் பிரச்சினையாக இருந்தால், உறவினர் வீட்டிற்குச் சென்று விடலாம்.  ஆனால் உறவினர் வீடு சென்னையை விட்டு வேறு எங்காவது இருக்க வேண்டும்.

5. யாராவது வீட்டிற்கு வருவதாக இருந்தால் தண்ணீரையும் கையில் கொண்டு வரும்படி சொல்லலாம்.

6. தண்ணீரும் கண்ணீரும் என்று கவிதை எழுதி மன ஆதங்கத்தைத் தணித்துக்கொள்ளலாம்.

7. துணியை அலசிய தண்ணீரை கீழே கொட்டாமல் அதையே பாத்திரம் கழுவவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

8.  என்னைப் போல் ரிட்டையர்டு ஆனவர்களுக்குத்தான் தண்ணீர் இல்லாமல் இருப்பது பிரச்சினை.  அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்குப் பிரச்சினை இல்லை.  குளிப்பது, காலைக் கடன்களை முடிப்பது எல்லாம் அலுவலகத்தில் முடித்துவிடலாம்.

9. தண்ணீரைப் பற்றிய கவலையை மறக்க.  எதாவது புத்தகம் எடுத்துப் படிக்கலாம்.  அந்தப் புத்தகம் போர் அடித்தாலும் பரவாயில்லை.

10.  எழுதத் தெரிந்தவராக இருந்தால் அசோகமித்திரன் தண்ணீர் நாவல் போல, தண்ணீர் குறித்து இன்னொரு நாவல் எழுதலாம்.

இதைத் தவிர உங்களுக்கு எதாவது வழி தெரி0ந்தால் சொல்லவும்.

தனிமைகொண்டு என்ற கதையை சுஜாதா மறந்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்

நகுலன் 1968ஆம் ஆண்டு மே மாதம் ஒரு இலக்கியத் தொகுப்பு கொண்டு வந்தார். அத் தொகுப்பின் பெயர் குருúக்ஷத்ரம் என்று பெயர். அத் தொகுப்பில் பல முக்கிய இலக்கிய அளுமைகள் பங்கு கொண்டுள்ளனர். மௌனி, பிரமிள், நீல பத்மநாபன், ஐயப்பப்ப பணிக்கர், நகுலன், சார்வாகன், அசோகமித்திரன் போன்ற பலர். அதில் ஒரு பெயர் எஸ் ரெங்கராஜன். அவர் ஒரு கதை எழுதி உள்ளார். அக் கதையின் பெயர் ‘தனிமை கொண்டு.’.
இக் கதையை எழுதியவர் வேறு யாருமில்லை. சுஜாதா என்ற எழுத்தாளர்தான். 17வயது பெண் எழுதிய டைரி மூலம் கதையை நகர்த்திக் கொண்டு போகிறாள். அண்ணனும் தங்கையும். தங்கையை தனியாக விட்டுவிட்டு அடிக்கடி அண்ணன் டூர் விஷயமாகப் போகிறான். அவளுடைய தனிமை அவளுக்கு கிருஷ்ணன் என்ற நபர் மூலம் ஏற்பட்ட துயரம்தான் இந்தக் கதை. வித்தியாசமான நடையில் வித்தியாசமாக எழுதப்பட்ட கதைதான் இது.
குருúக்ஷத்ரம் என்ற தொகுப்பில் வெளிவந்த கதைகளில் இக் கதை வித்தியாசமானது. இக் கதையை 1968ஆம் ஆண்டில் சுஜாதா எழுதி உள்ளார். அப்போது அவர் தொடர் கதை குமுதத்தில் வெளிவந்ததா? பிரபலமானவரா என்பது தெரியவில்லை.
இந்தக் கதையைப் படிக்கும்போது சுஜாதா கதை எழுதுவதில் திறமையானவர் என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம். மாலா என்ற 17வயது பெண்ணின் டைரியைப் படிக்கும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது.
மாலா டைரியில் இப்படி எழுதுகிறாள் :
‘’முதல் தடவை. முதல் தடவை. என் வாழ்க்கைலே முதல் தடவை என்னை வேற ஒருத்தன் தொட்ட முதல் தடவை. உடம்பு எவ்வளவு ஜ்ர்ய்க்ங்ழ்ச்ன்ப். நான் என்னை குளிக்கிறபோது எவ்வளவு தடவை தொட்டுக்கறேன்..அண்ணா மேலே படறபோது ஒண்ணும் தெரியல்லையே…கிருஷ்ணன் இன்னிக்கு என் கன்னத்தைத் தட்டி கையை முழங்கைக்கு மேலே பிடித்து அழுத்தினான். எவ்வளவு வித்யாசமா இருந்தது?
எஸ் ரங்கராஜன் பற்றி நகுலன் இப்படி எழுதி உள்ளார். நான் சமீபத்தில் படித்த எழுத்தாளர்களில் எஸ் ஆர் ஒரு புதிய திருப்பத்தைச் சிறுகதையில் காண்பித்திருக்கிறார் என்பது என் அனுமானம். üüதீபýýத்தில் வந்த அவர் கதை ஞாபகம் வருகிறது. நடை உருவமாக மாறுகிறது அவர் கதையில். இங்கு வரும் கதையிலிருந்து சில பகுதிகள் :
“கிருஷ்ணா நீ புலி. நிழலிலே பதுங்கற புலி.”
“கிருஷ்ணன் என் மேலே புயல்போல வீசிண்டிருக்கான். அவன் என் மனசிலே ஜொலிக்கிறான். என் வயிற்றிலே பயமாப் பரவறான். என் உடம்பிலே ரத்தமா ஓடறான்.”
ஆழ்வாராதிகள் அழுது அரற்றி ஊன் கரைய உருகிப் பாடிப் பரவிய அவன் பெயரும் கிருஷ்ணன் தான் என்பது ஞாபகம் வருகிறது என்கிறார் நகுலன்.
குருúக்ஷத்ரம் இலக்கிய மலரில் வெளிவந்த இந்தக் கதையை சுஜாதா மறந்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 62

கொட்டாவி

சச்சிதானந்தன்

தமிழில் : சிற்பி

கொட்டாவி
ஒரு இயற்வை விதி மட்டுமல்ல
மறுப்பின் அடையாளமும் கூட.
தனிமனிதர்களோடும், நாடுகளோடும்.

மசூதி இடிக்கப்படும் போது
நாம்ல் கொட்டாவி விடுகிறோம்.

புத்தர் சிலை உடைக்கப்படும்போது
கொட்டாவி விட்டு நாம் பழிதீர்த்துக் கொள்கிறோம்

கொட்டவி
யுத்தத்திற்கும் ஏகாதிபத்தியத்துக்கும்
எதிரான போராட்டத்தில் ஒரு புதிய போர்முறையாகும்
நண்பனே,

காதலின் தீவிரத்தை வெளிப்படுத்த
கொட்டாவியைவிட நல்ல சைகை
இல்லை யென்கிறாள் காதலி

புரட்சி கொட்டாவி வழியாக
என்கிறார் பழைய தோழர் சிவப்பு வண்ணத்தில்
விடுதலை கொட்டாவி வழியாக
என்கிறது சுவர் அறிவிப்பு பச்சையில்
ஆதியில் கொட்டாவி இருந்தது
என்கிறது புதிய சுவிசேஷம்

வேதங்கள் கடவுளின் கொட்டாவி
என்கிறார் அவிவேகானந்தன்
தன் கலையின் தரிசனம் ஒரு கொட்டாவியில்
அடங்கும் என்கிறார் பரிசுத்த அழகியல் வாதி

கொட்டாவியில் நிர்வாணம் என்கிறது காவி
கொட்டாவி விட்டு மனித உரிமைப் பிரகடனம்
கொட்டாவியால் சாதிகளுக்கெதிரான சங்கிலி
கொட்டாவியின் நூறு பூ விரிவது கண்டு
உணர்ச்சி வசப்படுகிறான் கவிஞன்.

அயல்நாட்டு உறவுத்துறை
அமைச்சரின் கொட்டாவி
பாலஸ்தீனத்துக்காகவா, இசுரேலுக்காகவா என்று
அதிகாரிகளுக்கிடையே விவாதம்.

கண்டனக் கூட்டத்தில் சொற்பொழிவுக்குப் பதில்
ஒரு நீண்ட கொட்டாவி:

கொட்டாவியின் மேகங்களுக்கு இடையில்
கொட்டாவிப் பறவைகள் பறக்கின்றன
கொட்டாவியின் சூரியன் இதோ மேலே சுடர்விடுகிறான்
அச்சம் வேண்டாம் மனிதர்களே, கடவுளின்
கொட்டாவிக்குள் நம் உலகம் பத்திரமாக இருக்கிறது.


நன்றி : ஆலிலையும் நெற்கதிரும் - சச்சிதானந்தன் - தமிழில் : சிற்பி - முதல் பதிப்பு : 2016 - விலை : ரூ.250 - குணா பில்டிங்க்ஸ் - 443 அண்ணா சாலை - தேனாம்பேட்டை - சென்னை 18